Blog Archive

Tuesday, January 29, 2019

சுமையைக் கழற்றி வைத்துவிடலாம் 3

Vallisimhan

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் .
   வினாடி நேரம் தான் யோசித்தாள் நிர்மலா.
சரியப்பா நான் படுக்கப் போகிறேன் என்று தன்னறைக்குப்
போய்விட்டாள்.
 தன்னறையிலிருந்த தொலைபேசியில் இளைய மகனை
அழைத்தாள். ஷண்முகா, நீ இப்பதான் வேலையிலிருந்து வந்திருப்பாய்.
உன்னிடம் பேச வேண்டும் என்றாள்.

அவசரம் இல்லாவிட்டால் அழைக்க மாட்டாள் என்று தெரியும் அவனுக்கு.
சொல்லும்மா,நான் இப்போதெல்லாம் 7 மணிக்கே சாப்பிட்டுவிடுகிறேன்.
நீ சொல்லு.
என்றதும் நிர்மலா தான் இந்தியா செல்ல வேண்டிய
தீர்மானத்தைச் சொன்னதும்.
என்னம்மா திடீரென்று. என்று கேட்டான் மகன்.

மைலத்தில் நம் கோவிலில் விழா வருகிறதுப்பா.
என் தோழியும் சென்னை வரை போகிறாள்.
 குறைந்த விலையில் டிக்கட் கிடைப்பதாகச் சொன்னாள்.
நான் போகலாம் என்று நினைக்கிறேன்.
 நீ என்ன சொல்ற என்று கேட்டபோது மௌனம் தான் பதில்
அம்மா இரண்டு வருடம் முன்னாடிதானம்மா போனே. என்றான்.

அதனால் தான் சொல்கிறேன்.
மைலம் வீடு பழுதடைந்திருப்பதாக எனக்குக் கடிதம் வந்திருக்கிறது,.
இன்னும் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டி இருக்கிறது.

நான் நம் தோட்டக்கார மணியிடம்  சொல்லி
வேலைகளை முடித்துக் கொண்டு வருகிறேன் என்றாள்.

அப்பா கட்டின வீட்டை அம்மாதான் கவனித்துவருகிறாள்
என்பதை ஷண்முகம் அறிவான்...,நாளை சொல்கிறேன் அம்மா
என்றான்.
அண்ணனிடம் சொல்லிவிட்டேண்டா. அவன் ஜூன் போனால்
சரியாக இருக்கும் என்கிறான்.
எனக்குக் கோவில் வேலை வந்துவிட்டது,
பத்திரிக்கை வந்து விட்டது. நான் கிளம்பத்தான் போகிறேன் என்று
 சொல்லி ஃபோனை வைத்து விட்டாள்.

அடுத்த நாளும் எப்போதும் போல் விடிந்தது. யந்திர வேகத்தில் வேலைகளை முடித்த
கையோடு தோழிக்குத் தொலைபேசினாள்  நிர்மலா.
தனக்கும் சேர்த்து பயணச்சீட்டு வாங்கும்படியும்.
டிக்கெட்டுக்கு உண்டான பணத்தை அடுத்த சந்திப்பில்
 கொடுத்துவிடுவதாகவும் சொன்னாள்.
தோழி சந்திராவும் சரி என்று சொல்ல ,மாசி மாதப் பிறப்பை ஒட்டிக்
கிளம்பலாம் என்று தீர்மானித்தனர்.

அடுத்து இன்னோரு தோழிக்குப் பேசினாள். தான் ஊருக்குப்
 போவதால் வீட்டில் வேலைகளுக்குக்  கஷ்டப் படுவாள் என்றும்,
அவளுடைய வட்டத்தில் உணவு செய்து கொடுப்பவர்கள்
யாராவது இருந்தால் சொல்ல முடியுமா என்று கேட்டாள்.
அவளும், சப்பாத்தி, கூட்டு, சட்டினி என்று பலவித சமையல் செய்து
விற்கும் விமலா பென் நம்பர் கொடுத்தாள்.

அந்த நம்பருக்குப் பேசிய நிர்மலா,தன் வீட்டுத் தேவைகளை விளக்க
வட இந்திய சாப்பாட்டு வகைகள் தான் செய்வதாகவும் தன் பங்குதாரர்
 தென்னிந்திய சமையல் வகைகளைச் செய்வாள்
என்றதும் நிர்மலா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மீண்டும்\
 சந்தித்துப் பிறகு..... சுபம் போடலாம்.  வாழ்க வளமுடன்.

No comments: