Blog Archive

Sunday, February 12, 2023

கண்ணும் கண்ணும் கொள்ளை.....:)

வல்லிசிம்ஹன்



முதுமையும் கண் பிரச்சினைகளும்.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 2012  Februvary




கண் ணில் வைத்தியம் முடிந்து  கறுப்புக் கண்ணாடியும் நானுமாக ஒருநாள் வீட்டுப்  பலசரக்குப் பொருட்கள் வாங்கப் போயிருந்தோம்.


கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் பழக்கம்
காரண்மாக  வேண்டும் என்ற பொருட்களைத் தள்ளுவண்டியில்
போட்டுக் கொண்டு எண்ணெய்   பாக்கெட்டை எடுக்க நிற்கும் போது
திடீரென்று பின்னால் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

எவ்வளவு நாள்;ஆச்சு?''

திரும்பிப் பார்த்தால் ஒரு மூதாட்டி.அதாவது என்னை விடக் கொஞ்சம் வயதானவர்.
'எதுக்குக் கேட்கறேன்னால் நானும் செய்துக்கணும். 35 ஆயிரம்  லென்ஸ் மட்டும் ஆகணும் என்கிறான் என் அண்ணா பையன்.
அந்த லென்ஸ்  பேர் என்னடா. கூகிள்ள தேடிக்கறேன்னு சொன்னால் ,பெயர் சொல்ல மாட்டேன் என்கிறான்.''
எனக்குத் தலை கால் புரியவில்லை.

நம்மைக் கூட மதித்து ஒரு அம்மா கேட்கிறாரேன்னு சந்தோஷம்.:0)


என்ன தெரியணும் உங்களுக்கு?
என்  வைத்தியர் சொல்லும் லென்ஸ் அந்த விலைதானா.
அதற்கு உண்மையான பேர்  என்ன.
அதுபோட்டால் என் கண் புரை விலகி ப்  பார்வை விளங்குமா.

எனக்கோ படு உத்சாகம்.
'அதிலென்ன சந்தேகம் அம்மா. கண் நன்றாகத்தெரியும்.

அதைக் கேக்கலை....
??????
இந்ட்ரா  அக்குலர் லென்ஸ் எத்தனை வகைப்படும்.
நான் பணம் கொடுக்கப் போகிற  லென்ஸைத்தான்
வைத்தியர் பொருத்துவார் என்று என்ன நிச்சயம்?

ஆஹா  மாட்டிக்கிட்டயா மஹாதேவி;  அப்டீன்னு ஒரு குரல் .என் மனசுதான்.
உங்க   டாக்டர் யார்.

ஸோ அண்ட் ஸொ. உங்களுக்கு அவரைத் தெரியுமா?
நான் விழித்தேன். எனக்கு  தெரிந்த வைத்தியர்கள் எலும்பு முறிவுக்காரர்களும்,

டயபெடிஸ் மருத்துவர்களும் தான்.
''இல்லமா எனக்கு அவரைத் தெரியாது.'
ஓ ஊருக்குப் புதுsuபோல நீங்கள்.
எங்க டாக்டர் என்னை 35 வருஷங்களாப் பார்த்துக் கொண்டு வருகிறார்.''

''அப்புறம் என்ன அவரை நீங்கள் நம்பலாமே''
உங்களுக்கு யார் வைத்தியம் செய்தது?
'தெரிந்த டாக்டர் தான்.
''
நீங்கள் உங்கள் லென்ஸ் செக் செய்தீர்களா''
சொன்ன விலையைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்''

''உடனே அந்த அம்மா புலம்ப ஆரம்பித்தார்.

ஓ! உங்கள் பிள்ளைகள் இருப்பார்கள். மருமகள் இருப்பாள். கணவர் பார்த்துக் கொள்வார்,.'


எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. பிள்ளைகளும் கிடையாது(!)
உங்களுக்குக் கண்ணில் மருந்து போட உங்கள் கணவர் வருவார்.
சமையலைப் பார்க்க மருமகள் இருப்பார்''
என்னைச் சொல்லுங்கள். பணத்தை யாராவது பறித்துக் கொள்வார்களோ என்ற
  பயத்தைத் தவிர   வேற என்ன இருக்கிறது.என்று சொன்னவர் அழ ஆரம்பித்துவிட்டார்.

ஐய்யோ சாமி இது என்னடான்னு   கவலையாகி விட்டது. இதற்கு நடுவில் சிங்கம் வேற உள்ள வந்து "என்ன 'லேடி எம்ஜியார்''(கறுப்புக் கண்ணாடி மஹிமை)
ஒரு கடுகு புளி வாங்க இவ்வளவு நேரமா' ''என்றபடி   அருகே வந்தார்.
என்பக்கத்தில் அழும் பெண்ணைப் பார்த்து
என்னைச் சந்தேகமாப் பார்த்தார்.
''என்ன செய்த. இப்படி இந்த ஓல்ட் வுமன்  அழறாங்களே''''


நான் அம்மாவை அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னேன்.
கடையிலிருந்த பெண்ணிடம் ,கொஞ்சம் தண்ணீர் வாங்கி அவரைக் குடிக்கச் சொல்லி
என் புராணத்தைச் சொன்னேன்.
;;அம்மா, எங்கள் குழந்தைகள் இங்கே இல்லை.
வெளியூரில் இருக்காங்க.
கண் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள மருத்துவமனையிலேயே கற்றுக் கொண்டேன்.
ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு அம்மா எங்களுக்குச் சப்பாத்தியும், காய்கறிகளும் செய்து தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்''
உங்களாலும் முடியும்.
உங்கள் வைத்தியரை நம்புங்கள்.
தெய்வத்தை நம்புங்கள்'
கண் சரியாகிவிடும்.
வைத்தியரிடமே ஒரு  உதவியாளரை உங்கள் வீட்டுக்கு அனுப்பச் சொல்லி நான்கு நாட்களுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

என்றதும் ஒருவாறு தேறினார்.
என் விலாசத்தைக் கேட்டார். பக்கத்தில் உறுமல் (  Singam)சத்தம் கேட்கவே ''இங்க பக்கத்தில் தாம்மா இருக்கேன்.
அப்புறம் பார்க்கிறேன்,'' என்றவாறு வெளியே வந்தேன்.
பின்னால் அந்தப் பெண்ணின் குரல் ''வரவங்க, போறவங்க உதவியா செய்வார்கள்!! வாய்வார்த்தைக்கே வழியில்லாமல் போச்செ'கலிகாலம்!!!
என்று தன்னோடு உதவிக்கு வந்திருக்கும் பெண்ணோடு உள்ள போய் ரைஸ் ப்ரான் ஆயில் எடுத்து வைம்மா'
என்று கட்டளையிட்டார்..

எனக்கே என் கண்ணில் வைக்கப்பட்ட லென்ஸ் நான் சொன்ன லென்ஸ்தானா'என்ற சந்தேகம் வந்துவிட்டது:(
எதாக இருந்தால் என்ன. நம்பிக்கை இல்லாமல் வைத்தியம் கிடையாது.

நம்பிவிட்டால் சந்தேகம் கூடாது'
இப்படி உறுதி செய்து கொண்டேன்.:)

7 comments:

நெல்லைத் தமிழன் said...

//நம்பிக்கை இல்லாமல் வைத்தியம் கிடையாது.// - இது ரொம்ப சுலபமான ஸ்டேட்மெண்ட். சமீபத்துல ஒரு பிரச்சனைக்கு வைத்தியர்ட்ட (சர்ஜன்) போய், அவர் சர்ஜிகலுக்கு நாள் குறித்து, அப்புறம் நிறைய செலவழித்து (80 சதம் இன்ஷ்யூரன்ஸ்).... சொன்னபடி மறுநாள் டிஸ்சார்ஜ் பண்ணுவாரா என்று யோசித்து....... சந்தேகம் வராமல் இருக்கமுடியுமா சொல்லுங்கள்? இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட் என்று சொல்லும்போது... இது நமக்கான டெஸ்டா இல்லை லேபுக்கான வரவா என்று சந்தேகம் வராமலிருக்குமா?

நீங்க என்னவோ சொல்லிட்டீங்க

நெல்லைத் தமிழன் said...

உங்க அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது. சட்னு இது புது லேடஸ்ட் போட்டோவா என்று சந்தேகம் வந்தது

ஸ்ரீராம். said...

ஹா...  ஹா...  ஹா...   நாம் சும்மா இருந்தாலும் யாராவது ஏதாவது கிளப்பி விட்டு விடுகிறார்கள்!  நமக்கும் சந்தேகம் வந்து விடுகிறது.  நல்ல ஜாலியாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா.

மாதேவி said...



''நம்பிவிட்டால் சந்தேகம் கூடாது'
இப்படி உறுதி செய்து கொண்டேன்.:) ''

சரியாக சொன்னீர்கள். கண் அறுவை சிகிச்சைக்கு வைத்தியரை நம்பித்தானே செல்கிறோம்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹா அம்மா நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்க...ரசித்தேன்.

அந்த மூதாட்டி பாவம் தான் ஆனால் தனியாவே இருப்பதால் இப்படி உலகின் மீதான நம்பிக்கை இல்லாமல் எதிர்மறையாக இருக்காங்க போல.....ஒரு சிலர் இப்படித்தான்...

பாத்தீங்களா யாராச்சும் ஒரு நெகட்டிவ் சொல்லிட்டாஅது எப்படி நம்மைத் தொத்திக் கொள்கிறது என்று...!!! நம்பிக்கைதானே வாழ்க்கை!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எம் ஜி ஆர்// ஹாஹாஹாஹா!

எனக்குத் தோன்றியது சரோஜா தேவி அவங்கதானே குளிர்க்கண்ணாடி போடுவாங்க?!!!

கீதா

கோமதி அரசு said...

நம்பிக்கை இப்படி சில நேரம் சந்தேகமாக மாறும்.
அடுத்தவர் வந்து தான் இந்த எண்ணத்தை நமக்கு ஏர்படுத்துகிறார்கள்.
உங்கள் படம் அழகாய் இருக்கிறது.நம்பிக்கையோடுதான் மருத்துவரிடம் போகிறோம்.