Blog Archive

Wednesday, January 30, 2019

சுமையை இறக்கி விட்டோம்..4

Vallisimhan

எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்.

 அடுத்தடுத்து காரியங்கள் நிறைவேறின.
அம்மாவின் அதிரடி வேகத்தைப் பார்த்து அதிர்ந்து போனான் குமரன்.
ஏன் இந்த அவசரம்மா.  இன்னும் மூன்று மாசம் பொறுக்க முடியாதா உன்னால்.
என்றான்.

எதற்காக அப்பா. எனக்கு அந்தக் கோவில் முக்கியம்.
உங்களுக்குத் தகுந்த ஏற்பாடு செய்துவிட்டேன்.
என்ன நீங்கள் பணம் கொடுத்து சாப்பாடு வாங்க வேண்டும்.
நடு நடுவில் நீங்களே  வீட்டைக் கவனித்து, வேண்டியதைச் சமாளித்துக்கொள்ளலாம்

முடிந்தால் யூரப் டூர் முடிந்து நீங்கள் கூட அங்கே வரலாம். என்றவாறு சென்னையிலிருக்கும்
தம்பி, அக்காவுக்கு செய்தி சொல்ல விரைந்தாள்.

அடுத்த 15 நாட்களில்  கச்சிதமாகப்
 பாக் செய்யப்பட்ட இரு பெட்டிகளுடன்,
தோழி சாரதாவுடன் கிளம்பியே விட்டாள் நிர்மலா.

பேத்திகளிடம் அம்மாவுக்கு உதவியாக இருங்கள்
என்று மட்டும் சொல்லிவிட்டு ,விமான தளத்தில் பைபை சொல்லிக் கிளம்பினாள்.
 அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு சென்னையில் இருந்தாள்.
அழைத்துப் போக வந்திருந்த தம்பி வீட்டில் ஒரு நாள் இருந்து விட்டு
 ஏற்கனவே அங்கே வந்திருந்த  உதவியாளருடன், ட்ராவல்ஸ் வண்டியில் திண்டிவனம்
அடைந்தாள்.

மாமனார்,மாமியார் இருந்து பிறகு விரிவாக்கப் பட்ட
வீட்டை அடைந்த போதுதான் அவள் அதுவரை
அடக்கி வைத்திருந்த சோகம் தாக்கியது.

பரவாயில்லை எனக்கு நானே போதும். இதோ இந்தத் தென்னை மரங்கள்
,இந்த வீடு,அதற்குள் நான் கொண்டிருக்கும்  நினைவுகள் ஆன மாளிகை
சுற்றி இருக்கும் உறவுகள்,எல்லாவற்றிற்க்கும் மேலே
மலை மேல் இருக்கும் அழகன் முருகன்  போதும்.

எண்ணியபடி மனமார வணங்கியபடி ,அடுத்தடுத்துக் காத்திருக்கும்
வேலைகளால் உற்சாகம் அடைந்தவளாய் தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

புது வாழ்வு தொடங்கியது.  வீட்டுப் பாதுகாப்புக்கு ஒரு தோழமையான செல்லத்தை வாங்கிக் கொண்டாள்.
கூடவே இருக்க  தோட்டக்கார மணியும் அவன் மனைவி குழந்தைகள்.
 தன் வீட்டு உபயமாக நடக்கும் ஆராதனைக்கு
மயிலம் சென்று வந்தாள். விழாவுக்கு வந்திருந்த தம்பி அக்கா குடும்பத்துடன்
விழா இனிதே நடை பெற்றது.
படங்களைப் பிள்ளைகளுக்கும் அனுப்பினாள்.
இனி இனிதே வாழ்வு தொடரும். சுபம்.


No comments: