Blog Archive

Monday, January 28, 2019

சுமையை இறக்கி வையுங்கள் 2

Vallisimhan

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் .

 வானொலியில் ஸ்மூத் ஜாஸ் கேட்டுக்கொண்டே, அன்றைய வேலைகளைக்
கவனிக்க ஆரம்பித்தாள். நிர்மலா.
துணிகளை பெரிய மெஷினில் போட்டு அது இயங்க ஆரம்பித்ததும்.
முந்தைய தின துணிமணிகளை
அவரவர் இடத்தில் அடுக்கிவைத்தாள்.
19 வயது பெண்களுக்கு இன்னும் பொறுப்பு
வரவில்லையே. தன் வேலையைத் தான் பார்த்துக் கொள்ளவேண்டாமா
என்றபடி மனதுக்குள் சொல்லிக் கொண்டு, தன் அறையை ஒழுங்கு செய்து குளித்துவிட்டுக் கீழே வந்து தனக்கௌ வேண்டும் சமையல் வேலைகளைக்
கவனித்தாள்.
பாதி சமயம் அவளுக்கு இரண்டு சப்பாத்தியும், கூட்டும்,கிண்ணம் தயிரும்
போதும்.

அதற்குப் பிறகு இரண்டு மணி வரை ஓய்வு தான்.

உள்ளூர் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் பெண்கள்
வீடுவர ஐந்தரை மணி ஆகிவிடும்.
6 மணி அளவில் மகன் ,மருமகள் வருவார்கள்.
அதற்குள்
அவர்களுக்கு இஷ்டப்பட்ட ,பொரியல்,ரசம், துகையல் என்று செய்து
 வைத்துவிடுவாள்.
தான் இந்தியாவிலிருந்து வாங்கி வைத்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தால்
நேரம் போவதே தெரியாது,
அதுவும் இப்போதைய குளிர் கடினமாக இருக்கும் போது
 மீண்டும் தூங்கி ஓய்வெடுக்கவே   தோன்றும்.
களைப்பைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும்
கதவைத் திறந்துவிட்டு, சமையல் மேஜையை தயார் நிலையில் வைப்பாள்.

பெண்கள் உடை மாற்றி உடனே சாப்பிட வந்துவிடுவார்கள்.
வரும்போதே கையில் அலைபேசியில் ஏதாவது செய்தி பார்த்தபடி
வருபவர்களிடம்,
சாப்பிடும்போது அதை வைத்து விட்டு வாருங்கள் என்று
சொன்னது தப்பாகிவிட்டது.
நாளை சப்மிட் செய்ய வேண்டிய அசைன்மெண்ட் பற்றித் தெரிந்து கொள்கிறேன் பாட்டி. என்னால்,இதை ஒத்திப் போட முடியாது என்றதும் பாட்டி மௌனமானாள்.
அவர்கள் சாப்பிடும்போதே, மருமகளும் மகனும் வந்து உட்கார்ந்தார்கள்.இருவர்
கையிலும் அதே அலைபேசி. பேத்தி,பாட்டியைக் கேலியாகப்
பார்த்தாள்.
மகன் குமாரைக் கேட்டாள் //ஏன்பா, அதைவைத்துவிட்டுச் சாப்பிடுங்கள்.செய்தி எங்கே போகும்//
உணவு முக்கியமில்லையா என்று கேட்டால்
பதில் கூட வராது.

இடது கையில் பிடித்துக் கொண்டு வலது கையில் சாப்பிடும் மகனைப்
பார்த்துவிட்டுத் தானும் சாப்பிட்டு முடிப்பால்.
மகனிடம் இருந்து அப்போது பதில் வரும்.
அம்மா நீயும் இதை வாங்கிக் கொள்.
அப்போது இதன் அருமை  புரியும் என்று ,தொலைக்காட்சி
 பார்க்கப் போய் விடுவார்கள்.

எனக்கெதுக்குப்பா இந்தப் புது பழக்கம் எல்லாம்.
தொலைபேசியில் என் தோழிகளிடம் பேசிவிடுகிறேன்.
என்றபடி சாப்பாட்டு மேஜையை ஒழித்து வைத்து
அடுத்த நாள் காலை உணவுக்கு எல்லாம்
சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு
மகனிடம் வந்தாள்.
குமரா, என் தோழி அடுத்த மாதம் சென்னை செல்கிறாள்
டிக்கெட் விலை குறைந்திருக்கிறதாம்.
நானும் சென்று இரண்டு மாதம் இருந்துவிட்டு வருகிறேன்.
வீட்டில் நிறைய மராமத்து வேலைகள் இருக்கிறது.
 அதே போல என் வங்கி வேலைகள், மருத்துவ செக் அப் எல்லாம்
பார்க்க வேண்டும். நான்  போகட்டுமா.
உங்கள் சௌகரியம் எப்படி..
என்றதும் மருமகள் ,திடுக்கிட்டுப் பார்த்தாள்.
நீங்கள் இல்லாமல் வீட்டில் வேலைகள் எப்படி நடக்கும் அத்தை.
நாங்கள் ஜூன் மாதம் ஐரோப்பிய சுற்றுலா போவதாக இருக்கிறோம்.
நீங்கள் அப்போது இந்தியா சென்று வாருங்கள்
என்றாள்.  நிர்மலாவின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

No comments: