Blog Archive

Friday, July 16, 2010

தொடரும்...பாகம் 4





பதட்டத்தோடு தன்னைப் பார்க்கும் தன் நாத்தனாரை ,அணைத்துக் கொண்டு பாமா,


கவலைப் படாதடா. இத்தனை சுறுசுறுப்பா இருக்கிற அண்ணா, சீக்கிரம் எழுந்து நடப்பார்மா.

சைல்ட் ஜீஸஸ்ல தான் டெஸ்ட் எல்லாம் எடுத்தது.

ஒரு சின்ன ப்ள்ட் க்ளாட் தான். உடனே பார்த்ததால் அவசர சிகித்சை செய்து காப்பாற்றிவிட்டார்கள்.

இன்னும் கொஞ்ச நாளுக்குக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கணும். அவ்வளவுதான்.



சிரிச்ச முகத்தோட வா,என்றபடி ராதையையும் கோவிந்தனையும் மட்டும் அழைத்துக் கொண்டு

வரவேற்பரை பக்கத்தில் இருக்கும் படுக்கை அறைக்கு அழைத்துக் கொண்டு போனாள் பாமா.

ஏன் நீ முன்னாலியே சொல்லலை பாமா என்று வருத்தத்தோடு கேட்டாள் ராதாஅ. சொன்னால் நீ மட்டும் வந்து

உதவிக்கு என்ற பிரமேயத்தில் ,உழைத்துக் கொட்டுவாய்.



அவருக்கோ யார் என்ன செய்தாலும் தன் இயலாமையால் கோபம் வருகிறது. அதுவும் உன்மேல் உயிரையே வைத்திருப்பவர்.

தங்கையிடமே சார்ந்திருப்பது அறவோடு பிடிக்காது.

அதனால் ஒருவாரம் கழித்து வரச் சொல்லி உனக்கு மெயில் அனுப்பினேன்.

என்றாள், பாமா.



எதையொ எதிர்பார்த்து கண்களில் தளும்பி விழக் காத்திருக்கும் கண்ணீரோட அந்த விசாலமான,தோட்டத்தைப் பார்த்து அமைந்திருந்த அறைக்குள் நுழைந்தாள் ராதா.

அங்கே அதே கம்பீரத்தோடு வெள்ளை வேஷ்டியும் வெள்ளை கதர் ஜிப்பாவுமாக அண்ணா, கட்டிலில்,

பளிச்சென்று சாய்ந்து உட்கார்ந்திருக்கும் அண்ணவைப் பார்த்து,ஒரு பக்கம் நிம்மதியும்,மறுபக்கம் பாசமும் போட்டி போட



என்ன அண்ணா, உன்னைத்தான் முதலில் ஸ்டேஷனில் தேடினேன். நீ என்னடா என்றால் சாவகாசமாக

இங்க இருக்க, என்றபடி அண்ணாவின் தோள்களை மெலிதாக அணைத்தபடி கேட்டாள்.



அவர், ஸ்ரீநிவாசன்,சிரிக்க முடியாமல் சிரித்தார்.அப்போதுதான்,ராதா அந்த முகத்தில்

ஒருபக்கம் பாதிக்கப் பட்டு இருப்பதையும் பார்த்தாள்.

உலகத்திலியே தன் அண்ணா தான் நிறைந்த அழகன் என்று நினைப்பவள் ராதா.

அவருக்கு இப்படியா என்று மனம் பொங்கியதும்,உடல் தளர்ந்துவிட்டது.



ஒரு நிமிஷம் அண்ணா, கைகளைக் கழுவிவிட்டுத்தான் நோயாளியைப் பார்க்கவேண்டும் என்பதையே மறந்துவிட்டேன் 'என்றவாறு அந்த அறையிலிருக்கும் அட்டாச்டு பாத்ரூமிற்குள் போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

முகத்தில் தண்ணீரை வாரி அடித்து,தன்னை நிலைப் படுத்திக் கொண்டு

அந்த அறையில் இருக்கும் துவாலையை எடுக்க வந்த போதுதான்

பிடிப்புக்காகச் சுற்றிப் போடப் பட்டிருக்கும் கம்பிகளையும் பார்த்தாள்.

பாமாவின் முன்னேற்பாடுகளை மனதில் மெச்சியபடி

தெளிந்த மனத்தோடு வெளியே வந்த ராதா,மீண்டும் அண்ணன் அருகில் உட்கார்ந்து

கைகளைத் தடவிக் கொடுத்தாள்.

கைநுனியின் அருகில் இருந்த பஸ்ஸரை அழுத்தியதும்,

அவரைப் பார்த்துக் கொள்ளும் ஃபிசியோதெரபிஸ்டும், அட்டெண்டர் சம்பத்தும் வந்தார்கள்.



சைகையினால் தன்னை அங்கிருந்த சக்கர நாற்காலிக்கு மாற்றச் சொன்னார்.

செயல்படும் இடது கையால் ராதாவையும் கோவிந்தனையும் அருகே உட்கார வைத்து,

சம்பத்திடம் ஏதொ சொல்ல,அதை அவர் புரிந்து கொண்டு,''அண்ணா தனக்கு வந்திருப்பது பெரிய தொல்லை என்றாலும்

ஒரு வாரத்தில் தன்னைச் சரிசெய்து கொள்ளமுடியும். கவலை வேண்டாம். உங்கள் சந்தோஷமே எனக்கு மருந்து என்று விளக்கினார்.

குழந்தைகளிடமும் சரியாக எடுத்துச் சொல்லுங்கள்.அவர்கள் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டாம் உள்ளெ வரப் போக இருக்கலாம்.என்று சொல்லிவிட்டு முகத்தில் கேள்விக் குறியோடு ராதாவைப் பார்த்தார்.



அண்ணாவின் அசராத நம்பிக்கை கண்டு ராதாவுக்கும் பலம் வந்தது.

''இதோ அவர்களை அழைக்கிறேன் ''என்று வெளியே சென்றாள்.





எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

12 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஒவ்வொரு பாகத்தையும் விடாம படிச்சிட்டேன்ம்மா. கதை அருமையா இருக்கு. சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறீர்கள்.

Geetha Sambasivam said...

நல்லபடியாய்க் குணமாகப் பிரார்த்திக்கிறேன். என்னவோ போங்க! எங்கே போனாலும் வியாதி!:(

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா அமைதிச்சாரல், பொறுமையாக எல்லாத்தையும் படிச்சதுக்கு நன்றிம்மா.
அடுத்த பாகத்திலயாவது முடிக்கப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

சரியாகப் போகாமல் சமயபுரத்து அம்மாவை பாமா விடுவாளா. சரியாகிவிடும். கீதா.

துளசி கோபால் said...

இன்னிக்கு முதல்லே ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆரம்பிச்சு வீல் சேர்வரை வந்தேன்.

நடுவில் இருந்த மொக்கையையும் விடலை:-))))))

அப்படி அவசரப்பட்டு முடிக்க வேண்டாம். நீட்டலாம். தப்பில்லையாக்கும்!

Unknown said...

அண்ணன் தங்கை பாசத்தை அழகாக சொல்லி இருக்கீறீர்கள் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
சரித்தான்.
பாட்டு நிப்பாட்டுன்னு யாராவது சொல்றதுக்குள்ள கச்சேரியை
முடிக்கணுன்னு பார்க்கறேன்பா.
முடியலை.பல விஷயங்களைச் சொல்ல வேண்டி வரது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுமதி.
பாசம் இருக்கத்தான் செய்கிறது.
சிலபேரிடம் வெளிப்படையாத் தெரிகிறது.
சிலசமயம் தெரிவதில்லை.:)

Jayashree said...

அகிலாண்டேஸ்வரித்தாயார் என்ன, மலைக்கோட்டை என்ன அட நம்ப ஆத்தா அவுகளும் இருக்காகளே!உறையுர் வெக்காளி அம்மனையும் போட்டுட்டா பாப்போமே!!! ட்வுன் கடை வீதி !! ரொம்ப நாளாச்சு பாத்து!

CVA/ STROKE!! ம்ம் ஒரு நொடியில் ஒருவரது வாழ்க்கையில் விளையாடி உறைய வைத்துவிடும் ஒன்று:( ஆனா SUCCESS STORY யும் உண்டு !! பொறுமையும் கருணையும் உடைய சக்தி துணை நிற்பதால்!! கோவிலில் காணும் தெய்வம் தர்ம பத்னியின் உள்ளே!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ. ஸ்ட்ரொக் வந்த சித்தி வீட்டில் வந்திருந்து சரி செய்து கொண்டே கானடா போனார். மிக மனத்திடம் கொண்டவர். அவருடைய கணவரும் அவரை அத்தனை சிரத்தையாகப் பார்த்துக் கொண்டார். பக்தியும் கைகொடுத்தது.எப்பவும் சஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருப்பார். எல்லாவற்றுக்கும் மேல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் நிறையவே இருந்தது. வெக்காளி அம்மன் தான் போட்டுட்டாப் போகிறது:)
நன்றிப்பா.

திவாண்ணா said...

//என்ன அண்ணா, உன்னைத்தான் முதலில் ஸ்டேஷனில் தேடினேன். நீ என்னடா என்றால் சாவகாசமாக இங்க இருக்க, //
ஆப்பரேஷன் தியேட்டரில் எங்கெ டீம் எப்பவும் ஜோக் அடிச்சுகிட்டுத்தான் இருக்கும். அதில எக்ஸ்பெர்ட் எங்க அசிஸ்டென்ட். அவர் ஒரு தரம் வெளியூர் போய் திரும்பறப்ப ஆக்ஸிடென்ட் ஆகி கால் முறீஞ்சு போச்சு. ஆஸ்பத்திரியிலே படித்து இருந்த அவரை பாக்கப்போனேன். இறுக்கமான சூழ்நிலை. அவரைப் பாத்து "ஏம்பா லீவு வேணும்ன்னா கொடுத்துட்டு போறோம். அதுக்குன்னு இப்படி செஞ்சா லீவு வாங்கறது?" ன்னு கேட்க எல்லோரும் சிரித்துவிட்டார்கள். :-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன். மயக்கம் கொடுப்பவர்கள் இல்லாவிட்டால் அறுவை சிகித்சையில் என்ன நடக்கும்? சிரிப்பும் இறுக்கமில்லாத நிலைமையும் எப்பவுமே அவசியம்.உங்கள் சிநேகிதர் கொடுத்துவைத்தவர்தான்:)