Blog Archive

Friday, January 11, 2019

மார்கழி 27ஆம் நாள் பாசுரம் கூடாரை வெல்லும்

Vallisimhan  எல்லோரும் நலமாக வாழவேண்டும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
 அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு  திருப்பாவை பல்பதியம்

இன்னிசையால் பாடிக்கொடுத்தாள்
  நற்பாமாலை பூமாலைச் 
சூடிக் கொடுத்தாளை சொல்லு.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கூடாரை வெல்பவன் கோவிந்தன். அன்பினால் அரவணைத்து அவர்களின் பகைமையை மட்டும் அழித்து ,தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிடுவானாம்.

கோதை அவனை அணுகிக் கூடாரையே அணைக்கின்ற கோவிந்தா ,உன்னை நாங்கள் இத்தனை நாட்களாகப் பாடி வந்தித்திது வந்திருக்கிறோம்.
அதுவும் நீ அருளிய பல்கலையும் அணிந்து ,புத்தாடை உடுத்தி,
நோன்பு முடிந்ததற்கு அடையாளமாகக் குதூகலத்துடன் வந்திருக்கிறோம்.
உனக்காகவே  பாலில் பொங்கிய அடிசில்.அக்காரம், நெய் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறோம்.
எங்களை அங்கீகரித்து உன் அன்பை எங்களுக்குப் பகிர்ந்து கொடுத்து
எங்களுடன் கூடுவாய்.
நோன்பிருந்து உனக்காகத் தவமிருந்தோம்.
எங்களுடன் கூடி இருந்து குளிரவேண்டும்.என்று கோரிக்கை விடுக்கிறாள்.
கோவில்கள் எங்கும் அக்காரவடிசில் மணம் பரவி இருக்கும் இன்று.
கண்ணனையும் கோதையையும் ,, கோதையின் பிரார்த்தனையை நிறைவேற்றின
அண்ணா என்று ஆண்டாளால் அழைக்கப் பெற்ற ஸ்ரீ ராமானுஜ முனியையும்
தியானிப்போம்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே
 நீ பாடிக்கொடுத்த பாமாலையையும் பூமாலையையும்
உன் வேங்கடவனையும் நாங்கள் என்றும் மறவாமல் இருக்கவேண்டும்.
ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.

No comments: