Tuesday, January 01, 2019

இனிய புத்தாண்டு இன்பமாக மலரட்டும்.

Vallisimhan


இனிய புத்தாண்டு இன்பமாக மலரட்டும். 2019ஆம் வருடமும் பிறந்துவிட்டது.
நாட்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
அவற்றுள் நாம் என்ன பொக்கிஷங்களை வைத்தோம் என்று
யோசித்துப் பார்க்கிறேன்.

அமைதி,ஆரோக்கியம் ,பிறர் மனம் நோகாமல் பேசுதல், அனைவரிடமும் அன்பு பாராட்டுதல்
,குழந்தைகளை மதித்து உரையாடுதல் என்று எத்தனையோ நற்காரியங்களை பொட்டலம் கட்டி வைத்துவிட்டால் இந்த வருடமும் அடுத்த வருடம் வரை மணக்கும்.
மீண்டும் நினைவுப் பாதைகளில்  நல்ல செடிகளை வளர்க்க ஏதுவாகும்.

வருடத்தில் நான்கு  பருவங்கள் வருவது போல வாழ்விலும்
பலவிதத் திருப்பங்கள். ஆனால் அனைத்தையும் சமாளிக்க
அன்பு கொண்ட மனங்களை இறைவன் அருளி இருக்கிறன் ஆதரவு காட்ட. இத்தனை நட்புகள் எனக்குப் பதிவுலகம் வரும் வரை இருந்ததில்லை.
ஒன்றையும் கைம்மாறு எதிர்பாராமல் அம்மா,அக்கா என்று அழைக்கும் நல்ல உள்ளங்கள் என்றும் வலமாக இருக்க வேண்டும்.
இறைவன் அனைவருக்கும் ஆரோக்கியம்,அமைதி கொடுக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்.

No comments:

மின்சார சம்சாரம்...2007

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்   2007 செப்டம்பர்.  இரண்டாவது பேரன் பிறப்பை ஒட்டி, அமெரிக்க விஜயம் முடிந்து  ஸ்விஸ், துபாய் டேரா ...