சக்தி கொடுப்பவள் அசுர சக்தியை அழிப்பவள்.

அன்பான அம்மா உனக்கு ஏது நிகர்?

அவளும் ஓய்ந்து உட்கார்ந்தாள். மற்றவர்களுக்கும் ஓஒய்வெடுக்கக் கற்றுக் கொடுக்கிறாள்.
எல்லாம் அருளும் லட்சுமி
இவர்கள் அனைவரையும் இந்த மகளிர் தினத்துக்காக மட்டும் நினைக்காமல்
எப்போதும் நினைப்பேன்.
வசதிகள் அனைத்தும் இருந்து ,மக்கள் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு நம் வணக்கம் .
அதுவும் மற்ற எத்தனையோ பொழுது போக்குகள் இருக்க மெய்வருத்தம் பாராமல் தங்கள் ஆயுளையே செலவழிப்பவர்களும் எத்தனையோ.
அவர்களில் ஒருவர் எதிராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியை யாக இருந்த திருமதி.இந்திரா.
திருமணமே செய்யாமல் முழுவதும் தமிழுக்கே, அதுவும் கம்பராமாயணத்துக்கு அதிகமாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
வணக்கம் அம்மா.
அடுத்தவர் நோய் தன்னை வாட்டிய போதும் மனம் தளராது பாட்டுக்காக ஒரு குழு அமைத்து, கர்நாடக சங்கீதத்தையேத் தன் மூலதனமாக்க் கொண்டு ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளுக்குப் பாடல் கற்பித்து இன்று அவர்களும் பிரகாசிக்கிறார்கள். அந்த சசிகலா அக்கா படம் போட மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
இன்னோருவர் இளவயதிலியே திருமணம் செய்து குழந்தைகளும் பெற்று,
வளமான வாழ்க்கையில், குடி(ஆல்கஹால்) புகுந்ததால் குடும்ப வாழ்வு பாதிக்கப் பட்டுக் கணவரைப் பிரிய நினைத்து,
சரியான வேளையில் கவுன்சிலிங் கிடைத்ததால், தானும் மாறித் தன் குழந்தைகளையும் மாற்றுச் சிந்தனையில் ஈடுபடுத்தி இன்று வெற்றிகரமான
குழுவுக்கு உதவியாகவும் இருக்கிறார்.சேரிகளில் நடக்கும் குடி சம்பந்தமான சோகங்களுக்கு வடிகால் அமைத்துக் கொடுக்கிறார்.
அவர்கள் குழுவுக்கே அனானிமஸ் என்று பெயர். அதனால் அவர் படமும் வெளியிடமுடியாது.
இவர்களைத்தவிர, நான் ஏற்கனவே உங்களுடனும் பகிர்ந்து கொண்ட உயர்ந்த பெண்ரத்தினங்கள்,
எங்கள் புகுந்த வீட்டுப் பாட்டி கோமளம்மாள்
என் பிறந்த வீட்டுப் பாட்டி ருக்மணி
என் அம்மா ஜயலக்ஷ்மி
என் மாமியார் கமலா சுந்தரராஜன்.
குறுகிய வட்டத்துக்குள் இவர்களை நான் வைக்க விரும்பவில்லை.
ஒவ்வொருவரும் தன் சுயத்தை இழக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை.
மற்றவர்களுக்கும் உதவியாய் இருந்துவிட்டுத்தான் விண்ணுலகம் சென்றார்கள்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்''
இது பாடல்
மாதரே மாதரை இழிவு செய்யாமல் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்தத் தினத்தைக் கொண்டாடுவோம்.
இந்த வரிசையில் நம் வலையுலகச் சிந்தனையாளர்கள், இலக்கியப் பெண்கள்,ஆன்மீக வழிகாட்டிகள், நட்பிற்கு இலக்கணம் சொல்லும் பெண்கள்
இவர்கள் வரிசை இதோ.
கொத்ஸின் மாதாமகி துளசி கோபால்
அறிவுக்களஞ்சியம்,
ஆன்மீகச் சிந்தனையாளினி கீதா சாம்பசிவம்,
சகல துறையிலும் பளிச்சிடும் ஷைலஜா,
கவிதாயினி மதுமிதா,
பங்களூர்த்தென்றல் ராமலக்ஷ்மி,
நெல்லைத்தென்றல் நானானி,
அமெரிக்க கவிநயா,
மும்பையின் ஜெஸ்ரீ கோவிந்தராஜன் தாளித்தே நம்மைக் கவர்ந்தவர்.
இவர் பக்கத்தில் இருந்தால் சகலசமையலையும் கற்று,பத்திரிகை உலகையும் தெரிந்து கொள்ளலாம்.கம்பரையும் அலசலாம்:)
பிறகு நம் அருணா ஸ்ரீனிவாசன்,
உஷா ராமச்சந்திரன்,
நிர்மலா,
ராதாஸ்ரீராம்,
பத்மா அரவிந்த்,
மலர்வனம் லக்ஷ்மி
மங்கை,
முத்துலட்சுமி,
இவர்கள் அனைவரும் உடனே கவனத்துக்கு வந்தவர்கள் அனைவருக்கும் என் இனிய மங்கையர் தின வாழ்த்துகள்.
எப்போதும் போல் வாழ்க்கை உங்கள் எல்லோருக்கும் பூரணமான மகிழ்ச்சியைக் கொடுக்க என் பிரார்த்தனைகள்.
இதைதவிர, நம் மறுபாதிஆண் பதிவர்களின் துணைவிகளுக்கும் என் வாழ்த்துகள். வணக்கம்
முந்திய பதிவுகள்