Blog Archive

Wednesday, June 16, 2021

தமிழ்ப் பாடல்கள் ஆங்கிலத்தில்


எங்கள் ப்ளாக் அரட்டையில் மேலெழும்பிய 

பரிமாறல்களில் என் தேடல் தொடர்கிறது. இப்பொழுது 
தமிழ்ப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு 
நன்றாகவே இருக்கிறதோ? 
6 வருடங்கள் முன் வந்த ஒரு மஹா பெரிய படத்தின் தமிழ் வரிகள்

கொச்சையாகவே இருந்தன.
அர்த்தம் தெரியாமல் பாடிய தோழியின் மகளிடம்
நீ   இதே பாடலைத் தெலுங்கிலோ, இல்லை இந்தியிலோ
பாடு. 
தமிழ் அர்த்தம் சரியில்லை என்று சொன்னதும் மாற்றிக் 
கொண்டாள்.

11 comments:

ஸ்ரீராம். said...

வரிகளை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறார்கள்.  இது அப்பிரவாயில்லை.  ஆனால் அதை அர்த்தப்படுத்துகிறேன் என்று சிலசமயம் .கொலை செய்வார்கள்.  ஆனால் பழைய பாடல்களில் ஆங்கிலத்தில் எழுதும்போதே சிரிப்பான  வரிகளை படித்ததும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் .
அந்த மாதிரி பாடல்களைக் கொலை
செய்வது இப்போது இல்லையோ...அல்லது குறைந்திருக்கிறதோ!!!

இவை நன்றாக இருக்கின்றன.

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ...!

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் இவை நல்ல பாடல்கள்:))))))))))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு ஜெயக்குமார்.

கோமதி அரசு said...

பாடல்கள் கேட்டேன் நன்றாக இருந்தது.
பாட்டுவரிகளை பிழை இல்லாமல் பாட அவர் அவர் மொழிகளில் எழுதி வைத்துக் கொண்டு பாடகர்கள் பாடுவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆங்கிலத்தில் அர்த்தப்படுத்தும் போது சரியாகப் பண்ணனும் இப்பல்லாம் சில து ரொம்ப சிரிப்பு வந்துடும்.

அமேசான் ப்ரைம் படம் சப்டைட்டில் பண்ணும் குழுவில் பாடல்கள் மட்டும் தோழி ஒருவரிடம் தான் கொடுப்பதுண்டு. பரவாயில்லை அவர் கொச்சையானவற்றையும் அழகாகக் கொஞ்சம் ஆங்கிலத்தில் நல்ல தாகப் போட்டுவிடுவார்!!!!!!!!!

இது ஒகே அப்படியே ஆங்கிலத்தில்..

இந்தப் பாட்டெல்லாம் இப்பத்தான் கேட்கிறேன் அம்மா கேட்ட்திலை

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆங்கிலத்தில் அர்த்தப்படுத்தும் போது சரியாகப் பண்ணனும் இப்பல்லாம் சில து ரொம்ப சிரிப்பு வந்துடும்.

அமேசான் ப்ரைம் படம் சப்டைட்டில் பண்ணும் குழுவில் பாடல்கள் மட்டும் தோழி ஒருவரிடம் தான் கொடுப்பதுண்டு. பரவாயில்லை அவர் கொச்சையானவற்றையும் அழகாகக் கொஞ்சம் ஆங்கிலத்தில் நல்ல தாகப் போட்டுவிடுவார்!!!!!!!!!

இது ஒகே அப்படியே ஆங்கிலத்தில்..

இந்தப் பாட்டெல்லாம் இப்பத்தான் கேட்கிறேன் அம்மா கேட்ட்திலை

கீதா

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு கோமதிமா.
வாழ்க வளமுடன். இல்லாவிட்டால் ஷ்ரேயா கோஷல்
நம் தமிழை இவ்வளவு கொண்டாடிப்
பாட முடியுமா.

பாடல்களாகப் பதிவு செய்கிறேன். எல்லோருக்குமே
அலுத்திருக்குமோ என்னவோ!!!
நீங்களும் கேட்பதே மகிழ்ச்சி.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதா,
அட நீங்கள் இந்த மொழிபெயர்ப்பு செய்கிறீர்களா??!!!!!!!!
எனக்குத் தெரியாதே அம்மா.
ஆஹா. மிகக் கஷ்டமான வேலையாச்சே!!!!!!!


பாஹுபலிக்குப் பாடல் எழுதியவரே தமிழ்க்காரர் என்று கேள்வி. நினைவில்லை.

ஆமாம் சில மொழிபெயர்த்து வரும் சப் டைட்டில்ஸ்
சிரிக்க வைக்கும்.
உங்கள் தோழிக்கும் உங்களுக்கும் மனம் நிறை வாழ்த்துகள் மா.
நல்ல உழைப்பு உயர்வு தரும்.