Blog Archive

Monday, January 07, 2019

முதுமை நம்மை அண்டும்போது ..2

Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழவேண்டும்

பழைய பதிவில்  இந்த ஊர்த்  தோழிகள் சிலர்  சந்தித்தோம் இன்னொரு தோழி  வீட்டில்  யாரும் இல்லாத சூழலில் பேசுவது இனிதாக இருந்தது.
அதைப்  பற்றி  எழுதி இருந்தேன்.
பிரேமாவுக்கு  யாருக்காவது எதாவது சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் .
 எங்களுக்கும்  டீ ,குணுக்கு என்று கொண்டு வந்து வைத்தாள் .

இன்னொரு பெண்   வருகிறார்கள்  AUNTY .திருமதி  ஸ்ரீபதி. ஓ அவர்களுக்கு 80 வயது இருக்குமே  என்றேன்.
பிரச்சினைகளுக்கு வயது வித்தியாசமே கிடையாது
என்று சிரித்தார் பிரேமா.

சரி உன் கஷ்டம்  என்ன. நீ எதற்காகக்  கோவை போகணும்.
இங்க இருக்கிற சௌக்கியம் அங்கே வருமா என்றார் சுசிலாபென்.

வசதி மட்டும் வாழ்க்கையா பென் .கோவில்களுக்குப் போகணும். நினைத்தால் சமையல் இல்லாவிட்டால்
வாங்கி கொள்ளலாம்.
வண்டியும் டிரைவரும் வைத்துக் கொள்ளலாம்.
இந்தக் குளிரிலிருந்து ஓடிவிடலாம்.
அக்கா,தங்கை ,தம்பி என்று பார்த்துக் கொள்ளலாம்.
எனக்கு சமைத்து அலுத்துவிட்டது.

இரண்டு இடத்திலும் பேரன் பேத்திகள் வளர்ந்து கல்லூரிப் பருவம்  வந்தாகிவிட்டது.

மாமியார் மாமனாருக்காக வந்தோம். எங்கள் வழியே இவர்கள் வந்தார்கள். இனி விலகிக் கொள்ள வேண்டியதுதான்.
என்று பெருமூச்சு விட்டார்.
வாசல் மணி ஒலித்ததும் சென்று  சாராம்மா ஸ்ரீபதியை
உள்ளே அழைத்து வந்தார்.
ஒரு வருடத்தில் அடையாளம் தெரியாமல் இளைத்திருந்தார்.

அவருக்கு ஒரே மகன்.பாலக்காட்டைச் சேர்ந்தவர். மகன் வங்காள பெண்ணை மனந்திருந்தார்.
நல்ல சந்தோஷமான குடும்பத்தைத்  தான் நான் சென்ற வருடம் சந்தித்தேன்.  மகனுக்கு  வேறு வேலை வந்துவிட்டதால் வாரம் முழுவதும் தான் தனியாக இருப்பதாகவும் மருமக்களுக்குத் தன்னைப் பராமரிப்பு சிரமமாக இருந்ததால், ஒரு கேர்டேக்கரை நியமித்திருப்பதாகவும் சொன்னார்.

என்னிக்கு ஈதொண்ணும் வேண்டா. ஞான்  பாலக்காட்டுக்கு மடங்கணும். கோட்டக்கல் வைத்திய சாலால
தேக அபிவிருத்தி  செய்யலாம். மடுத்துப் போயி இ சிகாகோ.
என்றபடி வந்தவருக்குத் தேனீர்  கொஞ்சம் தெம்பு கொடுத்தது.
  யேது  ஒரு வழிக்கும் சம்மதிச்சான் பாடில்லா எண்டே  மோன் //என்று முடித்தார்.

அவருக்குப் பாலக்காட்டில் உறவினர்களும் வீடும் இருந்தது.
அடுத்து  என் நினைப்பு .  என்னைப்  பார்த்தார்கள்.

ரேவதிக்குப் பிரச்சினை இல்லை.  உடம்பை மட்டும் கவனிக்கணும்.
ஊருக்குப் போய் இருக்க  அங்கே ஒன்றும் இல்லை.
 துணை இல்லாமல் இருக்கவும் முடியாது.
இங்க விட்டால் இன்னொரு மகன் வீட்டுக்குப் போயிடலாம் .
அருமையாகக் கவனித்துக் கொள்ளும் மக்கள்.

இல்லையா ரேவதி என்றார் சுசிலா பென் .
நானும் ஆமாம் என்றேன்.

உண்மையும் அதுதானே .
எல்லோர் பிரச்சினைக்கும் விடிவு உண்டு. கொஞ்சம் தாமதமாகலாம்.
காத்திருக்கலாம்.









No comments: