Blog Archive

Friday, March 05, 2021

காலை 8மணி முதல் பந்தி சாப்பாடு - 82 வருட வைஸ்யா மாடர்ன் ஹோட்டல்,salem - MSF

சேலம் ஹோட்டல். இங்கிருந்து பருப்புப்பொடி, பூண்டுப்பொடியை  4 வருடங்கள் வாங்கி சுவைத்து அனுபவித்தோம்.
மிக மிக நன்றி. அதே போல சோஹன் அல்வா. நெய்யில்
செய்தது. இன்னும் அது போல சாப்பிடவில்லை.
81ஆம்  வயது பூர்த்தி செய்யும் அருமை சிங்கத்துக்கு 
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
எங்கிருந்தாலும் தன் குடும்பத்தை அவர் நன்றாக வைத்திருப்பார்
என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் கிடையாது.

10 comments:

நெல்லைத் தமிழன் said...

இதை முன்பே பார்த்துவிட்டேன் வல்லிம்மா.... இங்க ஒரு தடவை (90ல்) சாப்பிட்டுருக்கேனோ? சாப்பாடு சுமார் என்பது என் அபிப்ராயம். அதாவது கண்டதிப்பிலி ரசம், கண்டங்கத்திரி துவையல் என்பது போல. அல்லது அது வேறு ஹோட்டலா என்று நினைவில்லை.

ஸ்ரீராம். said...

பாரம்பரியமான ஹோட்டல்.  இருபத்தி நாலு மணி நேரமும் சாப்பாடு மட்டும்தான் என்பது ஆச்சர்யம்.  வீட்டை விட்டு தனியாக தங்கி இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம்.

Geetha Sambasivam said...

எங்கள் நமஸ்காரங்கள் வல்லி. என்றென்றும் உங்களுடன் இருக்கிறார்/இருப்பார்.

கோமதி அரசு said...

சாரின் பிறந்தநாளுக்கு அருமையான சாப்பாடு, இனிப்பு சாப்பிட்ட உணர்வு.

வாழ்த்துக்கள் .வணக்கங்கள்.

பாரம்பரியமான ஹோட்டல் இப்போதும் நல்ல முறையில் நடப்பது மகிழ்ச்சி தருகிறது.


வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
எனக்கு முன்னாடி உங்களுக்கு வந்துடுத்தா.
நாங்க சேலத்தில 66 லிருந்து 70 வரை
இருந்தோம்.
அப்போது நன்றாக இருந்தது.
இப்போது தலை முறையே மாறி இருக்குமே.

நாட்டு மருந்து ரசம் எல்லாம் கிடைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். எனக்கும் இந்த ஹோட்டல்
24 மணி நேரம் நடக்கிறது என்பதே எனக்கு புது செய்தி.

நீங்கள் சொல்வது போல ரெகுலர் வாடிக்கையாளர்கள்
இருப்பார்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மீண்டும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன். சென்னையில் இருந்திருந்தால்
இப்போது இருக்கும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து

நல்ல சாப்பாட்டுடன் அனைவரும் மகிழ்ந்திருக்கலாம்.
2010 இல் அப்படித்தான் செய்தோம்.
துளசியும் கோபாலும் அப்போது அங்கே இருந்தார்கள்.

எல்லாவற்றுக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பரவாயில்லை.
அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

சுவையான சாப்பாடாக இருக்கும் என்று தோன்றுகிறது. பொடி வகைகள், நெள்ளிமுள்ளி - ஆஹா.

சோஹன் அல்வா - ஆஹா... சுவைக்கத் தோன்றுகிறது.

நிறுவனத்திற்கு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல நிறுவனம் தான் மா.

கொஞ்சம் பழசாக இருக்கும். ஆனாலும் சுத்தம் தான் என்று
அங்கிருக்கும் மச்சினர் சொல்வார்.
இதுவும் வில்வாத்ரி பவனும் புகழ் பெற்றவை.
சேலம் ஒரு வியாபார மையம்.

திருச்சிலும் இருக்கும் மறந்து விட்டது.