Blog Archive

Tuesday, May 18, 2021

திரு கி. ராஜ நாராயணன் ஐயா.






வல்லிசிம்ஹன்

அன்பின் ஐயா திரு .ராஜ நாராயணன் இயற்கை எய்தினார்.
2006 ஆம்  ஆண்டு வீட்டுக்கு வந்து எங்களைக் கௌரவித்தது 
இன்னும் இனிமையாகத் தங்கி இருக்கிறது.
சென்று வாருங்கள் ஐயா.


பெருந்தன்மையின் வடிவம். 
அவருடையாவது எண்பதாவது வயதின் விழா சென்னையில் கொண்டாடினார்கள். 
அதற்கு முன் அவரது பாண்டிச்சேரி வீட்டிற்குத் தொடர்பு கொண்டு பேசினேன்.

விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்புக் கொடுத்தார்.
அங்கெல்லாம் போக அவ்வளவு தைரியம் 
இல்லை.
ஐய்யா நீங்களும்  அம்மாவும் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும் 
என்று மட்டும் கேட்டுக் கொண்டேன்.

ஏனெனில் அவரது அணுகுமுறை அவ்வளவு எளிமையாக
இருந்தது.

சிங்கமும் நானும் ,ஐயாவையும் அம்மா கணவதியையும்
வாசலில் இருந்து அழைத்து வைத்து.,
உட்கார வைத்து ,நமஸ்கரித்து வாங்கி வைத்திருந்ததையும்
கொடுத்தோம்.
மிகமிகமிகப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்கள்.

30 நிமிடங்களே தங்கி இருந்தவர்கள்,
அதற்குள் வீடு ,செடி,மரம் ,கிணறு என்று எல்லாவற்றையும்
பார்த்துவிட்டு,
அப்போது வளர்ப்பில் இருந்த பெரிய அரோவானா
மீனையும் பார்த்து மகிழ்ந்து பேசிச் சென்றார்கள்.

என் தாய் தந்தையே வந்திருந்தது போல உணர்ந்தேன்.
அவரது புத்தகங்களில் அவரது கையெழுத்தையும் வாங்கிக் 
கொண்டேன்.
விடை பெற்றுச் சென்றவர் 
அடுத்த தபாலில் இன்னும் இரண்டு 
புத்தகங்களும் ,கடிதம் ஒன்றையும் அனுப்பி விட்டார்.

கிருஷ்ண பரமாத்மா வந்த ஆனந்தத்தில் நான் இருந்தேன்.

இவ்வளவு பெரிய எழுத்தாளர் ,இவ்வளவு
இறங்கி வந்து பாசம் காட்ட முடியுமா என்ற 
வியப்பை இன்னும் நன்றியுடன் அனுபவிக்கிறேன்.

அவரது எழுத்துகள் என்றும் நம்முடன்.
வணக்கம் அப்பா.

Monday, May 17, 2021

.(ரோஜா பூந்தோட்டம் காதல்சில பாடல்கள் 90களில்

சின்ன மகனுக்கும் , என் தம்பியின் மகனுக்கும் பிடித்த 
  விஜய் படங்களின் பாடல்கள் 
எப்பொழுதும் மிக இனிமை.


Saturday, May 15, 2021

ஸ்விஸ் ஆல்ப்ஸ் பற்றிய காணொளி....

2002 என்று நினைக்கிறேன்.
விடாமல் 15 நாட்கள் ஸ்விட்சர்லாந்தை
சுற்றி வந்தோம்.
ஒரு நாள் மகன் வீட்டில் இருப்போம் ,அடுத்த நாள் காலையில் சாப்பாடு எடுத்துக் கொண்டு எட்டுமணிக்கு
வண்டியேறினால் இரவு பத்துமணிக்கு
வந்துவிடுவோம்.
ஒவ்வொரு நிமிடமும் வீணாகாமல் ,ரயில் ஏறி இறங்குவ்தும், அடுத்த ரயிலைப்
பிடிப்பதுமாகக் கழிந்த நாட்கள்.

ஸ்விஸ் விமான நிலையத்தில் இறங்கியதும் 
ஒரு நல்ல காப்பி. 
அத்தனை களைப்பும் பறந்துவிடும்.
விமான நிலையத்திற்குக் கீழேயே ,ரயில் நிலையம். 
அங்கே ஒரு மாதத்துக்கான ரயில் பாஸ் எடுத்துக் கொண்டோம்.

இன்னும் நினைவு இருக்கிறத். 143 ஃப்ராங்க்ஸ்.
இருவருக்கும்  சேர்த்து!!!
இப்பொழுது அதிகரித்திருக்கலாம்.
ஒரு நாள் வெளியே சுற்றுவோம், ஒரு நாள் ஓய்வும்
உள்ளூருக்குள் நடையும்.
அந்த செப்டம்பர் மாதம் அதிகக் குளிரும் இல்லாமல்,
இதமான வெய்யிலுடன்
களைப்பே தெரியாமல் ஊர் சுற்றினோம்.
70 கிலோ எடை 62 கிலோவாகக் குறைந்தது.!!!!!!!!!

அன்பு மகனுக்குத் தான் அத்தனை நன்றியும்.
அப்போது ஒரு மாத விசா தான் கிடைத்தது.
இப்போது 90 நாட்கள் அங்கே இருக்கலாம்.
வயதானதற்குக் கிடைக்கும் மரியாதை.
அங்கே வேலை தேடிக் கொண்டு அங்கேயே தங்கி
விடுவோம் என்ற பயம் அவர்களுக்கு 
இப்போது இல்லை:)
இந்த மகிழ்ச்சியும் நிறைவும் 
அந்த ஊர் மக்களுக்கு என்றும் கிடைக்க வேண்டும்.





Friday, May 14, 2021

சாதனை சிங்கம்



கோவையில் இருக்கும் போது பல விஷயங்களில் முன்னணியில் இருந்தது
சிங்கம் வேலை பார்த்த கம்பெனி.

சேலத்திலிருந்து இங்கே மாறி வரும்போது யூனியன்
வழியே பல தொந்தரவுகள். 
எத்தனையோ இரவுகள் தாமதமாக வருவார்.
தொழிலாளர் ஒத்துழைப்பு அவ்வளவு இல்லை.:(

அப்போது வந்தது தான் இந்த சிறப்பு வேலை. 
அப்பொழுது  திரு ஜி.டி, நாயுடு
இருந்தார்.
அவரது வாகனக் கலெக்ஷன் மிகவும் பேசப்படும்.


அவரிடம் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் வண்டிக்குப்
புதிதாக வண்ணம் அடிக்க வேண்டி இருந்தது.
சிங்கம் தானே போய் அவரைப் பார்த்து
அந்த வேலையைத் தான் செய்து தருவதாகச் சொல்லி

திரு நாயுடு அவர்களின் மகனிடமும் சம்மதம் வாங்கிக் கொண்டார்.
அதற்கான பச்சை வண்ணம் நம் ஊரில் கிடையாது.
எல்லாமே இங்கிலாந்து ரோல்ஸ் ராய்ஸ்
கம்பெனிக்கு எழுதி வரவழைத்து
மேலே இருக்கும் வீடியோ போல செய்து கொடுத்தார்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கான வேலை.

இங்கே வந்த டாக்குமெண்டரி பார்க்கும் போது 
வந்த நினைவுகள் இவை. 
அந்தக் கரங்களை நினைத்துகொள்கிறேன்.
N





School Lunch in Japan - It's Not Just About Eating!

Wednesday, May 12, 2021

ரமேஷ் விநாயகம் பாடல்களில் பிடித்தது


வல்லிசிம்ஹன்

 அவர் இசையும் குரலும் மிக இதம்.




Singapore Airlines A380 First Class Suite London to Singapore (PHENOMENAL!)

லண்டனிலிருந்து சிங்கப்பூர் விமான முதல் வகுப்பு சேவை.

Tuesday, May 11, 2021

மெய் மறுப்பு


வல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு.
சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை.
ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.'

அத்தனை தொற்று கிடையாது.
எப்படி இருக்கிறீர்கள் என்று யாராவது கேட்டால்
கோபம் தான் வருகிறது ' 
என்று பொரிந்தார் ஒரு நட்பு.

நான் கேள்விப்பட்டது ஊடகங்களிலிருந்துமட்டும் இல்லை!!!!.
பாதிக்கப்பட்ட தோழிகள், அவர்கள் குடும்பங்கள்,
உறவுகள் இவை அடங்கிய செய்திகளே.

அவர்களுக்கு என்னிடம் பொய் சொல்ல வேண்டிய 
அவசியம் இல்லை.
பூனை கண்ணை மூடிய கதைதான்.
அவரோ வீட்டை விட்டு நகர்வதில்லை.
எல்லோரும் தடுப்பூசி போட்டுக் 
கொண்டாகிவிட்டது.
அனாவசியமாக அமெரிக்காவையோ, லண்டனையோ
குறை சொல்லி ஆக வேண்டியது என்ன???

இந்தியாவின் அண்டை நாடுகள், தென் அமெரிக்க நாடுகள்,
துருக்கி,நெதர்லாண்ட்ஸ் என்று விரிகிறது நோய்த் தொற்று.

ஒரு அலை இங்கே பாதித்தால் அடுத்த அலை
அங்கே பாதிக்கிறது.
அடிப்படையில் நானும் ஒரு சென்னைப் பிரஜை 
என்பதையே அவர் மறந்து பேசினது வருந்த வைத்தது.

மிகவும் சிரமமான காலம் தான் இது. 
மக்களுடன் சகஜமாகப் பழக் முடியாமல் 
மனமே நொந்து போகிறது.
எங்கேயோ தள்ளித்தள்ளி இருக்கும்
பிள்ளைகளை,அவர்களுக்குத் தடுப்பூசி 
கிடைக்காத சோகத்தை என்ன சொல்லி மறக்க முடியும்.?
தினசரி பிரார்த்தனைகளைத் தவிர வேறு ஏது
செய்ய முடியும்.
தொற்று பாதித்தவர்கள் சீக்கிரம் மீளவேண்டும்.
மற்றவர்கள் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும்.

மனத் திடமும் ,நல் வார்த்தைகளும் எல்லோரையும் காக்கட்டும்.