அன்பின் ஐயா திரு .ராஜ நாராயணன் இயற்கை எய்தினார்.
2006 ஆம் ஆண்டு வீட்டுக்கு வந்து எங்களைக் கௌரவித்தது
இன்னும் இனிமையாகத் தங்கி இருக்கிறது.
சென்று வாருங்கள் ஐயா.
பெருந்தன்மையின் வடிவம்.
அவருடையாவது எண்பதாவது வயதின் விழா சென்னையில் கொண்டாடினார்கள்.
அதற்கு முன் அவரது பாண்டிச்சேரி வீட்டிற்குத் தொடர்பு கொண்டு பேசினேன்.
விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்புக் கொடுத்தார்.
அங்கெல்லாம் போக அவ்வளவு தைரியம்
இல்லை.
ஐய்யா நீங்களும் அம்மாவும் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்
என்று மட்டும் கேட்டுக் கொண்டேன்.
ஏனெனில் அவரது அணுகுமுறை அவ்வளவு எளிமையாக
இருந்தது.
சிங்கமும் நானும் ,ஐயாவையும் அம்மா கணவதியையும்
வாசலில் இருந்து அழைத்து வைத்து.,
உட்கார வைத்து ,நமஸ்கரித்து வாங்கி வைத்திருந்ததையும்
கொடுத்தோம்.
மிகமிகமிகப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்கள்.
30 நிமிடங்களே தங்கி இருந்தவர்கள்,
அதற்குள் வீடு ,செடி,மரம் ,கிணறு என்று எல்லாவற்றையும்
பார்த்துவிட்டு,
அப்போது வளர்ப்பில் இருந்த பெரிய அரோவானா
மீனையும் பார்த்து மகிழ்ந்து பேசிச் சென்றார்கள்.
என் தாய் தந்தையே வந்திருந்தது போல உணர்ந்தேன்.
அவரது புத்தகங்களில் அவரது கையெழுத்தையும் வாங்கிக்
கொண்டேன்.
விடை பெற்றுச் சென்றவர்
அடுத்த தபாலில் இன்னும் இரண்டு
புத்தகங்களும் ,கடிதம் ஒன்றையும் அனுப்பி விட்டார்.
கிருஷ்ண பரமாத்மா வந்த ஆனந்தத்தில் நான் இருந்தேன்.
இவ்வளவு பெரிய எழுத்தாளர் ,இவ்வளவு
இறங்கி வந்து பாசம் காட்ட முடியுமா என்ற
வியப்பை இன்னும் நன்றியுடன் அனுபவிக்கிறேன்.
அவரது எழுத்துகள் என்றும் நம்முடன்.
வணக்கம் அப்பா.