Blog Archive

Monday, August 31, 2020

Saturday, August 29, 2020

வலிமை தரும் பிரார்த்தனை

வல்லிசிம்ஹன்

இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்யும் போது
நம்மைச் சுற்றி இருக்கும் அத்தனை உயிர்களும்
அனுபவித்து
நன்மையை அடைகின்றன.
நம் கடமை அனைத்து உலகமும் நோயிலிருந்து விடுதலை
பெற வேண்டுவதே.
இந்த பிரார்த்தனைகளை அண்மையில் 
அருகில் இருக்கும் ஒரு அம்மாவுக்காகச் செய்து வந்தோம்.
அவரும் நல்ல நலம் பெற்றார்.

இன்னும் எத்தனையோ உயிர்கள் விடுபட வேண்டி இருக்கிறது.
தினமும் நம் பிரார்த்தனைகளில் 
அத்தனை நபர்களையும் இணைக்கலாம்.
நல்ல எண்ணமும், பிரார்த்தனைகளும்
நோயகன்ற உலகை உருவாக்கும்.
அவரவரின் குல தெய்வங்களை மனதில் நிறுத்தி
வேண்டிக் கொண்டால் எல்லா நன்மைகளும் 
துளிர்த்து  பிரம்மாண்ட விருக்ஷமாகி
நம் எல்லோரையும் காக்கும்.
வாழி நலன்.



உயிர் காப்பான் வேலன்.

வல்லிசிம்ஹன்





Tamil Movie Song Saadhanai Oh Vaanambaadi Unnai Naadi Ingu Thedi Y...

வல்லிசிம்ஹன்

Friday, August 28, 2020

நம்பினார் கெடுவதில்லை.

வல்லிசிம்ஹன் https://youtu.be/7XKgfD9yvMs


நீயே    கதி ஈஸ்வரி! https://youtu.be/b9jQfyNTEZ0

என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே.
என் அன்னையே உமையே!

Kottaiya Vittu - Vignesh, Padmashri - Chinna Thayee - Tamil Classic song

வல்லிசிம்ஹன்

Thursday, August 27, 2020

Naane Raja Naane Mandhiri | Super Hit Comedy | Vijayakanth | Goundamani ...

வல்லிசிம்ஹன்

கொஞ்சம் நிம்மதி.கொஞ்சம் சிரிப்பு.

Wednesday, August 26, 2020

நாடியைத் தேடி...2

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதே வாழ இறைவன் அருள்வான்.
----
----
சரவணபவனில் சாப்பாடு முடிந்தது.
மற்ற இத்யாதி வேலைகளை முடித்துக் கொண்டு,
எங்கள் பச்சை அழகி பத்மினி காரில் ஏறீ
மீண்டும் வரதராஜர் கோவில் மதிலுடன் பயணத்து
மனதில் நூறு கேள்விகளுடன் அகத்தியர் நாடிக்கு வந்தோம்.
சுத்தமாகப் பராமரிக்கப் பட்ட அந்தக் குடிலின் பந்தல் கீழ்
பென்சுகளில் இன்னும் நிறைய ஆட்கள் உட்கார்ந்திருந்தனர்.
அன்னிய நாட்டவர்களும் ,நெற்றியில் குங்கும விபூதியுடன் உட்கார்ந்திருந்தது 
அதிசயமாக இருந்தது,.
எங்களைக் கண்டதும்
உள்ளே இருந்த வந்த இளைஞர் ஐயா உங்களுக்காக
நாடி ஓலை படிக்கக்
காத்திருக்கிறார் உள்ளே வாருங்கள் என்று மிக மரியாதையாக
அழைத்துச் சென்றார்.

குளுமையான காற்று வீசிய ஒரு கூடத்தைத் தாண்டி
மாடிப்படிகளில் ஏறி மேலே வந்தோம்.
அங்கே இன்னோரு இளைஞர்
மேஜைக்கு அப்பால் உட்கார்ந்திருந்தார்.
அவர் பக்கத்தில் ஓலைச் சுவடிகளுடன் இன்னோருவர் 
இருந்தார்,.
என் கணவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு
நாடிபடிப்பது பற்றி சுருக்கமாகச் சொன்னார்.
பிறக்கும் உயிர்களுக்கெல்லாம் கிட்டத்தட்ட ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு
முன்பே ,ஜனன மரண ஓலைகள் உண்டு என்வும்.
ஏற்கனவே கணிக்கப் பட்டதைத்தான் தாங்கள் படிக்கப்
போவதாகவும்.
விளக்கினார். நான் பணம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு
நீங்கள் கேளுங்கள் , உங்களுக்கு சரி என்று தோன்றினால்
மேற்கொண்டு பார்க்கலாம் என்றார்.

முதலில் ஐயாவுக்கு சொல்கிறோம்.
அய்யா பெயரில் 4 ஏடுகள் எடுத்தோம்.
உங்களுக்கு எது பொருத்தம் என்று சொல்லுங்கள்.

நீங்க நாலாவது குழந்தையாக உங்கள் பெற்றோருக்குப் 
பிறந்தீர்களா என்றார்.
இவர் ஆமாம் என்று சொல்ல,
சட்டென்று அந்த ஓலையை ஒரு ராகத்தோடு 
அந்தப் பையன் படிக்க ஆரம்பித்தார்.
வைணவ குலத்தில் ,சுந்தரராஜன் ,கமலா தம்பதிக்குப்
பிறந்தவர்.  நான்கு சகோதரிகள்.
இரும்பு சம்பந்தமான தொழிலில் இருப்பவர்.
நல்ல உழைப்பாளி.
தங்கள் பெற்றோர் மறைந்துவிட்டனர்.
தங்களுக்கு மனைவியும் மூன்று வாரிசுகளும் 
இருக்கிறார்கள்.
என்று நிறுத்தினார்.
என்னால் படபடப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
இவர் ஆமாம் நீங்கள் சொல்வதெல்லாம் சரி 
என்றார்,. சிங்கம் ஷாக் ஆன முதல் கணம் அது.:)

இப்பொழுது உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்
என்றதும்,
என்னைப் பார்த்தார் சிங்கம். குழந்தைகள் எதிர்காலம்
தான் தெரிய வேண்டும் என்று சொன்னார்.
உடனே அவர் ,உங்கள் ஓலைப்படி
அவர்கள் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது.
முதல் பையன் வியாபார மேல்படிப்பைப் 
படித்து இப்போது இருக்கும் வேலையை விடப் பெரிய வேலைக்குச் சென்று
வெளி நாடும் செல்வார்,
மற்றவர்களுக்கும் நல்லதே நடக்கும்.
அதற்கு அவர்கள் கைரேகை வேண்டும் என்றாரே
பார்க்கணும்.

சரி அம்மா ஓலையைப் படிக்கிறேன்.
என்னை நோக்கி அம்மா உங்கள் பெயர் 
ர,ரா,ரே யில் ஆரம்பிக்குமா என்றார்.
நானும் தல அசைத்தேன்.
இரண்டு மூன்று ஓலைகளைத் தள்ளிவிட்டு
உங்கள் பெயர் ரேவதி.
நாராயணன் ஜெயலக்ஷ்மி என்ற உயர்ந்த
தம்பதியினரின் இரண்டாவது வாரிசு,
நற்குலத்தில் பிறந்து நற்குலத்தில் வாழ்க்கைப் 
பட்ட வயது 18. உங்களுக்குச் சில பல
உடல் நலக் குறைவு இருந்தாலும்
வாழ்வில் குறை இல்லை.
இன்னும் இரண்டு தம்பியர் இருக்கின்றனர்.
உங்கள் வீடு கடற்கரையை ஒட்டிய ஊரில்
கிழக்கு மேற்காக அமைந்த சாலையில் 
நடுவில் இருக்கிறது.
ஆரம்ப கணபதியும், அனுகூல வாயுகுமாரனும் குடி கொண்ட கோவில்கள்.
இரு பக்கமும். 
தெய்வ பலத்தால் உங்கள் கவலைகள் 
தீரும். இன்னும் 10 வருடங்களுக்குள்
வாரிசுகளின் திருமணம் கை கூடி வரும்.
உங்கள் பூர்வ ஜன்ம பலன் களைப் பார்க்க நீங்கள் அடுத்த வாரம் வரலாம்.
இப்போது படித்தது நீங்கள் வந்த நேரத்தக் கணித்துச் சொன்னது.
என்று ஓலைகளைக் கயிறு கொண்டு கட்டினார்.
நான் பிரமை தட்டி உட்கார்ந்திருந்தேன்.
இது எப்படி சாத்தியம்.???
அவர்களுக்கு எங்களை முன்னே பின்னே தெரியாது.
பொதுவாகப் படித்த ஓலைகளுக்குக் கட்டணம்
அப்போது 150 ரூபாய்.
கட்டிவிட்டு வெளியில் வந்தவர்களின்
மன  நிலை அதிசயத்திலிருந்து வெளிவரவில்லை.!!

அடுத்த வாரமும் சென்றோம் என்று நான் சொல்லத் தேவை இல்லை:)
நேரே  அம்மா ,அப்பாவிடம் சொல்லிவிட்டே
வீட்டுக்குத் திரும்பினோம்.
வரும் வழியில் பத்மம் விடுதியில் காப்பியும், ரவா தோசையும்
சாப்பிட்டுவிட்டு வந்தோம் என்பது கொசுறு செய்தி.


Tuesday, August 25, 2020

ANAARKKALI NAADAGAM ILLARA JOTHI SIVAJI, PADMINI, AMR,JK

வல்லிசிம்ஹன்

எப்போதோ கேட்டு மகிழ்ந்த வசனங்கள் இப்போது
காணொளியில்.
ரசிக்கலாமா.

இரு குரலிசை

வல்லிசிம்ஹன்
பாத காணிக்கை படத்தில் சாவித்திரியும் விஜயகுமாரியும் .

எங்க வீட்டுப் பிள்ளையில்  சரோஜாதேவி மற்றும் ரத்னா.
இரண்டு பாடல்களுக்கும் உயிர் கொடுத்தவர்கள் சுசீலாம்மாவும், எல்.ஆர். ஈஸ்வரி அம்மாவும்.

படித்தால் மட்டும் போதுமா 
படத்தில்  சிவாஜியும் பாலாஜியும்.
வெகு நாட்களாக மக்கள் மனதில் உலவி வரும் பாடல்.
பந்தபாசம் படத்தில் சிவாஜியும் ஜெமினியும்.
கவலைகள்  கிடக்கட்டும் மறந்துவிடு 
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
 எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ 
இருக்குது நீதி சிரித்துவிடு 

நாவுக்கு மனதுக்கும் உள்ளவழி 
நான்கு விரல் கடை தூரவழி 
சொல்லுக்கும்  செயலுக்கும் காத வழி 
சுற்றமும் சுகமும்  வேறு வழி.

வந்ததில் எல்லாம் பொருளுண்டு 
வருவதில்  வெற்றியும் நமக்குண்டு 
நிச்சயம் இரவுக்கு  பகலுண்டு 
நீதியின் கண்களில் உண்டு .





Saturday, August 22, 2020

குழந்தைகள் பாடல்கள்.

வல்லிசிம்ஹன்

 யார் பையனை யார் மறக்க முடியும்:)
கைதி கண்ணாயிரம் படப் பாடல்கள் அனைத்தும் இனிமை.
இந்தப் பாடல் அப்போது பட்டி தொட்டியில்
,
பள்ளிக்கூடங்களில் பிரபலம்.
இந்த பேபி ஷகீலாவை நான் தேடாத இடமே இல்லை.
கற்பகம் படத்துல அது செய்த லூட்டி
இன்னும் மனதில். இந்தப் பாடல் இரு வல்லவர்கள்
படத்தில்.
 ஆர். எஸ்,.மனோஹரின் மென்மையான நடிப்பு பிரமாதம்
இந்த நடிப்புக்கு விளக்கமே வேண்டாம்.

Friday, August 21, 2020

சரோஜா சௌண்ட் சர்வீஸ். திருமங்கலம்.


வல்லிசிம்ஹன்

வினாயகனே வினை தீர்ப்பவனே
வேத முதற்கோனே ஞான முதல்வனே
குணா நிதியே குருவே சரணம்...
தென் இந்தியா, தமிழகத்தில் 
சௌண்ட் சர்வீஸ்கள் செய்யும் நலம், சத்தம் எல்லாம் நாம் அறிந்ததே.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதலில் 
சீர்காழியின் குரலும், பின்பு டி எம் எஸ் குரலிலும் பிள்ளையாரும் முருகனும் வந்து விடுவார்கள்.
அந்த ஒலிபெருக்கி மற்றவர்கள் காதுகளை வதைக்கா வண்ணம் கேட்ட நாட்களும் உண்டு.
திருப்பாவை  நாட்களில் ,சென்னையில் 
கோவிலில் வைக்கும் பாடல்கள் காதில் அதிரப் 
புகுந்ததும் உண்டு.

எங்கள் திருமங்கலத்தில் ,சரோஜா சவுண்டு சர்வீஸ் 
1957,58,59 என்று ஒலிபரப்பிய அத்தனை சினிமா வசனங்களும்
அனேகமாக எல்லாப் பசங்களும் சொல்லும்.

பொதுக்கூட்டமாக இருந்தால்  ''வாழ்க வாழ்க பாட்டாளி''
இடம் பெறும்.
மதுரை வீரன் சினிமா வசனம் ''பொம்மி ஈயீயீ'' என்று செல்லும்.
''வீரத்தின் சின்னமே'' என்று வீரபாண்டியக் கட்ட  பொம்மன் முடியும்.!!!

''அக்காளுக்கு வளைகாப்பு" பாடல் வந்தால் அந்த வீட்டில் அந்த விழா
என்று தெரியும்:)
அனார்கலி வசனம் சிவாஜி பேசியது ''அனார்,அனார்'' என்று அல்றும்.

எம் எல் வியின் எல்லாம் இன்ப மயம் பாடல் வந்தால் அது திருமண வீடு.
இன்னும் எத்தனையோ பாடல்களை ஒலி பரப்பிய சரோஜா
சௌண்ட் சர்வீஸ், இருந்த இடம் 
 எங்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் 
பக்கத்துத் தெருவில் இருந்ததாக ஒரு மங்கிய நினைவு.
அதை இரு இளைஞர்கள் நடத்தி வந்தார்கள்.
அந்தக் கடையைத் தள்ளி நின்று
பார்க்க அப்பா அனுமதிப்பார்.
நானும் தோழி பத்துவும் அங்கு சென்று
வாயில் ஈ புகுந்தால் கூடத் தெரியாமல்
பார்ப்போம்:)

இரண்டு ஸ்பீக்கர்கள், இரண்டு க்ராமஃபோன்கள்,
ஏகப்பட்ட பெரிய பெரிய இசைத்தட்டுகள்
மனதில் நிழலாடுகிறது.
பாப்பா ,பாட்டு போடட்டுமா கேட்கிறாயா
என்று அந்த கடைக்காரர் கேட்டாலும்
மறுத்து விட்டு வீட்டுக்கு ஓடி வந்து விடுவோம்.;)
 அப்போது ஆடி மாதப் பாடல்கள் எல்லாம் கிடையாது.
மீனாக்ஷி அம்மன் கோவிலில்
திருப்பாவை, திருவெம்பாவை, மற்றும் திருப்பள்ளி 
எழுச்சிப் பாடல்கள் டிசம்பர் 16 ஆம் தேதியிலிருந்து ஒலிக்க
ஆரம்பிக்கும்.
அவ்வையார், வேலனே என்று விளித்தபடி
ஆரம்பிக்கும் பாடலும், தொண்டர் தம் பெருமை 
சொல்லவும் அரிதே பாடலும் இன்னும் மனதில் ரீங்கரிக்கின்றன.
மனோரம்மியமான பாடல்கள் கேட்டே வளர்ந்தோம்.
இப்போது எனக்குத் தனிப்பட்ட  வானொலி நிலையமே கிடைத்தது போல 
யூ டியூபுக்கு நன்றி சொகிறேன்.
இப்போதும் திருமங்கலத்தில் அந்த சௌண்ட் சர்வீஸ் இருக்கிறதா
தெரியாது.
பாண்டி விளையாட்டு விளையாடியபடியே
"
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா '' கேட்டது
ஒரு காலம். அனைவரும் நலமுடன் வாழ்க.


Thursday, August 20, 2020

Baahubali Skit - Prabhas, Rana, Anushka, Tamannaah - Memu Saitam

வல்லிசிம்ஹன்
  கொஞ்சம் சிரிக்கலாமா

வந்த பாதையை மறக்கவே கூடாது ! - S. P. Balasubrahmanyam speech | Throwback

வல்லிசிம்ஹன்

1950 களில் 1960 களில் பாடல்கள்.

வல்லிசிம்ஹன்


இந்தப் பாடல்கள் எல்லாம்
என் பத்து அல்லது பனிரண்டு
வயதில் கேட்டவை.
தாயில்லாப் பிள்ளை நல்ல படம். 
தோழி பார்த்து விட்டு வந்து சொன்ன கதைதான்
கேட்டேன்.
கொஞ்சம் புரட்சிகரமான கதைதான்.
பேசும்படப் புத்தகத்தில்
பின்னட்டையில் பார்த்த நினைவு. நெஞ்சில்
ஓர் ஆலயத்தில் சோக கல்யாணகுமாரைப் பார்த்த பிறகு

இந்த மகிழ்ச்சியான பாடலைப் பார்க்க இப்போது
சிறப்பாக இருக்கிறது. வாம்மா வாம்மா சின்னம்மா'' பாடல்
அடிக்கடி முணுமுணுத்தது.
அப்பா எதிரில் பாட முடியாது.
''படிக்க வேண்டும் புதிய பாடம்'' பாடலும் ஜமுனா ராணியின் குரலில்
சுகமாக இருக்கும் கேட்க.
உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
எல்.விஜயலக்ஷ்மியின் இளமையான முகம்
பசுமையாக நல்ல நினைவுகளைக் கொடுக்கிறது.

எல்லாப் பாடல்களும் சிலோன் வானொலியில் கேட்டவை.
மனப்பாடமாகத் தெரியும்.

யே குட்டி நாவம்மா பாட்டு,
பள்ளிகளில் ,விழாக்களில் அப்போது  கிராம நடனம் ஆடுவோர்களுக்கு
மிகவும் உதவியாக இருந்தது:)

Wednesday, August 19, 2020

நாடியை நாடி ஏடு தேடி

வல்லிசிம்ஹன் 

அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.



நாடி ஜோடிடம் எங்கள் வாழ்வில் வந்தது
மிக நூதனமான முறையில் தான்.
 1990 ஆண்டு சில பல தொழில் முறை மாற்றங்களைச் சந்திக்க
வந்தது. 
 
பசங்களின் படிப்பு சம்பந்தமாக சில முடிவுகளை
அதாவது அவர்கள் எடுத்த முடிவுகளுக்கு
உதவி செய்ய வேண்டும்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்கள் தான்.
என்னைப் பொறுத்தவரை என் தந்தை
வழிகாட்டிய வழியில் ஒரு ஜோதிடர் 
சில பூஜா வழிகளைச் சொல்லிக் கொடுத்து
அதைப் பின்பற்றியதில்,இராமாயணம் தொடர்ந்து படிப்பது,
விளக்கு பூஜை செய்வது ,கந்த சஷ்டி கவசம் சொல்வதுஅதாவது மனதை நேர்மறை வழியில் திருப்ப உதவி செய்தது.
எனக்கு வெற்றியே.

சிங்கத்துக்கு ஒரு நல்ல தோழர் இருந்தார்.
அவருக்கு  ஜோதிட சாஸ்திரம் தெரியும்.  கிண்டி தொழில் பேட்டையில் இருந்த 
பட்டறையை  இடம் சரியில்லை 
மாற்றிவிடு என்றார். 
காஞ்சீபுரம் போய்   நாடி ஜோதிடம் பார்க்கிறியா என்றார். எங்களுக்கு ஒன்றும் 
புரியவில்லை.
நாடியை வைத்தியர் அல்லவா பார்ப்பார்?

ஏண்டா  அவரை  இழுக்கறே என்றதும்   அவர் சிரித்து விட்டார்.

இல்ல நாடி என்பது  சில பேருக்குத்தான் கிடைக்கும். பழைய காலங்களில் 
எழுதிவைத்தது என்றார்.அவரிடம் விவரம் விசாரித்துக் கொண்டு அவர் சொன்ன
காஞ்சிபுரம் அகஸ்திய நாடி என்ற இடத்தைத் தேடிச்
சென்றோம். 
ஸ்ரீ வரதராஜர் கோவில் வாசலில் 
வந்தனம் சொல்லி அந்த மதிலோடு போனால்
ஒரு புற நகர் குடியிருப்பு.
விசாரித்துக் கொண்டு சென்றோம். 
ஒரு சிறிய வீடு.
வாசலில் போர்டு. உரிமையாளர் பெயர். அதை ஒட்டி 
ஒரு பந்தல். உள்ளே இருட்டாக இருந்தது.
நாங்கள் தயங்கி நிற்பதைப் பார்த்து
உள்ளிருந்த இளைஞர் வெளியே வந்து விசாரித்தார்.

நாடி பார்க்க வந்திருப்பதாகச் சொன்னோம்.
அங்கே இருந்த பெஞ்சில் அமரச் சொன்னார்.
முன்பு இது போல ஜோதிடம் பார்த்ததுண்டா
என்று கேட்டார்,

எப்படிப் பார்ப்பீர்கள் என்று கேட்டதற்கு
உங்கள் கை ரேகை எடுத்துக் கொள்வோம்.
பிறகு உங்களுக்குச் சொல்வதற்கான வேளை இருந்தால்
ஓலை கிடைக்கும் .
படித்து சொல்வோம். உங்கள் பெயரை இந்த சீட்டில் அடையாளமாக
எழுதிக் கொடுங்கள் என்றார். 
எங்கள் கட்டைவிரல் ரேகைகளை எடுத்துக் கொண்டார்.
என் பெயரைக் கேட்கவில்லை.
 நீங்கள் கோவில்கள் சென்று வழிபட்டு,
உணவை முடித்துக் கொண்டு வாருங்கள்.
இரண்டு மணி நேரம் எங்களுக்கு, ஓலை தேட
நேரம் தேவை என்றார். நாங்களும் அந்த இடத்தை விட்டு
எங்கள் ஃபியட் வண்டியில் ஏறி
வரதராஜர் கோவிலுக்கு வந்து வழிபட்டுவிட்டு
சரவணபவன் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டோம்.

விழியிலே மலர்ந்தது பாலு சாரின் குரலுக்காக

வல்லிசிம்ஹன்
கேட்கக் கேட்க ருசிக்குமே. என்றும் வாழ்க பாலு சார்.
என்னம்மா கண்ணு சௌக்கியமா பாடல்.
 பாலு சார் சௌக்கியமாக மீள வேண்டும்.

Tuesday, August 18, 2020

venkatesh bhat makes veg makhanwala | aloo gobi masala | north indian gr...

வல்லிசிம்ஹன்
ருசித்து சாப்பிடலாமா.

அன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் 
கள் பிறந்த நாள் பரிசாக!
என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,மனைநலம் காத்து  நூறாண்டு காலம் செழித்திருக்க வேண்டும்.

Sunday, August 16, 2020

விட்டுப் போன கட் அவுட்.

வல்லிசிம்ஹன்விட்டுப் போன கட் அவுட்.

நிலவரம் இப்படி இருக்கிறது

வல்லிசிம்ஹன்
அஞ்சுவது அஞ்சாமை பேதமை. இது இப்போது நாங்கள்
அனுபவித்துக் கொண்டிருக்கும் நேரம்.
பள்ளிகளை திறந்து குழந்தைகள் வரவேண்டும் என்று தீர்மானித்து
சில மாண்டிசோரி பள்ளிகளுக்குக் குழந்தைகள் அனுப்பப் பட்ட நேரம் 
அவர்களுக்கும் நோய்த் தொற்று 
ஏற்பட்டிருக்கிறது.

அடியோடு ஒழித்துவிட்டோம் என்று அறைகூவிய மாகாணங்கள் சிலவற்றில் மீண்டும் தலையெடுத்திருக்கிறது இந்த அசுரக் கிருமி.

அந்த நோயிலிருந்து மீண்டவர்களும் இருக்கிறார்கள்.
பலியானவர்களும் இருக்கிறார்கள்.
மீண்டவர்களின் சதவிகிதம் அதிகம்.

இங்கே  அனேகமாகக்  கடைகள் திறந்தே இருக்கின்றன.
கடைக்குச் செல்பவர்களும் அதிகமாகி
இருக்கிறார்கள்.
எத்தனை நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது என்ற
முணுமுணுப்பு கேட்கிறது.
வீட்டில் என்னை மாதிரி வயதானவர்கள்,
சில பல நோய்களைச் சொத்தாக வைத்திருப்பவர்கள்
இவர்கள் வெளியே போவது
விரும்பப் படுவதில்லை. நம் வீட்டைத் தேடிப் பேச வருபவர்களும் பத்தடி
இடைவெளியில் நின்றுதான் பேச வேண்டும்.
ஏனெனில் அறிகுறிகள் இல்லாமலேயே
அந்த நோய் அடங்கி இருக்குமாம்.Asymptamatic.

கோடைக்காலத்தில் நல்ல வெய்யில்
இங்கே கொண்டாடப்படும்.
எல்லோரும் சேர்ந்து உணவுகளைப் பகிர்ந்து கொண்டு
,ஏரிக்கரையோரம் சென்று ,நீரில் விளையாடி,
படகுகளில் சென்று வருவார்கள்.
ஏனெனில் இன்னும் இரண்டு மாதங்களில்
குளிர ஆரம்பித்து விடும்.

எவ்வளவுக்கெவ்வளவு உஷ்ணத்தை  வாங்கிக் கொள்ள வேண்டுமோ
அவ்வளவு எடுத்துக் கொள்வார்கள்.
இப்போது கட்டிப் போட்ட மாதிரி வீட்டுக்குள்
இருக்கப் பிடிக்கவில்லை.
எல்லாம் சரிதான். அவசியமில்லாமல் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்.
அதுவும் இந்த ஊரில் நிறையக் கடைகள் சூறையாடப் பட்டு
கலவரம், துப்பாக்கி சூடு நடந்ததும் 
 
Downtown  மூடப்பட்டது சிலகாலம்.எல்லோருக்கும் 
(மற்றவரைப்) பார்க்கும் போதே  பயம் 
வருகிறது.
மிக நல்ல வேளையாக உறவினர்களுக்குள்
பேச்சு வார்த்தைகளும் , தொலைபேசி உரையாடல்களும் அதிகரித்திருக்கிறது.
மனம் லேசாகிறது.
காலம் கற்றுக் கொடுக்கும் பாடம் இதுதான்.
எல்லா உயிர்களையும் மதிப்போம்.
எல்லா உறவுகளையும் கொண்டாடுவோம்.
எல்லா நட்புகளையும் போற்றுவோம்.
வாழ்க நலம் வாழ்க வளமுடன்.

Saturday, August 15, 2020

Gina Lollobrigida - "Bésame Mucho"

வல்லிசிம்ஹன்

இந்தப் பாடல்களைக் கேட்டால்
மேலும் வேறு பாடல்கள் நினைவுக்கு வருகிறது.
தெரிந்தால் சொல்லுங்கள்.
அன்னாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
மட்டும் தோன்றியது:)

Friday, August 14, 2020

யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே ...


வல்லிசிம்ஹன்      மதுர மதுர மீனாக்ஷி

கலைஞர்களை அவர்களது குரலுக்காக மட்டும்
மதிப்போம்.
வேண்டாத சொற்களைச் சொல்லி
அவர்களது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்.

நம் கேட்கும் புலன் எல்லாம் தேன் வழியப்
பாடியவர்களைப்
பாடிக் கொண்டிருப்பவர்களை
எப்பொழுதும் போற்றுவோம்.

Endaro Mahanubhavulu - sung by SP Balu

வல்லிசிம்ஹன்

என்றும் வாழ்க வளமுடன்.

Thursday, August 13, 2020

Derecho...!!!!

வல்லிசிம்ஹன்
derecho (pronounced similar to "deh-REY-cho") is a widespread, long-lived wind storm that is associated with a band of rapidly moving showers or thunderstorms.
On  Monday last we sighted 4 tornadoes
in nearby counties. 

நம் ஊரைத் தொடாமல் கருணையோடு வெளியேறி விட்டது.
ஊழிக்காற்று, பல மரங்களைச் சாய்த்தது.
பல வீடுகளின் கூரைகள் பறந்தன.

இன்னும் பலபகுதிகள் மின்சாரம் இல்லாமல்
தவிக்கின்றன.
இந்த ஊருக்கு வெளிச்சமும், தண்ணீரும் இல்லையெனில்
அவர்களுக்கு நம்மைப் போல சமாளிக்கத் தெரியாது.
கிணறா இருக்கிறது?
இறைவன் கருணைக்கு நன்றி.


Tuesday, August 11, 2020

நடிகை பானுமதி

வல்லிசிம்ஹன்

மீண்டும்மீண்டும் 
பார்த்து வியக்கும் நடிப்பு.
இத்தனை ஆளுமை ஒரு பெண்ணிற்கு
அமைந்திருந்தது
என்னை மிகவும் கவர்ந்தது.
அதுவும் அவரது குரலினிமை அவர் நடித்த படங்கள்
அத்தனையிலும் வரும் பாடல்களில்

சிறப்பாக இருக்கும். தாய்க்குப் பின் தாரம்,
மக்களைப் பெற்ற மகராசி,
சாரங்கதாரா,அன்னை,பத்து மாத பந்தம்,
மணமகன் தேவை, அறிவாளி இவை எல்லாம்
சட்டென்று மனதுக்கு வந்தவை.
நிறைய மகிழ்ச்சியைக் கொடுத்த இவர் போன்ற
நடிக நடிகையருக்கு நன்றி.
புரட்சித் தலைவர், சிவாஜி போன்ற 
மகா நடிகர்கள் அவர்களை மரியாதையுடன் நடத்தியதுதான்
என்னைக் கவர்ந்தது.
எதற்காகவும் யாரிடமும் தன் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காத
மனுஷி.

கலெக்ட்டரே வியந்து போன கோவை குழந்தை இந்த வயசுல இப்படி ஒரு குழந்தையா கின்...

வல்லிசிம்ஹன்கண்ணே பாப்பா. என் கனி முத்து பாப்பா.

Friday, August 07, 2020

இன்னோரு விஷயம்

வல்லிசிம்ஹன்

மாமா கோபு,
பாடுவதில் வல்லவர்.
அதுவும் டிஎம் எஸ் அவர்களின் பாடலை 
அப்படியே  பிறழாமல் பாடுவார். இதெல்லாம்
அவருடைய இளம் வயதில். 
நானும் திருமணம் முடித்து வந்த பிறகு 
பாட்டி வீட்டுக்கு செல்வது குறைந்து விட்டது.
மாமாவின் குடும்பமும் வேறு வேறு ஊர்களில் இருந்து 
விட்டு மீண்டும் சென்னைக்கு வந்த போது 
15 வருடங்கள் கடந்திருக்கும்.

அவரின் நினைவில் சில பாடல்களும் ஒரு திரைக் காட்சியும்.
தூக்குத்தூக்கி அனைவரும் விரும்பக் கூடிய
படம். அதில் வரும் வசனங்களும் 
மறக்க முடியாதவை.
அடுத்து வருவது வணங்காமுடி  படத்தின் 
பாடல். ரீங்காரமாய் இன்றும் நம் காதில் 
ஒலிக்கக் கூடிய குரல்.வாழ்க அவர் புகழ்.

அடுத்து வருவது சிந்தனை செய்மனமே..
அம்பிகாபதி படப் பாடல்.
ரசிக்கலாமா.

அஞ்சலி

வல்லிசிம்ஹன்

கீழநத்தம் வீர ராகவன்  கோபாலன்.
என்  மூன்றாவது மாமா,
81 வயதில்  இறைவனடி சேர்ந்தார்.

நல்ல  வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார்.

பல நல்ல நினைவுகள்.
அவரது  குண நலன் .
பிறருக்கு உதவும் நற்பண்பு,
என் அம்மாவைப் பார்க்க வரும்போது அவர் கொண்டு வரும் சீர்.
அக்காவிடமும் , அவள் குழந்தைகளிடம் அவர் வைத்திருந்த 
பாசம்   எல்லாமே   நினைவில் பதிந்திருப்பவை .

அவரது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் 
எங்களுக்கும்  பிரிவு சோகம் தவிர 
மற்ற வருத்தம் இல்லை. உலக  தொந்தரவுகளிலிருந்து அமைதி பெறட்டும் அவர் ஆத்மா.



Wednesday, August 05, 2020

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே



வல்லிசிம்ஹன்
 துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் சூழ்ச்சியால் வலை தன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்ததால் அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே//
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே//


பாகப் பிரிவினை படம் வந்த போது
மதுரை பழங்கானத்தில் தாத்தா பாட்டி இருந்தார்கள்.

வீட்டுக்குப் பக்கத்தில் நெல்விளையும் வயற்காடு..
சித்தப்பாவின் அறை ஜன்னலில் உட்கார்ந்தால் உழுவதிலிருந்து
களையெடுப்பது, நாற்று நடுவது,வயலில்
வரப்பில் நடமாடுவது எல்லாவற்றையும்
பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

அடுத்த விடுமுறைக்கு வந்த போது
அறுவடை முடிந்து  டிறந்த வெளியில் ஒரு கீற்றுக் கொட்டகை வந்திருந்தது.
படம் ஆரம்பிப்பதற்கு முன்னால்
பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும்.
''தன்னானா தானனா பாடல் ஒலித்ததும் என்னைப்
பிடித்துக் கொள்ளும்.
இத்தனைக்கும் ''பாகப் பிரிவினை'' படங்க் திரையிடப் படவில்லை.
ஏதோ ''ராஜா ராணி'' என்ற சிவாஜி,பத்மினி படம்தான் திரையிடப்
பட்டிருந்தது. அந்தப் படத்து வசனம் எல்லாம் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.
பிறகு திருமங்கலம் வந்த பிறகு
பாகப் பிரிவினை பார்த்தோம் என்று நினைக்கிறேன்.
மிக அழகான அருமையான குடும்பச் சித்திரம்.

ஒற்றுமையை விளக்கும் வண்ணம் எடுக்கப் பட்ட பெரிய படம்.
பாலையா அவர்கள், சுப்பையா, எம் வி ராஜம்மா
எல்லோரும் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார்கள்.
ஊனமுற்ற கை காலுடன் நடிகர் திலகத்தின் 
சிறந்த நடிப்பு.
சிறந்த கருத்துள்ள படங்களைப்
பார்ப்பதால் எங்களுக்குக் கிடைத்த நன்மைகளை
எண்ணிப் பார்க்கிறேன்.
கதைகளைப் படிக்கும் வழக்கம் இருந்தாலும்
படங்கள் ஏற்படுத்திய விளைத்த நல் எண்ணங்கள்
அதிகம். பாகப் பிரிவினை நடக்கும் போது
மனம் வேதனைப்படும்.

இப்பொழுதும் நல்ல நட்புகளோ, சகோதரர்களொ
பிரிவதைப் பார்த்தால், வாழ்வின் நிலையாமையைப்
புரிந்து கொள்ள மறந்து விட்டார்களே என்று தோன்றும்.
நாம் அப்படி இருக்கக் கூடாது,
உறவுகளைப் பேண வேண்டும் என்ற உணர்வே
மேலிடும். நலம் விசாரித்த அனைத்து நட்புகளுக்கும் நன்றி.
சீக்கிரமே பகவான் கிருபையில்
வலி எல்லாம் தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


குடியிருந்த கோவிலும் மகனும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வீடு தேடிக் கொண்டிருந்தான் சங்கர்.  கோவில்பட்டியை
 கிளம்பும்போது அம்மாவும் ,மனைவியும் ,தனித் தனியே சொன்னது  மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  எந்த வீடு பார்த்தாலும் எனக்கொரு அறை இருக்கட்டும்டா. அப்பா படத்துக்கும்,என் பாகவத,மகாபாரத,ராமாயணம் புத்தகங்கள்  வைக்க ஒரு அலமாரி.ஒரு கட்டில்  ,துணிமணி வைக்க ஒரு அலமாரி இது போதும்டா.                
அடுத்த  வசனம் பெண்டாட்டியிடமிருந்து. ''எங்க ?நாம நாலு பேரு இருக்கிற மாதிரி வீடு பாருங்க போதும். அம்மா என்ன நம்ம
கூ டவேவா இருக்கப் போறாங்க . இரண்டு மாசம் இருந்தா அதிசயம்.கூடத்தில் படுத்து,டிவி பார்த்தால் போதும் அவங்களுக்கு. அடுத்தாப்பில மதுரைத் தம்பி வீட்டுக்குக் கிளம்பிடுவாங்க. அங்கதான் அவங்களுக்கு ஒட்டும். நமக்கும் அதிகமா வீட்டு வாடகை கொடுக்க வேண்டாம்.கட்டுப் படியாகாது பார்த்துக் கோங்க.  
யாருடைய கட்டுப்பாட்டுக்கும் வருகிற மாதிரி வீடுகள் இல்லை.  தாம்பரம் தாண்டி  பார்க்கிற  வீடுகள்  கூட 4000த்துக் குறைந்து இல்லை. அவைகளிலும்  ஒரு சமையலறையும், ஒரு படுக்கை அறையும்  ,ஒரு வரவேற்பறையும் தான் கொண்டிருந்தன.
தாம்பரத்தையும் தாண்டி  பெருங்களத்தூர்  போயும் பார்த்தான்.
இந்தக் கதை நடந்தது 2004 ஆம்   வருடம்.

Monday, August 03, 2020

வேலை சில நாள் .ஓய்வு இரண்டு நாட்கள்!

வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் காவேரி அன்னையின் அருள் என்றும் விளங்கட்டும் .
அன்னம்  பெருகி இல்லாமை எனபது இல்லாது போகட்டும்.
ஏழைகள் வயிறு வாடாமல் இறைவன்  ரட்சிக்க வேண்டும்.

விடாது கறுப்பு என்பது போல,  செருப்பு தடுக்கி  விழந்து பின் மண்டையிலும் முழங்காலிலும்
ஊமை அடி.
ஏற்கனவே அழகு. இப்போது மகளுக்கு வேலை வைத்தாகி விட்டது.

வைத்தியரிடம் சொல்லி அவர் சும்மா. இருக்க உத்தரவு போட்டார்.:) இதையும் கடப்போம்.

அவை

Saturday, August 01, 2020

காத்தவராயன் 1958

வல்லிசிம்ஹன்

பழைய படங்களும் ,பாடல்களும்
எப்பொழுதும் ஈர்க்கின்றன.அதுவும் நம் சிவாஜியின் நடிப்பு என்றால் கேட்க வேண்டுமா.
என்ன ஒரு நடனம் !
என்ன ஒரு நடிப்பு.
சந்திரபாபு, எம்.என்.ராஜம், திரு பாலையா
யாரும் சளைத்தவர்கள் அல்ல.
எனக்குப் பிடித்த மாதிரி உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

Kanninun Siruthambu

வல்லிசிம்ஹன்
அடியேன்.நமஸ்காரங்கள்..