Blog Archive

Sunday, February 02, 2020

உலக நீதி 4.

வல்லிசிம்ஹன்


எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .
உலக நீதி   4.

//வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே//

Image result for Gossiping
 இந்தப் பாடலைப் படித்துக் காண்பிக்கவும் சரியான நேரம் 
வந்தது.
 பேரனுக்கு அவன் தோழன் யாரையோ பற்றி இவனிடம் சொன்னது 
பாத்தித்து விட்டது.
Is it true Paatti? என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.
சொன்னவன் இந்த ஊர்க்காரன். 
சொல்லப்பட்டவனும் இந்த ஊர்க்காரர்கள்.
அவர்களது பெற்றோர் பிரிந்து விட்டதாக சேதி.

இவனைப் பாதித்தது.
குழந்தை வயதிலேயே இந்த வம்புகள் வேண்டாமே
என்று தோன்றியது.
அப்படி ஏதாவது கேட்டால், உனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை 
அப்பா.
அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக் கொள்வார்கள்.
நாளடைவில் சரியாகிவிடும் என்று சொல்லிவைத்தேன்.

இன்னோரு தடவை இது போல் பேச்சு வந்தால் 
பாஸ்கெட் பால், ஃபுட்பால் என்று பேச்சை மாற்றிவிடுடா
பையா. வம்பு பேசுவது மிகத் தவறு.
நமக்கு அது நஷ்டமே தவிர லாபம் ஒன்றில்லை
என்று சொல்லிவைத்தேன்.
மகன் வந்ததும் மருமகள்,பேத்தி எல்லோருமாக உட்கார்ந்து,
பழைய கால விளையாட்டான ,வாக்கியம் கடத்துதலை விளையாட
ஆரம்பித்தோம்.
The cow jumped over the moon like a fork and spoon''
என்கிற நீண்ட வாக்கியம் ஐந்து காதுகளில் 
புறப்பட்டு வந்த போது cow and moon ate with fork and spoon
என்று விஸ்வரூபம் எடுத்தது.
சின்னவனே சிரித்து விட்டான்.
சிறிது நேரத்தில் கொஞ்சம் தெளிவு வந்தது.
வம்பு பேசுகிறவரிடம் நட்பு வேண்டாம் என்று அவனுக்குப் புரிந்ததா
என்று இனிதான் தெரியும்.
 





2 comments:

KILLERGEE Devakottai said...

ஆம் வம்பு பேசுவதால் நஷ்டமேயன்றி லாபமில்லை.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான நீதி.

தொடரட்டும் பதிவுகள். நானும் தொடர்கிறேன் மா.