502,எண்ணங்கள் நல்லதனால்
எத்தனையோ கொடுத்து வைத்திருந்தால் தாம் இப்படி ஒரு கணவர் அமைவார். நீங்க அதை நினைச்சு சந்தோஷப்படணும். என்னை மாதிரியா பாருங்கோ. இவர் இப்படி விபத்தில காலைக் கொடுத்துட்டு நிக்கிறாரெ. மருமகள் சரியில்லை. மகன் சம்பாதிக்கிறது போறது என்று மருமகள் வேற இருபதாயிரம் சம்பாதிக்கிறாள். இருந்தாலும் என் நிலைமையைப் பார்த்தீர்களா. இந்த மாதிரிப் பட்சணம் பலகாரம் செய்து வாழ்க்கையை ஓட்டுகிறேன். ''என்ன மூணரை க்ரௌண்ட் நிலம் திருவள்ளூர்ல மாமா செயலா இருக்கும் போது வாங்கிப் போட்டது. இப்போ ....லட்சங்களுக்குப் போகுமாம். எதுக்குச் சொல்ல வரேன்னா ,பர்சைத் திறந்து இந்த வார்டு பாய்,நர்ஸ் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். எப்பவுமே பணம் கைல இருக்கும்னு நினைக்கக் கூடாது வரும் போகும் அதுதான் செல்வ. சுகிசிவம் நேத்திக்கூட கதைல சொன்னாரே'' சாமி என்று ஆகிவிட்டது எனக்கு.ஒரு அரை மணி நேர அறுவை சிகித்சை. கண்புரை அகற்ற. காலையிலியே நானும் இவரும் நர்சிங் ஹோமுக்கு வந்தாச்சு. அப்போது எனக்கு முன்னாலேயெ ஒரு அம்மா அங்கே உர்ட்கார்ந்திருந்தார். அவரது கணவருக்கும் அன்று இதே அறுவை சிகிச்சை. நான் ஏற்கனவே கொஞ...