Blog Archive

Saturday, January 12, 2019

28 ஆவது நாள்பாசுரம் கறவைகள்

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++ 28 ஆவது நாள் பாசுரம்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்.
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்துந்தன்னை
பிறவிப் பெருந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறையொன்றும் இல்லாத கோவிந்தா உந்த
ன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளொம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்//

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கோதையின் இடைச்சி அவதாரம் இன்று கண்ணனுடன்
உணவருந்துவதில் பேரானந்தமாக நிறைவேறுகிறது.
கண்ணா, நாங்களும் உன்னுடன் கறவைகள் மேய்க்க வருகிறொம்
கோதுளி எங்கள் பாவங்களை விலக்கும்.
உன் நாமம் நாங்கள் எப்படிச் சொன்னாலும் எங்களைக் காக்கும்.
 எங்கள்
வலது இடது தெரியாத ஆய்ச்சியர் நாங்கள்.
உன்னைப் போற்றிப் பாடும்போது கூட பிழைகள்
எழ வாய்ப்புண்டு. ஆனால் உனக்கு அது ஒரு பொருட்டல்ல.
கருணை வள்ளலான கோவிந்தன் நீ
எங்களுக்குக் கொடுக்கும் பரிசு இந்தக் கலந்த உணவை
எங்களுடன் உண்ணுவதுதான். எங்களுக்கான பறை.

கோவிந்தன்,கோதை பாதங்களில் சரணம் புகுவோம்.

கொசுறு செய்தி,பாட்டி செய்யும் ,பெருமாளுக்குக் கண்டருள
வைக்கும் தயிரன்னம் ,அவரது பெரியவர்களிடம் கற்றது.

குழைய வடித்த அன்னத்தில் , அன்று கறந்து அன்று காய்ச்சிய
பாலைக் கலந்து,துளி உப்பைப் போட்டு வைப்பார்.
கூடவே கொஞ்சம் வெண்ணெய் கலக்கப் படும்.
கொஞ்ச நேரம் கழித்து ஒரு தேக்கரண்டி த்யிர் கலந்து,
கடுகு,பெருங்காயம், கருவேப்பிலை,வெள்ளரித்துண்டுகள்
மாங்காய்த்துண்டுகள்  கலந்து பெருமாள் சன்னிதிக்குச் சென்றுவிடும்.

திருப்பாவை முப்பதும்சொல்லி,பல்லாண்டு பாடப்பட்டப் பின்னர்,

ஆராதகர் மணியடித்து நிவேதனம் செய்து மூடிய பின்னர்,
அதிகாலை ஏழுமணிக்குச் சுடச்சுட தயிர் சாதம்
கைக்கு வரும். அந்த அமிர்தம் போல் இதுவரைக்கும் வாய்க்கவில்லை.

No comments: