Posts

Showing posts from February, 2010

502,எண்ணங்கள் நல்லதனால்

Image
எத்தனையோ கொடுத்து வைத்திருந்தால் தாம் இப்படி ஒரு கணவர் அமைவார். நீங்க அதை நினைச்சு சந்தோஷப்படணும். என்னை மாதிரியா பாருங்கோ. இவர் இப்படி விபத்தில காலைக் கொடுத்துட்டு நிக்கிறாரெ. மருமகள் சரியில்லை. மகன் சம்பாதிக்கிறது போறது என்று மருமகள் வேற இருபதாயிரம் சம்பாதிக்கிறாள். இருந்தாலும் என் நிலைமையைப் பார்த்தீர்களா. இந்த மாதிரிப் பட்சணம் பலகாரம் செய்து வாழ்க்கையை ஓட்டுகிறேன். ''என்ன மூணரை க்ரௌண்ட் நிலம் திருவள்ளூர்ல மாமா செயலா இருக்கும் போது வாங்கிப் போட்டது. இப்போ ....லட்சங்களுக்குப் போகுமாம். எதுக்குச் சொல்ல வரேன்னா ,பர்சைத் திறந்து இந்த வார்டு பாய்,நர்ஸ் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். எப்பவுமே பணம் கைல இருக்கும்னு நினைக்கக் கூடாது வரும் போகும் அதுதான் செல்வ. சுகிசிவம் நேத்திக்கூட கதைல சொன்னாரே'' சாமி என்று ஆகிவிட்டது எனக்கு.ஒரு அரை மணி நேர அறுவை சிகித்சை. கண்புரை அகற்ற. காலையிலியே நானும் இவரும் நர்சிங் ஹோமுக்கு வந்தாச்சு. அப்போது எனக்கு முன்னாலேயெ ஒரு அம்மா அங்கே உர்ட்கார்ந்திருந்தார். அவரது கணவருக்கும் அன்று இதே அறுவை சிகிச்சை. நான் ஏற்கனவே கொஞ...

501,எண்ணி எண்ணிப் பார்த்து மனம்

Image
இப்படித்தான் ஆரம்பித்தது நாச்சியாரின் எண்ணுதல். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.முட்டை பொரிக்கும் முன் கோழிக்குஞ்சை எண்ணாதே என்று. நான் செய்த தப்பும் அதுதான். முட்டைகளை எண்ணி ஐன்னூறு பதிவு என்று போட்டுவிட்டேன். ஐன்னூறு முட்டைகளில் ஒன்று பொரிக்காத, வெளிவராத ட்ராஃப்டாக இருந்த பதிவு. டாஷ்போர்டில் 500 என்று காண்பித்ததும்,(அதுக்குத் தெரியாது இல்லையா. எண்ணிக்கைதானே முக்கியம், பாதி எழுத்த பப்ளிஷ் பண்ண எழுத்தான்னு இனம் கண்டு கொள்ள ப்ளாகுக்குத் தெரியாது. அதோட சாஃப்ட்வேர் அந்த மாதிரி.:) ஆகையினாலே இந்த மொக்கைப் பதிவைப் படித்து விட்டு நீங்க எல்லாரும் அப்ப சொன்ன வார்த்தைக்கு மாப்பு கொடுத்துடுங்க. இப்ப நிசமாலுமே நான் 501 பதிவுக்கு வந்துட்டேன்!! இது உண்மை உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறில்லை. இதனால் எனக்கு வயதாகிவிட்டது , கண்ணு சரியாகத் தெரியவில்லை, வீட்டுக்காரருக்குக் கண் ஆபரேஷன் செய்த மாதிரி வல்லிம்மாவுக்கும் கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும்னெல்லாம் நினைக்க வேண்டாம்.) என் இதயம், நரம்பு மண்டலம், கொலெஸ்ட்ரால், சர்க்கரை,ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு எல்லாம் சரியாக இருப்பதாக எம்.வி. டயபெடிக்ஸ்ல சொல்லிட்டாங...

500, அ பாட்ச் ஆப் ப்ளு(சினிமா)

Image
selina,gordan கோர்டன் ************************ சமீபத்தில் டர்னர் க்ளாசிக் மூவீஸ் தொலைக்காட்சியில் இந்தப் படத்தைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு கண் பார்வை இழந்த பெண்ணின் வாழ்க்கையின் சோகமும் சந்தோஷமும் மிக அழகான சந்தர்ப்பங்களின் நிகழ்ச்சிகளின் கோர்வையாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். பதினாறு வயது செலினா வும் அவள் அம்மாவும்,தாத்தாவும் ஒரு அபார்ட்மெண்டில் வசித்துவருகிறார்கள் . வறுமைக்கோட்டின் எல்லை. பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் அம்மாவாக ஷெல்லி விண்டர்ஸ் செலினாவாக எலிசபெத் ஹார்ட்மேன் என்ற நடிகை கண்ணில்லாத பெண்ணாக வெகு அருமையாக நடித்திருக்கிறார். கோர்டன் என்னும் கறுப்பினத்தவராக சிட்னி பாட்டியெ(Sidney Poitier) ஓல் பா என்று அழைக்கப்படும் தாத்தா. இவர்களைச் சுற்றி வரும் கதை. ஐந்து வயதில் அம்மாவுக்கும் அவருடைய சினேகிதனுக்கும் சண்டையில் கண்கள் குருடாகின்றன செலினாவுக்கு. அந்த நாட்களில் கறுப்பு வெள்ளை இனத்தவரிடையே மிகுந்த கசப்புணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம். வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமேஅவளைப் பயன்படுத்திக் கொள்கிறாள் அம்மா. செலினாவுக்கு ஒரே ஒர...

கத்திரிக்காய் ஊறுகாய்

Image
சிநேகிதியின் வீட்டில் போட்ட கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது இன்னொரு விதம் .நம்ம ஊறுகாய் இது இல்ல. பி டி கத்திரிக்காய் எல்லாவிதத்திலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் போது ஊறுகாய் போடும் யோசனை வந்தது. கத்திரிக்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்:0) ********************************************************************* கத்திரிக்காய் ....இது ரொம்ப அவசியம். ஊறுகாய்னு போடறதுனால உப்பு ,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி, மெந்தியப் பொடி,மஞ்சள் பொடி எல்லாம் அளவோடு இருக்கணும். எண்ணெயும் நிறைய வேண்டும். இல்லாவிட்டால் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்காது. இப்ப எங்க வழிக் கத்திரிக்காய் ஊறுகாய் பார்க்கலாமா. பரிசோதனையாச் செய்யறவங்களுக்குக் குறைந்த அளவு ஊறுகாய்ப் போடும் அளவுகளைச் சொல்கிறேன். கத்திரிக்காய். அதுவும் இந்த பச்சைக் கலரில் *************** இருக்குமே அந்த கத்திரிக்காய். தேவையான அளவுகள் *************** 1, 6 எண்ணம் பெரிய இளம் பச்சை வண்ண நீளக் கத்திரிக்காய், பிஞ்சா இருக்கிறதாப் பொறுக்கி எடுத்துக்கணும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்...

பதினாறு வயது பறந்தது ...

Image
அன்பு அமைதிச்சாரல் விடுத்த அழைப்பு தித்திக்கிறது. நன்றிப்பா. இணையத்தில் இருக்கும் நட்புகளை எப்பவும் வியந்து கொண்டே இருப்பேன். நான் அதிகமாகப் பின்னூட்டமிட நிறைய பதிவுகளுக்குப் போவதில்லை. இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நான் இடும் பதிவுகளுக்கு விடாமல் வந்து ஆதரவுப் பின்னூட்டங்களும் இடுவதுதான் என்னை இன்னும் உற்சாகப் படுத்துகிறது. இப்போது இந்தப் பதின்ம வயது கொண்டாட்டங்களை எழுதச் சொல்ல அழைப்பு, அதுவும் இவ்வளவு வயது தாண்டிய பிறகு!:) ஆனாலும் அந்த யூனிஃபார்ம், ப்ரேயர் பாட்டு, மார்ச் பாஸ்ட், திறந்தவெளி அரங்கு , மேடை நாட்டியம்( :-) ) இதோட, போனசா ஒரு வருட கல்லூரி வாழ்க்கை. இதில வாலுத்தனம் காட்ட அனுமதி கிடையாது. ஸோ அது அவுட். 2,ஹீரோயின் வொர்ஷிப்னா அதுக்கு எங்களுக்கு வைஜயந்திமாலாவும் ,சரோஜா தேவியும் தான் ரோல் மாடல். நீண்ட பின்னலை மடித்துக் கட்டி இரண்டு பக்கமும் தெரிகிற மாதிரி அம்மாவைப் பின்னிவிடச் சொல்லி பள்ளிக்குச் சென்ற நினைவு இருக்கிறது. தலை நிறைய மல்லிகைப்பூ அம்மா வைத்து விட்டாலும் எடுத்து விட்டு ஒரே ஒரு ரோஜாப்பூ வைத்துக் கொண்ட நிழலும் கண்ணில் ஆடுகிறது. 3,அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ...

ஆத்தா உன் சேலை ..

Image
வலது பக்கம் இருப்பது என் அம்மா. ஆத்தா உன் சேலை'' பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா. அண்மையில் கேட்க நேர்ந்தது. அதுவும் எங்கள் அம்மாவின் பிறந்த நாள் அன்று கேட்டதுதான் அதிசயம். கைநிறையக் காசிருக்கு கடைக்குப் போகலாம் எல்லாமும் வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா! ஆத்தா உன் சேலை, பாடலில் அம்மாவின் புடவை எடுக்கும் அவதாரங்கள் அநேகமாகிறது. பிள்ளைக்குத் தூளி, பையனுக்குத் தலை துவட்ட, பெண்ணுக்குத் தாவணீயாக, கிணத்துத் தண்ணியை வடிகட்டித் தண்ணீரை இனிமையாக்குமாம். ஆற்றில மீன் பிடிக்கும் வலையாகுமாம், காயத்துக்குக் கட்டுப் போடுமாம். வெறுந்தரையில் படுக்காமல் ஆத்தா சேலையில் படுத்தால் தூக்கமும் தாலாட்டோட வருமாம். கடைசியில் இந்தக் கவிஞர் தன் இறுதிப் பயணத்துக்கும் ஆத்தா சேலைதான் வேணும் என்கிறார். எழுதியவரின் பெயரைக் கவனிக்காமல் விட்டது என் தவறில்லை. அது பாடலின் அருமையால் விளைந்த கவனப் பிசகு. அம்மாவின் கூறைப் புடைவையை இன்னும் என் புடவைகளுக்குப் புதைத்து வைத்திருக்கிறேன். அதுவும் குட்டிக்கரா பவுடரின் வாசமும் இன்னும் மெலிதாக மணம் வீசிக் கொண்டு மனத்தை நிறைக்கிறது. அம்மாவின் கையால் ...

துளசியின் செல்லங்களும் பேத்தியின் தோழர்களும்

Image
ஜோஜோ புத்தா க(ரூ)ப்பு புத்தா கப்பு புத்தா கோகி புத்தா தூது புத்தா பவ் வாவ் Pஉத்தா பூ புத்தா AJJU PUTHTHA எல்லாச் செல்வங்களுடனும் எங்கள் மணநாளை நாங்களும், துளசியின் பிறந்த நாளான பிப்ரவரி ஐந்தையும் கொண்டாடுகிறோம். அனைவருக்கும் எங்கள் ஆசிகள். எல்லோரும் வாழ வேண்டும்.

மீண்டும் ஒரு வெள்ளிப் பதிவு

மீண்டும் எழுத வேண்டிய அவசியம். இந்தப் பதிவை அப்பவே எழுதி அப்படியே பப்ளிஷ் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். ஏதோ டெம்ப்லேட் தகறாரா என்ன வென்று தெரியவில்லை. இருந்தாலும் எங்கள் பேத்திக்காகப் பிரத்தியேகப் பதிவு என்பதால் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். அநேகமாக எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பெரிய மகன் ,குழந்தையை வெப் காமுக்கு அழைத்து வந்துவிடுவான். முதலில் பேத்திக்குப் புரியவில்லை. ஏன் இவர்களைத் தொட முடியவில்லை என்று. பேச்சு வந்ததும் தாத்தி,தாத்தா என்று அவளே அழைக்க ஆரம்பித்தாள். புதுப் பட்டம் எனக்குப் பிடித்தே இருக்கிறது. அவள் அம்மாவின் அம்மாவை அம்மம்மா என்று அழைப்பதால் எனக்குத் தனிப் பட்டம் சூட்டி இருக்கிறாள். வெள்ளிக்கிழமை தன் அப்பா வீட்டில் இருப்பதை எப்படிக் கண்டு பிடிக்கிறாள். இது ஒரு பெரிய துப்பறியும் வேலை இல்லை. தினம் அப்பா ஹாஃபீஸ்(!) கிளம்புபோது ஷூவை மறைத்து வைப்பாள். கைபேசியை எடுத்துக் கொண்டு தர மாட்டாள். பேனா,ஐடி கார்ட் எல்லாவற்றையும் தன் குட்டிப் பைக்குள் போட்டுக் கொண்டுவிடுவாள். வெள்ளிக்கிழமையன்று அப்பா ஒன்றும் செய்யாமல் வெறும் வீட்டுச் செருப்போடு உலாத்துவதையும் , அம்மா தூங்குவதையும் கண்டு ...