Wednesday, September 16, 2015

செப்டம்பர் 13 ஒரு அருமை அன்னையின் தினம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்செப்டம்பர் 13

என் மறு அம்மா விண்ணுலகு ஏகிய தினம்.
உலகிலேயே இத்தனை ஆதரவும்
உறுதியான அன்பும் உள்ள மாமியார் யாருக்கும் கிடைப்பது அரிது.

இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் போனதில்லை.
ஆனால் என் வாழ்வின் சங்கடங்கள் எல்லாம் இவரின் ஒரு செயலில்

நீங்கிடும்.
பெற்ற பிள்ளையின் மீது பழுதில்லா அன்பு.
அனைவரையும் அரவணைத்துப் போகும் சுபாவம்.
இப்பொழுது நான் மாமியாராக இருக்கும் நேரம்
அவரது பெருந்தன்மைகளை நினைத்து அதிசயிக்கிறேன்.
காருண்யம் என்றால்  கமலம்மா..
எங்கள் குடும்பத்துக்கு நன்மை ஒன்றையே நினைத்தவர்.

அவர் இருக்கும் இடம் ஸ்வர்க்கமாகத்தான் இருக்கும்.
கடமைப் பட்டிருக்கும் குடும்பத்தின் பிரதி நிதியாக வணங்குகிறேன்.



















.

3 comments:

Nagendra Bharathi said...

வணங்குவோம்

sury siva said...

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என நினைத்த, நினைக்கின்ற, நினைக்க இருக்கும்
பெண்மணிகள் எல்லோருமே
சிறந்த பெண்களாக, குடும்பத் தலைவிகளாக, மாமியார்களாக,
விளங்குகிறார்கள்.
இவர்கள் "தெய்வத்துள்" போற்றப்படுவது
நாமும் போற்றுவது இயல்பே.

பாசம் என்ற சொல்லை ஒரு சிறிய வளையத்துக்குள் பதுக்காது ,
பாச வலைதனை பரப்பி எல்லோரையும் அணைக்கையில்,
ஒரு பையனுக்குத் தாயார் என்ற நிலையில் இருந்து
பத்மாக்ஷி தாயார் ஆகிவிடுகிறார்.

சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
www.vazhvuneri.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கங்கள் அம்மா...

மீட்கப் படும் புகைப்படங்கள்

வல்லிசிம்ஹன் 15.5/1996 எல்லோரும் வளமாக வாழ வேண்டும் மகளின் திருமணத்தின் போது எடுத்த படம். அருமையான  தருணங்கள் 30 வருடங்களுக்கு முன். 1965 வா...