Blog Archive

Monday, January 14, 2019

30ஆவது பாசுரம் வங்கக் கடல் கடைந்த...மாதவன்.

Vallisimhan
 எல்லோரும் இனிதாக வாழவேண்டும்.

ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.

30ஆவது பாசுரம் வங்கக் கடல் கடைந்த...மாதவன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++உனக்கே நாமாட்செய்வோம் என்று உறுதியிட்டுக் கூறிய பின் , தன்னை இடைச்சி நிலையிலிருந்து
வில்லிபுத்தூர் ஆண்டாளாகப் பாட ஆரம்பிக்கிறாள்.

மாதவா, ஆரவமுதனாகிய உன்னையே,
கூர்மாவதரம் எடுக்க  வைத்து அமுதத்தை எடுத்தனர் தேவர்கள்.
நீ நிச்சயத்திப்படி செந்திருவான மஹலக்ஷ்மியே வந்தாள். உன்னை வந்தடைந்தாள் நீயும் மாதவனானாய்.
 அப்படிக் கடலைக் கடைந்த போது உம் கேசம் தளர்ந்து கடல் நீரில் அலைய
  நீ கேசவனும் ஆனாய்.

உன்னிடமிருந்து பெற்ற பரிசுகள் எல்லாம் நாங்கள் அணிந்தோம்.
என் தந்தையோ குளிர்ந்த மாலைகள் அணிந்த பட்டர்பிரான்
பெரியாழ்வார்.
அவருடைய கோதை நான் சொன்ன,சங்கத்தமிழ் மாலை
முப்பதையும் தினமும் சேவிப்பவர்கள்,
செவ்வரியோடிய உன் தாமரைக் கண்களின் அருள் கடாக்ஷம் பெற்று
திருவருள் நிறைந்து இன்புறுவர் என்று உறுதி அளிக்கிறாள்.

நாமும் அவள் சொன்ன  அத்தனை பாசுரங்களையும்
மறவாமல் பாதித்த துதித்து  அவள் அருளை பெறுவோம்.

திருவாடிப்பூரத்து ஜகத்து உதித்தாள்  வாழியே
திருப்பாவை முப்பதும் செம்பினால் வாழியே
பெரியாழ்வார் பெற் றேடுத்த பெண்பிள்ளை வாழியே.
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூ ன்றுரைத்தாள்  வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி  உகந்து அளித்தால் வாழியே
மறுவாரும் திருமல்லி வளநாடு வாழியே
வண்புதுவை நகர்க்
கோதை மலர்ப்பதங்கள் வாழியே. //
ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார், பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

No comments: