Blog Archive

Tuesday, September 29, 2020

திண்ணைப் பேச்சு வீரர்கள்.

வல்லிசிம்ஹன்சமீபத்து இணைய செய்திகளைப் படிக்கும் போது
ஒரு மரணம் நம் வாழ்வை எப்படி எல்லாம்
ரணமாக்குகிறது என்று மீண்டும் யோசிக்க வைத்ததது.

ஒரு உயிர் இறைவனிடம் செல்வது
அவரை விட்டுப் பிரிந்தவர்களுக்கு
என்ன ஒரு அதிர்ச்சி.!!! அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

அதுவும் ,பாவம் ஒரு நல்ல கலைஞரை
இத்தனை பேச்சு அவர் மறைவுக்குப் பிறகு பேச வேண்டாம்.!!

அந்தக் குடும்பம் நலமாக இருக்கட்டும்.

இதோ ஏழு வருடங்களுக்கு முன், 9.30 மணிக்கு குட்னைட்
சொல்லிப் படுத்தவர், ஒன்பதே முக்காலுக்கு
ஒரு சத்தம் இல்லாமல் குளியலறை வாசலில் 
படுத்திருக்கிறார்.
என்ன நடந்தது???
கத்திக் கதறி பெண்ணை அழைக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து அவள் எல்லோரையும் அழைத்து விட்டாள்.
முதலில் வந்தவர்கள் எதிர் வீட்டு ஷாந்தி,பின்னோடு பக்கத்து வீட்டுப் பையனும் மனைவியும்.
அவந்தான் தேவகி ,இசபெல்லா என்று அழைத்தான். 
அவர்கள் வந்தார்கள்.
அந்த ஆறடி உரு  stretcher ஏற்றும்போதே தொங்கின
கையை நான் தான் மேலே எடுத்து வைத்தேன்.
அப்போதும் சூடு இருந்தது.
 சரி நிறுத்திக் கொள்கிறேன்.

எல்லோரும் வர இரண்டு நாட்கள் ஆனது.
அவரை அனுப்பினோம்.
அவரைப் பரிசோதனை செய்த வைத்தியரிடம் இருந்து 
சர்ட்டிஃபிகேட் வாங்கப் போனான் சின்ன மகன்.
அதில் எழுதி இருந்த வாசகம் ''டி பி.''
 அந்தப் பக்கத்து வீட்டுப் பையன் என்ன சொன்னானோ
அவர் என்ன புரிந்து கொண்டாரோ.

என்னுள் கொதித்த கனலை அளவிட முடியாது.
ஏற்கனவே உறவினர்கள் நீ என்ன செய்துண்டு இருந்தே 
என்ற கேள்விக்கு என்னால் சிந்தித்துப்
பதில் சொல்ல முடியவில்லை.
108 எண்ணையே மறந்த நிலையில்
நான் கலங்கியது மட்டும் நினைவில்.
இன்னோரு உறவினர், அவருக்கு நானும் இவரும்
எத்தனை உதவிகள் செய்திருப்போம் என்று தெரியாது.
ஆஸ்பிட்டலுக்கு அழைத்துப் போ என்கிறார்.

மகனிடம் சொல்லி, அவருக்கு இருமல் இருந்ததென்னவோ உண்மை.
எப்பவுமே கபம் உண்டு.
இது எலும்புருக்கி நோய் இல்லை.

சாயந்திரம் கூட பைக்கில் போய் 
பெரியவன் பிறந்த நாளுக்கு அர்ச்சனை செய்து வந்தோம்.
வழக்கம் போல் சித்திரக்குளத்துக் கடையில் வறுத்த 
நிலக்கடலை வாங்கி வந்து சாப்பிட்டோம்
என்று சொன்னதும்,
அவன் மீண்டும் அந்த டாக்டரைக் காணப் போனான்.
அவர் கார்டியாக் arrest enRu  எழுதிக் கொடுத்தார்.

அதற்குப் பிறகு எந்த மரணக் காட்சி வந்தாலும் 
பார்ப்பதில்லை என்று முடிவு செய்தேன்.
அதாவது தொலைக்காட்சியில்.
இப்போதும் திரு எஸ்பிபி அவர்களின் 
இணையக் காட்சிகளைத் தவிர்த்து
அவர் பாடல்கள் பேட்டிகள் பார்க்கிறேன்.
இன்னும் சில நாட்களில் பாடல்கள் மட்டுமே
கேட்கும் நிலைக்கு வந்துவிடுவேன்.

இப்படி ஒருவர் இறைவனடி அடைந்த 
பிறகு அவரது வாழ்க்கையை அக்கு வேறு ஆணி வேறாகப்
பிரித்துப் பார்ப்பது நம் நிருபர் மக்களுக்குக் 
கரும்பு தின்பது போல இருக்கிறது.

இனியாவது ஓயட்டும்.
கருணை வாழட்டும்.







SPB on K Balachander, Rajini, Kamal & Ajith | Heartist Interview Part 2 ...

வல்லிசிம்ஹன்

Monday, September 28, 2020

பயங்கள் அவசியமா....

வல்லிசிம்ஹன்

எல்லாவற்றுக்கும் பயப்பட வேண்டாம். 

"அஞ்சுவது அஞ்சாமை பேதமை''
இது நமக்குத் தெரிந்தது தானே.

 என் வாழ்க்கையில் இது வரை சந்தித்திராத
பயங்களை இப்பொழுது உலகம் முழுவதும் பார்க்கிறேன்.

  நம் ஊரில்  மக்களின் மனதில் ஆடிக்கொண்டிருந்த
பயம் இப்போது கொஞ்சம் தெளிந்திருப்பதாகத் தோன்றுகிறது.
ஊடகங்கள் வழியாக உணரும் செய்தி அது.
இங்கே சாலைகளில் வண்டியை விட்டு இறங்காமல்
ஊரைச் சுற்றிச் செல்லும்போது காணும் வாகனங்களின்
எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

வால் மார்ட், முதலான இடங்களில் 
துளி கூட இடம் இல்லாமல் வண்டிகள் நிற்கின்றன.
எத்தனை நாட்கள் தான் வீட்டின் உள்ளேயே
இருப்பார்கள்.!!!

எங்கள் வீட்டிலும், இன்னும் இரண்டு வீடுகள் தாண்டி இருக்கும் ஒரு குடும்பத்திலும்
வயதான நானும் 95 வயதான பாட்டியும் 
இருப்பதால் அந்த வீட்டுக் குழந்தைகளோ
பெரியவர்களோ மாஸ்க் இல்லாமல் வெளியே
போவதில்லை.
அந்தக் குழந்தைகள் பாடும் சிரமம் தான்.:(
எங்கள் நண்பர் ஒருவரின் தந்தை வீட்டுக் குழந்தைகள் 
வழியே வந்த தொற்றினால் பாதிக்கப் பட்டார்.

இன்னும் இதே போல எத்தனையோ ...

இந்தோனேசியாவில் அமுல் படுத்தப்பட்டிருக்கும்
விதி முறைகள் இங்கே செய்திகளில் பார்த்தேன்.
முறையாக முகக் கவசம் அணியாதவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையில் ஒன்று
  1,நோய் வந்து இறந்தவர்களை அடக்கம் செய்யும் வேலை.
 2, சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் களைகளை 
சுட்டெரிக்கும் மதிய வேளையில் தொடர்ந்து வேலை செய்து அகற்றுவது.
3,நோய் வந்தவர்களுக்கு மருத்துவ சேவை செய்வது
இப்படிப் போகிறது ....
இவ்வளவு கடுமை காட்டக் காரணம் அங்கே அதிகரித்த
பாதிப்பு.

இங்கே குளிர் ஆரம்பித்துவிட்டது. கூடவே அதிகமாவது 
இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்கள்.
எனவே அதற்கான தடுப்பூசிகள் , இலவசமாகவே போடப்
படுகின்றன.
கல்லூரிகள் திறக்கப் பட்டு, விஞ்ஞானப் பிரிவை
மருத்துவப் படிப்பைச் சேர்ந்தவர்கள்
வெவ்வேறு மாகாணங்களுக்குச் சென்று விட்டார்கள்.

 பெற்றோர்களுக்கு உள்ளூர பயம் இருந்தாலும்
குழந்தைகளின் விருப்பத்தை அங்கீகரித்து அனுப்பி இருக்கிறார்கள்.
அந்தக் குழந்தைகளுக்கும் பயம் தெரியும்.
கவனமாகவே இருப்பார்கள்.
இறைவன் துணை இருக்கட்டும்.

நோயின் தீவிரம் தெரியாமல் அசட்டுத்தனமாகப்
பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்போது விளைந்திருக்கும் ஒரு நன்மை
வேலை இல்லாமல் பொருளாதாரக் கவலையில் இருப்பவர்களுக்கு
அவர்கள் கௌரவம் பாதிக்கப் படாமல்

அந்த வீட்டுக் குழந்தைகளுக்கு உடைகள், விளையாட்டுப்
பொருட்கள், சிற்றுண்டிகள் என்று கொண்டு போய்
அவர்கள் வாசலில் வைத்து விட்டு வருவது.

இந்த மகிழ்ச்சியைக் கண்கூடாகக் கண்டேன்.இத்தனைக்கும் அவர்களில் பலர் வேறு வேறு
கட்சிகளில் உறுப்பினர்கள்.

அரசியல் இல்லாத இந்த உதவிகளைக் காணும்போது
மனிதம் வாழுகிறது என்பதை உணர்கிறேன்.
ஸ்விட்சர்லாண்டில்  ஜெனிவா, சூரிக் சுட்டுவட்டாரங்களில்
 அதிக அளவு பாதிப்பு இருப்பதாகத்
தெரிய வருகிறது.
 அந்த ஊர்க்காரர்களுக்கும் வீட்டில் 
ஒதுங்குவது பழக்கம் இல்லாத ஒன்று.
எந்த ஊராக இருந்தாலும் அனைவரும் உணர வேண்டியது
நிலைமையின் தீவிரத்தை.
முடிந்தவரைக் கட்டுப்பாடுகளை மீறாமல்
அனுசரிக்க வேண்டும்.
எல்லைக்காவலில் அந்த உயர்ந்த பனிமலையின் 
கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும்
வீரர்கள்,அவர்களின் குடும்பங்கள் செய்யும்
தியாகம் நாம் நலமாக இருப்பதைத்தானே விரும்பும்.

தொற்று நோயின் துயரங்களை அனுபவித்தவர்கள்
தினம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் படும் நோவுகளை.
அதீதமாகப் பாதிக்கப் பட்டவர்களுக்கு 
மன அழுத்தம் அதிகமாகி அவர்கள் வாழ்க்கை நலம் 
கெடுவதை இங்கே தினப்படி செய்திகள்
உறுதிப் படுத்துகின்றன.



இனிவரும் நாட்கள் நன்மை கொண்டுவரப் பிரார்த்தனைகள்.





Sunday, September 27, 2020

சில சிந்தனைகள்.

வல்லிசிம்ஹன்
சில சிந்தனைகள்.

எத்தனையோ  உயிர்கள் பிறக்கின்றன. 
எத்தனையோ உய்ர்கள் பிரிகின்றன.
நம் ஊரில் மட்டும். யாராவது பிரபலம் 
இறைவனடி எய்திவிட்டால் 
அவரைச் சும்மா விடமாட்டார்கள்,.
முன்பெல்லாம் இத்தனை ஆராய்ச்சிகள் கிடையாது. புரட்சித் தலைவர்
மறைந்த போதிலிருந்து
இது ஆரம்பித்தது.

ஏகப்பட்ட ஊடகங்கள் தர்க்கம் ,குதர்க்கம் 
செய்தன.
இப்பொழுது இணையங்களும் சேர்ந்து கொண்டதில்
யாருடைய பொழுது வீணடிக்கப் படுகிறதோ
இல்லையோ  மனங்கள் அலைக்கழிக்கப் 
படுகின்றன,, என்பது சர்வ நிச்சயம்.

நாம் எங்கேயோ இருக்கிறொம் என்பது உண்மை.
வாட்ஸ் ஆப் என்று இருக்கிறது.
அது ஃபார்வர்ட் செய்ய என்றே பல வைத்தியர்கள் 
இப்போது நம் எஸ்.பி பி சார் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

எத்தனையோ உள்ளங்களைக் குளிர வைத்தவர்.
அத்தனை இறைப் பாடல்கள் உருகி உருகிப்
பாடியவர்.

அவர் தொற்றில் இருந்து வெளிவராமல் மறைந்ததற்கு என்ன காரணம்
என்று துப்பறிகிறார் ஒருவர்.
இது காரணமோ அதுகாரணமோ
என்று அடுக்கடுக்காகக் கேள்விகள்.
அந்த பால் போன்ற இதயத்தை, மரியாதைக்குரியவரை
இப்படிப் பேச வேண்டுமா.:(

இன்னும் அவர் அடக்கம் செய்யப் பட்ட இடம் கூடக் காய்ந்திராது.
அவர் இருக்கும் போது ஏன் இத்தனை கேள்விகள் உங்கள்
மனதில் எழவில்லை?.
ஏன் பேசவில்லை?
இவர்களை எல்லாம் யாருமே தட்டிக் கேட்க மாட்டார்களா.

எஸ்பி.பி சாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
பொல்லா உலகிலிருந்து தப்பி விட்டார்.



SPB 50 World Tour, Detroit - S. P. B. and S. P. B. Charan sing Anbe Anbe

வல்லிசிம்ஹன்
என்றும் எங்களுடன் பாலு சார்.

Saturday, September 26, 2020

இந்த நாளைய சங்கீத மேகம் பாலு சார் வாழ்க.

வல்லிசிம்ஹன்

.
ஆயிரம் நிலவே வா என்று பாடியபடியே பல லட்ச உள்ளங்களில்
இடம் பிடித்த இசைமன்னர்  எஸ்.பி பாலசுப்ரமணியம்.

இயற்கை அன்னையை அழைத்து நம்மைக் குதூகலிக்க வைத்தவர்.
இளைய நிலா பொழிவது போல மனங்களைக் கவர்ந்தவர்,
இப்படி ஒரு நொடியில் ஓடிவிட்டாரே.
அதுவும் யாரோ கொடுத்த ஒரு தொற்றினால்.
எல்லாப்
பாடகர்களின்  ஏதோ ஒரு சாயல்
அவர்களை விட ஒரு படி மேலாக
தனித்துவத்துடன் ஒலித்த போது மயங்கியதற்குக் காரணம்

அவரே அந்த கதானாயகனாக மாறியதுதான்.
படங்கள் வெற்றி பெற பாலு சார் பாடினால்
போதும் .

அவ்வளவு பாடல்களுக்கும் பின்னால்
அவருடைய மகத்தான அடக்கம், மனிதம்
எல்லாம் படித்த நினைவு.

இந்த ஊருக்கு அவர் பாட வந்த போது என்னால்
போக முடியவில்லை.
இனி அவரது இசை எங்கும் எப்போதும் 
ஒலித்தபடி இருக்கும். மனம் கேட்டபடி இருக்கும் அவர் மனைவிக்கும் மக்களுக்கும்
நம் அன்பு.

தினசரி கூடும் 500 பறவைகள்...வீட்டுக்கு மேலே வேடந்தாங்கல்!

வல்லிசிம்ஹன்

Tuesday, September 22, 2020

வெற்றிக்கு வழி.

வல்லிசிம்ஹன்

நன்றி தினமணி.காம். வெற்றி கொண்ட மோகனா - நேரடி சாட்சியம்

By பேரா. சோ. மோகனா  |   Published on : 22nd September 2020 02:33 PM  |     |  

Roseday special story: Cancer survivor Mohana Somasundaram

பேரா. சோ. மோகனா

இந்த அழகான உலகைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள்தான் நாம், ஒருநாள் அனைவரும் திரும்பி செல்லத்தான் போகிறோம், 

ஆனால், தேதி மட்டும் ரகசியம்!

இன்று 22.09.2020 உலக ரோஸ் நாள்.

 'அஸ்கின் ட்யூமர்' (Askin's Tumour) என்ற அரிதான இரத்த புற்றுநோயால் உயிர்ப்பலியான, கனடா நாட்டின் 12 வயதுப்  பெண் குழந்தை மெலிண்டா ரோஸ் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அவர் மறைந்த செப்டம்பர் 22 ஆம் நாள், புற்றுநோயுடன் போராடும் மனித உயிர்களுக்கு, 

புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையும், மகிழ்வும் 

அளிக்கக் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தை இன்னும் இரு வாரமே உயிர் பிழைப்பார் 

என்ற போதும் அவர் தைரியத்தைக் கைவிடாமல், 

இறுதிவரை போராடினார். அவருக்கு நோய் இருந்து 

மருத்துவமனைக்கு சென்றபோதும், அவரைச்

 சுற்றியுள்ள மற்ற புற்றுநோயாளிகளுக்குக் 

கவிதைகளையும், கடிதங்களையும் அனுப்பினார். 

மிக மிக ஆச்சரியப்படும் வகையில் அவர்களின் 

உந்துசக்தியாக இருந்தார். அவரின் நினைவாகவே உலக ரோஸ் நாள்.

மேலும், ரோஜா மலர் என்பது, அன்பு, கருத்தாக்கம் 

மற்றும் மென்மை என்பதன் குறியீடாக உள்ளது.

 புற்றுநோயாளிகளுக்கு மெலிண்டாவின் கடிதம் மற்றும்

 கட்டுரைகள் வாழ்வதற்கான அதீதமான நம்பிக்கையையும்,

 உறுதியையும் தந்தன. எனவே, புற்றுநோயுடன் 

 போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த நாள் மகிழ்வைத் தரட்டும் என்பதற்காக உலக ரோஸ் தினம், மெலிண்டா ரோஸுக்காக அனுசரிக்கப்படுகிறது.

மோகனாவாகிய நானும் ஒரு புற்றுநோயாளிதான்.

 நான் புற்றுநோயிலிருந்து மீண்டவள். 

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2010, ஆகஸ்ட் 25 ஆம் நாள்

 மார்பகப் புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன்.

 அதன்பின்னர் கீமோதெரபி எனப்படும் வேதிசிகிச்சை 6 மாதங்களுக்குத்

 தரப்பட்டது. கீமோதெரபியால் மறதி  ஏற்படும். உடலிலிருந்து 

கால்சியம் கரைந்து போகும். அதன் பின்னரும்கூட 

இன்று என் உடல் இரும்புபோல உறுதியாகப் புற்றுநோய்க்கு முன்னர்

 இருந்தததைவிட பல மடங்கு பலத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் 

இருக்கிறது என்றால் யாரும் நம்பமாட்டீர்கள்.

நான் 2 கி.மீ. ஜாக்கிங் செய்கிறேன். தினமும் நடக்கிறேன்.

 'தாய்ச்சி' என்ற சீனத் தற்காப்புக் கலையை செய்கிறேன். 

நல்ல நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்வாக இருக்கிறேன்.

 மேலும், இதுவரை 11 புற்றுநோயாளிகளைச் சரியான 

நேரத்தில் சரியான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று,

 தகவல் தந்து அங்கு பணிபுரியும் என் மாணவர்கள் 

மற்றும் நண்பர்கள் மூலம் காப்பாற்றியும் இருக்கிறேன். 

புற்றுநோய் நண்பர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் உதவியும்

 செய்கிறேன். 

இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? 

என் மன உறுதியும், தொடர்ந்த உடற்பயிற்சியும், எடுத்துக்கொள்ளும் மற்றும் எடுத்துக்கொண்ட மருந்துகளும்தான். உலகிலேயே மோசமான நோய் ஒன்று உண்டென்றால் அதுதான் புற்றுநோய். புற்றுநோய் தொற்று நோயல்ல.

புற்றுநோய் என்றால் என்ன? யாருக்காவது அது வந்த அனுபவம் இருக்கிறதா? அதைப் பற்றித் தெரியுமா? என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டால், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று எல்லோரும் ஓடிவிடுவீர்கள். அவ்வளவு பயம் புற்றுநோய் பற்றி எண்ணக்கூட.

ஒரு சின்ன கேள்வி? புற்றுநோய் உங்களிடத்தில் வருவது என்று அது முடிவு செய்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அது என்ன உங்களைக் கேட்டுக் கொண்டா உங்களிடம் குடியிருக்க, அனுமதி பெற்ற பின்னர்தான் வர வேண்டுமா? அப்படி ஏதும் சட்டதிட்டம் உண்டா? அப்படி எல்லாம் இல்லை அதது இயல்பாய் நடக்கும்.  இந்த உடம்பில், புற்றுநோய் ஒரு நோய் என்றால் அது வராமல் இருக்க, அதற்கான வைரஸ்/பாக்டீரியா  அண்டாமல் இருக்க ஏற்பாடு செய்யலாம். தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால்...

ஆனால், புற்றுநோய் வராதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். நம் வீட்டைச் சுற்றி ஒரு பெரியகோட்டை தடுப்புச் சுவர் எழுப்பி விடலாமா? புற்றுநோய் நம்மைத் தாக்காமல் இருக்க? அது உள்ளே நுழையாமல் இருக்க, ஒரு பெரிய அகழி தோண்டலாமா? எதனைக் கொண்டும் புற்று நோயைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். அது சரி, கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் மக்களாவது, புற்றுநோய்த் தாக்கத்திலிருந்து தப்பிக்கிறார்களா? மீட்கப் படுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை.

நீ சாமி கும்பிட்டாலும் சரி, கும்பிடாட்டியும் சரி, நீ பணக்காரனாக இருந்தாலும் சரி, ஓட்டாண்டியா இருந்தாலும் சரி, நீ படிச்சவனா இருந்தாலும் சரி, படிக்காட்டியும் சரி, எனக்கு எதுவுமே கவலை இல்லப்பா, நான் பாட்டுக்கு எனக்குப் புடிச்சா வருவேன், முடிஞ்சா நீ என்ன விரட்டிப் பாரு என்று நம்மிடம் சவால் விடுகிறது புற்றுநோய்.

சவாலைச் சந்திப்போமா, முழுத் துணிவுடன், தைரியத்துடன், பின் மருத்துவர் மற்றும் மருந்துகளின் உதவியுடன், அப்புறம்தான், அப்பா அம்மா, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, சுற்றத்தினர் வருகிறார்கள் துணைக்கு/காப்பாற்ற.. என்றும் உங்களின் எந்த நோயாக இருந்தாலும் முதல் மருந்து/சிகிச்சை என்பது அவரவரின் துணிவுதான்; நெஞ்சுரம்தான்; தன்னம்பிக்கைதான்.. அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். இதனை முதலில் நன்கு தெரிந்துகொள்ளுங்கள். 

புற்றுநோய் வந்துவிட்டால் என்ற எண்ணம்கூட நினைக்கவே பயமாக இருக்கிறது. வாய் அதை உச்சரிக்கக்கூட அஞ்சுகிறது. இதுதான் நிதர்சனம். எந்த நோய் வந்தாலும் மனிதர்கள் சொல்வார்கள். சர்க்கரை / நீரிழிவு வியாதி, இதய நோய் வந்தால் பெருமையாகக்கூட  மக்கள் சொல்வார்கள். ஆனால், புற்றுநோய் வந்தால் அதை யாரிடமும் சொல்லவே மாட்டார்கள். கூடியவரை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். அதனை வெளியே சொல்வதை அவமானமாகவே எண்ணுகின்றனர். அதுமட்டுமல்ல புற்றுநோய்  வருவது என்பது முன்வினைப் பயன். கடவுளின் சாபம் என்றெல்லாம் எண்ணுகிறார்கள். அப்படி ஏதும் இல்லை. இதுவும் ஒரு வகை நோய்தான். ஆனால், இந்நோய் மரபணுவையும்  சிதைத்துவிடுகிறது. புற்றுநோய் என்பது பல நோய்களின் கூட்டு என்றுகூட சொல்லலாம். 

புற்றுநோய்.. ஒரு நோயே அல்ல.. வளர்ச்சி நிலை!

புற்றுநோய் என்பது ஒரு நோயே அல்ல. அது செல்களின் அதீத வளர்ச்சி. பொதுவாக அனைத்து உயிரிகளின் உடலும், பல ஆயிரக்கணக்கான செல்களால் ஆனவை. நம் உடலில் சுமாராக 10 டிரில்லியன் செல்கள் உள்ளன.  ஒன்றின் பின்னால் 12 சுழியன்கள்/பூஜ்யங்கள் போட்டால் அது ஒரு டிரில்லியன். ஆச்சரியம்தான். அது போகட்டும். உடலில் எத்தனை வகை செல்கள் உள்ளன,  நமது உடம்பில் சுமார் 200 வகை செல்கள் உள்ளன.

Baby making parotta - simple steps

வல்லிசிம்ஹன்இப்படி சமையல் சொல்லிக் கொடுத்தால் யார்தான் கற்க மாட்டார்கள்?

Monday, September 21, 2020

2001 ஆம் பதிவு நல்ல செய்திகள் சில...

வல்லிசிம்ஹன்

 

முதல் நல்ல செய்தி, எனக்கு மிகவும் மனதுக்கு நெருங்கிய
மூன்று நண்பர்கள் தீ நுண்மியின் 
பிடியிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

ஒருவர் தந்தையை இழந்தாலும் தன் தம்பியையும் தன்னையும் காத்து
செயல் பட்டிருக்கிறார்.
இறைவன் அவர்களுக்கு என்றும் நன்மை செய்வான்.

2,, இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் காத்தரீன்
ஒரு ஆசிய குடும்பத்தலைவரின் உடல்
நலம் குன்றியபோது, செய்தி தெரிந்து தனது 
சிறுனீரகத்தைத் தானமாகக் கொடுத்திருக்கிறார்.
காத்தரீனும், சிறு நீரகம் வாங்கிக் கொண்டவரும் நலமாக இருக்கிறார்கள்.


3,,இணையம் வழியாகவே இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள
வழி தேடிக் கண்டு பிடித்தாள் மகள்.
அந்த KIT வந்ததும்.

அதிகாலை வேளையில் இரத்தம் எடுத்து 
அவர்கள் கொடுத்திருந்த அட்டையில் துளி துளியாக
ஆறு இடங்களில்
பதிய வைத்து  நன்றாகக் காய்ந்ததும்
அவர்கள் கொடுத்த சீல் வைத்த ப்ளாஸ்டிக்
pouch  உள்ளே வைத்து, வாசல் தபால் பெட்டியில் வைத்துவிட்டோம்.
தபால்காரர், 
எங்கள் தபால்களைக் கொடுத்துவிட்டு,
வைத்த உறையை வண்டியிலிருந்து 
கை  நீட்டி எடுத்துக் கொண்டார்.

அவரும் கையுறை அணிந்திருந்ததால் இருவருக்கும் பாதுகாப்பு.
இதோ ரிசல்ட்டும் வந்து விட்டது. வருட சராசரியாக 8 ஆம் நம்பர் வந்திருக்கிறது.
கொலஸ்ற்றால் நார்மல்.
பிறகென்ன வேண்டும்?
வைத்தியர் நிறைய புத்திமதி சொல்வார்,
கேட்டுக் கொள்ளணும்.:)

  4,,,,,,கூகிள் மீட் வழியாக ஒரு திருமணம், ஒரு நிச்சய தார்த்தம்
பங்கெடுத்துக் கொண்டோம்.
அவரவர் நல்ல உடை உடுத்திப் பங்கெடுத்துக் கொண்டது அருமையாக இருந்தது/

என்னுடையப் பதிவுப் பயணத்தில் என்னுடன் இணைந்து வந்த
அனைவருக்கும்,
பாட்டு பதிவு போட்டாலும் பாராட்டும் நல்ல மனங்களுக்கும்
அடியேனின் வந்தனங்கள்.

அனைவரும் வாழ்க வளமுடன்,

3, 



2002, இனிப்பான நாட்டு சர்க்கரை தயார்.

வல்லிசிம்ஹன் 
இத்தனை நாட்கள் வருடங்களாக  என் பதிவுகளை மிகப் பொறுமையோடு பார்த்துப்  படித்து வரும் என் அருமை நண்பர்களுக்கும், கீதாமா,கோமதிமா, கமலாமா    அனைவருக்கும்  என்   மனம்  நிறைந்த  நன்றிகள்.


வாழ்க வளமுடன்.
கொங்கு நாட்டுத் தமிழில் 
இனிய சக்கரைப் பதிவு.

RADIO CEYLON - "இசைக்குயில்" ஜிக்கி - "தெய்வக்குரலோன்" B.H.அப்துல் ஹமீத்...

வல்லிசிம்ஹன்

Thirumathi Jikki songs






 வல்லிசிம்ஹன்

Sunday, September 20, 2020

Vazhai poo Usili | வாழைப்பூ உசிலி | Banana flower

வல்லிசிம்ஹன்

இனிக்கும் சர்க்கரை.ஏன் எப்படி?

வல்லிசிம்ஹன் 
டயாபெட்டீஸ் என்னும்   சர்க்கரை  நோய் எப்படி வருகிறது 
என்று  சில நாட்கள் முன்  எங்கள் ப்ளாகில் 
சில கருத்துக்களை பரிமாற்றம் செய்துகொண்டோம்.
அதன் விளைவு  இந்தப்  பதிவு.




சர்க்கரை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளாகக் 
கொடுக்கப் பட்ட அட்டவணை.
பார்த்தாலே மயக்கம் வரும். அரிசியே கூடாது.
கோதுமை ரவைதான் சாப்பாடு. ,என்றெல்லாம் பயமுறுத்தி இப்பொழுது 
பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 
சமவிகித உணவுக்கு வந்திருக்கிறார்கள்.

பரம்பரையாக வரும் வியாதி என்று பார்த்தால் 
பாட்டிக்கு இருந்திருக்கிறது.
பெற்றோருக்குக் கிடையாது. என் சகோதரர்களுக்கு இல்லை
என்னை மட்டும் ஏன் பிடித்தது என்று தெரியவில்லை.
அதுவும் இன்ஷுரன்சுக்காகப் பரிசோதனை செய்யப்
 போகும்போது காலை பதினோரு மணிக்கு எடுக்கப்பட்ட 
ரத்தத்தில் இருந்த அளவு 400.

தலைசுற்றி விழலியா நீங்க என்றபடி என்னைப் 
பார்த்தார் மருத்துவர். ஏதாவது சாப்பிட்டுவிட்டு
வருகிறேன் என்று வெளியே வந்தேன்.
குடும்ப மருத்துவரைப் பார்த்த பிறகு மருந்துகள்
எழுதித் தந்தார்.
தினம் நடக்கச் சொன்னார்.
கடற்கரைக்குச் சென்றால் தெரிகிறது...நம்மை மாதிரி
ஆயிரக்கணக்கில் வெவ்வேறு நோய்கள், உடல் நலம்
பேண  என்று நடந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள்.

இது 2004 இல்.
எங்கள் குடும்ப மருத்துவர் ,குடும்ப நிகழ்ச்சிகளைப்
பார்த்துக் கவனம் செலுத்துவார்.
சின்ன தம்பி திடீரென இறைவனடி அடைந்ததுதும்
என்னை அறியாமல் உடல் பாதிக்கப் பட்டது
என்று அவர் சொன்ன கணிப்பு.
82 வயதில் அந்த முதியவர் ஆதரவாகப் பேசிய போது
மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்தது.
சர்க்கரை அளவு மாத்திரை அளவும் குறைந்தது.

இதுதான் காரணம் என்று அறுதியிட்டு 
சொல்ல முடியவில்லை.
என் மாமியாருக்கும்,அவரது தந்தைக்கும்
டயபெடிஸ் இருந்தது.
ஆனால் என் கணவருக்கோ அவரது சகோதரிகளுக்கோ
 பாதிப்பில்லை.
இது என்ன மாதிரி நடக்கிறது என்று புரியவில்லை.
இப்போது எங்கள் மக்கள் எதிலும் சர்க்கரை சேர்ப்பதில்லை.
சேர்த்தாலும் கரும்பு சர்க்கரையே
உபயோகப் படுத்துகிறார்கள்.
இறைவன் எதிர்கால சந்ததிகளைக் காக்க வேண்டும்.

உணவு பழக்க வழக்கங்களுக்கும் இந்தப் பாதிப்புக்கும் 
என்ன சம்பந்தம் என்று புரிவது கடினம்.
காப்பிக்கோ டீக்கோ 4 தேக்கரண்டி சர்க்கரை
எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
அந்த அத்தைக்கெல்லாம் நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும்
இருந்தது:)

நானும் இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அனைவரும் நலமாக இருக்க என் பிரார்த்தனைகள்.

Saturday, September 19, 2020

சீர் மிகும் பாடல்கள் சில

வல்லிசிம்ஹன்
65 வருடங்களுக்கு முன்பு வந்த படங்கள் ,சமூக சீர்திருத்தம்,
பொதுவுடமை தத்துவங்களை முன்னிறுத்தி

விவசாயிகளின் ஏற்றம், அவர்களுக்கு வரும் துன்பம்
அதைப் போக்க முயற்சிக்கும் கதை
என்று வளமாக  நிலைமையைச் சித்தரித்தன.
SSR,MGR, SIVAJI GANESAN,GEMINI 
தமிழிலும் ,மற்ற மொழிப்படங்களில் நாகேஸ்வரராவ், கல்யாண்குமார்
அனைவரும்
உணர்ந்து நடித்தனர்.

அடிக்கடி படங்கள் திரைக்கு வராத நிலையில் எல்லாப்
படங்களுமே பேசப்பட்டன. பார்க்கப் பட்டன.
ரசிக்கப் பட்டன.
சற்றே நீளமான படங்கள் தான்.:)

சேர்ந்து நடித்த நடிகைகளும் நல்லபடியாகத் திறமையாக
நடித்தது போலத்தான் விமரிசனங்கள் வந்தன.

மொத்தத்தில்.....கதை, சில மோதல்கள், சில காதல்கள்
நல்ல இசை கொடுக்க கே வி. மஹாதேவன், மெல்லிசை மன்னர்கள்,
என்று ஜனரஞ்சகமான இசைப் பதிவுகளை
வழங்கிய லாவகத்தை மெச்சும்படி வழங்கினார்கள்.

அந்த வரிசையில் பொருளும்,ரசனையும்,இசையும் மிக மிக ரசிக்க வைக்கும்.
நன்றி.






Friday, September 18, 2020

வண்ணக்கிளி படமும் பாடலும்

வல்லிசிம்ஹன்வண்ணக்கிளி படப் பாடல்கள்
அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
இங்கே கொடுத்திருக்கும் பாடல்களைத் தவிர
''அடிக்கிற கைதான் அணைக்கும்"

''வண்டி உருண்டோட அச்சாணி தேவை''
''சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா''

எல்லாமே மிகப் பேசப்பட்டவை பாடப்
பட்டவை.
மனோஹர் அவர்களின் நடிப்பு மிகச் சிறப்பு.
அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கும்
பி எஸ்.சரோஜா, மற்றும் அந்தக் குட்டிப்
பெண் உமா, மைனாவதி ,ப்ரேம் நசீர் என்று
நல்ல நடிகர்கள். பண்ணையார், வண்டிக்காரன், 
கொள்ளைக்காரன் என்று நடக்கும் கதை.
நான் அப்போது விரும்பிப் பார்த்த படம்.


Thursday, September 17, 2020

கதவுகள் சொல்லும் கதைகள் 2

அந்த நாள்.
2010


2008

பழைய Gate
வல்லிசிம்ஹன்

எங்கள் வீட்டு 56" மின் விசிறி

பழைய கூடம் 2007
புதிய கதவும், நிலைப் படியும் மார்கழி காலை





புதிய அறை.
 பெண்ணும், பசங்களும் கல்லூரி  சேர்ந்தவுடன்,
அவரவர்க்கு வீட்டு சாவி கொடுக்கப்பட்டது. 
ஆட்டோமாடிக் பூட்டு என்பதால் 
அவ்வளவு பயம் இல்லை.

பிறகு பெண் திருமணம், சில நாட்கள் கழித்து எங்கள் அமெரிக்கப்
பயணம் என்று கிளம்பும் நாட்களில்
பையர்களும் வெளி நாடு களுக்குச் சென்று விட்டார்கள்.

புது அறை கட்டும் திட்டம் எனக்கு வெகு நாட்களாக இருந்த ஆசை.

வெளிக்கதவுக்கு இரும்புக் கிராதிகள் போட்டும்
மனம் சமாதானம் அடையவில்லை.

வெளியே பேருந்துகளில் போகிறவர்கள்
உள்ளே நடப்பதை அறிவதை என் உறவினர்கள்
சொல்வதைக் கேட்டு தெரிந்து கொண்டோம்.
இப்போது வாசலில் வண்டிகள் நிறுத்தி ரிப்பேர் பார்ப்பதெல்லாம் நிறுத்தி
ஆகிவிட்டது.
ஷஷ்டி அப்த பூர்த்தி நடந்ததும்
போட்ட திட்டம்,2008இல் தான் நடந்தது.
வாசல் வராந்தாவையும் ,பக்கத்தில் இருந்த
வண்டிகள் நிறுத்தும் இடத்தையும் சேர்த்து ''ட'' வடிவத்தில்
சுற்றுச் சுவர் அமைத்த போது 
வரவேற்பறை அமைந்தது.
கூடத்தை மூன்று பக்கமும் கண்ணாடிக் கதவுகளை அமைத்து
மூன்று மாதங்கள் ஆயிற்று மொத்த வேலையும் முடிய.
முன்பு கதவு இருந்த இடத்தில் ஜன்னல் வந்தது.

அங்கிருந்த கதவைப் புது நிலை ஏற்படுத்தி அங்கே இந்தக் கதவையும்
க்ரில் Gate ஐயும்  போட்டாகி விட்டது.
புதுப் பேரக் குழந்தைகள் வந்து விளையாட நல்ல இடம்
கிடைத்தது. வீடியோ  ஒன்று இருக்கிறது. குழந்தைகள் இருப்பதால் 
அதை இங்கே பதிய முடியவில்லை.
புதிய அறையில்  நவராத்திரி நாட்கள் நிறைவாக நடந்தன.

புத்தகங்களை அடுக்கி வைக்க ஒரு நல்ல இரும்பு அலமாரி
அமைந்தது. அருள்மிகு ஸ்ரீ ராகவேந்த்ரர் படமும்
அழகாக மாட்ட முடிந்தது.
இன்வர்ட்டர், மற்றும் இவர் செய்த மரத்தால் யானை நீர் ஊற்று.
ஒரிரு இருக்கைகள் போட்டதும்
அமைப்பாக இருந்தது.
பல நினைவுகளை வரவழைத்த பதிவு, கொஞ்சம்
வருத்தங்களையும் கொடுப்பதால்
நல்ல நினைவுடன் பூர்த்தி செய்கிறேன்.
நெடு நாள் ஆசையாக இருந்த கூடை ஊஞ்சலையும் அங்கே
போட்டிருக்கிறோம்:)

Wednesday, September 16, 2020

நீயே உனக்கு என்றும் நிகரானவன்.

வல்லிசிம்ஹன்


 ஜெமினி சாவித்ரி காதலை விட ,
திரு எம். ஆர். ராதாவின் 
நறுக்குப் பேச்சுகள் இன்னும் சுவை இந்தப் படத்தில்;0)

பலே பாண்டியா கேட்கவே வேண்டாம்.

Tuesday, September 15, 2020

பண்ணும் பாடலும் கலந்த பழைய இசை

வல்லிசிம்ஹன்



எக்ஸ்கர்ஷன்!! 1958?
திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு.

ஆளுக்கு இரண்டு ரூபாய் பெரிய டீச்சரிடம் கொடுத்துவிட்டு
ரயிலில் மதுரை போன நினைவு.

பாசஞ்சர் ரயில் மதுரை செல்ல ஒரு மணியோ
ஒன்றரை மணியோ.
இறங்கினதும் அம்மா கொடுத்த இட்லி 
காலி செய்தாச்சு.

ரயில் நிலையத்தில் இருந்து நடந்தே நாயக்கர் மஹால்.
இரண்டிரண்டு பேராகத் தூண்களை அளந்த நினைவு.
 பிறகு நடந்தே ஏதோ ஒரு மியூசியம் போன நினைவு.
மீண்டும் ரயிலேறி திருப்பரங்குன்றம் வந்தோம்.
மலையேறி முருகனைத் தரிசித்துவிட்டு
வரும்போது ஒலி பெருக்கியில் கேட்டது
புதையல் படப் பாடல்கள்.
கேட்டதும்  மன ஓரத்தில்.
வம்டியில் ஏறியதும் திருமங்கலம் வரும் வரை பாடிய பாடல்களில் ஒன்று காவேரிதான் சிங்காரி.
ரயில் தாளத்திற்கு ஏற்ப கைகள் தட்டிப் பாடிய
பாடல்.நல்ல நினைவுகளுக்கு நன்றி.

Monday, September 14, 2020

கதவின் பின்....1

வல்லிசிம்ஹன்
இது எங்கள் வீட்டுக் கதவு டிசைன். 
அமைத்தவர் சிங்கம்.

வாழ்க்கையில் புறக்கதவுகளும்
அகக் கதவுகளும் எப்போதும் ஆக்கிரமிக்கின்றன
மனதை.

எப்பொழுதுமே திறந்திருக்கும் எங்கள் வீட்டுக்கதவு 
40 வருடங்களுக்கு முன்னால்.
வருபவர்களும் இருப்பவர்களும் செல்பவர்களும்
அதிகம். சுமார் இரவு 8 மணிக்கு கதவு சார்த்தப் படும். ஏனெனில் அதுவே
பாட்டி படுக்கப் போகும் நேரம்.

அவருக்கு எங்கள் எச்சரிக்கை உணர்வின் மேல் அத்தனை நம்பிக்கை
கிடையாது.
தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தால்
பின் வாசல் கதவை மூடியே ஆக வேண்டும்.
தான் உறங்கச் செல்லும் போது
வாயில் கேட் பூட்டப் படவேண்டும்.
உள் கதவு தாழ்ப்பாள் போடப் படவேண்டும்.
அப்போதோ ஏசி வசதி எல்லாம் கிடையாது.

ஒரே புழுக்கம் ஆரம்பிக்கும்.எங்கள் வீட்டின் மின் விசிறிகள் பழங்காலத்தவை.
அவற்றைப் போன்ற விசாலமான
காற்றை வீசி வழங்கக் கூடிய விசிறிகளை இப்போது காண முடியாது.
பெரியவர்களின் மனம் போல
அவையும் பெரிதாக இருந்தன.

அதை இயக்கிவிட்டால் கூடம் எங்கும்
காற்று சலசலக்கும்.
அந்த இரவு நேரத்தில் குழந்தைகள் படிப்பை 
முடித்துவிட்டு சாப்பிட வருவார்கள்.

அனைவரும் அமர்ந்து ஒரு ரசம், ஒரு பொரியல் 
என்று சாப்பிட்டு எழுந்திருப்போம்.
தோசை மாவு இருக்கும் நாட்கள் கொண்டாட்டம் தான்.
மகள் கை கொடுப்பாள்.
மகன் கூட  முயற்சிப்பான்.

கதவுக்குத் திரும்புவோம். அப்போது இந்த நாட்கள் போல
திருட்டு பயம் அவ்வளவு இல்லை.
நிம்மதியாக உறங்கினோம்.
பாட்டி மறைந்து ,மாமியாரும் மறைந்த பிறகு
நான் தனியாக இருக்க வேண்டி வந்தது.
வெளியே சென்றவர்கள் திரும்பும் வரை
கதவுகள் சார்த்தியே  இருக்கும்.கடைக்கோ, பிறந்த வீட்டுக்கோ சென்றால்
கதவுகளைப் பூட்ட அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள
 வேண்டி இருந்தது.

Wednesday, September 09, 2020

திருமதி சாந்தி ரங்கநாதன் ,மதுப் பழக்கத்திலிருந்து விடுதலை வாங்கித் தருபவர்

வல்லிசிம்ஹன்
அனைவரும்  நலம் பெற  பிரார்த்தனைகள்.

திருமதி 
சாந்தி ரங்கநாதன்

 T.T R  Foundation.TTK Hospital (T.T. Ranganathan Clinical Research Foundation)
முதலில் ஒரு அருமையான மனுஷி.

என் மாமனாரும் இவரது மாமனாரும்  சினேகிதர்கள்.
இவர்கள் வீட்டில் அனைவரும்  மாமியாருக்கும் அறிமுகமானவர்கள்.
சாந்தி அவ்ர்களின் கணவர் குடிப் பழக்கத்தால்
சிறு வயதிலேயே பாதிக்கப் பட்டு
அமெரிக்காவில் சிகித்சை மேற்கொண்டும்
பயனில்லாமல் உயிர் இழந்தது மிகப் பெரிய சோகம்.

நான் இவரை முதன் முதலில் ஒரு தோழியின் கணவருக்காகச் சந்தித்தேன்.
1981 ஆரம்பம் என்று நினைவு.
அந்த முகத்தைப் பார்த்ததுமே தோழியை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை
வந்தது.
அவ்வளவு அமைதியான முகம்.
அதிராத குரல்.

மியூசிக் அகாடமியின் எதிர்த்தாற்போல் அப்போது இருந்த
வீட்டின் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய கூடத்தில் 
குடிப் பழக்கம் உள்ளவர்களையும் ,அவரது குடும்பங்களையும்
சந்தித்துத் தீர்வுகள் சொல்லத் தொடங்கினார்.

ஒரு புத்த சன்னியாசினி போலத் தெளிந்த ஆனால்
சோகம் படிந்த முகம். உலகையே காக்க வேண்டும் என்கிற தீர்மானம்.
எங்கள் எல்லோருக்கும் தன் தொலைபேசி நம்பரைக் கொடுத்து
எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கச் சொன்ன
தைரியம்.

முதலில் அவரைக் கண்டதும் அழுதுவிட்ட தோழியை
தோளில் தட்டி
சரிப்படுத்தலாம் பொறுமையாய் இருங்கள்
என்ற பாந்தம்.
அங்கிருந்து வெளி வந்த போது தோழியின் இறுக்கம்
கொஞ்சம் குறைந்திருந்தது.  பங்களூரில் இருந்தவர்கள். செழிப்புக்குக் குறைவில்லை
அவர்களுக்கு தினம் மது அருந்துவது 
அளவோடு அருந்துவது வழக்கம்.
எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்த போது
வந்தது சிரமம். 
கணவருக்கு மட்டும் இல்லை. தோழியின் தம்பிக்கும் சேர்ந்துதான்.
 சட்டென்று எடை குறையத் தொடங்கியதும்
சென்னை வந்து பரிசோதனை செய்தததில்
மதுவை நிறுத்த வேண்டிய கட்டம்.


முதலில் செண்டருக்கு வர மறுத்த  தோழியின் 
கணவருக்கு ஒரு நல்ல தோழராக என் கணவர்
சேர இருவருமாக திருமதி ஷாந்தியைச் சந்திக்க
 பிறகு ஒரு மருத்துவரிடம் உடல் பரிஸோதனை செய்ய ஒப்புக் கொண்டு,
அவர்கள் சொன்ன மருத்துவமனையில்
அனுமதிக்கப் 
பட்டு வெளிவந்த மனிதர் வெகு நாட்களுக்குப் 
பிறகு தெளிவாக இருந்தார்.
தோழிக்குச் சொல்ல முடியாத ஆனந்தம்.

அப்போதுதான் எழுத்தாளர் சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை வந்து கொண்டிருந்தது.
எழுத்தாளரும்,
குடிப் பழக்கத்தில் இருப்பவர்களைக் கண்டு
உரையாடினார்.

குடும்பத்துக்காக தனி கவுன்சிலிங்க் செய்யப் பட்ட போது நானும் இணைந்து கொண்டேன்.
எத்தனையோ நல்ல செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஷாந்தி அம்மா, பெருகும் பிரச்சினை சமாளிக்க இந்திரா நகரில் 
பெரிய மருத்துவமனையைக் கட்டினார்,.
நாளுக்கு நாள் அங்கே தீர்வு காண வந்தவர்கள் அதிகரிக்க
மருத்துவர்கள் ,சைக்காலஜிஸ்ட்கள்  எல்லோரும் வந்து சேர்ந்தன.

திறம்பட நிர்வகிக்கத் தொடங்கினார் ஷாந்தி.
அவர் எப்பொழுதும் சொல்வது.
குடிப்பது ஒரு வியாதி. 
டபடிஸ், இதய நோய் 
போல, சரியான முறையில் அணுகினால் வெற்றி பெறலாம் என்பதே.

அது நிஜமாகவும் தோழி வாழ்க்கையில் நடந்தது.
அவர் மது உண்ணுவதை நிறுத்தி
40 வருடங்கள் ஆயிற்று.
பேரன் பேத்திகளோடு திடமாக இருக்கிறார்.
தன்னால் முடிந்த சமூக சேவைகள் பண உதவிகள் செய்து
வருகிறார்.








குடிப்பழக்கத்துக்கு அடிமையானோரை மீட்கும் மருத்துவமனையை 1980 இல் இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னையில் தொடங்கியவர்.
சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து 
பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவர்.

கணவனின் பழக்கட்தைத் திருத்த அமெரிக்கா சென்ற போது
பல செய்திகளைத் தெரிந்து கொண்டாலும்
சிகித்சை அளித்தும்,
இந்தியா வந்த பிறகு, நிலைமை மோசமடைந்து
 தன் இளமை வயதில் 
கணவரை இழந்தார்.

அவரது குடும்பமும் முற்போக்கு சிந்தனைகள் கொண்டது.
அயர்ந்து உட்கார்ந்து வருத்தத்தில் கழிக்க
விடவில்லை அவரது உள்ளக்கனல்.
மீண்டும் அமெரிக்கா சென்று சமூகவியலில்
, மக்களுக்கு உதவி செய்யும் சமூக முன்னேற்றத்துக்கான 
பாடவியலைக் கற்றார்.
அதில் குடிப்பழக்கத்தை நிறுத்துவது 
பற்றியும் அதன் விளைவுகளையும் பட்டப் படிப்பாகப்
படித்து வந்தார்.

சிறிது சிறிதாக சிவசங்கரி அவர்களின் நாவல் மூலம் செய்தி பரவ ஆரம்பித்தது.
என்னையும் என் தோழியையும் வந்தடைந்தது.

இரண்டு வருடங்கள் விடா முயற்சியுடன்,அந்தப் புது வாழ்க்கை முறையைக் கற்றாள்
தோழி.
துணைக்கு நானும் அவளுடன் சென்றேன்.
நிறைய பாதிக்கப் பட்ட மனைவிகளுடன் பழகும் வாய்ப்பும்
குடிப்பழக்கத்திலிருந்து திரும்ப அடி யெடுத்து வைக்கும்
 பாவப்பட்ட மனிதர்களையும் சந்தித்து அவர்கள் 
சிந்தனைகளை அறிய முடிந்தது.

 40 வருடங்களுக்கு முன நடந்த சம்பவம்.
இன்றும் நல்ல படியாக இயங்கி வரும் தொண்டு ஸ்தாபனம்.
ஒரு பாதிக்கப் பட்ட நற்குண மங்கை
இன்னும் பல ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்றி வைக்கிறார்.
வாழ்க ஷாந்தி ரங்க நாதன்.




இனி நம் ஷாந்தியைப் பற்றி.

தமிழக அரசின் 2015-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது பெற்றவர்

1982இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது.
ஐ. நா. விருது 

Tuesday, September 08, 2020

நடிகை திருமதி.பானுமதியின் சில பாடல்கள்.


வல்லிசிம்ஹன்இனிமை, நடிப்பு, கண்டிப்பு எல்லாம் கொடுக்கவல்ல
முகபாவம் ,
அஷ்டாவதானியாகப் பரிமளித்த பானுமதி அம்மா நினைவில்.



Sunday, September 06, 2020

எம்.எல் வி அம்மாவின் தாய் உள்ளம் பாடல்கள்

வல்லிசிம்ஹன்
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/ZfEuOdBgVn8" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>



ஓமப் பொட்டணம்

வல்லிசிம்ஹன்   

pdk04sidhaomam_0409chn_12_4

ஓமப்பொட்டணத்தைக் காட்டி விவரிக்கும் சித்த மருத்துவா்கள்.

நன்றி தினமணி.


புதுக்கோட்டை: கரோனா தீநுண்மியின் பாதிப்பால் இழந்த வாசனை முகரும் திறனை மீட்டெடுக்கும் அற்புத மருந்தாக ஓமப் பொட்டணத்தை சித்த மருத்துவா்கள் வழங்கி வருகின்றனா்.

கரோனா தாக்குதலில் குறிப்பிடத்தக்க முக்கியமான அறிகுறி மூக்கின் முகரும் திறனும்ம், நாக்கின் சுவை அறியும் திறனும் மட்டுப்படுதல். கரோனா தாக்குதலுக்குள்ளான 80 சதவிகிதம் போ் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லாதோா் என்றாலும், பெரும்பாலானோருக்கு வாசனை அறியும் முகரும் திறன் மட்டுப்பட்டிருக்கிறது.

சிகிச்சைக்குப் பிறகு கரோனா தொற்று இல்லையென மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்து வீடு திரும்பிய பலருக்கும் மூக்கின் முகரும் திறன் மீளவில்லை என்ற கவலை பலரிடமும் பரவலாகக் காணப்படுகிறது.

கரோனாவுக்கான சித்த மருத்துவச் சிகிச்சை மையங்களில் இந்தத் திறனை மீட்டெடுப்பதற்காக ஓமப் பொட்டணம் வழங்கி அதை அடிக்கடி முகா்ந்து வாசனைப் பிடிக்கச் சொல்கிறாா்கள். தொடா்ந்து 5 நாள்கள் இவ்வாறு முகா்ந்து ஓமப் பொட்டணத்தின் வாசனை பிடித்தவா்களுக்கு மூக்கின் முகரும் திறன் மீட்டெடுக்கப்படுகிறது.

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கரோனா தொற்றாளா்களுக்கான சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் டாக்டா் உம்மல் ஜதிஜா, பொறுப்பு அலுவலா் மாமுண்டி தலைமைலான குழுவினா் ஓமப் பொட்டணத்தை தொடக்கம் முதலே வழங்கி வருகின்றனா்.

மூத்த சித்த மருத்துவ அலுவலா் சுந்தரேஸ்வரி தனது சொந்தப் பொறுப்பில் இந்தப் பொட்டணத்தை தயாரித்து வழங்கி வருகிறாா்.

கடந்த ஆக. 7ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மையத்தில் வெள்ளிக்கிழமை வரை 261 கரோனா தொற்றாளா்கள் அனுமதிக்கப்பட்டு 216 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோருக்கு வாசனை முகரும் திறனை ஓமப்பொட்டணத்தை முகரச் செய்து மீட்டெடுத்துள்ளனா்.

இதுகுறித்து தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட தொற்றாளா் கீதா பழனியப்பன் கூறியது:

வங்கியில் பணிபுரிந்து வரும் எனக்கு கரோனா ஏற்பட்டு விருப்பத்தின்பேரில் சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் சோ்ந்தேன். வரும்போதே எனக்கு முகரும் திறன் இல்லை. இங்கு வழங்கப்பட்ட ஓமப்பொட்டணத்தைத் தொடா்ந்து பயன்படுத்தியதால் வீடு திரும்பும் முன்பே முகரும் திறன் மீண்டுள்ளது என்றாா்.

ஓமப் பொட்டணம் குறித்து சித்த மருத்துவா் சுயமரியாதை கூறியது:

சித்த மருத்துவத்திலுள்ள 32 புற மருந்துகளில் ஒன்றுதான் ஓமப் பொட்டணம். அரை கிலோ ஓமத்தை, ஒரு கவுளி (100) வெற்றிலையை அரைத்துப் பிழிந்த சாற்றில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு, நிழலில் காய வைத்து 50 கிராம் கிராம்பு, 25 கிராம் பச்சைக் கற்பூரம் சோ்த்து ஓமத்தை அரைக்க வேண்டும். இந்தப் பொடியை 5 கிராம் அளவில் துணியில் முடிந்து வைத்துக் கொண்டால் ஓமப் பொட்டணம் தயாா்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்தப் பொட்டணத்தை மூக்கில் வைத்து முகா்ந்தால் மிகச்சில நாள்களில் முகரும் திறன் மீட்கப்படும். சுவாசப் பாதையிலுள்ள கோளாறுகள், அடைப்புகள் சீரடைவதுடன் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவும் சீரடையும் என்பது இந்தப் பொட்டணத்தின் சிறப்பு என்றாா் சுயமரியாதை.

மாநிலத்தின் பல இடங்களிலும் உள்ள சித்த மருத்துவச் சிகிச்சை மையங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini வானொலிக்கு கொடுத்த முதல் பேட்டியை இன்று வரை ஒலிபரப்பவில்லை! - Mr....

வல்லிசிம்ஹன்

Saturday, September 05, 2020

வாகன யோகம்.


வல்லிசிம்ஹன்
            Norton Bikeசிங்கத்தின் உபயோகத்தில் கொஞ்ச நாட்கள் இருந்தது.
(●'◡'●)👩
 வாழ்க்கையில்....... நம் கால்களுக்கு நடை வந்த
பிறகு  ஒரே ஓட்டம் தான். பள்ளிக்குச் சென்றது முதல் எல்லா இடங்களுக்கும் நடைதான் .
நாங்கள்  இருந்த இடங்கள் அது மாதிரி.
டவுன் பஸ்கள் வராத காலம்.
நடைக்கு  அஞ்ச மாட்டோம். 
மதுரையிலிருந்து  சித்தப்பா வரும் நாட்கள்  அவரது அலுவலக 
ஜீப்பில்   வந்துவிடுவார்.  எங்களுக்கெல்லாம் 
திருமங்கலம்  டவுனை விட்டு வெளியே சென்று சுற்றிக் காட்டுவார்.
ஆனந்த நாட்கள் அவை.

தாத்தா,பாட்டி, சித்தப்பா குடும்பம்,எங்கள் குடும்பம் 
மொத்தம் 10  நபர்கள் பயணம் செய்த நாட்கள் மதுரை யிலிருந்து கிளம்பி 
திருநெல்வேலி,திருக்குறுங்குடி,ஸ்ரீவைகுண்டம்,
நாங்குநேரி,திருச்செந்தூர்,கன்யாகுமரி, குருவாயூர் 
என்று சுற்றுலா  செல்ல மிக சுகமாக அமைந்த  ஒரு வாகனம்.


பாட்டி எங்களுடன் தங்கிய வருடங்களில்
அவரை மதுரை அழைத்துச் செல்ல,
 மீண்டும் கொண்டுவந்து விட 

வந்து போகும் இந்த வண்டி
எங்கள் சொர்க்க உலகமாக இருந்தது.

  FIAT 1100   

திருமணம் முடிந்த பிறகு, இரண்டு சக்கர வாகனங்கள்
யோகம் ஆரம்பம்.முதல் படத்தில் இருக்கும் ''நார்ட்டன்''பைக்
  ஒரு நண்பருடையது. அவர் மேல் படிப்புக்காக
வெளி நாடு செல்ல, எங்கள் வீட்டில் இதை ஒப்படைக்க

புதுக்கோட்டை சாலைகள் எங்களுக்கு சொந்தமானது.
சேலம் சென்றதும் தட தட புல்லட் வண்டி 
சொந்தமானது. முதலில் இருவர், பிறகு மூவர்,
அதற்கப்புறம் நால்வர் என்று பயணித்தோம்.
நாங்கள் அங்கு இல்லாத சமயம் 
இந்த புல்லட் சத்தம் மதுரை, காரைக்குடி என்று
பயணம் வந்தது.
கோவை வந்த பிறகு ஐந்து பேரும் சென்றோம்.

கோவை தடாகம் ரோடில் இந்த புல்லட்டின் சத்தம் எங்கோ ஒலிக்கும் போதே பெரியவன் கண்டுபிடித்துவிடுவான்.
ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து கைகளை நீட்டுவான்.
அந்த இருட்டு வேளையில் எப்படித்தான் அறிவானோ.
வண்டி வந்து போர்ட்டிகோவில் நின்றதும்,
''அப்பா...நான் கை காட்டினேனே  நீ பாத்தியா?''
என்றதும், ''அதனால் தான் நான் பத்திரமா வந்தேன்''
 என்று சிங்கம் சொல்வதும்
வழக்கமான டயலாக்.!!

திருச்சிக்கு மாற்றலானதும் வாங்கிய வண்டி ஃபியட் 1100.

எங்கள் செல்ல வண்டியாக  சென்னை, மதுரை, சமயபுரம், ஸ்ரீரங்கம் என்று வலம் வந்தது.


மீண்டும் பார்க்கலாம்......

Friday, September 04, 2020

வில்லன் முதல் நகைச்சுவை வரை T S Balaiah பயணம் | #Balaiah | #TSBalaiah | ...

வல்லிசிம்ஹன்
 நம் பாலையா.என்றும் வாழ்க அவர் நாமம்.தூக்குத் தூக்கி ஸேட் துக்காராம் விட்டுப் போச்சே.

venkatesh bhat makes keerai vadai | tasty snacks | keerai vadai recipe i...

வல்லிசிம்ஹன்
விருப்பம். குடும்பத்தில் அனைவரும் ரசித்து ருசிப்பது.

Thursday, September 03, 2020

இன்று வந்த நிலா

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, September 01, 2020

நாடியை நாடி....4

Nainamalai Sri Varadharaja perumal Temple - Posts | Facebook
  வல்லிசிம்ஹன்

நாடியை நாடி....4

சின்னக் காஞ்சீபுரம் என்றழைக்கப் படும் 
இடம் .அருள்மிகு வரதராஜர் கோயில் மதிலை ஒட்டிச் சிறிது தூரம் சென்றால் வரும் பெரியார்
நகர் எனும் பலகை.
அதில் அகத்திய நாடியில் மூன்று வாரங்கள் 
போய் வந்தாச்சு.

முன் ஜன்ம பலங்களை காசெட்டில் பதிவு செய்து கொடுத்துவிட்டார்கள்.
நோட்டுப் புத்தகத்திலும் இருக்கிறது.

எனக்கு மனம் சமாதானமாகவே இரண்டு நாட்களானது.
தூங்கப் போகும் போது கண்ணீர் வரும்.
இப்படி இருந்திருப்போமா என்ற சந்தேகம்.
மன சஞ்சலத்தை மூட்டைகட்ட நல்ல புத்தகங்களைப்
படிக்க ஆரம்பித்தேன்.
இவர் எப்போதும் போல கருமமே கண்ணாயினார்.
அடுத்த புதன் இரவு,
'' நாம் நாளைக்கு அங்கே போக வேண்டுமா.
மனசு சரியில்லை என்றால் விட்டுவிடு''
என்றார்.
இல்லை, ஆரம்பித்தாச்சு முடித்துவிடலாம்''
என்று சொல்லி விட்டேன்.

மீண்டும் பயணம்.
''தெளிவாக இரு. இது ஒரு வழிகாட்டல் மட்டுமே.
உன்னை நீயே ஜட்ஜ் செய்து, துன்பப் படுத்திக்
கொள்ளாதே என்று ஆதரவு சொன்னார்.
அப்படியே ஏற்றுக் கொண்டேன்.
இந்தத்தடவை கோவிலுக்குச் சென்று விட்டே அங்கே போனோம்.

இவருக்கான சுவடியில் திருவண்ணாமலை சென்று
அவர் வயதுக்கான எண்ணெய் தீபங்களை ஏற்ற
சொன்னார்கள். முதல் தடவையாக அண்ணாமலை ஈசரைத் தரிசித்தது
மிக்க மகிழ்ச்சி கொடுத்தது.
மனம் தெளிவானது.
எதிர்கால செய்திகள் என்று அவர்கள் குறித்தது எனக்கு வரக்கூடிய சில தொந்தரவுகளையும்
அவருக்கு ஏற்படக் கூடிய கபம் வழியான சங்கடங்களும் தான்.
எல்லாவற்றையும் வென்று விடுவீர்கள் என்றனர்.
நான் தான் சரியாகப் படிக்கவில்லையோ,
இல்லை ஈசன் கிருபை வேறாக இருந்ததோ.

குழந்தைகளைப் பொறுத்த வரை
 மகள் திருமணம்
சொன்னது போல நடந்தது. முருக பெருமான் சன்னிதியில் பாலபிஷேகம்
சொல்லி இருந்தார்கள்.
1993இல் மதுரை சென்று திருப்பரங்குன்றத்திலும்,
பழமுதிர்ச்சோலையிலும் பாலபிஷேகம் செய்து வந்தோம்.
எல்லாம் அவன் அருள்.

பிள்ளைகளைப் பொறுத்தவரையில் 
தாமதமாகும் என்றார்கள். அதற்குள் அவர்கள் வெளி தேசம் சென்றதால், தாமதமாகத்தான் செய்தது.
நடுவில் இராமேஸ்வரம் சென்று பித்ரு கடன்
செய்துவிட்டு வந்தோம். உடனே
இறைவன் அருளில் திருமணங்களும்  கூடி வந்தன.

பிறகு   நாடி பார்க்க அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.

நாடி பார்க்க எங்களுக்கு வழி காட்டிய நண்பருக்கும் 
வாழ்வில் சில சோதனைகள்.
இன்னும் பார்த்துக் கொள்வதாகக் கேள்விப்
பட்டேன்.
இப்போது எப்படி எல்லாம் மாறி இருக்கிறதோ.
சென்னையிலேயே பல இடங்களில் பலகைகள் 
பார்த்த நினைவு.
ஜோதிடம், நாடி, மாந்த்ரீகம் எல்லாம் 
பலர் வாழ்க்கையில் சோதனை நாட்களில்
உள்ளே வருவதைப் பார்க்கிறேன்.

நாடியைப் பற்றி என் அனுபவத்தைச் சொன்னேன்.
எல்லோருக்கும் எப்படி என்று தெரியவில்லை.
சில அல்லாதவர்கள் கைகளில் 
மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பணம் பறித்துப் பலவகையில் மோசம் செய்வதாகவும்
செய்தி.


நம் கடமைகளைப் பிழை இல்லாமல் செய்து,
மனதறிந்து யார்க்கும் துன்பம் இழைக்காமல், நற்சொற்கள் மட்டுமே
பேசி, தளர்வில்லாமல் 
நற்பாதையில் செல்லும் குணம் இருந்தால் போதும்.
இறைவன் காப்பான்.

BhUlOka Vaikuntam

வல்லிசிம்ஹன்

நாடியைத் தேடி சுவடி கண்டு.....3

வல்லிசிம்ஹன்
நாடியைத் தேடி சுவடி கண்டு.....3
+++++++++++++++++++++++++++++++++++++
நாங்கள் நாடியைப் பற்றிக் கேள்விப்பட்டு,
அந்த நண்பர் சொன்ன விலாசத்தில் 
சென்று, எங்களுக்குச் சம்பந்தப் பட்ட 
சுவடிகளைக் கண்டெடுத்து அவர் படித்தது
போன பதிவுகளில்.

அடுத்த வாரம் எங்கள் முன் ஜென்மம் பற்றிப் படித்தால்
இப்போது இருக்கும் பிரச்சினைகளுக்கு
வழி பிறக்கும் என்று சொன்னதும் எங்களுக்கும் அது நியாயமாகவே
பட்டது. ஏனென்று தெரியாமல் 
வாழ்வில் திடீரென்று நடக்கும் மாற்றங்களுக்குப்
பதில் தேட முனைந்தோம்.

அடுத்த வாரம் அதே வியாழக்கிழமை மீண்டும் நானும் கணவரும் அதிகாலை எழுந்து
சீக்கிரமே காஞ்சீபுரம் சென்றடைந்தோம்.
அகத்தியர் நாடி ஜோதிடம் அமைந்த வீட்டுக்கு சென்று
நாங்கள் கோவிலுக்குப் போய் தரிசனம் முடித்து வருவதாகச் சொல்லி விட்டு
அன்னை காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தோம்.
தெய்வ தரிசனம் எப்போதும் போல் மனதுக்கு உறுதி கொடுத்தது.

மீண்டும் நாடி நிலையத்துக்குச் சென்றபோது
அவர்கள் தயாராக இருந்தார்கள்.
.
முதலில் இவரது சுவடியை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்கள்.
அவர்கள் படித்தார்கள் என்று சொல்வதை விட இசையுடன்
பாடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.
எதிரே அகஸ்திய மாமுனியின் பெரிய படம். சிவ சக்தி ,கணபதி முருகன் என்று சேர்த்த
அழகான ஓவியம்.
கூடவே பெருமாள் தாயார்,கண்ணன் என்று ஒரு சுவர் முழுவதும்
தெய்வங்கள் ஆக்ரமித்து இருந்தார்கள்.


இவரது சுவடியின் சாரம்.
700 ஆண்டுகளுக்கு முன் கலிங்கத்து நாட்டில் இவர் அந்தணர் குடும்பத்தில்
பிறந்து மிகக் கஷ்டப் பட்டு முன்னேறி அரசாங்கத்தில்
பெரிய வேலையில் அமர்ந்து
சுகமாக இருந்ததாகவும்.
தன் பெற்றோரை அலட்சியப் படுத்தியதாலும்,
பிறகு திருந்தி அவர்களை நல்ல முறையில் கடையேற்றிதானகவும்
சொல்லி,
அந்தச் சில வருடப் பிழையே காரணமாக
இப்போது சில தடைகள் ஏற்படுவதாகவும்,
சில கோவில்கள் சென்று வந்தால்,
அங்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டால்  நிலைமை சீராகும் என்றும் படித்தார்கள்.

இவருக்கு என்னவென்று தெரியாத கோபம்,சங்கடம்.
ஓகே.மேல பார்க்கலாம் என்றார்.
அடுத்தது என் சுவடி.
பயமாக இருந்தது. அவர் படிக்கத் தொடங்கியதும்
சரி போ எல்லாம் அனுமானம் தானே என்று நினைத்தேன்.
அவர், நான் 500 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு வியாபாரக் குடும்பத்தில்
பிறந்து ,தனவந்தருக்கு வாழ்க்கைப் பட்டு,
கணவனை அவரது கடைசி காலத்தில்
சரியாகக் கவனிக்காமல், இருந்துவிட்டுப்
பிறகு அவருக்கு மருந்துகள் கொடுத்து அவரைத் தேற்றியதால்
இந்தப் பிறவியில் நல்ல பிறப்பை அடைந்திருப்பதாகவும்,
மக்களால் நல்வாழ்வு தொடரும் என்றும்,
ஏழு வாரங்கள் சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி
ஏழு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்றும் சொல்லி
முடித்தார். பரிகார சுவடிகள் பற்றி அடுத்த பதிவில்
சொல்கிறேன்.
இவரது ரியாக்ஷன் தான் சிரிப்பு வந்தது.
என்னாயா போன ஜன்மத்துல நம்மளைக்
கவனிக்கலியா நீ. அதுதான் இப்போ
நன்றாகக் கவனிக்கிறியா என்று கலாய்த்தார்.
எனக்குப் போன ஜன்மத்தில் கணவரை அலட்சியம் செய்தேன் என்பதே
அதிர்ச்சி!!!! மீண்டும் பார்க்கலாம்.
உலகில் அனைவரும் நோய் நொடி இல்லாமல்
சுகமாக இருக்க அன்னை காமாட்சி அருள்வாள்.Maangaadu Sri Kamakshi Amman - Hindupedia, the Hindu Encyclopedia