Wednesday, October 13, 2021

தடாகமடி....தாமரைஅல்லி, ஆம்பல்...











வல்லிசிம்ஹன்
நவராத்திரிக்கு நம்மால் தான் பாட முடியவில்லை.
கேட்ட நல்ல பாடல்களைப் பதியலாம் என்று 
இந்தப் பாடல்களையும்

மலர்களையும் பதிவு செய்தேன்.

6 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. தாமரை தடாகங்களும், தாமரை மலர்கள் படங்களும் மிகவும் அழகாக உள்ளது. பாடல்கள் மனதிற்கு அமைதி தருகின்றன. இன்னமும் விரிவாக நாளை மதியம் கேட்கிறேன்.தங்களுக்கு இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
பேத்தி மற்றும் குடும்பத்தாரின் நலத்துக்கும் உங்கள் நலத்துக்கும் அன்னையின் ஆசிகள் பரிபூரணமாக இருக்கட்டும்.

அன்பான பின்னூட்டத்துக்கு மிக நன்றி மா.
இந்த நவராத்திரி தினங்களை எப்பொழுதும் பொன்னாக
மதிக்கிறேன்.

நம் எல்லோருக்கும் மகிழ்வு கொடுக்கும் பத்து நாட்கள்
நிரந்தமாக நம்முள் பதிந்திருக்கின்றன.
குழந்தைகள் ,அவர்களுடைய குழந்தைகள்
எல்லோரும் நன்றாக செழிப்பாக
இருக்க வேண்டும்.அன்பு வாழ்த்துகள் அம்மா.

கோமதி அரசு said...

அனைத்து பாடல்கள் அனைத்தும் கேட்டேன், இனிமையான பாடல்கள்.

படங்கள் எல்லாம் அழகு .
வாழ்த்துக்கள் அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
படங்களைப் பார்த்து மகிழ்ந்ததற்கு மிக நன்றிமா.

எல்லா அம்பிகைகளூம் தாமரையில் வாழ்வதாகத்
தானே சொல்கிறார்கள்.

Geetha Sambasivam said...

அனைத்துமே பிடித்த பாடல்கள் ஒரு காலத்தில் யார் பாடினாலும் அவங்க கிட்டே நேயர் விருப்பமாகக் கேட்டவையும் கூட. பகிர்வுக்கு மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

வலியில்லாத வாழ்வை இறைவன் அருளவேண்டும்.
இதெல்லாம் நாம் மதுரையில் கேட்டு அனுபவித்த பாடல்கள்.

அருள் புரிவாய் கருணைக் கடலே
விட்டுப் போய்விட்டது.
ஆமாம் சொல்ல வல்லாயோ எங்கள் வீட்டுக்
கொலுவிலும் ஒலித்திருக்கிறது.
பழைய நினைவுகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...