Blog Archive

Friday, December 28, 2018

Positive vibes 2019



Vallisimhan

எல்லோரும் வளமுடன் வாழவேண்டும்

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய நன்றிகளைக் கடவுளுக்குச் சொல்லிவிட்டு,
நல்ல எண்ணங்களே மனதில் மந்தில் இடைவிடாது ஓட அவனருள் தேட வேண்டும்.
சிறு கோபம் தலை எடுத்தால் உடனே நீக்கினால் நல்லது.
இந்தக் கடும் சொல் என் ஆத்மாவைப் பாதிக்காது.
இதை நான் ஏற்றூக் கொண்டு சுமை ஏற்றிக் கொள்ள மாட்டேன்.

தினம் தினம் பூக்கும் புதுப் பூவைப் போல
மனதைச் சுத்தமாக மலர்ச்சியாக வைத்துக் கொண்டால் பாதி துன்பங்கள் தானே அகன்று விடும்..
மிகக் கடுமையான பயிற்சிதான்.

மேலும் மேலும் காழ்ப்பு உணர்ச்சிகளை மனதில் ஏற்றி,
அடுத்த பிறவிக்கும் அதை எடுத்துக் கொண்டு போக வேண்டாமே.
அனைவருக்கும் வரும் புத்தாண்டு மகிழ்ச்சியே கொண்டு வர என் பிரார்த்தனைகள்.
வாழ்க வளமுடன்.










No comments: