Blog Archive

Sunday, October 14, 2018

மழை நாட்களும் நவராத்திரியும்.

Vallisimhan
எல்லோரும்  நலமாக  வாழ வேண்டும் 

பகல் முழுவதும் காயும்,இராத்திரி முழுவதும் பெய்யும்.
புரட்டாசியில் பொன்னும் உருகும் இதெல்லாம் மாமியார் சொல்லும் வார்த்தைகள்.
அனைவரும் அறிந்ததே.

அதே போல நவராத்திரி நாட்களில் வருண பகவான் கொலு பார்க்க வந்துவிடுவான்.
ஒருவருடம்  மாலையில் கொட்டித் தீர்த்த மழையால்
சுண்டல் வினியோகம் தடைப் பட்டது.
 நாளைக்கு மழியில்ல்லாத போது வருகிறேன் என்றால்
நாம் கொலு மஞ்சள் குங்குமம் வாங்கக் குறித்திருந்த வீடுகளுக்குச் செல்லத் தடையேற்
படூம்.

ரேவதி மாமி ஒரு தடவையாவது கொலுவுக்கு வந்தாள்
என்றே கிடையாது.
அப்படி என்ன வேலையோ நமக்கில்லாத வேலை என்று 
என் தோழி அலுத்துக் கொள்வாள்.

நம்ம வீட்டில சிங்கம் என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதே,
எதிர் வீட்டு அம்மா வாசலோடு போய்விடுவாள்.
பக்கத்து வீட்டு ப்ரேமா, நீ வர வரைக்கும் போக மாட்டா.
விஜயதசமி அன்னிக்கு எல்லோர் வீட்டுக்கும் போய் வா என்று பெருந்தன்மையாகக்
கட்டளை சொல்லிவிடுவார்.


நவராத்திரியின் போது ஒரு நாளைக்கு ஒருத்தருக்காவது
தாம்பூலம் கொடுக்க வேண்டும் என்பது மாமியார் சொல்லி வைத்தது.

இந்த மழையிலும் வந்து என்னைக் கௌரவித்த என் நாத்தனார்களை
 அன்புடன் நினைக்கிறேன்.

 தோழிகளும் அந்த மழையிலும் வந்திருக்கிறார்கள்.
யாரும் நவராத்திரி சந்திப்பை விட்டுக் கொடுப்பதில்லை.
2008 வரை உள்ளே கூடத்தில் இருந்த கொலு,
வாசலில் அறை கட்டிய பிறகு அங்கே இடம் மாறினார்கள். கொலுப்படிகள்
இரண்டு மூன்றுதான். பொம்மைகளோ பிரம்மாண்ட அளவு.

கடைசியாக கொலு வைத்த போது 2016 என்று நினைக்கிறேன்.
ஒரேஒரு பெஞ்சில் புடவை விரித்து அத்தனை பொம்மைகளையும்

வைத்துவிட்டேன்.எல்லோரையும் விட  ராணி,அவள் குழந்தைகள்,பேரன் 
பேத்திகள், இஸ்திரி மீனா அவள் பெண்கள்.,இவர்கள் வருவதுதான் 

சந்தோஷமாக இருக்கும்.எல்லா பொம்மைகளையும் ரசிப்பார்கள். 
உள்ளே வருமுன் செருப்பு ,ரெயின் கோட், எல்லாம் 
கழற்றி வைத்துவிட்டு பூப்போல வருவது அழகாக இருக்கும்.

இப்பொழுது சென்னையில் மழை இருக்கா  என்று தெரிய வில்லை. வந்த
மழை ஒடிஷாவுக்குப் போய்விட்டதாமே.

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, விஜய தசமி நலவாழ்த்துகள்.
அன்னை அருள் நிறையட்டும்

No comments: