Blog Archive

Sunday, December 09, 2018

எட்டாவது படம் ..ஒளிவிளக்கு

Vallisimhan    எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.


#பத்துப்படவரிசையில்எட்டாவது. படம்.
#ஒளிவிளக்கு
#எம்ஜிஆர்,ஜெயலலிதா,சௌகார்ஜானகி
#எம்ஜிஆரின் நூறாவதுபடம்.100.#மதுவிலக்கு உயர்ச்சி#Music by M.S.VISWANATHAN.
நான் இந்தத் தொடரை ஆரம்பிக்கக் காரணமான Raji Muththukrishnan,
தொடர்ந்து கௌரவித்த Hemashrinivasan,Gomathy Arasu,Priya charles Antony,
Laitha Murali, நான் அழைக்க நினைக்கும் சினேகிதிகளிடம்
அனுமதி வாங்கிக் கொண்டு அழைக்கிறேன்.
Phool aur Paththar இந்திப் படத்தின் தழுவலாக எடுக்கப் பட்ட நல்ல படம். எம்ஜியார் முதன் முதலாகக் குடிப்பது போலக் காட்டப்பட்ட படம். அதையொட்டி //தைரியமாகசொல் நீ மனிதந்தானா என்ற பிரபலமான பாடல்.
அவருக்கு நற்போதனைகளைச் சொல்லி
உதவ முனையும் விதவையாக சௌக்கார் ஜானகி.
எம்ஜியாரின் காதலியாக ஜெயலலிதா.
இந்தப் படத்தில் சௌகார் பாடிய// இறைவா உன் ஆலயத்தில்// என்று பாடிய பாடல் எம்ஜியார் உடல் நலம் பெற பட்டி தொட்டிகளில் ஒலித்தது நினைவில் இருந்தது.
வீதிகளேங்கும் அவர் படமும், இந்தப் பாடலும்,பிரார்த்தனைகளும்.
அவரை மீட்டன என்றே நினைக்கிறேன் .
சமூகபிரஞையோடு எடுக்கப் பட்ட படம்.
பாடல்கள் வழக்கம் போல் இனிமை.
எம் ஜி ஆர் ,சௌகார் மற்றும் அனைவரும் சிறந்த நடிப்புக்காக
பெயர் பெற்றார்கள்.
ஜெயலலிதா அவர்களின் நடனங்களும் மிக அருமையாகஇருக்கும்.
மக்கள் தலைவர் என்றால்   எப்பொழுதும் ,
பொழுது போக்குக்கு  உகந்த படங்கள் பார்ப்பதே வழக்கம்.
இந்தப் படத்தில் அருமையான சமூக நலன் பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்திருப்பார்.


Show more reactions

No comments: