Photobucket beaches Pictures, Images and Photos

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

a> நாச்சியார்

Sunday, July 12, 2009

அணுகமுடியாத ஆலமரம்.

+




ஆலமரத்துக்கு, அடையாறுக்கு ஆலாப் பறந்தாலும் பார்க்க முடியவில்லை.
நேரங்கள் மாறிவிட்டன.
பக்கத்தில் போக முடியாதபடி கயிறுகள் வேறு கட்டி வைத்திருக்கிறார்கள்.
20 வருடத்துக்கு முன் பார்த்த மரம் கண்கொள்ளாத
அளவில் ... பெரிய மேடையில் உட்கார்ந்து நிழலில் காற்றையும், பறவைகள் ஒலியோடு அனுபவித்துக் கொண்டு
அளவில் ... பெரிய அளவில் நிழல்களுடன் பேசியபடி இருப்போம்.:)
இருந்த விழுதுகளை மட்டும் படங்கள் எடுத்து இந்தப் பதிவில்
இட்டிருக்கிறேன்.

























































































































































எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

















Posted by Picasa

Thursday, July 09, 2009

எதிர்பாராதே ஏமாறாதே:)

+



சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா'' பாட்டு எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.
ம்ம்.. சொல்ல முடியாது தெரிந்திருக்கலாம்:)
பழைய பாடல்கள் பிடித்த வாலிபர்களும் இளம்பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!
ரொம்பப் பழைய பாட்டு. எலிமெண்டரி பள்ளிக்கூடக் கலை நிகழ்ச்சிகளில்
இரண்டு குட்டிப் பெண்கள் வந்து ஆடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
ஒரு மனைவியின் எதிர்பார்ப்புகள் அந்தப் பாட்டில் அழகாக அமைக்கப்பட்ட வரிகளில் பளிச்சிடும்.
எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் இருக்கும் என்று புரிய நிறைய அனுபவங்கள் வந்தாலும், பட்டுத் தெரியும் அறிவு வர, மனது தெளிய நிறைய நாட்களும் வருடங்களும் ஆகும்.
நியாயமான எதிர்பார்ப்புகளைப் பற்றிச் சொல்ல வரவில்லை இங்கே.
இந்த குட்டி குட்டி(!!!) ஆசைகள்.
பெண்களும் பிறந்தகமும் பிரிக்க முடியாத பந்தங்களில் எப்போதும் இருக்கும்.
என்ன வயதாகட்டுமே. எம்பது வயசுப் பாட்டி ஆகட்டும்,
அவர்களைக் கேட்டால் ''எங்க அப்பா அம்மா மாதிரி வருமா. தலையால வர்ஷித்துக் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.
இந்தக் காலம் மாதிரியா.
பைசா பைசாவாப் பார்த்துச் செலவழித்த காலம்.
எங்க அப்பா நாலு பொண்ணையும் கரையேத்தினார்,. முத்து முத்தா மாப்பிள்ளை பார்த்து,
சம்பந்திகளைக் கவனித்து,வருஷ சீர் செய்து, வரிசையா பேரன் பேத்திகளுக்குச் செய்து அப்புறமும் ஓயலை.
என் அறுபதுக்கு அறுபது வரை கூடச் சீர் செய்தார்னா பார்த்துக்கொள்ளுங்கோ''
சரி...இதுவரை சரி. தந்தையும் பரலோகித்தார். அப்புறம் வித்தியாசங்கள் வருமா அப்படீன்னு நாம் கேட்கலாம்.
வரலாம். வராமலும் இருக்கலாம்.
அதான் இந்தப் பாட்டிக்கு எழுபதும் மேல ஐந்தும் ஆச்சே, கொஞ்சம் விவரம் விவேகம் வந்ததா என்று பார்க்கப் போனால் எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
பாட்டியின் வசதிக்குக் குறைவில்லை. இரண்டு பெண்கள், இரண்டு பையன்கள் என்று, குழந்தைச் செல்வத்துக்குக் குறைவில்லை.
பெரிதாகக் கட்டிய வீடு. விசுவாசமிக்க வேலையாட்கள்.
அடிக்கடி வந்து விசாரித்துக் கொள்ளும் மகன்களும் மகள்களும்.
நேற்று நான் பாட்டியைப் பார்க்கப் போயிருக்கும்போது ஊஞ்சலில் ஒரு கம்பியைப் பிடித்துக் கொண்டு எங்கேயோ வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தாத்தா படு ஸ்மார்ட்டாக அப்பத்தான் பார்க்கில் அரட்டை அடித்துவீட்டு வந்திருந்தார். ஒரே உற்சாகமான வரவேற்பு.
பாட்டியிடம் சத்தமில்லை.
என்னப்பா ஆச்சு என்று பெரியவரைக் கேட்டேன்.
நாளைக்கு அவள் பிறந்த வீட்ல ஒரு கல்யாணம். என்று நிறுத்தினார்.
பாட்டி போகலியா என்று ஆச்சரியமானேன்.
''எங்கடி, அவர்கள் வந்து நேரயா கூப்பிட்டார்கள். ஒரு அழைப்பிதழ் வந்தது.
வந்துடுங்கோ ன்னு ஒரு போன் கால்.
போறுமா.
நான் யார்!! வீட்டுக்குப் பெரிய மனுஷி.
இவர் யார். எம்பது ,சதாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறவர். என்னை விடு. இவரை மதிக்க வேண்டாமோ!!!!
நான் ஏன் போவேன் அந்தக் கல்யாணத்துக்கு. வேண கல்யாணம் பார்த்தாச்சு. வேணது சாப்பிட்டாச்சு. இனிமே வாயைக் கட்ட வேண்டியதுதான்.
இதைத்தான் அவர்கள் எனக்குச் சொல்லாமல் சொல்கிறார்கள். ஓரங்கட்டியாச்சு. எங்க அப்பா அம்மா இருந்திருந்தா இப்படிச் செய்வர்களா, என்று கலங்கிய அந்த மூதாட்டியைப் பார்த்து நிஜமாகவே கஷ்டமாக இருந்தது.
இது என்ன பிறந்துவீட்டுப் பந்தம்.!! தனக்கு ஒரு குடும்பம் ,அவர்களுக்கு ஒரு குடும்பம் ஆகிவிட்டது.
இன்னும் என்ன எதிர்பார்ப்பு! எதிர்பர்ப்பும் ஏமாற்றமும் தாண்டி வர வேண்டாமா.
ஆசை அதிகமானால் வருத்தமும் அதிகம் தானே.
என்று விட்டு விடுதலையாகிப் போவது???
என்று யோசித்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். உடனே திருமண மண்டபத்துக்குத் தொலை பேசி, திருமணம் செய்து வைக்கும் என் சினேகிதியைப் பிடித்தேன்.
ஏன்பா பாட்டியை நேர்ல கூப்பிடல.
உடனே ஒரு வண்டியை அனுப்பி கூட இருந்து அழைத்து வர ஏற்பாடு பண்ணும்மா, என்றேன்.
அவளும் சிறிது சலித்துக் கொண்டாலும் அனுப்புவதாக ஒத்துக் கொண்டாள்.
பார்க்கலாம்!!! இன்று திருமணத்துக்குப் போனால் பாட்டி எப்படி வந்து இருகிறார் ,மனசு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்:)


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, July 02, 2009

சில காட்சிகள்..தெற்கு வாழும் சித்திரம்

+







































































































































































































































































கிளிகள் வந்து குவிந்தது போல மழலைப் பட்டளம் ஒன்று வீட்டில் இறங்கி இருக்கிறது,.
வெய்யில் தாளவில்லை. சில பல காட்சிகளையாவது அவர்களுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று,
ஒரு மாலை நேரம் கிழக்குக் கடற்கரைச் சாலைத் தக்ஷின் சித்ராவுக்கு அழைத்துச் சென்றோம்.
மாலை 6 மணிக்கு அந்தக் கண்காட்சி கிராமத்தை மூடி விடுவார்களாம்.
அதனால் எங்களுக்குக் காணக் கிடைத்தது, தமிழ்நாட்டு,கேரள,செட்டினாடு வீடுகளும் சுற்றுப் புறங்களும் தான்.
அதுவே மனம் நிறைந்த காட்சிகளாக இருந்தாலும் முழுவதும் பார்க்க முடியவில்லையே என்றும் வருத்தமாக இருந்தது.
சிறிய துண்டுதான் என்றாலும் அல்வாவின் இனிப்பு சிறப்புதானே.
அழகு வளையல்கள், பம்பரங்கள்,மண் சட்டிகள் எல்லாம் வாங்கிக் கொண்டோம்.
 
நிழலில் மணலில் விளையாடவும் நேரம் கிடைத்தது பேரனுக்கும் பேத்திக்கும்.
அங்கு எடுத்த சில துளி இன்பங்களைப் படங்களாகக் கொடுக்கிறேன்.














































எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Labels:

Saturday, June 20, 2009

உலகத் தந்தையர் தினம், வாழ்த்துகள்

+



தந்தையர் தினம்.
தாய்கள் தினத்துக்குப் பிறகு வருவது ஏன்.
மங்கை முதலில் பிறந்து மணவாளன் பின்னால் பிறந்தானா.
எங்கள் வீட்டுத் தந்தையைப் பற்றி எழுத எனக்கு அவ்வளவு தகுதி இல்லை. சின்ன வயசில் பரணில் ஏறி, என் மரயானையை,
தும்பிக்கை உடைந்த யானையை, எட்டாத ஒரு முக்காலி மேல் ஏறி எடுத்துக் கொடுத்தவரும்,
பள்ளிக்கு அழைத்துச் சென்று,ஆங்கிலம் பேசும் மரியாதைக் குரிய மதர் சுபீரியரிடம், என் பெண்ணுக்கு அவ்வளவு ஆங்கிலம் தெரியாது. நீங்கள்தான் பார்த்து அவளுக்கு இந்தப் பள்ளியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது எனக்கு வயது 12.
இப்போதென்றால், பிள்ளைகளொ பெண்ணொ தாங்களே தகுதிகளைச் சொல்லி மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.
ஊமையாக இருக்கும் என்னை நிறையப் பேச வைத்தவர். எழுத வைத்தவர். உலகின் பல்கோணங்களைக் காட்டிக் கொடுத்தவர்.
அப்புறம் அடடா,இப்படிப் பேசுகிறதே என்று சங்கடப் பட்டவரும் அவர்தான்:)
 
இன்று நான் நினைவு கொள்ளப் போவது அவரை அல்ல.
எத்தனையோ தந்தைகள், குழந்தைகளுடனும் இருக்க முடியாமல்,
வெளிநாடுகளுக்குப் போய்ச் சம்பாதித்து வந்து, நேற்றுப் பார்த்த பெண்ணும்,பையனும் இன்னும் 10 செந்திமீட்டர் உயர்ந்து விட்டதையும்,
அவர்கள் எண்ணங்கள் வித விதமாக மாறி இருப்பதையும்,
தான் வாங்கி வந்த அன்பளிப்புகள்
எதுவும் பிடித்தது போலத் தெரிந்தாலும் காண்பித்துக் கொண்டாலும்,
சம்திங் மிஸ்ஸிங், என்ற ஒரூணர்வு தெரிகிறதே, உணர்கிறார்களே, அந்தத் தந்தைகளுக்குத் தான்
இந்தத் தந்தையர் தின வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.
அம்மா ஒரு இடம், அப்பா ஒரு இடம் என்று வேலை பார்க்க, பாட்டி தாத்தாக்களிடம் வளரும் குழந்தைகளுக்குத் தந்தையாக இரட்டிப்பு வேலை செய்யும் தாத்தாக்களுக்கும் என் வணக்கம்.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Labels:

Friday, June 19, 2009

32 கேள்விகளும் பதில்களும்!!

+

மதுரையம்பதி என்னும் சந்திரமௌலி என்னையும் அங்கீகாரம் கொடுத்து இந்த 32 கேள்விகளை அனுப்பி வைத்து இருக்கிறார்.கொஞ்சம் சீரியசாக இருக்கிறதோ என்று மீண்டும்படித்தேன். சாதாரணமாகத் தானிருக்கிறது:)பயமில்லாமல் படிக்கலாம்.

நன்றி மௌலி.



உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

பிடிக்கும். ரெண்டு மூணு பேரு இருக்கு. எல்லாமே பிடிக்கும். அம்மா அப்பா வைத்தால் முதல் பெயர் பிடிக்கும்:)


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

என் தம்பி மறைந்த போது.


3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

முன்பு அழகாக இருந்த போது பிடிக்கும்


4. பிடித்த மதிய உணவு என்ன?

ரசம்,உ.கிழங்கு பொடிமாஸ்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்சம் யோசிப்பேன்.ஆனால் நட்பு பிடிக்கும்.


6. கடலில் குளிக்கப் பிடிக்குமா?

அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

கடல் என்னை இழுத்ததால் பயம். அதனால் அருவியை ரொம்பப் பிடிக்கும்.


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?


கண்கள். நேராகப் பார்த்துப் பேசுபவரிடமே என்னால் பேச முடியும்.
 
8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எதற்கும் படபடப்பு அதைப் பிடிக்காது. பிடித்தது மிஞ்சி இருக்கும் நகைச்சுவை:)


9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது சுறுசுறுப்பு. பிடிக்காததுன்னு ஒண்ணும் இல்லை.
 
10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் பெற்றோர்கள்,தம்பி.மூவரிடம் ஏதாவது அறிவுரை கேட்டுக் கொண்டே இருப்பேன்:)


11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
பிடித்த பச்சைவண்ணத்தில் புடவை ,பச்சை வண்ணத்தில் ப்ளௌசும்.


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
விஜய் சினிமா அவார்ட்ஸ்.
 
 
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?
ஆரஞ்சு வண்ணம்.


14. பிடித்த மணம்?
நித்திய மல்லி,ஜாதி மல்லி உயிர்.


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
நான் அழைக்க நினைப்பது துளசியையும்,
 
கீதாவையும்,கொத்சையும், அபி அப்பாவையும்
 
நாலு பேருமே கற்பனை வளம் நிறைந்தவர்கள். மிகவும் படித்தவர்கள். எல்லாவற்றையும் விட அன்பானவர்கள்.
எல்லோருமே நிறைய வேலைகளில் பொதிந்து இருக்கிறார்கள்.
அழைக்கப் போகிறேன். எப்போ முடிகிறதோ அப்போது எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.


 
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அவருடைய எல்லாப் பதிவுகளையும் படித்துவிட்டதாகச் சொல்ல மாட்டேன். சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். அதில் தொனிக்கும் உயர்ந்த கருத்துகளும், ஆன்மீகச் சிந்தனைகளும்,தேடுதலும் பிடிக்கும்

17. பிடித்த விளையாட்டு:
ரிங் டென்னிஸ்.


18. கண்ணாடி அணிபவரா?


கண்ணாடி இல்லாமல் நான் இல்லை:0)


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மாயா பஜார்,மிஸ்ஸீயம்மா, கலாட்டா கல்யாணம் இந்த மாதிரி சிரிக்க வைக்கவே எடுத்தார்களே அந்தக் காலத்தச் சேர்ந்தவள்.


20. கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டர் பக்கம் போய் வருடக்கணக்காகி விட்டது. மிஸஸ்.டவுட் ஃபையர்னு நினைக்கிறேன்.


21. பிடித்த பருவகாலம் எது?
குளிர்காலம்.மார்கழி.


22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஸ்ரீராமாயணத்தில் சுந்தரகாண்டம்.


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ரொம்பப் போரடித்தால் வருடத்துக்கு ஒரு முறை.


24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது மழையின் சன்ன இசை. பிடிக்காதது இடிச் சத்தம்


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?


அமெரிக்கா, கானடா.
 
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


இருக்கலாம். மற்றவர்கள்தான் சொல்லணும்


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?


பொய் பேசுவது.


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.


29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
மதுரை.


30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?
இன்னும் நிறையப் படிக்க வேண்டும்,என்னை விட வயதானவர்களுக்கு உதவ வேண்டும்.


31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
ஒன்றுமே இல்லை.


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.


எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் கொஞ்சம் லேட்டாகச் சொல்லிக்கொடுக்கும் டீச்சர்.:)







எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Labels: , ,

Monday, June 15, 2009

PIT CONTEST JUNE-MUDHUMAI

+



முதுமைக்காக எடுத்த படங்கள்.
எங்கள் வீட்டுத் தென்னை மரம் கிட்டத்தட்ட 50 வருடங்கள் வாழ்ந்து, திடீரென்று நோய் கண்டது.
 
அதை பூமியிலிருந்து எடுக்க வேண்டிய நிலைமை.
மனதில்லாமல் அந்த வேலையைச் செய்தோம். இன்னும் அதன் தண்டுப் பாகங்களும்,
வேரும் உயிரோடிருப்பதாகத் தோன்றும்.










எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.



Posted by Picasa

Friday, June 05, 2009

திருமணநாள் நல்வாழ்த்துகள்

+



Friday, June 05, 2009



இப்பத்தான் வாழ்த்துகள் சொன்ன மாதிரி இருந்தது . அதற்குள் இன்னோரு வருஷம் ஓடிவிட்டது.
மணநாள் என்பது எல்லோருக்கும் எப்படிப் பட்டவர்களுக்கும் இனிய நினைவுகளைக் கொடுக்கக் கூடியதே.
நேற்று சண்டையும் வாக்கு வாதமும் இருந்தாலும் இன்றாவது நல் வார்த்தை சொல்லி நல்லபடியாகச் சேர்ந்து இருப்போம் என்று ஒவ்வொரு தமபதியரும்
 
மீண்டும் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய நாள்.
அந்த மாதிரிப் பலவித தடைகள், அனுபவங்கள் ,சமீபத்திய நிகழ்வு என்று எல்லாவற்றையும் தாண்டி வந்து கொண்டிருக்கும் அருமைத் தமபதிகள் திரு கோபாலும் ,நம் துளசி கோபாலும்.
இன்று தங்களுடைய
 
35ஆவது
திருமணநாளைக் காண்கிறார்கள் இன்று.
அவர்கள் என்றும் இதே போல செழிப்பாக,அன்பு கொழிக்கும் இல்லறம் சிறந்து வாழ,
ஆரோக்கியம் சூழ
இன்னும் அநேக ஆண்டுகள் இனிய ஆண்டுநிறைவுகளைக் காண இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.







எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Labels: