Blog Archive

Thursday, December 31, 2020

உள்ள தெய்வம் ஒன்று.....


இன்று  வாசல் முழுவதும் பனிப் பொழிவு.
இங்கே பனியைக் களைந்தெடுக்க வெளியில் போகலாம் என்றால்
கடுங்காற்று.
உடலைத் துளைக்கும் ஊசிபோன்ற ஐஸ் மழை.

இந்த நிலையில் காலையில் ஒரு குரல். வெளியே இருக்கும் ஸ்னோவை அகற்ற
வேண்டுமா என்றதும் 
கொஞ்சம் தயக்கம். வழக்கமாக ஆஜராகும் Saul வரவில்லை.
வந்திருப்பவரோ முதியவர். அவரால் முடியுமோ என்ற பரிதாபம்.

அவரோ நம் தயக்கத்தைப் பார்த்து 5 ரூபாய் குறைத்துக் 
கொடுங்கள் என்றார்.எனக்கு
மனமே தாங்கவில்லை. ஐயோ பாவம் என்றிருந்தது.

அவருக்கு உண்டான பணத்தை பையில் போட்டு 
கதவில் மாட்டி வைத்து
காஃபி வேண்டுமா என்றால் மறுத்துவிட்டார்.
இங்கேயும் இப்படிப்பட்ட பரிதாபங்கள் 
நடப்பது எனக்கு முதலில் வருத்தமாக 
இருந்தது.ஏழ்மை இல்லாத ஊர் என்று நினைத்தேனே.

இங்கேயும் இந்த வைரஸ் இத்தனை பேருக்கு
வேலை இல்லாமல்  வருத்தப் படுகிறார்கள்.
எத்தனையோ நபர்களுக்கு  இலவச உணவு
தர எத்தனையோ குடும்பங்கள் 
உதவுகின்றன.
இருந்தும் போதவில்லை.
இனியாவது  இந்தத் துயரங்கள் தீர்ந்து
அனைவரும் நலம் பெற வேண்டும்.
புது வருடம் அனைவருக்கும் நன்மை 
அளிக்க வேண்டும்.
மனம் நிறையப் பிரார்த்தனைகளோடு
நம் நட்புகள், மற்றும் உலகம் பிரச்சினை தீர்ந்து
வளம் தர இறைவன் அருள வேண்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோருக்கும்
2021 ஆம் ஆண்டு வருக. நலம் தருக.
ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Tuesday, December 29, 2020

மன அலைகள்.


வல்லிசிம்ஹன்

முழு நிலவுக்கும் மனத்திற்கும் ஈர்ப்பு அதிகம். 

பதினோராம் நாள் உபவாசம் இருந்தால் 
இந்தப் பௌர்ணமி அலைகள்
நம்மைப் பாதிக்காது என்கிறார்கள்.

அனுபவித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.
நான் உபவாசம் இருந்த நாட்கள் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு
முன்.:)

இப்போ கஞ்சி வரதப்பா.....எப்போ அப்பா கதைதான்.
எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் 
கொள்ளலாம்:)

எங்கள் இருவருக்கும்  மிகப் பிடித்த பாடல்.
அதுவும் சிங்கம் தரம்ஜி என்று அழைக்கப் பட்ட காலம்:)
😍😍

 திரிவேணி சங்கமம்.

Dr G Gnanasambandan l Humour Club International Triplicane Chapter l 35...

😃😃😃😃😃😃😃😃

Monday, December 28, 2020

வெள்ளி நிலாவினில் ஒரு வீணை


நிலா கீதங்கள் தொடர்கின்றன.

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து

வல்லிசிம்ஹன
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே 


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!















Sunday, December 27, 2020

வெள்ளி நிலா முற்றம்

மிக மிக இனிமையான  பாடலும் நடிப்பும்.
பாடல்களுக்கான 
காட்சிகளும் இனிமை/ எதற்குமே பஞ்சமில்லை நம் நாட்டில்.
மனதில் உண்மை இருக்கும் வரை.

பாடல் என்றால் பாலு சார் இல்லாமலா.
என்றும் வீசும் நிலாத் தென்றல் எஸ் .பி. பி சார்.


Saturday, December 26, 2020

Orphaned Baby Elephant Grows Up With The Best Human Friends | Real Wild

😍😍😍😍😍😍அருமையான காணொளி. 
அன்பு என்பது எல்லா இடத்திலும் பொங்கிப் பரவும்.
யானைகளிடம் மேலோங்கியே இருக்கிறது.
எண்டாட்டா என்ற யானைக் குட்டி,
தன் இனத்துடன் சேர அதை வளர்த்தவர்கள்
மேற்கொள்ளும் முயற்சி அசர வைக்கிறது.

கென்யாவில் நடந்த இந்த நிகழ்வு 
மிருகத்தன்மை என்பது மனித்தன்மையை விட மேலோங்கி 
இருப்பதை உணர வைக்கிறது.

Thursday, December 24, 2020

வெளிவராத அனுபவங்கள் அதிசயங்கள் | ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில்

தென்றல் வந்து வீசாதோ

மன நெகிழ்வுக்கு சில பாடல்கள்.




Thiruvadhirai Kali | திருவாதிரை களி - Ammavum Naanum | Episode #52 | Rak...

எண்ணெய்க் கத்திரிக்காய் எங்கள் ப்ளாகுக்காக

வல்லிசிம்ஹன்
விட்டாச்சு லீவு என்று பாடாத குறையாக எல்லோரும், இரவு விழித்துப் பகலில் தூங்கிக்


கொண்டிருக்கும் காலம்.

காரசார சமையல் பாட்டியின் பொறுப்பாயிற்று.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சமையல் பொறுப்பு எடுத்துக் கொண்டேன்.
என் தோழி ,இதை வெகு ருசியாகச் செய்வாள்.அவளுடன் கூட இருந்து கற்றுக் கொண்டது அனேகம். இதெல்லாம் 30 வருடங்கள் முன்பு.
எங்கள் சிங்கத்துக்கு இந்த மாதிரி மசாலா சமையலில் விருப்பம் அதிகம்.
அங்கே கற்றுக் கொண்டதில் இந்த கத்திரிக்காய் க்ரேவி குழம்பும் ஒன்று.

இன்று செய்யும்போது இரண்டு மூன்று படங்கள் எடுக்க நினைவு வந்தது.
மற்றவர்கள் போலக் கோர்வையாக எடுக்கவில்லை.
மன்னிக்கணும்.

இன்று எடுத்துக் கொண்ட  மசாலா பொருட்களில்
வெள்ளை எள்ளும் , வேர்க்கடலையும் முக்கியம்.
இணையத்திலும் சந்தேக நிவர்த்தி செய்து கொண்டேன்.

IMG_20201223_132611742.jpgஎண்ணெய்க் கத்திரிக்காய் குழம்புக்குத் தேவையான பொருட்கள்.
16 சின்னக் கத்திரிக்காய்.
அதற்குத் தேவை
2 மேஜைக் கரண்டி வெள்ளை எள்ளும்
2 மேஜைக்கரண்டி  வறுத்த வேர்க்கடலையும்.
இவற்றை முதலில் பொடித்துக் கொள்ள வேண்டும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
எலுமிச்சை அளவு புளியை கோது போக, கெட்டியாகக்
கரைத்து  வைத்துக் கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------------------------
அரைக்க வேண்டிய பச்சை மசாலா.
ஒரு பெரிய வெங்காயம்,
நான்கு  பெரிய பூண்டு
6 கார பச்சை மிளகாய்,
இரண்டு இன்ச் இஞ்சி,
கூடவே இரண்டு டீஸ்பூன் தனியா பொடி,
ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி,
இரண்டு ஸ்பூன் கஷ்மீரி மிளகாய்ப் பொடி.
இவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளணும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய்
விட்டு அதில்  கொஞ்சம் மிளகு, ப்ரிஞ்சி இலை,
இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டு கிராம்பு போட்டு வறுத்துக் கொண்டு
தனியே வைத்துக் கொண்டு,
இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வகிர்ந்து வைத்திருக்கும்  கத்திரிக்காய்களை அப்படியே முழுதாகப் போட்டு கொஞ்சம் உப்பும் சேர்த்து
நன்றாக வதக்க வேண்டும்.
வதங்கின காயோடு, தாளித்துவைத்திருக்கும் மிளகு,மற்றவைகளைச் சேர்த்து அடுப்புச் சூட்டில் மூடி வைக்கணும்.
அரைத்து வைத்த வெங்காயம் ,இஞ்சி பூண்டு,ப.மிளகாய்க் கரைசலை இத்துடன் சேர்த்துக் கொதிக்க வைக்க
வேண்டும்.

இப்போது அரை உப்பு சேர்க்கலாம்.
அடுத்த வேலை புளிக்கரைசலை விடுவது
இதற்குள் கத்திரிக்காய் பாதி வெந்திருக்கும்,
புளிவாசனை போனதும், பொடித்து வைத்திருக்கும்
வேர்க்கடலைப் பொடி,
வெள்ளை எள்ளுப் பொடியப் போட வேண்டியதுதான்.
அடிக்கடி கிளறினால் கத்திரிக்காய் இரண்டு
ஆக சந்தர்ப்பம் உண்டு. அதனால் எச்சரிக்கையுடன் இருக்கணும்.
மீண்டும் மூடிவைத்துவிட்டுப் பார்த்தால்
எண்ணெய் பிரிந்து பார்க்கவே அழகாக இருந்தது.
அடுப்பை அணைத்து விட்டு கருப்பிலை
இரண்டு ஆர்க் போடலாம். உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.

புரிகிற மாதிரி எழுதி இருக்கிறேனோ தெரியவில்லை.
தோழி என்னைப் பார்த்தால் சந்தோஷப் படுவாள்.
நன்றி ராஜகுமாரி டேவிட்,.
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.





Wednesday, December 23, 2020

Sadya Special Olan || Kerala Sadya Olan || Ash Gourd Recipe in Tamil

கீழ்வானம் வெள்ளென்று.........

வல்லிசிம்ஹன்
மார்கழியின் 8 ஆம் நாள்.


கீழ்வானம் வெள்ளென்று  எருமை சிறுவீடு 
மேய்வான் பறந்தன காண்  மிக்குள்ள பிள்ளைகளும் 
போவான்  போகின்றாரைப்போகாமல் காத்துன்னைக் 
கூவுவான் வந்து  நின்றோம்  கோதுகலமுடைய 
பாவாய் எழுந்திராய் பாடி ப் பறை  கொண்டு 
மாவாய்ப் பிளந்தானை மல்லரை  மாற்றிய
 தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் 
ஆவாவென்று ஆராய்ந்து  அருளேலோர்  எம்பாவாய்///

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே  சரணம்.

Sunday, December 20, 2020

எண்ணெய்க் கத்திரிக்காய்

.தீபத்தை வைத்துக் கொண்டு.....


பாடல்களின் காட்சிகளை விட,
பாடல் வரிகள் மிகவும் பேசப்பட்ட காலம்.
இந்தப் பதிவைப் பார்க்க வருகிறவர்களும்
அதை உணர வேண்டும் என்று எண்ணம் வருகிறது.

Wednesday, December 16, 2020

Getting through 2020 | Ask How #WithMe

மார்கழித் திங்கள் முதல் நாள்.

வையம் வாழ கோதை பாடிய பாவைப் பாடல்களைப்
பாடி அரங்கன் திருவடிகளை ஆஸ்ரயிப்போம்.

Tuesday, December 15, 2020

சேலத்தில் கேட்ட பாடல்கள்.1966,67,68,69 ஆம் வருடங்கள்.


நலம் நலம் அறிய ஆவல். சேலம்  வந்தவுடன் சிங்கத்தின் சித்தப்பா வீட்டில் தங்கிய நாட்கள் சிறப்பானவை.
பெரியவர்களுடன் இருக்கும் போது 
ஒரு பாதுகாப்பு கிடைக்கும் இல்லையா. அந்த வகையில்  என் சின்ன மாமனார் ஒரு அன்பான மனிதர். 6'4'' உயரத்தில் அவர்பேசுவது என் காதுக்கு வர சில நொடிகள் ஆகும்.:)
சமையல்  மாமியிடம் சொல்லி விடுவார். இந்தப் பெண் வாய் திறந்து ஒன்றும் கேட்காது. நீதான் பசி அறிந்து கொடுக்கணும் என்று.!!!
கண்ணம்மா மாமியும் தன்னால் முடிந்த அளவில் 
என்னிடம் உரையாடி, கடினமான  உழைப்புக்கு நடுவில் ஜாதி மல்லி தொடுத்து எனக்குத் தருவார். அந்த அன்பு மனம் இன்னும் மனதில். அப்போது வீட்டை ஓட்டினால் போல ஏரிக்கரை இருந்தது. இப்போது அங்கெல்லாம் வீடுகள் வந்துவிட்டன. மரவனேரி  என்ற இடம். வில்வாத்ரி பவன்  வீடும் அங்கே இருந்தது.  பாதாம் அல்வா  அந்த வீட்டிலிருந்து வரும்.
இதில் விசேஷம் என்ன என்றால்  அங்கே இருந்த ஒரு குழந்தை என் சம்பந்தி வீட்டு மாப்பிள்ளையாக வந்ததுதான் அதிசயம்.
சேலம்  , குழந்தைகள் காலம்.
ஒன்றன் பின் ஒன்றாக மூன்று  .... கொஞ்சம் கடினமான நேரம். ஆனால் சமாளிப்பது சிரமமாக இல்லை. சரஸ்வதி என்ற குட்டிப் பெண் துணை இருந்தது.
சினிமா சம்பந்தம் எல்லாம்  வானொலி வழியாகவும்,
பின்னாலே இருந்த  மைதானத்தில்  மூன்று நாட்கள் சைக்கிள் விடும்  அதிசய மனிதருக்காக ஒலி பரப்பப் பட்ட பாடல்களும்.😃😀😅😅

காலை நாலு மணிக்கு ''விவசாயிய்ய்ய்ய்ய்ய் '' என்று எம்ஜிஆர் குரல் கொடுத்தவுடன்,
மகள் ,மகன்  விழித்துக் கொண்டு விடுவாரகள்.:).
பிறகென்ன  ''பொழுது  புலர்ந்தது 
யாம் செய்த தவத்தால் '' என்று ஆரம்பிக்கும்.
அந்த நாட்களில் என்னைக் கவர்ந்த ,நினைவில் இருக்கும் பாடல்களைப் 
பகிர்கிறேன்.



Sunday, December 13, 2020

Sutralam Suvaikalam - Traditional Recipes of Chettinad | Karaikudi Speci...

என்றும் வளமுடன் வாழப் பிரார்த்தனைகள்.

1966 நினைவுகளூம் பாடல்களும்

1966இல் திருமணம் முடித்துப் புதுக்கோட்டை வந்ததும்
பார்த்த படம் அன்பே வா.
அதன் பிறகு கீழ் வீட்டு ரேடியோ சிலோனில் கேட்டது 
''நீலவானம்'' படப் பாடல்கள்.

என்னை விட்டு விட்டு சிங்கம் தனது சினேகிதர் சுந்தரத்துடன் 
பார்த்த படங்கள்  மோட்டார் சுந்தரம் பிள்ளையும் ,மேஜர் சந்த்ரகாந்தும்:)

நான் மதுரையில் குழந்தை பெறுவதற்காகப் போன
போது அவருக்கும் பொழுது போக வேண்டுமே.

திரைப்படங்களைப் பார்த்துவிட்டுக் கதைகளைக் கடிதத்தில்
எழுதுவார்.:)
உன் வயதுதான் அந்தப் பெண்ணுக்கு
எப்படி நடனம் ஆடுகிறது பார்
என்று நையாண்டி வேறு செய்வார்.
இவரோ தமிழ்ப்  பத்திரிக்கைகள் படிக்க மாட்டார்.
எப்படித் தெரியும் இந்த விஷயம் எல்லாம்
என்று யோசனையுடன் அவரைப் 
பார்ப்பேன். சுந்தரம் சொன்னான் என்பார்.

சரிதான் அவரவருக்கு அந்த அந்த வழி.
நான் சந்தோஷமாகத் தான் இருக்கேன் என்பேன்.
பிறகு வெகு நாட்கள் கழித்து அந்தப் 
படத்தைப் பார்க்கும் போது உண்மையிலியே
அந்தப் பெண் அழகாக ஆடிப்பாடி ,அழுது எல்லாம்
செய்வதைப் பார்த்து மகிழ்ச்சியாகவே இருந்தது.

அவர்தான் பின் நாட்களில் நம் முதலமைச்சராக எங்கள் வீட்டு வழியே அடிக்கடி
சென்று வருவார்.


Friday, December 11, 2020

மனக்குமுறலுக்கு இசைதான் மருந்து

எத்தனையோ காலமாக இருந்து வருவது
ஆளும்  திமிரும் அடங்கிப் போகும் 
அடிமைத்தனமும்.

இப்போது ஊடக வாயிலாக நாம் காணும் காட்சிகள்
மிகக் கவலைப் பட வைக்கின்றன.
முன்னை விடக் கல்வி அறிவு படைத்தவர்கள்
அதிகம். இருந்தும்  நாட்டைப் பற்றி யோசிக்காமல்
தனிமனித  வழிபடல்,துதி பாடல், அராஜகமாக
நடத்தல் இவை எல்லாம் 
எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும்
என்று தெரியாமலேயே தங்கள் தங்கள்
வாழ்க்கையை மேம்படுத்திக்  கொள்ள
விரும்பும் மக்களைப் பார்க்கிறேன்.

மேலோர் சொன்ன வாக்குகள் நமக்கு
எத்தனையோ இன்னும் நினைவில் இருக்கின்றன.
அட்டகாசம் செய்பவர்கள் அடங்கத்தான் போகிறார்கள்.

இறைவன் காக்கட்டும் உலகத்தை.
இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன் கதையும்
நமக்குத் தெரியும் .தானே கெடப் போவதையும்
பார்க்கத்தான் போகிறோம்.




Thursday, December 10, 2020

G.S.SIMHANJANA - ACHAM THAVIR ( AVOID FEAR) - A special Talk

இளம் வயதில்
தான் பேசுவதை உணர்ந்து , சீராகப் பேசுகிறார்.
அம்மாவின் வேகம் வர நாட்கள் பிடிக்கும். இன்னும் 
முன்னேற வாழ்த்துகள்.

சிங்கத்துக்குப் பிடித்த பாடல்கள்.


  என்றும் இனிமை.

Wednesday, December 09, 2020

Shyamala Jeevapriyeஅப்பாவுக்குப் பிடித்த பாடல்கள்

காரைக்குடி அழகப்பா நகர் தபால் நிலையம் 1968


எங்கள் அப்பாவுக்கு இசை மிகப் பிடிக்கும். அம்மாவுக்கும் அவருக்கும் நல்ல
குரல்.
ஆனால் பாட மாட்டார்கள்.
என் சிறுவயதில்  அப்பா பாடிக் கேட்டது
என் ''ஜீவப்ரியே ஷ்யாமளா.''
இத்தனை நாட்கள் தேடி இன்றுதான் கிடைத்தது.

அதற்குப் பிறகு அப்பா பாடி நான் கேட்டது காரைக்குடியில்
இருந்த போது.
அப்போது அழகப்பா கல்லூரி ஹாஸ்டல் எங்கள் க்வார்ட்டர்ஸுக்கு எதிர் திசையில் இருந்தது.
அங்கே மதிய வேளைகளில் 
திரைப்பாடல்கள்  ஒலிக்கும்.


பேரன் பேத்தியோடு அப்பா அப்போது கற்றுக் கொண்ட 
பாட்டு மஹராஜா ஒரு மஹராணி பாடல்:)
சில வருடங்களில் கல்பாக்கம்  ஊருக்கு
மாற்றலாகி வந்தார்கள். வேலைத் தொந்தரவு கொஞ்சம் அதிகரித்தாலும்
அப்பாவும் அம்மாவும் மிக ரசித்த காலம் அது.
சென்னையிலிருந்து குழந்தைகள்
தாத்தா பாட்டியோடு இருகப் போய் விடுவார்கள்.
வீட்டிற்கு எதிர்த்தாற்போல்
கடற்கரை. 
அங்கே திறந்த வெளி அரங்கத்தில் 
பார்த்து கேட்ட படம் அன்னக் கிளி.1976.

ஏதோ உற்சாகமாகச் சொல்ல வந்தவரைக் குழந்தைகள்
சூழ்ந்து கொண்டதும்,
இந்த டான்ஸ் உங்களுக்குத் தெரியுமா என்று 
''மச்சானப் பாத்தீங்களா'' என்று நடன அசைவு கொடுத்தாரெ
பார்க்கணும்!!!

நான் ,அம்மா,குழந்தைகள் அசந்து போய்விட்டோம்.
55 வயதுக்கு நல்ல உடல் கட்டுக்கோப்பாகத் தான் வைத்திருந்தார்.
அல்சர் வந்து குணமான நேரம்.

மருமகள்கள் எல்லாம் வந்த பிறகு அவ்வளவாக
இல்லை. வீட்டுப் பெரியவராகிவிட்டார்:)


Kalpakkam beach

Appa 1968.


Mr Rajamani and Kishore Kumar

வேறு எதையோ தேடப்போய் இந்தப் பாடகர் கிடைத்தார். யார் என்று தெரியாது. அருமையாகப் பாடி இருக்கிறார்.
அதுவும் மிகப் பிடித்த கிஷோர்குமார் பாடல்.கிஷோர் குமார் அவர்களின் குரல் சிறப்பை எட்ட முடியாது.
இருந்தாலும்  நல்ல முயற்சி. 
நன்றாகப் பாடத் தெரிந்த சிலர் நம்மிடையே இருக்கிறார்கள்.
முக்கியமாக எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்+ நம் கீதா ரங்கன்.

நல்ல ஞானம். 

இந்த யூடியூப்  வேலை செய்யவில்லையானால்
வீடியோ க்ளிக் செய்து நேராகக் கேட்கலாம்.

Monday, December 07, 2020

அன்றாட களிப்புகள் சில .........

கௌரி கல்யாண  வைபோகமே.

அன்புத் தோழியின்  பேத்தி திருமணம் 
பிரமாதமாக  நடந்தேறியது. சென்னையில் இப்போது வெகுவாக நோய்த் தொற்று குறைந்திருப்பதாகச் சொன்னார்கள்.++++++++++++++++++++++++++


வல்லிசிம்ஹன்
+++++++++++++++++++
கல்யாணப் பெண் ஆஸ்திரேலியாவில் படிப்பவள்.
மணமகனும் அங்கேயே கிடைத்ததால்   இணைய வழி நிச்சயம் செய்து 

இரு வார விடுமுறையில் வந்தவர்களுக்குத் திருமணம் செய்து அனுப்பி வைத்தாச்சு.

ஜெட் ஸ்பீட்  என்றால் இதுதான்.

பெரிய வீடு என்பதால்   , வீட்டுக் கூடத்தில் முக்கிய உறவினர்களை 
மட்டும் அழைத்து  எந்த முக்கிய   பத்ததிகளையும் 
விடாமல் ஒரு வேளை    பந்தி , நலங்கு  என்று  நிறைவேற்றினார்கள்.

மற்றவர்கள் இணையத்தில் கண்டு களி த் தார்கள்.
எல்லோருக்கும் விஸ்தாரமான ரிசப்ஷன் வருகிற வருடம்  தருவதாக உறுதி 
சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்க மணமக்கள் .

இந்தத் திரை அரங்கம் திண்டுக்கல்லில் நாங்கள் 
பல திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்த இடம்.
இப்போது இடிக்கப் போகிறார்களாம்.
பழைய செய்திதான். இந்தத் தொற்று பல ஆயிரக்கணக்கான  மக்களின் 

வாழ்வில் பல சோகங்களைக் கொண்டுவந்துவிட்டது.
அதில் ஒன்று சினிமா திரை அரங்குகள்.

வாழ்க்கையின்  ஒரு  பெரிய பங்கு  திரைப்படங்களுக்கு உண்டு,.
இப்போது எல்லாமே இணையத்தில் கிடைக்கும் காலம்.

நாங்கள் வளரும் காலத்தில்  குதிரை வண்டியில் ஏறி சினிமா பார்க்கப் 
போவதே ஒரு விழா,.
வெளியூர்ப்பயணங்கள்   ஒரு விழா.

எல்லாமே நிறைந்திருப்பது போல நாட்கள் நகரும்.
தோழிகளுடன்  பேசிக் கழித்த நாட்கள் 
இப்போது வாட்சப் வாசகர்களோடு   ஓடுகிறது.

நமக்கென்று  ஒரு வளையம். நட்பு, அன்பு எல்லாம் சேர்ந்து 
நம்மை நடத்துகிறது. 
இணையத்துக்கு என் நன்றிகள்.

எங்கள் வீட்டில் இருந்து கொண்டு


  காவல் செய்து ,செடிகளைக் கவனித்துக் கொண்டு வந்தவர் இரண்டு நாட்கள் முன் இறைவனடி சேர்ந்தார்.
அவர் அங்கே  ஐயப்பனார் போல இருந்ததால் நான் மிக நிம்மதியாக இருந்தேன்,.
அவரது பேரன் பேத்திகள் மாலை 
நேரத்தில் வந்து விளையாடும்.
வீடே    களிப்பில்  அமிழ்ந்து போல ஒரு தோற்றம் கொடுக்கும்.
இனி அவர் குடும்பத்தார் மீண்டு வரவேண்டும் 
என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் அன்பு அருணாச்சலத்துக்கு 
விடை கொடுக்கிறோம்.
அவரை மாதிரி நேர்மையான மனிதரைக் காண்பது மிக மிக அபூர்வம்.இன்று முதல் அவர் புதல்வர்கள் 
முறை போட்டு இருக்கப் போகிறார்கள்.கடவுளுக்கு 
நன்றி.

எல்லோரும் வாழ்க வளமுடன்.









Wednesday, December 02, 2020

இப்போது இங்கு........கொடுக்கும் செவ்வாய்.



வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
இன்று இங்கு செவ்வாய்க் கிழமை.
இந்தமாதம் இந்தக் கிழமை Giving Tuesday என்று அழைக்கிறார்கள்.

வருடம் முழுவதும் கொடுக்காமல் இருக்கிறார்களா என்றெல்லாம்
யோசிக்க வேண்டாம்.

உலகம் முழுவதும் கொடை வள்ளல்கள்
இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதுவும் இந்தத் தொற்று காலங்களில் 
வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் சிரமப்படும்

கோடிக்கான மக்கள். 
எனக்கு ஆச்சரியம் எல்லாம் உலகத்திலேயே
காணும் இடம் எல்லாம் உணவு கொட்டிக் கிடக்கும் நாட்கள்.

வண்டிகள் நிறுத்த இடம் இல்லாமல் 
வரிசையில் நின்று தேவையான பொருட்களை
வாங்கிச் செல்வார்கள். 
அதுவும் விழாக்காலங்கள் என்றால்
80% ஸேல் எல்லாம் பிரசித்தம்.

இப்போது நடக்கும் விஷயங்கள் வேதனைதான். 
பல குடும்ப உறுப்பினர்களைப் பறி கொடுத்து
நஷ்டப்பட்ட  லக்ஷக்கணக்கான மக்கள்.
நிற பேதம் பார்க்காமல் பாதிக்கப் படுகிறார்கள்.
முக்கால் வாசி மத்திய தர மக்கள்.

நம் ஊருக்கும் இங்கே பார்ப்பதற்கும் ஒரே ஒரு
வித்தியாசம்.
இவர்கள் வரிசையாகக் காரில் வந்து வாங்கிச் செல்கிறார்கள்.
இலவச உணவுக் கூடங்கள் நிரம்பி வழியும் படி
உணவுகளைக் குவிப்பதில் எல்லோரும் ஆர்வம்
காட்டுகிறார்கள்.

இன்னும் இன்னும் என்று வாங்கிக் கொள்பவர்கள்
வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
நன்றி சொல்லும் நாள்'' வந்து சென்றது.
அன்று பிரத்தியேக உணவு கொடுத்தவர்களும் 
ஆயிரக்கணக்கு.
இருந்தும் போதாக் குறை வருகிறது என்று சொல்கிறார்கள்.

குழந்தைகள் ஒன்று சேர்ந்து குக்கீஸ், கேக் என்று செய்து
வீட்டு வாசலைல் வினியோகிக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் அம்மாக்கள்

பலவகைப் பழவகைகள் ,ரொட்டி, Applepie செய்து 
செய்து விற்று வரும் பணத்தை சால்வேஷன் ஆர்மிக்குக்
கொடுக்கிறார்கள்.
அதுவும் இந்தக் குளிர் நாட்களில் , மேலுடுப்பு இல்லாமல்
அவதிப் படுபவர்களுக்கு,
படுக்கைகள், போர்வைகள், தலைக் குல்லாக்கள்,
ஸ்வெட்டர், பழைய ஜாக்கெட் என்று 
குமித்து விடுகிறார்கள்.
முன்பு எல்லாம் இங்கே எல்லோரும் பழைய துணிகளை
ஒரு தொட்டியில் போடும்போது
நம் ஊர்க்குழந்தைகளுக்கு உபயோகப் படுமே 
என்று வருத்தப் படுவேன்.
இப்போது எல்லாமே மாறிவிட்டது.
இறைவன் கால நிலையை மாற்றி  எல்லோரையும்
உணர வைத்துக் கொண்டிருக்கிறான்.


Friday, November 27, 2020

அன்பு கோமதிக்காக.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

என்ன சொல்லி ஆறுதல் சொன்னாலும் மாறாத
துன்பம். 
இறைவன் தன் அருமைத் தொண்டரை அழைத்துக் கொண்டார்.
அதுவும் இவர்களைப் போல நன்மை
சொல்லும் தம்பதியர் கிடையாது என்று சொல்லும்படிக் 
கணவரைப் பார்த்துக் கொண்டு நேசித்த,
நேசித்துக் கொண்டிருக்கும் அன்பு
மனைவி.

எனக்கு இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை.
அன்பு கோமதிக்கு ஆறுதல் கொடுப்பதும் அந்த இறைவனின் 
கடமை.
குழந்தைகளும் குடும்பமும் அவரைப் 
பொன் போலப் பார்த்துக் கொள்ளட்டும்.

ஈசன் அடி போற்றி.
வாழ்க வளமுடன்.

https://youtu.be/CdOdYrmPWaQ




Thursday, November 26, 2020

அஞ்சலி. திரு. திரு நாவுக்கரசு அருணாச்சலம்.

வல்லிசிம்ஹன்


மஞ்சள், குங்குமம், கற்பூரம், திரிகள்
நிறைய வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழங்கள் என்று
முதல் நாள் தான் வாங்கி வைத்திருக்கிறார் சார்.
திருக்கார்த்திகைக்காக.

அன்பின் கோமதி சொல்லி அழும்போது மனம் விண்டு போனது.
அதெல்லாம் அவருக்கே உபயோகப்
படப் போகிறது என்று தெரியாமல் 
போய் விட்டதே. என்று மனமுருகி கலங்கினார்.

வாய் நிறைய அனைவரையும் வாழ்க வளமுடன் என்று
வாழ்த்தியபடி இருக்கும் அன்பு கோமதி அரசுக்கு
 இறைவன் நல்ல வழி காட்டுவார்,.
இந்த அதிர்ச்சி கொஞ்ச நாட்களில் தீராது.

கண்முன்னே ஒரு உயிர் பிரிவது காண்பது கொடுமை.
தன்னால் முடிந்த முதல் உதவிகளைச் செய்திருக்கிறார்.
மூன்று டாக்டர்கள் வந்து உதவி செய்திருக்கிறார்கள்.

சட்டென்று தான் வணங்கும் கைலாயப் பெருமானிடம் 
கலந்துவிட்டார் திரு. திருநாவுக்கரசு சார்.

அவர் வரைந்த பொக்கிஷங்களைக் காத்து
வைப்பார்கள் அவரது செல்வங்கள். 
அனைவருக்கும் என் அன்பு.

Tuesday, November 24, 2020

மீனாட்சி அம்மாள் சமைத்துப் பார் புத்தகம்



வல்லிசிம்ஹன்

குமுட்டி அடுப்பு



50 வருடங்களுக்கு அப்புறம் இந்தப் புத்தகம் கிடைத்தது.
கோவையில் வாங்கின புத்தகங்கள் இன்னும் பெரிதாக இருக்கும்.
அச்சும் தெளிவாக இருக்கும்.
மகள் வைத்திருக்கும் இந்தப்
புத்தகம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

அதில் தான் கரி அடுப்பு ஏற்றும் முறையும் , விறகடுப்பு பற்ற வைக்கும் முறையையும் 
படித்தேன்.
அம்மாவிடம் ஏற்கனவே கற்ற முறைதான்.
ஆனால் இவர் ,அந்தக் காட்சிகளைக் கண்முன் 
கொண்டு வந்துவிட்டார்.
நான் இன்னும் அப்பொழுது படித்த முறையில் தான் சமைக்கிறேன்.

புது விதமாக  தளிகை என்று சொல்லி வழக்கத்திலிருந்து மாற
இன்னும் தயக்கம்.
கும்ட்டி அடுப்பு ஏற்ற, முதலில் பொடிக்கரியை அடுப்பின் மேல் பாகத்தில் தூவி
தேங்காய் நாரை வைத்து விட்டு
அடுப்பு வாயிலில் காகிதத்தைக் கிழித்துபோட்டு 
அதில் நெருப்பு காட்டி
அடுப்பு பயன்படுத்த ஆரம்பிக்கச் சொல்லும் அழகு
மனம் நிறைகிறது.
இப்போது பொடிக்கரி பற்றிக் கொள்ளும்.
அதன் மேல அன்றைக்குத் தேவையான
கரியைப் பரப்பி
லேசாக விசிற ஆரம்பித்து தண்ணீர் கொதிக்க வைத்து
காப்பி ஃபில்டரில் கொட்டி,
பிறகு பாலைக் காய்ச்சி, 
காப்பி கலக்க வேண்டியதுதான்.
அரைமணி நேர மாவது ஆகும்.

Joe Biden WINS GSA!!!!!!!!

Sunday, November 22, 2020

என்ன ஒரு ரிதம்!!!!!!

வல்லிசிம்ஹன்திண்டுக்கல்/மதுரை/  திண்டுக்கல்   1961
++++++++++++++++++++++++++++++++++++++++++++

எதோ நினைவுகள்    பாடல் பின்னணியில், எழுத  ஒரு ஊக்கம்.
 பாட்டியும் எங்களுடன் வந்து தங்க ஒரு யோசனை இருந்ததால் 
 வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது.
 பள்ளிக்கூடத்துக்கு அந்தப் பக்கம் ,அதாவது பின் வாசல்   வழியாகப் போனால்  ஒரு குறுக்கு ரோடு வரும். அது வழியாக  மெயின் ரோடு. அதைக் கடந்தால் பன்றிமலை சுவாமிகள் பங்களா  வரும்.
அதற்கு எதிராகப் பத்து வீடுகள்   வரிசையாகக் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.
5 ஆம் நம்பர் வீட்டுக்கு நாங்கள்  கிரஹப் பிரவேசம் செய்தோம் .
கார்த்திகை மாதம் என்று நினைக்கிறேன்.
 வீடுகளுக்கு சுற்றி நல்ல சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டிருந்தது. அடக்கமான வீடு. வாசலில் மூங்கில் தப்பைகளால் அழி போட்டு அடைத்த பெரிய வராந்தா.
அதற்கப்புறம் ஒரு வராந்தா, முடிவில் பெரிய கூடம். கூடத்துக்கு  இரு  வாசல் ஒன்று தனி அரைக்கும், இன்னொன்று சமையலறைக்கு. பிறகு இப்பொழுது  சொல்லப்படும்   யுடிலிட்டி வெராந்தா.  பாத்திரங்கள் தேய்க்க. 
 தண்ணீர் நிரப்ப இரண்டு பெரிய தவலை களும் அண்டாக்களும். கொண்ட நல்ல முற்றம்.
 அங்கே இருந்து இறங்கினால் குளிக்கும் அறையும் ,தோய்க்கும் கல்லும்.
 ஒரு துளி மண்ணோ ,செடியோ இல்லை. அம்மா எப்படியோ துளசி மாடம் வாங்கி துளசியும் நட்டு விட்டார்.
பத்துவீடுகள் முடிவில் ஒரு பெரிய  கிணறு. அப்பாடி  நல்ல தண்ணீர்க்  கிணறு. அதற்குப் பின்னால் வயல் வெளி. அதற்குப் 
பிறகு ரயில் பாதை. தூரத்தில்  சவுந்திரராஜா மில்ஸ் வீடு. தனி விமானம் வைத்திருந்தவர்கள்.

பத்து வீடுகளுக்கு வெளியே அழகான பிள்ளையார் கோவில். அரச மரத்தடிப் பிள்ளையார்.
தினம் காலையில் நானும் பக்கத்து வீட்டு  ஜில்லுவும்,
தம்பி ரங்கனும்   8 .15ற்கு கிளம்பிவிடுவோம்.
மாதா மாதம் அப்பா மதுரை சென்று பாட்டியைப் பார்த்துவிட்டு, இரண்டு நாள் காரியங்களை முடித்து வருவார்.
சித்தப்பா நல்லபடியாக வீடு ஒன்று கட்டி முடித்தார். தாத்தா வருஷாப்திகம்  முடிந்ததும்  கிரஹப் பிரவேசம் நடத்த தீர்மானம்.
எங்கள்  நாட்கள்  ஆனந்தமாக விளையாட்டும் தோழர்கள் தோழிகளோடு ஆட்ட ஓட்டத்தோடு 
ஓடியது.    நானும் ஒன்பதாம் வகுப்பு போயாச்சு. முரளி எட்டாம் வகுப்பு, ரங்கன் ஆறாம் வகுப்பு செயின்ட் மேரி பள்ளியில் சேர்ந்தாச்சு.
அடுத்த புரட்டாசியில்  மதுரைக்கு நாங்கள் சென்று திரும்பும் போது பாட்டி எங்களோடு வந்துவிட்டார்.
பிறகென்ன ஒரே சந்தோஷம் தான்.

Saturday, November 21, 2020

Thursday, November 19, 2020

வீடு நோக்கி ஓடிச் செல்லும் நெஞ்சம்....


Side view of the house.



வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.வீட்டுக்கு வெளியே வைக்கப் பட்டிருக்கும்
காமிராப் 
படங்களைக் காண்பதே என் மகிழ்ச்சி.

இன்னும் அரைமணி நேரத்தில் பால் வண்டிகள்,
வேக நடை பழகுபவர்கள் , செல்லங்களை
நடைக்கு அழைத்துச் செல்பவர்கள்
என்று காலை வேளை ஆரம்பிக்கும்.. இன்று மழை இல்லை.
நல்லதுதான்.

40 ஆண்டுகளுக்கு முன் ஒரு  இஞ்சினீயரிங்க் (Popular Mechanics)
சம்பந்தமான புத்தகத்தை  சிங்கம் தருவித்துக் கொண்டிருந்தார்.

அதில்பிற்காலத்தில்  தொலைபேசியில் பேசுபவர்களை
நேரில் பார்த்துப் பேசலாம். என்று வந்தது,.
இப்போது நாம் வீடியோ அரட்டையில் பார்த்துத்தான்
பேசுகிறோம்.

அதே போல், மானசீகமாக நாம் நினைக்கும் இடத்துக்குப் 
போகும் வழியும் கிடைக்கலாம்.
நான் நம்புகிறேன்.




Monday, November 16, 2020

Padithal Mattum Podhuma Full Movie Part 5

வல்லிசிம்ஹன்.
எனக்கு மிகவும் பிடித்த கட்சி.

Saturday, November 14, 2020

Friday, November 13, 2020

பூனை கண்ணை மூடிக் கொண்டால்.......

Vallisimhan
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இந்தத் தொற்று சீக்கிரமே விலக  இறைவன் 
அருள் செய்ய வேண்டும்.
கேள்விப்படும் செய்திகளால் மன நிலையே 
பிறழ்ன்று போய் விடுகிறது.

இயற்கை ஒருவிதமாக நம்மைப் பாதித்தால் மனிதர்கள்
ஒருவிதமாகத் தறி கெட்ட நிலையில் 
சிந்திக்கிறார்கள்.

எல்லாம் மாறும். நம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை!!!!

நட்புகள் நம்மைக் காக்கின்றன.
அந்தத் தொடர்பை விடாமல் பிடித்துக் கொள்வோம்.

ஏகப்பட்ட பொறுமை வேண்டும் எல்லா நிலைபாடுகளையும் 
தாண்டி வர.
நம் விருப்பப் பிரகாரம் ஏதோ நடக்கவில்லை...
பிரதியாக வேறேதோ நடக்கிறது என்றால் 
அதற்கும் ஒரு பொருள் இருக்கிறது 
என்பதை எங்களுக்கெல்லாம் குருவாக இருப்பவர் அடிக்கடி
சொல்வது காதில் ஒலிக்கிறது.
அந்த ஞானக் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் நன்மைகள் செழிக்க வாழ்த்துகள்.




நன்மைகள் தொடரட்டும்.

  அனைவருக்கும் இனிய தீபாவளித் திரு நாள்  வாழ்த்துகள்.
என்றும் ஒளி நிறைந்த நாட்கள் தொடரட்டும்.
 வல்லிசிம்ஹன்

Wednesday, November 11, 2020

வெற்றியும் தோல்வியும்

வல்லிசிம்ஹன்

நம் ஊரை நினைத்து நினைத்து மகிழ்கி'றேன்.

வாழ்வில் அரசியலில் எத்தனை போட்டி இருந்தாலும்
தேர்தல் என்று வந்த பின்னே
மக்கள் தீர்ப்பு தெய்வத் தீர்ப்பு என்று வணங்கி விடை
பெறும் 
நல்லவர்களையே பார்த்து உரம் பெற்றிருக்கிறேன்.
தேர்வுக்கு முன்னும் பின்னும் 
முட்டி மோதி அரசியல் செய்வார்கள்.ஆனால் 

தேர்தலையே அசிங்கப் படுத்த மாட்டார்கள்.

இங்கே ஒரு வயதானவருக்கு உடல் நலமே பாதிக்கப் பட்டு விட்டது.
அவர் எதிர்பார்த்த தலைவருக்கு இன்னும் அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்று வருத்தப் பட்டு 
பேசிக்கொண்டிருந்தவருக்கு 
ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டதாம்.

நல்ல வேலை உடனே கவனித்ததில் நலமடைந்து 
வருகிறார்.
ஒரே ஒரு  மனிதனின் அக்கிரம செயல்
எத்தனை நபர்களைப் 
பாதிக்கிறது. இது அராஜகம் இல்லையா.
காலம் மாறும்.
என்னை முதலில் நான் கவனிக்கிறேன்.
கொஞ்ச நாட்கள் செய்தி படிக்காமல் 
இருக்கவேண்டும்.அவ்வளவுதான்.
இறை அருள் நிறையட்டும்.

சிரிப்பு சில சமயம் உதவும்:)

Seven-Year-Old Mykal-Michelle Harris on Mixed-ish, Mariah Carey & the 80's

Monday, November 09, 2020

நலம். நலமே அறிய ஆவல்.

வல்லிசிம்ஹன்

அனைவரும் நலமாக வாழ இறைவனிடம் பிரார்த்தனைகள்.

இங்கு அதிகரித்து வரும் தொற்றிலிருந்து
விடுபட பெரும் முயற்சிகள் நடந்து வரும்போது,
எங்கள் சப்டிவிஷன் ஹாஸ்பிடலில் இனி

இடம் இல்லை என்ற செய்தி படிக்கும் போது இன்னும் திகைப்பாக
இருக்கிறது.

வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து உணவுண்ட
செவிலியர் குழு பாதிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த நிலைமையில் வைத்தியரை அணுகி
சந்திக்கவே பயம் வருகிறது.

இப்போது இன்னாட்டு அதிபர் தேர்தலில்
வெற்றி பெற்றவர்கள் விதிமுறைகளை அனுசரிக்கிறார்கள்.

அவர்கள் வெற்றியைக் கொண்டாடிய மக்களைக்
காணும்போதும் நம் மனம் கலவரப்படுகிறது.
ஆனால் அவர்கள் இத்தனை நாள் அனுபவித்த 
வேதனைகள் தீர்ந்தன என்ற நம்பிக்கையோடு தெருவில்
கூடிய விதம் ஆச்சரியப்பட வைத்தது.

இங்கே ஒரு எலியின் கதை நினைவுக்கு வந்தது.
விவசாயிகளுக்கு மிகவும் எதிரியாகச் செயல்படும் என்று தாத்தா
 சொல்வார்.
தன்வளையில் கொண்டு போய்த் தானியக் கதிர்களை வைத்து
விடுமாம். தானும் உண்ணாதாம்.
அதை அதன் வளையிலிருந்து 
வெளியேற்றுவது மிக மிக சிரமம்.
ஒரு இடத்தில் அடைத்தால் இன்னோரு இடத்தில்
வெளிவரும் என்பார்,
இந்த ஊரிலும் ஒரு பெரிய பெருச்சாளி அது போல இருக்கிறது.

அதை அதனுடைய வீட்டிலிருந்து அகற்ற
அனைவரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தன்னால் முடிந்த அளவு
சேதம் ஏற்படுத்திவிட்டே அது போகும் என்று
நிபுணர்கள் சொல்கிறார்கள்.

நேர்மை உடன்பாடு,ஒற்றுமை
எல்லாம் அதனிடம் செல்லாது.
வெளியே வந்தால் தூக்கிச் செல்ல 
அதைவிடப் பெரிய கழுகுகள் காத்திருக்கின்றன.

அவைகளிடமும் இதற்கு நேர்த்திக்கடன் இருக்கிறதாம்.
பார்க்கலாம். என்ன நடக்கின்றது என்று,.
நலமே நடக்கவேண்டும்.



14 ஆண்டுகளுக்குப் பின் நிஜமாகும் பைடனின் கனவு! இந்தியாவுக்கு உச்சபட்ச மு...

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் 
திரு ஜோ பைடன், திருமதி கமலா ஹாரிஸ்
இருவருக்கும்  நல்ல் ஆட்சி செய்ய இறைவன்
உதவ வேண்டும்.

நம் நாட்டிலிருந்து 19 வயதில் அமெரிக்கா வந்த திருமதி ஷ்யாமளா
கோபாலனின் மகள் திருமதி கமலா.

இங்கு சந்தித்த  
 ஜமைக்கா நாட்டை சேர்ந்த திரு ஹாரிஸ் அவர்களைக்
காதலித்து மணமுடித்தார்.

ஒரு விஞ்ஞானியான அம்மாவும், பொருளாதார நிபுணரான
அப்பாவுக்கும் மணமுறிவு ஏற்பட்ட போது 
கமலாவும் தங்கை மாயாவும் குழந்தைகள்.

தன் குழந்தைகளை தன்னம்பிக்கை மிக்கவர்களாக
வளர்த்த திருமதி ஸ்யாமளா,
புற்றுக்கு நோயில் மறைந்தார்.
கறுப்பினத்தவர் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து முடித்து
வெற்றியுடன்   கலிஃபோர்னியா மாகாணம்
வந்தவர் பலவித போராட்டங்களுக்கு
இடையில் பப்ளிக் ப்ராசிக்யுட்டராக தேர்ந்தெடுக்கப்
பட்டு, 
அட்டர்னி ஜெனரலாகவும் ஆனார்.
இதோ தன் 57 ஆம் வயதில் கறுப்பினத்தவர் அடைய முடியாத
உயரத்துக்கு சிகரம் தொட்டு விட்டார்.

நம் ஊர் அடையாளம் இருந்தாலும் 
பொதுவாகக் கறுப்பினத்தவரே இவரைத் தங்கள் ஆதரிசத் தலைவியாகத்
தாங்கள் இதுவரை சந்தித்த இனவெறுப்பிலிருந்து
மீண்டவராக,
பெண் இனத்தின் பிரதி நிதியாகப் பார்க்கின்றனர்.
நேற்று நடந்த மாபெரும் கூட்டத்தில் 
அனைவரின் தோழமையையும் சந்தித்த நல்ல மங்கையாகவே
பார்க்கிறேன்.
எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற 
வேண்டிய பெரிய பொறுப்பு 
அவர் தோளில் ஏற்றப் பட்டிருக்கிறது.
ஒரு இந்தியப் பிரஜையாக 
திருமதி கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.
வெகு முன்னெச்சரிக்கையுடன் தன கடமைகளை 
நிறைவேற்ற இறைவன் துணை நிற்க வேண்டும்.
அவரது கணவருக்கும் நம் வாழ்த்துகள்.
கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.





Wednesday, November 04, 2020

வெற்றி மீது வெற்றி

வல்லிசிம்ஹன்
 ராமன் அரசாண்டால் பெண்கள் நிம்மதி.
ராவணன் ஆண்டால் சொல்லமலேயே புரியும். 

நம்மூர் ராவணனாவது வீணை வாசித்து 
சிவனை வணங்கி , ஒரு நிமிடம் மயங்கித் தவறு இழைத்தான்.
சில இடங்களில் சில மனைவிகள் என்று
ஆடியவர்களையும் நமக்குத் தெரியும்.

பேச்சு மொழிகளால் வசியம் செய்தவர்கள் சிலர்.
உண்மை வார்த்தைகளால் கவர்ந்த காமராஜ் ,கக்கன் சிலர்.

ஆனால் நேர்மைக்கும் ஒரு பத்தினி,ஒரு சொல் என்ற 
வார்த்தைக்கும்  ஆளைத் தேடினால் இப்போது
கிடைப்பது சிரமம்.

தோற்றத்தையும் ஆளுமையையும் கொண்டு
மக்களை வென்றவரையும் தெரியும்.
நல்ல மனம் கொண்டிருந்தாலும் தோற்றவரையும் தெரியும்.

தீமை இழைத்தவரை விதி எப்படித் தோற்கடித்தது என்றும்
பார்த்திருக்கிறோம்.
வினாச காலம் வந்தால் மக்களுக்கும் விபரீத புத்தி
வரும் என்றும் பார்த்திருக்கிறோம்.
வலது கையை உயர்த்திப் பிரமாணம் செய்து
இடது கையால் கையெழுத்துப் போட்டு
தன் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டவர்களும் உண்டு.
உலகம் முழுவதும் பொய்மை 
பெருகினாலும் மனம் பிறழாமல் நம் கடமையைச் செய்வோம்.


Monday, November 02, 2020

மஹாலயத்தில் தாத்தாவும் பாட்டியும் 2004

Vallisimhan

 சேஷிப் பாட்டியும், பத்து தாத்தாவும்  காய்கறி,சேப்பக் கிழங்கு 
வகைகளை பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

மஹா பரணிக்கு பக்ஷ சிராத்தம் செய்வது அவர்களுக்கு வழக்கமாகி இருந்தது.
தாத்தாவுக்கு 80 வயதாகிறது. 40 வருடங்களாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தார்.

பாட்டிக்கும் அலுப்பு என்பதே கிடையாது.
காலையில் எழுந்திருக்கும் போதே 
பெரியவர்களெல்லாம் வீட்டில் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே எழுந்திருப்பார்.
கணகளைக் கசக்கைக்
 கைகளைவிரித்துக் கராக்ரதே வசதே லக்ஷ்மி என்று மற்ற ஸ்லோகங்களையும்
சொல்லியே எழுந்திருந்து, கைகால்களைச் சுத்தம் செய்து குளித்து விட்டு அகண்ட விளைக்கை ஏற்றிவிடுவார்.

கணவருக்குக் காலையில் கஞ்சி குடிக்கும் வழக்கம் என்பதால்
அவரும் முறைப்படி சந்தியா வந்தனம் செய்தபிறகு 
கஞ்சி கொடுப்பார்.

கிராமத்து வாழ்க்கை மெதுவே ஆரம்பிக்கும். 
அன்றைக்கு வேண்டிய பண்டங்கள் தயார்.
திதிக்கு ஏற்பாடு செய்த வைதிகர்கள் வந்து குளித்து
புது வேட்டிகள் உடுத்தி தயார் ஆவதற்குள்
பாட்டி க்ளிப்தமாக சிராத்த சமையலை முடித்து விடுவார்.

பரிமாறுவதற்கு மட்டும் பக்கத்து வீட்டு
சாலாட்சியை அழைத்துக் கொள்வாள்.
மஹாலய தர்ப்பணம் முடிந்து வந்தவர்கள் கிளம்பிய பிறகே
தன் உணவை எடுத்துக் கொள்வாள்.
தங்களுக்கு வேண்டும் பட்சண பலகாரம் போக மீதியை
 சாலாட்சியின் கையில் கொடுத்துவிடுவாள்.

இருவருக்கும் இரவு பட்சணமே பலகாரம் என்பதால், நிம்மதியாகக்
காலை நீட்டி உட்கார்ந்து மாமியார் குண நலன் களையும், மாமனார்
கோபத்தையும்  அலசிக் கொண்டிருந்தார்கள்.

என்னவோ அண்ணா, அவர்கள் கொடுத்த புண்ணியம் நம் குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள்.
நமக்குப் பிறகு அவர்கள் விடாமல் இந்தப் புண்ணிய காரியத்தை தொடர வேண்டும்.

ஆமாம்மா. செய்வார்கள். அவர்கள் ஸந்ததியின் நன்மைக்காக மட்டுமில்லாமல்
பொது நலனாக தான தர்மங்களையும்  செய்ய வேண்டும் என்பதையும்
நாம் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
இன்று பூர்த்தியான  மஹாபரணி ஸ்ராத்தம் நல்ல விதமாக நடந்ததும் அவர்கள் கருணை.

இதே போல அம்மாவின் நினைவு நாள் அடுத்த மாதம் வருகிறது.
சுமங்கலிப் பிரார்த்தனையும் செய்ய வேண்டும். 
உன் நாத்தனார்க்கு அழகாப் புடவை வாங்கிடலாம். ஜாம் ஜாம்னு நடக்கும் பாரு என்று
ஆனந்தமாக ஊஞ்சலில் படுத்துக்கொண்டார் பத்து தாத்தா.
தரையிலியே  படுத்துப் பாட்டியும் உறங்க ஆரம்பித்தார்.

++++++++++++++++
P.S.மீள் பதிவு. மீட்கும் பதிவு. பின்னூட்டங்கள்
காணாமல், இமெயில் முகவரியும் தொலைந்த காலத்தில்
பதிவு மட்டும் பிழைத்த வருடம்:)
தாத்தா பாட்டி வாழ்க. படம் இணையம்.