Blog Archive

Saturday, March 31, 2018

என் அருமை ரங்கன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  என் அருமை ரங்கன்.

அக்கா அண்ணா இருவரிடமும் மாட்டிக் கொண்டு விழிப்பான்.
 கேலி காட்டுவதில் மன்னன்.
நடிப்பு பாட்டு எல்லாவற்றிலும் ஆர்வம்.

பதின்ம வயதுகளில் அவன் தலைமுடியைச் சீவி விட்டுக்கொள்ளும் லாகவத்தைப்
பார்க்கவேண்டும்.
தலை சொட்ட ஈரம் செய்து கொண்டு.
 குட்டி மரபீரோ மேலிருக்கும் கண்ணாடியில் இப்படி ஒருதரம் அப்படி ஒருதரம்
வாரிக்கொள்வான்.
என்னிடம் வந்து எப்படி டீ இருக்கு.
தெய்வ மகன் சிவாஜி மாதிரி இருக்கா என்பான்.
சகிக்கலையே. முடி வெட்டுக் கொள்ளேண்டா. .
என்பேன்.
ரசனையே இல்லை என்று போய்விடுவான்.
மகா குறும்புக்காரன். மஹா உதவியாளன்.
எள்+எண்ணெய் டைப். திருச்சியில் ,குடும்பமே அம்மா அருள் வந்து
இருக்கும் போது தைரியமாக வந்து  இளனீர் சப்ப்ளை செய்வான்.

1967இல் முதல் குழந்தை பிறந்தபோது அவன் ஆடிய ஆட்டம்.
சொல்லி முடியாது. உட்கார்ந்து கொண்டு ,குழந்தையைத் தொடாமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.
   ஏய் அவன் அத்திம்பேர் மாதிரி தான் வருவான்.பெரிய கண்ணும் இமைகளும்.
உன்னை மாதிரி சின்னக் கண் இல்ல//

தான் குழந்தையோடு இருக்கணும் என்பதற்காக
சினேகிதன் வீட்டிலிருந்து முப்பது நாற்பது காமிக்ஸ் புத்தகங்கள்
கொண்டு வந்து கொடுப்பான்.
மூன்றாவது குழந்தை பிறக்கும் போது மற்ற இரண்டு குழந்தைகளும் இவன் கழுத்தைக் கட்டிக் கொண்டுதான் தூங்கின.
அவர்களோட டங்க மாமா.
எப்பொழுது கடிதம் எழுதினாலும் , நீ எப்ப வருவே. கேள்விதான்.
அப்பா அம்மாவின் உயிர் நாடி. அவன். நான் வேறு ஊர்களில் இருக்கும் போது அம்மா அப்பாவை வைத்தியரிடம் அழைத்துச் செல்வதும் அவன் தான். வாழ்க வளமுடன்

9 comments:

ஸ்ரீராம். said...

மறக்க முடியாத உறவுகள். இனிய நினைவுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

திரு ரங்கன் போற்றுதலுக்கு உரியவர்தான்

வெங்கட் நாகராஜ் said...

"டங்க மாமா” - இப்படி ஒருத்தர் எல்லாக் குடும்பத்திற்கும் தேவை.

எங்கள் வீட்டில் எனது பெரியப்பா - அம்மாவின் அக்கா கணவர்/மாமா. அப்பாவை விட எங்களுக்கு அவர் மேல் ஒட்டுதல் ஜாஸ்தி என்று தான் சொல்ல வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

"டங்க மாமா" வை ரசித்தேன் வல்லிம்மா...என்ன அன்பான உறவுகள்...அதைக் குறித்த இனிய நினைவுகள்!

கீதா

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். இந்த மாதத்தில் எல்லோரைப் பற்றியும் எழுதிவிடவேண்டும்
என்றே நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஜெயக்குமார். உதவி செய்யவே பிறந்தவன்.
கண்களையும் தானம் செய்தே மறைந்தான்.

வல்லிசிம்ஹன் said...

இங்கேயும் குழந்தைகளுக்கு அவன் என்றால் தனி அன்பு.
திருப்பூர் போனேன் மா, என்று டஜன் பனியன்கள்
வாங்கி வருவான்,. தலைச்சேரி போனால்
வீடு நிறைய நேந்திரங்காய் வறுவல். வெங்கட். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

சின்னவனுக்கு ர நா வராது கீதா. அதனால் ரங்கா ,டங்கா ஆகிவிட்டான்.

'பரிவை' சே.குமார் said...

இனிய நினைவுகள்...