Blog Archive

Saturday, December 15, 2018

1500பதிவுகள் ,,,,,,,,12 வருடங்களுக்கான பொழுதுகளின் பதிவுகள்.

Vallisimhan பதிவுகள் 1500
அவசரமாக ஓடிய நாட்கள் சில. ஆனந்தமாக ஓடிய நாட்கள் சில.
வருத்தத்துடன் பதிந்த பதிவுகள் சில. வரம் கொடுத்த சாமிகளாக பேரன் பேத்திகள் விஷமங்கள், பேச்சுக்கள் சில.சென்று கழித்த இடங்கள் பல. துணயை இழந்து ,நினைவில் பதிந்த நிகழ்ச்சிகள் சில.

நண்பர்கள் குழாம் பெருகி இருந்த காலம் சில. இப்பொழுது  இன்னும் வல்லி ம்மாவுக்காகப் படிக்க வரும் நாலைந்து நட்புகள்.
பூனை கண்ணை மூடிக் கொள்வது போல என்னிலேயே நான் மூழ்கி விட்டால் யார் தான் 
அசராமல் படிக்க முடியும்.

ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பலரின் உறுதுணையால் வளர்ந்த வலைப்பூ இது.
எண்ணங்கள் மனதில் ஓடும்  வரை எழுத ஆசைதான்.

அனைவரும் வாழ்க வளமுடன்.

No comments: