Blog Archive

Saturday, December 08, 2018

.ஏழாவது படம் மேஜர் சந்திரகாந்த்

Vallisimhan

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

 #பத்துப்படவரிசையில்
#மேஜர்சந்திரகாந்த்,
#கே.பாலச்சந்தர்,
#மேஜர்சுந்தரராஜன்,முத்துராமன்,நாகேஷ்,ஜெயலலிதா
#லலிதாமுரளி. தான் ,நான் பங்கு பெற அழைக்கும் தோழி.
என் இணையத்தோழி திருமதி #Rajimuththukrishnan
என்னைக் கேட்டுக் கொண்டபோது, என்னுள் இத்தனை ஆர்வம் இருந்தது
தெரியவந்தது.
தமிழ் சினிமாக்கடலில்  எத்தனையோ நல்ல படங்கள்.
அதில் பத்து படங்களைப் பற்றி எழுதுவது சிரமமே இல்லை.
எதை எடுப்பது,கோர்ப்பது என்ற நிலைதான்.
இன்று என் மனதில் வந்தது மேஜர் சந்திரகாந்த்.
ஒவ்வொரு காட்சியும் அர்த்தத்தோடு, ஒரு நல்ல கதையை எப்படி
நகர்த்தினால் அனைத்து மக்களுக்கும் அது போய்ச் சேரும் என்று யோசித்து,
அனைத்து நடிகர்களையும்,
அபாரமாக நடிக்க வைத்திருப்பார்.திரு.பாலச்சந்தர்.

கதையும் இதுவரை நாம் அறிந்திராத சப்ஜெக்ட்.
கண்ணிழந்த  மிலிட்டரி மேஜராக ,சுந்தரராஜன்,
கல்லூரி மாணவர்களாக ஏவிஎம் ராஜனும் ஜெயலலிதாவும்.
சாதாரண தையற்காரராக, தங்கையிடன் அதீதப் பாசம் வைத்த
அண்ணனாக நாகேஷ்,
தம்பியைத் திருத்த முயலும் போலீஸ் அதிகாரியாக
முத்துராமன்,எல்லோரும் என் மனதில் பதிந்திருக்கிறார்கள்.

வி.குமாரின் இசையில் 1966இல் வந்த படம்.
கொலை செய்த நாகேஷின் கதையைக் கேட்டு நல் தீப்பு வழங்கும் காட்சியும்,
தப்பு வழியில் சென்ற மகனுக்காக உருகும் நேரமும்,
ஏன் அவர்கள் வீட்டு சீசரும், வேலையாளாக வருபவரும் கூட
கச்சிதமாக நடிக்கிறர்கள். 52 வருடங்களுக்கு முன்
வந்த படம். பத்துவருடம் முன்னால் தொலைக்காட்சியில்
பார்த்தபடம்..இப்பொழுது மாதத்துக்கு ஒரு முறையாவது பார்க்கிறேன்.

பாடல்கள், நானே நிலவு,
ஒரு நாள் யாரோ,
கல்யாண சாப்பாடு போடவா  அனைத்தும் ரீங்கரிக்கும் இனிமை.
அனைவருமே பார்த்திருப்பீர்கள்.

எனக்கு எழுத ,மீண்டும் ரசிக்க வைத்த இந்தப் படத்துக்கு
அன்பு கலந்த நன்றி.


No comments: