Blog Archive

Monday, December 10, 2018

காலமகள் கண் திறப்பாள்

குத்துக்காலிட்டு நடைபாதையில் உட்கார்ந்த சரவணன் ஐய்யாவுக்குக்
கண் இருட்டிக் கொண்டுவந்தது.
திருச்சி சந்தைக்கு வந்தவரின் பையை யாரோ பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள்.
காளை மாடுகளைச் சந்தையில் விற்க வந்து நல்ல லாபத்துக்கும் விற்றுவிட்டு
உணவு அருந்த, பணம் வைத்திருந்த துணிப்பையை வெளியே
Add caption
Add caption
கிடைச்சிறுமியா கவலையை விடு ..
எடுத்த பையை  யாரோ பறித்துவிட்டார்கள்.
ஏமாற்றப் பட்ட விவசாயி.

இணைய நட்பு  திரு வெங்கட் நாகராஜனின் புகைப்படம் ஒன்று எல்லோரையும் பாதித்தது நினைவிருக்கலாம்.
++++++++++++++++++++++
நம் சரவணன் அய்யாவும் அதை போல விவசாயிதான்.
எப்போதும் வானம் பார்த்த பூமியின் சொந்தக்காரர் .
ஆமாம் ராம நாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்தவர்.

இந்த 75 வயதில் பல அராசாங்கங்களையும்  கண்டவர்.
அவர் தந்தை காலத்தில் ரயில்வே  லைன் வந்த பொது சில நிலங்களை இழந்தாலும்  புஞ்சைப் பயிர்கள்,வரகு,சாமை என்று விளைவித்து
சந்தையில் வியாபாரம் செய்வார்.
அவர் காலத்துக்குப் பிறகு மதுரை ராமேஸ்வரம் சாலை வந்தது.
அதில்  இவருக்கு நாட்டம் சில   ஏக்கர்.

அசரவில்லை சரவணன். கையில் இருந்த பணத்தைப் போட்டு சொட்டு நீர்ப் பாசனம் செய்து ,கத்திரி,வெண்டை,என்று மாற்றுப் பயிர்கள் விளைவித்தார் வயதும் ஆச்சு. எல்லாப் பிள்ளைகளையும் போல அவர் மக்களும் மதுரையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.

மனைவி பர்வதம் அவருக்கு உறு  துணை.

எதற்கும் அசராத உடற்பாங்கு. மனப்பாங்கு.
அய்யா அசரும் யோசனைகளை சொல்லி ஊக்கம் கொடுப்பதும்,  வானொலியில் சொல்லும் நல்ல செய்திகளை அவரிடம் பகிர்ந்ந்து உற்சாகப படுத்துவதும் அவள் வேலை.

நிலங்கள் சுருங்கி மழை இல்லாமல் பிளந்து கிடப்பது மனதை உறுத்த, பத்து வருடங்களாகக் கூட இருக்கும்  மாடுகளை நல்ல நிலைமையில் இருக்கும் போதே விற்றுவிட்டு, தன்  சிறிய இடத்துக்கு பி பக்கத்திலே ஏற்றக்  கிணறு போட்டு மிச்ச நாட்களைக் கழிக்க
அவளுக்குத் தோன்றியது. மானம் கண் திறந்தால்  மீண்டும் வெள்ளாமை ஆரம்பிக்கலாம் என்று ஆக்கம்
கொடுத்ததும் அவள்தான்.
அக்கம்பக்கத்து விவசாயிகள் திருச்சி சந்தையில் மாட்டு வியாபாரம் நேர்மை என்று  சொன்னதும்  சரவணனும் மனமில்லாமல், லாரியில் மாடுகளைக் கொண்டு வந்து இறக்கினார்.
அப்போது நிகழ்ந்ததுதான் இந்தத் திருட்டு.
தொடரும்.

No comments: