Blog Archive

Monday, October 09, 2006

நீளும் பாதை-தொடும் வானம் பூக்கும்




பாதை நீளும்போது
சிலபல சிந்தனைகள்
சோதனைகள்
சாதனைகள்.
வானம் தொடும் வரை
ஆக்கம் வேண்டும்.

சோர்விலா உழைப்பு
எதிர்பார்க்கும்
பரிசு இந்தப்பூதான்.
என் பேத்தியின் சிரிப்பைப் பார்த்ததும்
எனக்குத் தோன்றிய சிந்தனை.
அவளுக்கு நன்றி.
நீண்டு வாழ்ந்து சிரித்து இருக்கட்டும்.

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பேத்தியின் சிரிப்பைப் பார்த்து, பாட்டி காப்பியடித்ததால் வந்த பொழிவோ இது?
//நீண்டு வாழ்ந்து சிரித்து இருக்கட்டும்//
நாங்களும் வாழ்த்துகிறோம்!
முதல் படம் மிக அருமை!

துளசி கோபால் said...

பேத்தி இப்படி 'கவிதை பாடும் வல்லமை' தந்துவிட்டாளா?:-))))

நல்லா இருக்கட்டும் ச்சின்னப்பாப்பா.

வல்லிசிம்ஹன் said...

கண்ணபிரான் வாங்க.
உங்க பந்தலுக்கு இனிமேதான் போகணும்.
பேத்தி சிரிப்பில் காவியமே
இயற்றலாம்.
நமக்குத் தெரிந்தது உரை நடை தானே.:-)
உங்களுக்கும் இந்த அனுபவம் இருந்திருக்குமே.

வல்லிசிம்ஹன் said...

ச்சின்னபாப்பா.செல்லப் பாப்பா.
கண்ணுக்குள்ள பார்த்து சிரிக்கிறது.

உன்னை எனக்கு முன்னாடியே தெரியுமெனு சொல்லற மாதிரி.

ஊருக்குப் போகிற சந்தோஷம் அதுக்கு.,துளசி.

துளசி கோபால் said...

கண்ணபிரானுக்கு இந்த அனுபவம், அதான் பேத்தி சிரிக்கிறதைப் பார்க்க
நிறைய வருஷங்கள் பாக்கி இருக்கு:-))))

வல்லிசிம்ஹன் said...

துளசி, என்னப்பா.
அவரு பையன் சிரிச்சதைப் பார்த்து இருப்பாரே:-))
ஆனாலும்.....
உங்களுக்கு ஜாஸ்திதான்.