Blog Archive

Friday, December 27, 2019

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து ....

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.

மார்கழியின் 11 ஆம் நாள் பாசுரம்.

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து 
+++++++++++++++++++++++++++++++++++++++++



வேங்கடவற்கு எம்மை விதி என்ற மாற்றத்தைக் கடவாமல் இருக்க,அவனைப்  பாதித்த துதிக்க ,
கோதை நாச்சியார் 
தனது ஆறாம் நாள் பாவையை  அழைக்கத் தோழிகளுடன் 
அவள்  வீட்டு வாயிலுக்கு வருகிறாள்.
அவளோ பெருந்தனக்காரரின் பெண்.

அவள் வீட்டில் கன்றுகளும்  கறவை  மாடுகளுமாகக் கூட்டங்கள் 
அவைகள் அனைத்தையும் கறந்து பால் சேர்க்கும் வல்லமை படைத்த கோவலனின்    பொற்கொடி  அவள்.
அங்க லாவண்யமும் ,சௌந்தர்யமும்  பொருந்தியவள் .

அவள் தந்தையோ  கண்ணனைப்  பகைத்தவர்களை அடியோடு அழிப்பவர்.
 குற்றமே  இல்லாத ,  புனமயில் அவள் நிச்சிந்தையாக உறங்குவதை 
பார்த்து ஆண்டாள்,
உன் சுற்றத்துத் தோழிமார் அனைவரும் இங்கே வந்துவிட்டோம். உன் முற்றத்தில் நின்று கண்ணனைப் பாடிக் கொண்டிருக்கிறோம்.
அதைக்கேட்டும்  நீ உறங்குவது சரியல்ல.

மறுத்துப் பேசாமல் எங்களுடன்  வா என்று வேண்டுகிறாள்.

நாமும் செல்வோம்.

Image result for THIRUPPAAVAI SCENES



4 comments:

Geetha Sambasivam said...

மிக அருமையாகவும் எளிமையாகவும் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி கீதா மா.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான குரலில் திருப்பாவை. மிகவும் இரசித்துக் கேட்டேன் வல்லிம்மா... பாடலுக்கான படமும் சிறப்பு.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

மாதேவி said...

பாடல் பின்பு கேட்கிறேன்.