Blog Archive

Saturday, July 31, 2021

யாரு? Kalaiyarasan & Indhuja's மகவு | Laguparan Thirunavukar...

மனதை மிகவும் கலங்க வைத்துக்
கசிய வைத்த கதை. குறும்படம்.
இன்னும் இது போல நடக்கிறதா என்று தெரியவில்லை.

பொருள்விளங்கா உருண்டை கிராம சமையல்


Tuesday, July 27, 2021

The Secret Language of Trees

😍😍😍😍😍😍😍😍

தமிழ் நாட்டின் கண்குளிர் காட்சிகள்.+ பார்த்த சீரியல்








வல்லிசிம்ஹன்
மலைகளில் ஏற்பட்ட காயங்கள்
வீழ்த்தப்பட்ட மரங்களின் புண்
ஒரு நாள் ஆறும்.

மீண்டும் மரங்கள் துளிர்க்கும்.
மனித மனங்களும் காயத்தின் 
வடுக்களின் மேல் அன்பைத் தூவி
நல் நினைவுகளை வளர்க்கலாம்.  

 சி போ லின்  Chi  Po Lin. 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அண்மையில் கண்டு முடித்த கொரியன் சீரியல் 

One thousand Good Nights.
ஒரு தந்தை, இரு மகள்கள். அதில் ஒரு பெண் அம்மாவால்
கைவிடப்பட்ட குழந்தை.
பல்வேறு காரணங்களுக்காக
அந்த அன்னை இந்தப் பெண்குழந்தையை
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் 
விட்டு விட்டுச் சென்று விடுகிறார்.

அங்கிருந்து கிளைவிடும் , மற்ற பல குழந்தைகளின்
மன வளர்ச்சி, அவர்கள் தங்கள் பெற்றோரை
உணர்வது,
பிறகு தங்கள் வாழ்வை ஆரோக்கியமாகத் தொடர்வது
என்று 20 எபிசோட்களாகத் தொடர்ந்து என்னைக் 
கட்டிப் போட்ட கதை.

ஒரு ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கும் கதையில் பல
பயணங்கள். பல இடங்கள். உணர்வுகள்.
நல்ல புரிதல்கள்.
யாரையும் சபிக்காமல், நோகவைக்காமல்
அலட்டாமல் ஓடும் நதி போன்ற அமைதியாக
ஓடி முடிந்தது.

எல்லாவற்றிற்கும் காரணம் அன்பும் மற்றவர் நோவைப்
புரிந்து பரிந்து செல்லும் மனங்கள். இத்தனைக்கும் காரணம்
ஒரு எளிய ஸ்டேஷன் மாஸ்டர்.

ஒரு ஆபாசம் இல்லை.கத்தல் இல்லை.

ஒரு நாள் முழுவதும்,
யாரிடமும் பேதங்கள் இருந்தாலும்
இரவு படுக்கப் போகும் முன் 
இரவு வணக்கம் சொல்லிச் செல்வது
பல மனங்களுக்கு ஆறுதல் கொடுக்கும்.

வெறுப்பை அப்படி அப்படியே விட்டு விட்டுப் 
புதுக்காலைகளை  ஆரம்பிக்கலாம்.
இது நான் கற்ற பாடம்.

இந்தப் பதிவில் அந்தத் தொடரின் காட்சிகளுக்குப்
பதில் நம் தமிழகத்தின் காட்சிகளைப் 
பொருத்தினேன்.



Monday, July 26, 2021

கற்பகம்,கண்ணே பாப்பா.....



க' எழுத்தில் தொடங்கும் படங்கள்
 கே ஆர் விஜயாவுக்கு  வெற்றி கொடுத்தனவோ?
நல்ல நடிகை.
அம்மன் என்று நினைத்தால் 
சட்டென்று நினைவுக்கு வருபவர்களில் 
இவரும்  ஒருவர்.


Sunday, July 25, 2021

மேஜர் சுந்தரராஜன்




மேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் 
ஏதோ வருத்தம் தோன்றும்.
நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம்.

அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார்.
எந்த ஒரு பாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று நிரூபித்தவர்,

மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கொட்டகையில் 
அவரது நாடகங்கள், ஞான ஒளி, கல்தூண்
எல்லாம் பார்த்திருக்கிறேன்.

சிறந்த நடிப்பு.
அதுவும் அவரும் நாகேஷும் சேரும் படங்கள்
தனித்துவம் கொண்டவை.
எனக்குப் பிடித்த காட்சிகளைப்
பதிவிட்டிருக்கிறேன்.

Friday, July 23, 2021

விழும்,எழும்,நடக்கும் ஓடும் நதி.......



வல்லிசிம்ஹன்





நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
ராகங்கள் நூறு வரும்
வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும்
வானம் ஒன்று
ராகங்கள் நூறு வரும்
வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும்
வானம் ஒன்று
எண்ணங்கள் கோடி வரும்
இதயம் ஒன்று
எண்ணங்கள் கோடி வரும்
இதயம் ஒன்று////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////



அண்மையில் உறங்கும் உறங்காத தண்ணீர் நிலைகளைப் பற்றிப்
பேச்சு வந்தது.

பெண்களுக்காவது உறங்கும் காலம்
சில நேரம் கிடைக்கும்.
நதிக்கு ஏது உறக்கம் என்று தான் தோன்றியது.

உயிர் காக்க ஓடிக் கொண்டே இருக்கிறது.
அதன் வேகம் மலை மடு என்று மாறி மாறி 
ஓடி, 
மடுவில் மாட்டிக் கொண்டவர்களைக் காப்பாற்ற முடியாமல்
மற்ற ஆயிரம் மனிதர்களுக்கு 
உணவளித்தபடி, நிற்காமல் சலசலத்தபடி 
ஓடிக் கொண்டபடி தான் இருக்கிறது.

ஓடும் நதியில் குளிக்க வேண்டும் என்றால்
எங்கள் தாமிரபரணியைத் தான் சொல்ல வேண்டும்.
நீச்சல் தெரியாதவர்கள் குளிக்க ஏதுவான 
இடங்கள் படித்துறைகள் உண்டு.
சுழல் இருக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் உண்டு.
வெள்ளம் இல்லாத காலங்களில்
அழகான அமைதியான அம்மா போன்று
பேசியபடி ஓடும்.

நதி தீரத்தில் வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
மலையில் பெய்தமழை நதியில் பாய்ந்து 

கரைகளை உடைக்கப் பார்த்தால் அது நதியின் 
தப்பில்லையே.
உயர்த்தப் பட்ட கரைகளும்,
தோண்டப் படாத வண்டலும் இருக்குமானால்
யாருக்கும் சேதம் இல்லை.

பெண்களுக்குக் கோபம் வந்து வார்த்தைகள்
சிதறுகின்றன என்றால், அந்த நிலைக்கு
அவளைத் தள்ளியது யார் என்று யோசித்துப் 
பார்க்கிறேன்.
''  பழைய பாடல் ஒன்றில் ஆறு ஆழம் இல்லை.
பெண்மனதே ஆழம்'' என்று வரும்.

பெண்ணைப் பேச விட்டால் 
அவள் பக்க நியாயங்களைக் கேட்டால்
எத்தனையோ பிரச்சினைகள் முடிந்திருக்கும்.





சரித்திரம் படைத்த சில நடனங்கள்.






முன்பு நம் ஊரில் ஸ்டார் ப்ளஸ் ஆரம்பித்த புதிதில்

டிசிஎம்    Turner classic movies திரைப்பட சானல் இருந்த போது 
பார்த்த படங்கள் அனேகம்.
எல்லாமே நான் பிறப்பதற்கு முன் 
இல்லாவிட்டால் 1950 களில் வந்தவை.

திரை அரங்குகளுக்குப் போய்ப் படம் பார்க்கும்
சந்தர்ப்பம் குறைந்தது.

அந்த அளவுக்கு ஒலியும், சங்கடமும் நிறைந்த
இடங்களில்  சினிமாவை எப்படி 
நிலைத்து ரசிப்பது?

 குழந்தைகள் திருமணங்கள் முடிந்து , கைகளில்
நேரம் தேங்கிக் கிடந்த காலம்.
பழைய தமிழ்த் திரைப்படங்கள் மதியம் பார்க்கலாம்.
ஆங்கிலப் படங்கள் எப்பொழுது வேண்டுமானாலும்
பார்க்கலாம்.
அப்போது மனதுக்கும் ஆறுதல் தேவையாக இருந்தது.

சிறிது காலத்தில் அந்த சானலை நிறுத்தி விட்டார்கள்.

பிறகு இந்த ஊருக்கு வரும்போதெல்லாம் 
பார்க்க முடியும். 
இப்போது இணையத்திலேயே  எல்லாம் 
காணக் கிடைக்கிறது.
வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு 
பொதுவாகச் சத்தம் ஆகாது.
அதனால்  நம் மடிக்கணினியே நமக்கு எல்லாம்
ஆகிறது.

ஒரு எஸ்கேப் ரூட் என்று சொல்வார்களே
அது போல.
இப்போது உலகம் எங்கும் பரந்து இருக்கும் உறவினர்களின் நலம்

மாறி மாறிச் செய்தி வந்தால்,
அவர்கள் நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு
இறைவனைப் பிரார்த்திக்கவும்
நம் மனம் நல்லதாக இருக்க வேண்டும் இல்லையா
திரைப்படங்களும் இசையும், இறை வழிபாட்டு

மந்திரங்களும் நம் வாழ்க்கையை வளப்படுத்த வழி.
முன்னாட்களில் ,சிங்கத்தின் பாட்டி சொல்வார்,
''வெறுமனே குழந்தைகளுக்கும் அவனுக்கும் 
சமைத்துப் போட்டால் மட்டும் போதாது.
செருப்பைப் போட்டுக்கோ வெளில போய் வா"
என்ன அர்த்தம் தெரியுமா,ராஜேஸ்வரி லெண்டிங்க் லைப்ரரிக்குப்
போ. வடுவூர் துரைசாமி துப்பறியும் த்ரில்லர் நாவல்களை
எடுத்து வா என்பதுதான்:)))))

அதற்கப்புறம் இருக்கவே இருக்கு ஆர் ஆர் ஃபார்மசி,
லஸ் பிள்ளையார், தண்ணித்துறை ஆஞ்சனேயர்
எல்லா இடங்களுக்கும் நடைதான்.
இன்னோரு நாள் ,கபாலி, முண்டகக்கண்ணி, எல்லை அம்மன்

என்று தொடரும். #ஆடி மாத நினைவுகள்


Tuesday, July 20, 2021

லின் போ சி எண்ணங்கள்.

Chi Po Lin
வல்லிசிம்ஹன்


கடந்த ஆறு மாதங்களாக 
கொரியன்  நாடக சீரியல்களைப் பார்த்து வருகிறேன்.
அவர்களுடைய எண்ணங்கள்
 
நம் தமிழ் நாட்டை ஒத்து இருக்கின்றன.
அதே மாதிரி வாழ்க்கைக் கட்டுப்பாடுகள்.

இப்போது பார்த்து வரும் நெட்ஃப்ளிக்ஸ் ஒரு ஆயிரம் இரவு வணக்கங்கள்

தொடர் ,ஒரு தந்தையைத் திடீரென இழக்கும் 
மகள்களையும்,
அவரது  இயற்கையின் மீதான ஆர்வத்தையும்
மிக அழகாகச் சொல்லி வருகிறார்கள்.

தெய்வான் நாட்டில் நடக்கும் கதை.
கதையின் ஊடே  லின் போசின் என்னும் இயற்கை ஆர்வலர் எடுத்த 
படங்களும், அவரது வாழ்க்கை பற்றிய தத்துவங்களும் 
சொல்லும்போது மனம் மிக நெகிழ்கிறது. 

அதன் நடுவே வருவது மரங்களையும், பறவைகளையும் 
நேசிக்கும் மனிதர்களின் குழு பற்றிய குறிப்புகள்.

வாழ்விற்குத் தேவையானது பணம் மட்டும் அல்ல. மனித நேயமும்
நல்ல உணவும்,குடும்ப அமைப்பும் தான்

என்று சொல்லிக் கொண்டே வரும் பாங்கு
அருமை. 








Sunday, July 18, 2021

எஸ்.வரலக்ஷ்மியின் பாடல்கள்






பலவித செய்திகள் உறவில், நட்பில்
பாதிப்பை ஏற்படுத்திய வாரம் 
கடந்த வாரம். 
ஒருவர் மீண்டு கொண்டிருக்கிறார்.
இன்னோருவரும் , அவள் கணவரும் மீள்வார்கள் என்று
இறைவன் பெயரில் நம்பிக்கை
வைத்து பிரார்த்திக்கிறேன்.
அனைவரும் வாழ்க வளமுடன்.

Sunday, July 11, 2021

- Even The Dog Stopped To Listen | Can't Help Fallin...


கரோலினா. சின்ன வயதினில் 
ஒரு வயலின் மேதை.

ஒரு சனிக்கிழமை மாலை.








வல்லிசிம்ஹன்மழை இல்லாமல் காற்றில்லாமல்
இருக்கும் நாள் ஒன்றில் இந்த வெந்தய தோசையையும் 
மோர்க்குழம்பையும் 
ரசித்தபடி 
மலர்களோடு  பேசலாம்.
வெந்தய தோசைக்கு,
5 கப் இட்லி அரிசி,
1/2 கப் வெந்தயம்
இரண்டையும் எட்டு மணி நேரம் ஊறவைத்து

அரைக்கும் போது 1/2 கப் அவலையும் தனியே
ஊறவைத்து அரைத்து சேர்க்க வேண்டும்.
மாவு புளித்ததும்
 வார்த்தால் பஞ்சு தோசை வார்க்க
முடியும்.

மலர்கள் பல வண்ணங்களில் மகிழ்ச்சி கொடுக்கின்றன.

Friday, July 09, 2021

மார்ட்டன் மரக்காடுகளுக்கு ஒரு பயணம்.


Artist Daniel Popper.
என்ன கேட்கின்றன இந்தக் கைகள்:(
மரங்கள் மரங்கள் மீண்டும் மரங்கள்.


பச்சையும் நீலமும் கண்களை விட்டு மறைய இரண்டு நாட்கள்
பிடித்தது.!!!




நாய்க்குடைகள்!!





வல்லிசிம்ஹன்

கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த ஊர் ஆரண்யத்துக்கு சென்று வந்தோம்.

வண்டியை விட்டு ஒரே ஒரு இடத்தில் தான் 
இறங்கினோம்.
கூட்டம் அதிகம் வந்ததால் இடைவெளி 
கொடுக்க முடியாமல் நாலு திசைகளிலும் 
சுற்றி வந்தோம். மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும். 
1650 ஏக்கர் பரப்பளவில்
20 ஏக்கர் பார்த்திருப்போம்.
அந்த வெய்யிலிலும் ஒரு சைனாக்காரர் ஜாகிங் செய்து போய்க் கொண்டிருந்தார்.
நாவறண்டு போகவே,
அதிக தூரம் எங்களால் நடக்க முடியவில்லை.
கொண்டு வந்திருந்த உணவை மரத்தடியில் உண்டு விட்டு

மெதுவாக காடு வலம் வந்தோம்.
அந்தப் படங்கள் மேலே.
நடு நடுவே மரத்தால் சிற்பங்கள் செய்து வைத்திருந்தார்கள்.

இந்தியாவின் மரங்களைத்தவிர எல்லா தேசத்து மரங்களும்
அங்கே இருக்கின்றன.
ஒரு வேப்ப மரம் வைக்கக் கூடாதோ என்று தோன்றியது:)

கோடை, வசந்தம், இலையுதிர்காலம், குளிர்காலம் என்று மரங்கள் வித விதமாகக்
காட்சி தரும்  இடம்
அந்தந்த சீசனில் போக வேண்டும்.

Wednesday, July 07, 2021

இங்கே சில நிலவரங்கள்.

வல்லிசிம்ஹன்
அமைதி வேண்டும். பிரார்த்தனைகள்.


ஃப்ளாரிடா  மானிலத்தில் நிகழ்ந்த 

கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து 
நாட்களாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
40 வருடங்கள் தான் ஆகிறது அந்த அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டி.
நடு நிசி வேளையில் ஒரு அறிவிப்பில்லாமல்
சரிந்து எண்ணற்ற உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது.

கண் கொண்டு பார்க்க முடியாத பிம்பங்கள்.
எல்லா வயதுக்காரர்களும் இதில் அடங்கும்.

இதிலிருந்து தப்பித்தவர்கள், அந்த வேளையில் வெளியில் இருந்தவர்கள்,
மனைவி வெளியிலிருக்க உள்ளே மாட்டிக் கொண்ட குடும்பம்,
எங்கிருந்தோ விடுமுறைக்கு வந்திருந்த மாணவன்
இப்படி நீள்கிறது  பட்டியல்.
எப்பவோ பார்த்த 'ரமணா' படம்தான் நினைவுக்கு 
வந்தது. 
கடற்கரையோரமாக இருக்கும் இந்த அடுக்குமாடிக் 
கட்டிடங்கள்
உப்புக்காற்றால் அரிக்கப் பட்டிருக்கலாம்,
அஸ்திவாரம் பலமில்லாமல் மணலில் 
இறங்கி இருக்கலாம்.
கட்டிட விரிசல்களைக் கவனிக்காமல் விட்டார்கள்.
அடிமட்டத்தில் தண்ணீர் தேங்கி இருந்திருக்கிறது.

இதெல்லாம் இப்போது சொல்கிறார்கள்.


இனித் தேசமெங்கும் இருக்கும் உயர்ந்த, 100,108,120
மாடிகளைக் கொண்ட கட்டிடங்களில்
இருப்பவர்கள் என்ன என்ன என்று பயப்படுவார்களோ:(

துபாயில் மணல் பிரதேசத்தில் எழும் கட்டிடங்களைப்
பார்க்கும் போது அளவில்லாத கவலை ஏற்படும்.

அங்கு உலகப் பிரசித்தி பெற்ற நிபுணர்களே
கட்டுகிறார்கள். 
பணம் பணம் மேலும் பணம்.

நேற்று புது செய்தி ஸான்ஃப்ரான்சிஸ்கோ 
நகரக் கட்டிடம் ஒன்று 18 அங்குலம் சாய்ந்திருக்கிறதாம்.
அதைக் கட்டியவர்  அந்த இடத்தை விட்டு வெளியேற
வெண்டும் என்பவர்களுக்குப் பணம் கொடுத்ததும்,
உடனே மூட்டை முடிச்சோடு வெளியேறின சிலரைப் பாராட்டத் தோன்றியது.

இன்னும் அங்கு குடியிருப்பவர்கள். அவ்வளவு பணத்தை
தங்கள் தங்கள் வீட்டில் கொட்டி இருக்கிறார்களாம்.
ஆயிரக்கணக்கில் இல்லை. கோடிகள் கணக்கில்.
என்ன செய்யப் போகிறார்களோ.!!!!

நல்ல செய்தி, இந்த மாகாணத்தில் இரண்டு நாட்களாகத் தொற்றே
இல்லையாம். மற்ற மானிலங்களை விட 
இங்கே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சதவிகிதம் அதிகமாக இருக்கிறதாம்.

இருந்தும் கவனம் வேண்டும் என்றே எச்சரிக்கை
செய்கிறார்கள்.
நமக்கு இப்படியே பழகிவிடப் போகிறது.

உலகம் முழுவதும் இறைவன் கரங்களுக்குள்
அடங்கி இருக்கிறது. அனைத்து உயிரையும்
அவன் காக்க வேண்டும். நலம் செழிக்கட்டும்.





Sunday, July 04, 2021

பிடித்த பி.பி ஸ்ரீனிவாஸ் பாடல்கள்.




வல்லிசிம்ஹன்
ஏ.எம் ராஜாவுக்கு அடுத்தபடி ஒரு கஜல் குரல் ஸ்ரீனிவாஸ் அவர்களுடையதுதான்.

ஜெமினி,எம் ஜி ஆர், ஏவி எம் ராஜன், கல்யாண்குமார்,
அசோகன், எஸெஸ் ஆர்
என்று அந்தக்கால ஹீரோக்களுக்கு 
நிறையவே பாடி இருக்கிறார்.
ஏ.எல் ராகவனும் இவரும் பாடி அசத்தாத படங்களே
இல்லை.

சோகங்களைத் தவிர்த்து சுகப் பாடல்களையே 
இங்கே பதிகிறேன்.:)
பதினாறு வயதில் மயக்கிய இந்தப் 
பாடலைத் தொடர்ந்து வெள்ளைத் தாவணியில் 
வலம் வந்த தோழிகளும் உண்டு.
எனக்கு அனுமதி இல்லாததால்
பார்த்து மட்டும் ரசித்தேன்:))))

திருமதி எம்.என். ராஜம் அவர்களின் பாடல்கள்.







ஒரு நல்ல குணச் சித்திர நடிகை.
பெரும்பாலும் கதா நாயகிக்கு எதிர் பாத்திரத்தில் நடித்தாலும்
எல்லோராலும் பாராட்டப் பட்டவர்.

அவரின் தமிழ் உச்சரிப்பும், முக பாவங்களும் போற்றப் 
படாத படங்களே இல்லை.

அழகிலும் குறைந்தவர் இல்லை.
சாரங்கபாணியுடன் ,தங்கவேலுவுடன் என்று நகைச்சுவை யாகட்டும் , எம் என் நம்பியாருடன் வில்லி பாத்திரம் ஆகட்டும்,

பாவை விளக்கின் உமா ,
மஹாதேவியில் தியாகத் தாய்,
தெய்வப் பிறவியில் காதலி,
பாசமலர் படத்தின் பரிதாபத்துக் குரிய அண்ணி,
மக்களைப் பெற்ற மகராசியில் அன்புத் தங்கை.....
என்று பலவித வேடங்கள்.
எல்லாமே சிறப்பாக  அறியப் பட்டவை.
அவரின் பாடல்களில் எனக்குப் பிடித்தவை.

வல்லிசிம்ஹன்