Blog Archive

Thursday, December 06, 2018

பத்துப் பட வரிசை.

Vallisimhan#பத்துப்படவரிசை
#கப்பலோட்டியதமிழன்
#வீரசுதந்திரம்#மஹாகவிபாரதி,#சுப்ரமணியசிவா
Requesting #PriyacharlesAntony to continue.

எளிதில் வார்த்தைகளிலோ,எழுத்துகளிலோ கொண்டுவர முடியாத காவியம்.
ஆங்கிலேயர்களை மிரட்டிய தமிழன். அவருடன் இணைந்த மற்ற தமிழர்கள். நம் பாரதியார், சுப்ரமணிய சிவா, கலெக்டரைச் சுட்ட வைத்தியனாதன்,,குமாஸ்தாவுக்குச் சவரம் செய்ய மறுத்த தொழிலாளி,
அன்னியத்துணிகளை எரித்த தேசபக்தி.
இந்தச் சிறு பொறிகளே நம்மைச் சுதந்திரத்தை நோக்கி நகர்த்தின.
திரு பி.ஆர் .பந்துலு முன்னின்று தயாரித்த இந்தப் படத்தைப்
பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம்.
படம் முழுவதும் பாரதி பாட்டு.
நெஞ்சில் உரமுமின்றி , நேர்மைத்திறமும் இன்றி,
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்,
ஓடிவிளையாடு பாப்பா,
காற்றுவெளியிடை கண்ணம்மா
எந்தக் காட்சியை விட. எந்தக் காட்சியைச் சொல்ல.
திரு.டிகே ஷண்முகம் சிவாவாக உருக்கொண்டதையா,
திரு எஸ்வி சுப்பையா பாரதியாகக் கனல் பொழிந்ததையா,
எல்லோரும் சேர்ந்து வந்தே மாதரம் என்று முழங்கி நம்
நாடி நரம்புகளில்
புது ரத்தம் புகுத்தினதையா,
அவர்களை நினைத்து நெஞ்சில் பாரம் ஏற்றிக் கொண்டதையா,
வ உ சியாகவே வாழ்ந்து காட்டியம் நடிகர்திலகத்தின் கம்பீரத்தையா.
இந்தக் காவியத்துக்கு இணை வீர பாண்டிய கட்டபொம்மனைச் சொல்லலாம்.

அந்தப் படத்தில் ஒரு வீரம். இந்தப் படத்தில் இன்னும் மலிந்துவிட்ட சமூகத்தில் கப்பல்கொடி ஏற்றிய மாவீரர் சிதம்பரனாரைக் கொண்டாடும் காவியம். இந்த வீரம் இன்னும் நம் இளைஞர்களைப் போய்ச் சேர வேண்டும். வாழ்க பாரதம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Revathi Narasimhan
Yesterday at 7:13 AM ·
# பத்துப்படங்கள் வரிசை
#ஐந்தாவதுபடம்
#எதிர் நீச்சல்.
#கே.பாலச்சந்தர்படம்,#Nagesh,#Hemashrinivasan
மாடிப்படி அடியில் வாழ்வு நடத்தும் மாது வாழ்க்கையில் வெற்றி
கண்ட கதை.
மாதுவின் வாழ்க்கை தினம் ஒரு வீட்டில் சாப்பாடு கேட்கும் அவலம். அதற்காக அவனை வேலைக்காரனாக மதிக்கும் மற்ற குடும்பத்தினர்.
மாதுவைத் தோழனாக ஏற்றுக் கொண்ட மேஜர். அந்த ஏண்டா படவா ராஸ்கலுக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
பைத்தியமாகப் பெயர் சூட்டப்பட்டு அவதிப் படும் ஜெயந்தி,
அழகாகப் பட்டுப்புடவையில் ஜொலிக்கும் சௌக்கார் ஜானகி, அசட்டுக் கிட்டுவாக ஸ்ரீகாந்த்,
முரட்டு அன்பு நாயர் அவதாரமாக முத்துராமன்,
மனோரமா அப்பப்பா இவர்கள் எல்லோரும் வாழ்ந்து இருக்கிறார்கள் இந்தப் படத்தில்.

டைரக்டரின் இயக்கும் மகிமை பளிச் பளிச்.
பதட்டத்தில் அடிப்போடி பைத்தியக்காரி என்று பாடிவிடும்
நாகேஷ். அவரிடத்தில் காதல் கொண்ட ஜெயந்தி.
அவர் சரியான நேரத்தில் ஆவேசப்பட்டுப் பழிவாங்கும் கட்டம்
கிணற்றங்கரையில் இருவரும் பரிமாறிக் கொள்ளும் அன்பு

கடிகாரத்தை விட்டுவிட்டியே நாயர்னு நாகேஷ் சொல்லிக்காட்டும் பரிதாபம்.
மேஜர் ஆசி கொடுக்க மறுக்கும் போது, அவரது கைத்தடிக்கு நமஸ்காரம் செய்யும் நாகேஷ்,
கடைசி கட்டத்தில் தில்லிப் பெண்ணை மணந்துவிட்டதாகச் சொல்லி
அனைவரையும் கலங்க வைத்துக்
கடைசியில் மேஜர் வாயால் படவா ராஸ்கல் சொல்ல வைக்கும் மாதுவின் சாமர்த்தியம்,
எல்லாமே நம்மைக் கட்டுப்போட்டு அமர வைக்கும்.
மாதுவுக்கும் நாகேஷுக்கும்,பாலச்சந்தருக்கும்,மேஜருக்கும் ஜே.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
# Moviesformagicalhappiness
#Makkalaip petra Makaraasi.
#4th day preasentation.# Sriram Balasubramaniam,#Bhanumathivenkateswaran.
1957 இல் வந்த நல்ல படம். ஒரு உணர்ச்சிக் காவியம். கண் நிறைந்த கண்ணாம்பா அம்மா,
அவர் மகனாக செங்கோட சிவாஜி.,தங்கை தங்கமாக எம் என் ராஜம்,
அவள் காதலனாக எம் என் நம்பியார்,
செங்கோடனின் முறைப் பெண் துடுக்கு ரங்கம்மாவாக பி. பானுமதி,
வில்லனாக கண்ணாம்பாவின் பணவெறிப் பண்ணையார் வி.கே ராமசாமி.

அவரால் மிரட்டப்பட்டு வீட்டைவிட்டே ஓடிவிட்ட செங்கோடனின் தந்தை.

பானுமதியின் இனிய குரலில் வரும் பாடல்கள்,
அந்த கொஞ்சும் கோவைத் தமிழ்.
சிவாஜியின் வெட்கம் சேர்ந்த காதல். ரங்கம்மாவின் வீரம் சேர்ந்த மிடுக்கு..
முணுக்கென்று சொல்லும் முன் கம்பெடுக்கும் கிராமத்தார்.
அடியாட்கள்.
நம்பியார் எம் என் ராஜத்தின் கௌரவமான காதல்,
அன்னையிடம் காட்டும் பக்தி.அவளுக்குக் கட்டுப்படும் மரியாதை.

படம் முழுவதும் நிறைந்திருக்கும் செழுமை நம்மைப் பழைய
நாட்களுக்கே கொண்டு போய்விடும்.. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு முத்து.
இசையும் ,தமிழும் வெகு இனிமை. கொங்கு நாட்டுத் தமிழும் பண்பும்
காணவேண்டுமானால் இந்தப் படத்தைப் பாருங்கள்.
நல்ல ப்ரிண்ட் இருக்கிற படம் கிடைக்க என் வாழ்த்துகள்.இந்தத் தொடரைக் கௌரவிக்க எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், மற்றும் தோழி பானுமதி வெங்கடேஸ்வரனை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நேரம் இருக்கும் போது தங்கள் எண்ணங்களைப் பகிரவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
#போலீஸ்காரன் மகள். #RajiMuththukrishnan,Hema Shrinivasan,GomathyArasu, #Movie marathon #3rd .
ஸ்ரீதரின் இந்தப் படத்தில் ஒருவரும் நடிக்கவில்லை
அத்தனை பேரும் வாழ்ந்தார்கள்.

நான் வெகு நாட்கள் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்தேன்.
சோகம் நம்மைத் தாக்கும் என்ற பயம்.

சஹஸ்ரனாமம் அவர்கள், முத்துராமன், விஜயகுமாரி பின்னும் அற்புத
ஓவியம்.
கறுப்பு வெள்ளையில் 1960களில் வந்த படம் என்று நினைக்கிறேன். சஹஸ்ரனாமம் அவர்களின் கண்டிப்பு,
அவரின் செல்லமகளாக விஜயகுமாரி, துடிப்பான,அடக்கமான் முத்துராமன்,
உல்லாச பாலாஜி.
பூக்கார ஜோடி சந்திர பாபுவும்.
முதல் சீனிலிருந்து, முடிவு வரை ஒவ்வொரு அசைவுகளிலும் சஹஸ்ரனாமம் அவர்களின் போலீஸ் விரைப்பும், முறைப்பும் மிரட்டும் நம்மை. குழைவுக்கு விஜயகுமாரியின்
அற்புத நளினம். தன்னை ஏமாற்றிய காதலனைக் காக்க கோர்ட்டுக்கே சென்று வாக்குமூலம் கொடுத்துக் காதலனைக் காப்பாற்றும் துணிவு.
எல்லோருக்கும் நடுவில் முத்துராமன் படும் பாடு.
படம் முழுவதும் ஒலிக்கும் இன்னிசைப் பாடல்கள்.

எதுவுமே மறக்க முடியாதவை.
ஸ்ரீதரால் தான் இத்தகைய நடிப்பை வெளிக்கொண்டு வர முடியும்.
இந்தப் படத்தின் பாதிப்பிலிருந்து மீள, காதலிக்க நேரமில்லையும் பார்த்துவிடுங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Revathi Narasimhan
November 30 at 8:10 PM ·
I have been invited to for movie appreciation by Raji Muthukrishnan. As I love old movies ,It’s a pleasure to talk about them. Thookkuth thookki is one of the best movies of my childhood days. The famous five sentences describing life in general is the focal point. How the hero finds the truth behind them is highlighted through out the movie. Needless to say everyone has acted very well,especially Sivaji Ganesan. I want to request my friend. Hema Shrinivasan to write about her favorite movie. This is my second day of movie marathon.
Image may contain: 4 people, including Teem Mangai, people smiling, text
n

Write a comment...


Gomathy Arasu
November 30 at 9:28 AM ·
https://www.youtube.com/watch?v=1NC0D1hWnZs
பழைய படப் பகிர்வு.
எனக்குப் பிடித்த நகைச்சுவைப் படம்.
பாடல்கள் என்றும் இனிமை.
நடித்த நடிகர்கள் அனைவரும் அற்புதமாய் நடித்து இருப்பார்கள். ...
See More
See Translation

YOUTUBE.COM
Adutha Veettu Penn | Anjali Devi, T R Ramachandran, Pakkirsamy | Tamil Comedy Movie | Film Library
Watch the tamil comedy movie "Adutha Veettu Penn"…
3You, Sriram Balasubramaniam and 1 other
Love
Comment
Share
Comments
Revathi Narasimhan
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Revathi Narasimhan
November 30 at 8:10 PM ·
I have been invited to for movie appreciation by Raji Muthukrishnan. As I love old movies ,It’s a pleasure to talk about them. Thookkuth thookki is one of the best movies of my childhood days. The famous five sentences describing life in general is the focal point. How the hero finds the truth behind them is highlighted through out the movie. Needless to say everyone has acted very well,especially Sivaji Ganesan. I want to request my friend. Hema Shrinivasan to write about her favorite movie. This is my second day of movie marathon.


இது வரை கருத்து சொன்ன படங்கள்.

1  தூக்குத்தூக்கி
2,பாவை விளக்கு,
3,போலீஸ்காரன் மகள்,
4,மக்களை பெற்ற மகராசி,
5,எதிர் நீச்சல்,
6, கப்பலோட்டிய தமிழன்.
எல்லோரும் வாழவேண்டும். இனிதாக வாழவேண்டும்.







No comments: