Blog Archive

Saturday, July 07, 2018

1403, கங்கையும் அவர்களும்....

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  அடுத்த நாள் கங்கைக் காற்று எழுப்ப, படகுக் காரர்களின் அழைப்புகளும், சுற்றி இருக்கும்
கோவில்களின் மணி ஓசை, அவர்கள் தங்கி இருந்த இடங்களிலிருந்து

கொஞ்சம் தொலைவில் கேட்டன.
உள்ளத்திலும் உடலிலும் புத்துணர்ச்சியோடு
இரு தம்பதிகளும் காப்பி குடித்த கையோடு கங்கையை நோக்கி
நடக்க ஆரம்பித்தனர்.
புலர்ந்தும் புலராத காலைப் பொழுது  படித்துறை சூரியக் கிரணங்களால்
 மஞ்சள் பூசிக்கொள்ளத் தொடங்கி இருந்தது.

நால்வரும் மேல்படியிலிருந்து கைகளைப் பிடித்தவண்ணம்
இறங்கத் தொடங்கினர்.

சில்லென்று இருக்குமே அம்மா உனக்குப் பரவயில்லையா.
வஞ்சுமாவுக்குச் சிரிப்பு வந்தது. நாமும் காவிரியில் குளித்தவர்கள்
தானே .படிகளில் உட்கார்ந்து கொள்கிறேன்.
காலில் ஜலம் படபட உடம்பு தயாராகும்.
நீங்கள் உங்கள் நீச்சலை இங்கே வைத்துக் கொள்ளவேண்டாம். ஒருமைல் அகலம்
 கங்கா மாதா ஓடிக்கொண்டிருக்கிறாள்.
லக்ஷ்மி மா உடனே ஆமாம் அன்னிக்கு முதலை கூட இருந்ததாம்
என்றாள் சிரித்தபடி.
லக்ஷ்மி உம்ம். மச்சினரைக் கேலி செய்கிறாயா.
அச்சோ இல்லைம்மா. நீ முதல்ல காலை கங்கை அம்மாவுக்குக்
கொடு.
எல்லோரும் முதலில் குனிந்து அம்மா கங்கையின் நீரைத் தலையில்
 தெளித்துக் கொண்டார்கள்.
அடுத்து தம்பதியர்கள் மெள்ள இறங்கினார்கள்.
நதியின்  வேகம் பிரமிக்க வைத்தது.
அவர்கள் இறங்கிய இடத்தில் சங்கிலிகள் கட்டப்பட்டிருந்தன.
கேதார் காட் எனும் பெயர் எழுதி இருந்தது.
கண்மூடித்திறப்பதற்குள் கூட்டம் சேர்ந்து விட்டது.

எங்கிருந்தோ வந்து சேர்ந்தார் ஒரு பண்டிட்.
 தமிழாளா. தர்ப்பணம் பண்ணனுமா என்றபடி வந்தார்.

நால்வரும் தயங்கினர். முதலில் ஸ்னானம் செய்கிறோம் இருங்கள் என்று
இருதம்பதிகளும் கைகளைப் பிடித்துக் கொண்டு
தலைவரை முங்கி எழுந்தனர். அப்படியே கங்கைக்கு
அர்க்கியம் விடுங்கோ. என்றவாறு செய்து காட்டினார்.
ஒன்பது தலைமுறைக்கு ஒன்பது தடவை மூழ்கி எழுந்திருக்கணும் என்று அவர் சொன்னதும்
வாசு எங்களுக்கு மூன்று போதும் என்று விரைவாக
வஞ்சுமா அழைத்தார்.
குளிரில் பற்கள் கிடிகிடுக்க நின்ற வாஞ்சுமா லக்ஷ்மிமா
இருவரும் மறுத்தனர்.
முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டோட ஒன்பது தடவையும்
முங்கி எழுந்தனர்.
கங்கையை விட்டு வர மனதில்லாமல் , சூரியனை வணங்கியவாறுக்
 கரையில் படிகளில் உட்கார
கணவர்கள் முதல் தர்ப்பணத்தைப் பூர்த்தி செய்தனர்.
பண்டா என்றழைக்கப் படும் பண்டிட் வினாயக்,
இருவருக்கும் வாராணசியின் முக்கியத்துவத்தைச் சொன்னார்.
ஐந்த கட்டங்களில் குளித்தால் யாத்ரை பூர்த்தியாகும்.
வாராணசி ஒன்றில் தான் கங்கா மாதா வடக்கு நோக்கிப் பாய்கிறாள்,
 பிறகு மீண்டும் தென்
கிழக்குத் திசை திரும்புகிறாள்
 என்றேல்லாம் விளக்கினார்.
கையோடு கொண்டு வந்திருந்த புடவையை உடலைச் சுற்றிப் போர்த்திக் கொண்ட கொஞ்ச நேரத்தில், ஈரப்புடவை உலர்ந்து விட,
 கரையோரம் இருந்த கோபுரங்களுக்கு கைகூப்பி நமஸ்காரங்கள் செய்து விட்டு, விடுதியை
நோக்கி நகர்ந்தனர். இனிதாக ஆரம்பித்தது வாராணசி வழிபாடு.

அம்மா கங்கா எல்லோருக்கும் ஆரோக்கியத்தைக் கொடு. அமைதியைக் கொடு என்று மனதில் பிரார்த்தித்தவண்ணம்,
நல்லதொரு  உணவை உட்கொண்டனர்.
Add caption

18 comments:

KILLERGEE Devakottai said...

அழகிய படங்கள்.
நேரில் இருப்பது போன்ற பிரம்மையை கொடுககிறது. எழுத்தின் நடை.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் தேவகோட்டையாரே.
உங்களுக்கு கீதாசாம்பசிவம் ஒரு கருத்து சொல்லி இருக்கிறார்.
காசியில் குமர குருபரர் கட்டிய மடத்தில் முன் பதிவு செய்து தங்கிக்
கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.
சீக்கிரமே கங்க்கை உங்களை அழைக்கலாம். அனுபவித்து விட்டு எழுதுங்கள் எல்லா நன்மைகளும் உண்டாகட்டும்.
வந்து படித்துக் கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

Geetha Sambasivam said...
கில்லர்ஜி, கேதார்காட்டில் தான் இருக்கு காசி மடம். குமரகுருபரரால் ஏற்படுத்தப்பட்ட மிகப் பழமையான மடம். பலரும் தமிழர்கள். முன் கூட்டிக் கடிதம் எழுதிவிட்டு அங்கே போய்த் தங்கலாம்.

KILLERGEE Devakottai said...

தகவல் தந்த சகோ கீ.சா. அவர்களுக்கும், உங்களுக்கும் நன்றி அம்மா.

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு.
காசி யாத்திரை சுகமாய் இருக்கிறது.அவர்கள் மகிழ்ச்சி நம்மையும் ஆட்கொள்கிறது.

நெல்லைத் தமிழன் said...

காசிக்கும் செல்லவேண்டும். இதுவரை சென்றதில்லை. அதுக்குள் ரிஷிகேசம் கோமுக் போகும் ஆசை இருக்கிறது. பார்க்கலாம்..

Geetha Sambasivam said...

மிக அருமையாக எழுதி இருக்கீங்க. படங்களும் நன்றாக இருக்கின்றன. காசி மடத்தில் முன் பதிவு செய்துவிட்டுப் போகலாம். செய்ய வேண்டிய காரியங்களும் அவர்கள் உதவியுடன் முடித்துக் கொள்ளலாம். நாட்டுக்கோட்டை நகரத்தார் மடமும் இருக்கு! அங்கேயும் எல்லோரும் தமிழர்களே! காஞ்சி சங்கர மடமும் இருக்கு ஹனுமான் காட்டில்! அங்கேயும் செல்லலாம்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா நாங்களும் பயணம் செய்தது போன்ற உணர்வு. நேரில் இருந்து காட்சிகளைக் காண்பது போன்று உள்ளது. அருமை. தொடர்கிறோம்.

துளசிதரன், கீதா

கீதா: கங்கையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கங்கோத்ரி போகணும் என்ற ஆசை எழும். எப்போது நடக்குமோ அதற்கு ட்ரெக்கிங்க் எல்லாம் செய்ய வேண்டும். சென்ற முறை என் குராவ்ன் இல் இருக்கும் என் தங்கை/கஸின் ஹரித்வார் ரிஷிகேஷ் போலாம் என்று அழைத்தாள். அவர்கள் கெட்ஸ்ட் வந்தால் அங்கு சென்று ரிவர் ராஃப்டிங்க், கோயில் எல்லாம் செல்வார்கள். என்னையும் ஒவ்வொரு முறையும் அழைப்பார்கள். ஏனென்றால் எனக்கும் ரிவர் ராஃப்டிங்க் ட்ரெக்கிங்க் ரொம்பப் பிடிக்கும் என்பதால். ஆனால் போக முடியவில்லை.

ஸ்ரீராம். said...

இன்றைய பதிவில் அழகாய்ப் படங்கள் எல்லாம் போட்டு அசத்தி இருக்கிறீர்கள் அம்மா. பண்டிட் எப்போதோ சொன்னதையும், அங்கு செய்த நடைமுறைகளையும் நினைவில் வைத்து எழுதி இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டையாரே,
உங்களுக்கு கங்கை தரிசனம் கட்டாயம் கிடைக்கும்.
என் பிரார்த்தனைகள் எப்பொழுதும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,நீங்கள் இந்த இடமெல்லாம்
சென்று வந்திருப்பீர்கள். எதாவது சரியில்லாமல் தோன்றினால்
சொல்லுங்கள் மா. நன்றி. அவர்கள் பொழுது பிரார்த்தனையில்
தான் சென்றthu.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா.

தி.ஜானகிராமன் சிறு கதை ஒன்றில் நகரத்தார் சத்திரம் பற்றிப் படித்திருக்கிறேன்.
எத்தனை தாராள மனம் அவர்களுக்கு.
உங்கள் கட்டுரைகளிலும் படித்திருக்கிறேன்.
மானசீகமாக அவர்களுடன் சென்று கொண்டிருக்கிறேன்.
படங்கள் கூகிள் தந்தவை.

நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ தா.
இதோ வருகிறது செப்டம்பர். துலா ஸ்னானம் போல
ரிஷிகேஷ் எல்லா இடமும் போய் வாருங்கள்.
டெல்லி இருந்திலிருந்து விமானப் போக்கு வரத்தும்
இருக்கு.குழந்தைகளுக்கும் லீவு இருக்கும்..

Bhanumathy Venkateswaran said...

கங்கா ஸ்னானம் பற்றி எளிமையான, அழகான வர்ணனை. எங்களுக்கும் காசி செல்ல வேண்டும் என்று நீட நாட்களாக ஆசை. எப்போது வாய்க்குமோ?

வெங்கட் நாகராஜ் said...

கங்கைக் குளியல் - அலாதியான ஒன்று. என்னதான் மற்ற நீர்நிலைகளில் குளித்திருந்தாலும், கங்கைக் குளியலுக்கு முன் அனைத்துமே சாதாரணம்....

எத்தனை குளித்தாலும், அப்படியே குளித்தபடியே இருக்கலாம் என்று தோன்றும் - அப்படி ஒரு குளிர்ச்சி....

தொடர்கிறேன் மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ஆர்,
மகன் வரும்போது அழைத்துச் செல்லுங்கள். துணைக்குத் துணையாச்சு. ட்ரெக்கிங்க் செய்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.
குடும்பதில் சிலருக்கு வெளியே சென்று அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
சிலருக்குக் கிடைப்பதில்லை.
உங்களுக்கு சீக்கிரமே கங்கை செல்லும் வாய்ப்பு கிடைக்கட்டும் அம்மா.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா.
முயன்று கொண்டே இருங்கள் சட்டென்று கங்கை கூப்பிடுவாள். சைக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள்.
பிடிவாதமாக இருந்தால் ,பக்தி விஷயத்தில் நல்ல காரியங்க்கள் நடக்கும்.
ஆசை நிறைவேற வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நீங்கள் சொல்வது என் அப்பா சொல்வது போலக் கேட்கிறது.
அப்பா,ஹரித்வார், ரிஷிகேஷ் இரண்டு இடங்களிலும்
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நீந்திக் களித்தாராம்.
அம்மாவால் முடியவில்லை.

ஆகாய கங்கை அல்லவா. ஆண்டவனின் அருள் வெள்ளம் அப்படியே
நம்மை அணைக்கிறது போலும்.நன்றி ராஜா.