Blog Archive

Thursday, August 30, 2018

அன்று பெய்த மழை

Vallisimhan

''பசங்களா பொசல் வருது யாரும் வெளில போக வேண்டாம்.
ரேவதி நீ போய் கெரசின் இருக்கா பார்த்துக்கோ. ஹர்ரிக்கேன் லைட்

துடைச்சு வச்சுடுமா.செட்டியார் கடைல மெழுகுவர்த்தி ஒரு டஜன்,
கொத்துக்கடலை அரைக்கிலொ,பொரி அரைக் கிலோ,வேர்க்கடலை எல்லாம் கொண்டுவரச் சொல்லு.

உருளைக் கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய்,  எல்லாம் நிறைய
வாங்கி வச்சுடு.

எத்தனை நாள்மழைபெய்யுமோ!''இவ்வளவையும்

சொல்லிவிட்டு, சென்னை ஒன்றின் வானொலிப் ப்ரொக்ராம்களைக்கேட்க ஆரம்பித்துவிடுவார்.
அதிலதான் மணிக்கொருதடவை புயல் சின்னம் நகரும்,

வழிகளையும் வேகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்!!!

ஓ!பக்கத்தில வந்துடும் போலிருக்கே,
நெல்லூர் ,பிரகாசம்தானே போகும். சொல்லிக்கொண்டிருக்கும்போதே


மழை ,காற்று ஆரம்பித்துவிடும்.


வாயில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு. வாயில் வழியெ
வரும் சாரலைத்

தன்னுடைய பெரிய மர ஈஸி சேரைப் போட்டுக் கொண்டு, பட்டு சால்
Add caption
வையைப் போர்த்திக் கொண்டு,  ரசித்தபடி  கருங்குயில் குன்றத்துக்கொலையை நான்காவது  தடவையாகப் படிக்க ஆரம்பிப்பார்.

பக்கத்தில் ஒரு முக்காலியில் வேகவைத்த வேர்க்கடலை,
நறுக்கிய ஆப்பிள் துண்டுகளில் உப்பும் பச்சை மிளகாயும் அரைத்துக் கலந்த
கலவை இருக்கும்.
அதை அடுத்துத் தரையில் எங்கள் பசங்களும் அவர்களின் தோழர்களும்
 காரம்போர்டு, சைனீஸ் செக்கர்ஸ் என்று விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
பாட்டியும் ரசித்துப் பார்ப்பார். ஒரு அற்புதமான ஓவியம் பார்ப்பது போலத் தோன்றும்.

1977 என்று நினைக்கிறேன். நாகைப் பட்டினத்தில் வீசிய புயல், சென்னையில் மின்சாரத்தைப் பறித்துக் கொண்டது.

தண்ணீர் இறைக்கும்  பம்ப் இயங்காததால்,
மழையில் நனைந்து கொண்டே கிணற்றில் தண்ணீர் இறைத்தது நினைவிருக்கிறது,.
துணிகளின் தோரணம் மாடி அறை எங்கும்.
சாம்பிராணி போட்டுச் சமாளித்தேன்.

வாசல் போர்ட்டிகோவில் படுத்துக் கொள்ளும் தனக்கோடி,
எங்கள் மாமனாரிடம் வேலைபார்த்தவரைப் பாட்டி உள்ளே வந்து படுத்துக் கொள்ளச் சொன்னதும்
 குழந்தைகள் வியப்போடு பார்த்ததும் நிழலாடுகிறது.
அவருக்கு எப்போதும் டிசில்வா ரோடு முனையில் சாசு நிற்பதாக ஒரு பயம்.
சாசுன்னால் பிசாசு.

இவ்வளவு நினைவுகளையும் கொண்டு வந்தது நேற்று இங்கு பெய்த //பி//சாசு மழை.

No comments: