Blog Archive

Tuesday, March 13, 2018

வாழ்வின் பாடங்கள் பலவிதம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   அன்பு, மரியாதை,பாசம் என்ற எல்லாமே நாம் வளரும் இடத்தில் தான்
கிடைக்கப் பெறுகின்றன.
செடி ,நாற்றாக இருக்கும் போது அதற்குக் கிடைக்கும் ஊட்டமே
பிற்காலத்தில் புயலோ மழையோ வெயிலோ
எதையும் சமாளிக்க உரம் கிடைக்கிறது
 நம்மில் அனேகமாக அனைவருக்கும், அம்மா,அப்பா,பாட்டிகள் ,தாத்தாகளின்
அன்பும் ,கண்டிப்பும் சேர்த்தே கிடைத்திருக்கிறது.
நியாயங்கள் மனதில் பதியும் படி சொல்லப் பட்டிருக்கின்றன.
நன்மை  தீமை அறியும் விதமாக கதைகள்  வழியாக
காதுகளுக்குள் புகுந்து புத்தியிலும் பதிக்கப் பட்டிருக்கின்றன.
விடுமுறை நாட்கள் என்று மதுரைக்குச் சென்றாலும்,
தாத்தா அத்தனை வாய்ப்பாடுகளையும் சொல்ல வைப்பார்.
பாட்டி  மாவரைக்கக் கூப்பிடும்போது
அரைத்துக் கொண்டே பழைய நினைவுகளை,
பரம்பரையாக நடந்த சம்பவங்களைப் பதிவார்.
கீரை ஆய்ந்து கொண்டே கேட்ட செய்திகள் அனைத்திலும் உழைப்பே
மேலுறுத்தப்படும்.
அப்போதே பாட்டியும்,தாத்தாவும் அனுபவிக்காத
துன்பங்கள் இல்லை.
மகன், மகள் இருவரையும் இழந்தும்,
மன வலிமையை இழக்காமல்
தெய்வ பக்தியை விடாமல் வாழ்க்கையை நடத்தினர்.

அம்மாவுடைய அம்மாவும், அப்பாவுடைய அம்மாவும்
கூடப் பிறந்த சகோதரிகளிடம் வைத்திருந்த பாசம்
சொல்லிமுடியாது.
நல்ல கட்டுக் கோப்பு.ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால்,
நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு
 நாம் தான் உதாரணம். 
நாம் பெரியவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் ,அவர்களின் எதிர்கால
நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமையும்..
எங்கள் தலைமுறை வரை அப்படித்தான் இருந்தது.
இந்தத் தலைமுறை மக்களும் மரியாதை மீறி
ஒன்றும் செய்வதில்லை.
பெரியவர்களிடம் நமக்கு ஏதாவது வேற்றுமை உணர்வு இருந்திருந்தாலும்
சிறியவர்கள் வரைக் கடத்த வேண்டாம்.

அவ்வாறு கடத்தினால் நம் மேலேயே என்றாவது திரும்பும்.
இப்போதுள்ள குழந்தைகளுக்கு கற்றறிவு , சூழ்னிலையைக் கிரஹிக்கும் தன்மை
அதிகமாகவே இருக்கிறது.
பெற்றோர்களுக்குள் இருக்கும் வேறுபாடோ,
அன்பு குறைபாடோ அவர்கள் மனதை உறுத்தும்.
இதமாகப் பேசித்தான் அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும்.

கல்லூரிக் காலமும் வந்துவிட்டால் சுதந்திரம் ஜாஸ்தியாகும்.
கூடா நட்பு ,ஏற்படக் கூடாது.
இந்த ஊரில் விதவிதமான வேடிக்கைகளைப் பார்க்கிறேன்.
நம் இந்தியக் குழந்தைகள் நிறைய வழி மாறிப் போவதில்லை.
பெற்றோரிடம் அடங்கியே
இருக்கிறார்கள்.  எதிர்காலம் எப்படியோ தெரியவில்லை.

தெரிந்த வரை சொல்லிவிட்டேன்.
 நம் மூக்கு நுனி அளவே நம் வாய்ச்சொற்களுக்கு சுதந்திரம்.
அதற்கு மேல் போனால் கேட்டுக் கொள்ள இளைய தலைமுறைக்கோ,
அவர்கள் பெற்றோர்களுக்கோ பொறுமை இல்லை.
காலம் மாறியதால் என்னைப் போன்றிருப்பவர்களும் மாறித்தான் ஆக வேண்டும்.
உட்கார் என்று சொன்னால் உட்காரவோ,
நில் என்றால் நிற்கவோ மனம் ஏற்க மறுக்கிறது.
அதனால் நம்மால் முடிந்தது, குழ்னிலைக் கேற்ப பக்குவமாக நடப்பதும்,
கடவுளை இடைவிடாது பிரார்த்திப்பதிலும் தான்.

வாழ்க வளமுடன்.
அம்மாவின் தம்பிகள் 

21 comments:

Geetha Sambasivam said...

தேவையான அறிவுரைகள். மனதில் இருத்த வேண்டும்.

ஸ்ரீராம். said...

அந்தக் கால வாழ்க்கைமுறை போல இல்லை இந்தக் காலம். வளரும் தலைமுறைக்கு தான் எதை இழக்கிறோம் என்று தெரியக்கூட வாய்ப்பில்லை.

கோமதி அரசு said...

//குழ்னிலைக் கேற்ப பக்குவமாக நடப்பதும்,
கடவுளை இடைவிடாது பிரார்த்திப்பதிலும் தான்//

உண்மை அக்கா நீங்கள் சொன்னது .
வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்கள் நிறைய.

முன்பு உடன் பிறப்புகள் மட்டும் அல்லாமல், அப்பாவின் சித்தப்பா, பெரியப்பா அத்தைகள் , அம்மாவின் சித்தப்பா, பெரியப்பா, அத்தைகள் என்று சொந்தங்கள்கூட நெருங்கிய சொந்தமாய் இருந்தார்கள். இப்போது உடன்பிறப்புகள் சந்தித்து கொள்வது கூட முடியாமல் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள் வேலை, படிப்பு என்று நிறைய காரணங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

// நம் மூக்கு நுனி அளவே நம் வாய்ச்சொற்களுக்கு சுதந்திரம் //

உண்மை...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. கற்றுத் தெளியும் போது மாலை நேரம் வந்துவிட்டது.
நம் சொற்கள் ஏற்கப்படும் வரை நன்மை சொல்லலாம். இறைவன் விட்ட வழி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். ஏன் பெற்றோர் சொல்கிறார்கள் என்பதே புரியவில்லை.
ஒய் நாட் என்ற கேள்வி அதிகம். விவாதம் அதிகம்.
அவர்களுக்கும் புரியும். நமக்கு எப்பவும் போலப் பொறுமை தான்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அப்படித்தான் இருக்கிறது உலகம்.
விடுமுறைகள் அத்தை வீடு, மாமா வீடு என்பதெல்லாம் நம் தலை முறையோடு போயிற்றோ.

இப்பவும் பெண் வீட்டிற்கு இந்தியாவிலிருந்து
படிக்க வந்த உறவினர்களும் நட்புகளும் இருக்கிறார்கள்.
வேலை கூடுகிறது.
இருந்தும் சலிப்பதில்லை. இது ஒரு விதம்.
நன்றி கோமதி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் நலமாப்பா. எனக்கு இத்தனை விவரம் புரிய
70 வயசாக வேண்டி இருந்தது.ஹாஹா..

Bhanumathy Venkateswaran said...

//நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு
நாம் தான் உதாரணம்.//

//பெரியவர்களிடம் நமக்கு ஏதாவது வேற்றுமை உணர்வு இருந்திருந்தாலும் சிறியவர்கள் வரைக் கடத்த வேண்டாம்.//

வாழ்க்கையில் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய நல்ல அறிவுரை. எங்கள் குடும்பத்தில் இப்படித்தான் வாழ்கிறோம். சுற்றியுள்ள சிலர் தங்கள் வேற்றுமைகளை குழந்தைகளுக்கும் கடத்தி அவர்களுக்கு உறவில்லாமல் செய்து விடுவதை பார்க்கும் பொழுது மனதிற்கு கஷ்டமாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமதி,
உங்கள் குடும்பம் நல்ல குடும்பம். இப்படித்தான் இருக்க வேண்டும். மீண்டும்
மீண்டும் தவறு செய்வதால் என்ன லாபம்.
அந்த சுழலிலிருந்து மீள வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

செடி ,நாற்றாக இருக்கும் போது அதற்குக் கிடைக்கும் ஊட்டமே
பிற்காலத்தில் புயலோ மழையோ வெயிலோ
எதையும் சமாளிக்க உரம் கிடைக்கிறது//
பலருக்கும் இப்படித்தான் …நான் என் அனுபவத்தில் இதை அப்ப்டியே டிட்டோ செய்வேன் வல்லிம்மா….என் அனுபவங்களில் எத்தனைக்கு எத்தனை மகிழக் கிடைத்ததோ அதற்கு இரு மடங்கு அதையும் விட என்றும் சொல்லலாம் நிறைய நெகட்டிவ் அனுபவங்களும் உண்டு….என்றாலும் இறைவன் அருளால் அந்த நெகட்டிவ் என் மனதில் பாடத்தைக் கொடுத்ததே அல்லாமல் ஆழமாகப் பதிந்து வேறு வகையில் செல்லாமல் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை இறைவன் கொடுத்தார் என்றே சொல்லுவேன்…….அந்த இறைவனுக்கு நான் ஒவ்வொரு நொடியும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கேன் வல்லிம்மா…

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

// நம்மில் அனேகமாக அனைவருக்கும், அம்மா,அப்பா,பாட்டிகள் ,தாத்தாகளின்
அன்பும் ,கண்டிப்பும் சேர்த்தே கிடைத்திருக்கிறது.
நியாயங்கள் மனதில் பதியும் படி சொல்லப் பட்டிருக்கின்றன.
நன்மை தீமை அறியும் விதமாக கதைகள் வழியாக
காதுகளுக்குள் புகுந்து புத்தியிலும் பதிக்கப் பட்டிருக்கின்றன.//
இதுவும் டிட்டோ….டிட்டோ….எனக்கு என் அப்பா வழிப் பாட்டி தாத்தா கதைகளின் வழி அன்பின் வழி மனதில் பதித்தார்கள் என்றால் அம்மா வழிப் பாட்டியிடம் வளர்ந்த காரணத்தால் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதுடன் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் சேர்த்து……

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

//அப்போதே பாட்டியும்,தாத்தாவும் அனுபவிக்காத
துன்பங்கள் இல்லை.
மகன், மகள் இருவரையும் இழந்தும்,
மன வலிமையை இழக்காமல்
தெய்வ பக்தியை விடாமல் வாழ்க்கையை நடத்தினர்.//
என் அப்பா வழிப் பாட்டியின் அனுபவம் என் அப்பா மட்டும் இருக்க மற்றவர் அனைவரும் சீக்கிரமே காலமாகிட….பாட்டி 92 வயது வரை இருந்து காலமானார்….மனம் வேதனையில் இருந்தாலும் மனோதிடம்..!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

//நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு
நாம் தான் உதாரணம்.
நாம் பெரியவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் ,அவர்களின் எதிர்கால
நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமையும்..//
டிட்டோ டிட்டோ வல்லிம்மா இது எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று……ஆனால் எங்கள் தலைமுறையிலேயே இது நலிந்து வருதும்மா… ….அதனால் என் மகனுக்கு நான் நிறைய போதிக்க வேண்டியுள்ளது…….

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

// பெரியவர்களிடம் நமக்கு ஏதாவது வேற்றுமை உணர்வு இருந்திருந்தாலும்
சிறியவர்கள் வரைக் கடத்த வேண்டாம்//
உண்மை உண்மை….அது குடும்பத்தையே ஒற்றுமையையும்., அன்பையும் சீரழித்துவிடும்…..

Thulasidharan V Thillaiakathu said...

// பெரியவர்களிடம் நமக்கு ஏதாவது வேற்றுமை உணர்வு இருந்திருந்தாலும்
சிறியவர்கள் வரைக் கடத்த வேண்டாம்//
உண்மை உண்மை….அது குடும்பத்தையே ஒற்றுமையையும்., அன்பையும் சீரழித்துவிடும்…..

// அவ்வாறு கடத்தினால் நம் மேலேயே என்றாவது திரும்பும்.
இப்போதுள்ள குழந்தைகளுக்கு கற்றறிவு , சூழ்னிலையைக் கிரஹிக்கும் தன்மை
அதிகமாகவே இருக்கிறது.
பெற்றோர்களுக்குள் இருக்கும் வேறுபாடோ,
அன்பு குறைபாடோ அவர்கள் மனதை உறுத்தும்.
இதமாகப் பேசித்தான் அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும்.//
வல்லிம்மா செம செம!!!! பேசாம நீங்க ஒரு கவுன்ஸலரா பண்ணலாம் வல்லிம்மா.. இது சத்தியமான வார்த்தைகள்…..அங்கு இருப்பதால் நீங்கள் எங்கள் தலைமுறையினருக்கும் சரி, எங்களுக்கு அடுத்த உங்கள் பேரன் பேத்தி தலைமுறையினருக்கும் சரி….பெர்சனாலிட்டி டெவெலப்மென்ட் வகுப்புகள் நேரம் இருந்தால் உங்கள் உடல் நலம் ஒத்துழைத்தால் எடுக்கலாம் வல்லிம்மா….நல்லவை பரவும் இல்லையா….இது மிக மிக அவசியமாகிறது வல்லிம்மா…..இதை அப்படியே வாசித்து நிறைய யோசிக்கத் தொடங்கினேன்…..என் அனுபவங்களை அப்படியே புட்டுப் புட்டு வைப்பது போல் உங்கள் தொடர்!!!!!!!!!....நான் என் அனுபவத்தில் கற்றதை இப்போது கதைகளாக என் மகன், என் தங்கை குழந்தைகளுக்குச் சொல்லி வருவதை….இந்த வரிகளில் காண்கிறேன் வல்லிம்மா….நீங்க கண்டிப்பா ஃபேமிலி கவுன்ஸலராகலாம் ….இப்போதைய காலகட்டத்துக்கு மிக மிக அவசியமாக உள்ளது…அதுவும் பெரும்பாலும் குழந்தைகள் தனித் தனித் தீவுகளாய் வளர்வதால்…ஒரு குழந்தையாக….கூட்டுக் குடும்பமும் இல்லாமல்…என்று வளர்வதால்…

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நம் மூக்கு நுனி அளவே நம் வாய்ச்சொற்களுக்கு சுதந்திரம்.
அதற்கு மேல் போனால் கேட்டுக் கொள்ள இளைய தலைமுறைக்கோ,
அவர்கள் பெற்றோர்களுக்கோ பொறுமை இல்லை.
காலம் மாறியதால் என்னைப் போன்றிருப்பவர்களும் மாறித்தான் ஆக வேண்டும்.
உட்கார் என்று சொன்னால் உட்காரவோ,
நில் என்றால் நிற்கவோ மனம் ஏற்க மறுக்கிறது.
அதனால் நம்மால் முடிந்தது, குழ்னிலைக் கேற்ப பக்குவமாக நடப்பதும்,
கடவுளை இடைவிடாது பிரார்த்திப்பதிலும் தான்.//

வல்லிம்மா ஹேட்ஸ் ஆஃப் டு யு!!!! உங்களை அப்படியே நான் பிரமித்து, வியப்பாக, மனம் ஒன்றி அன்பு பெருகிட, நீங்கள் அருகில் இல்லையே என்ற ஏக்கத்துடன் வாசித்து முடித்தேன் வல்லிம்மா....இது சத்தியமான வார்த்தைகள்...என் அம்மாவின் வயது உங்களுக்கு....உங்கள் பாதங்களில் என் வணக்கங்கள்...சமர்ப்பணம்....

ஸ்ரீராம் உங்களைப் பற்றிச் சொல்லிய வார்த்தைகளை அப்படியே காண்கிறேன்!!!! ஸ்ரீராமுக்கு நான் நன்றிகள் பல சொல்லணும்....அவர் மூலம்தான் உங்கள் அறிமுகம்!!!


கீதா

வல்லிசிம்ஹன் said...

வல்லிம்மா….என் அனுபவங்களில் எத்தனைக்கு எத்தனை மகிழக் கிடைத்ததோ அதற்கு இரு மடங்கு அதையும் விட என்றும் சொல்லலாம் நிறைய நெகட்டிவ் அனுபவங்களும் உண்டு….என்றாலும் இறைவன் அருளால் அந்த நெகட்டிவ் என் மனதில் பாடத்தைக் கொடுத்ததே/// அன்பு கீதா, நீங்களே இந்த அழகான பின்னூட்டத்தைப் பதிவிட்டிருக்கலாம். எத்தனை விஷயங்களை அலசி இருக்கிறீர்கள் அம்மா.

குழந்தைகளை நல்ல வார்த்தையாகச் சொல்லி வளர்ப்பதுதான் நம் கடமை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நீங்கள் சொல்வது புரிகிறது. எங்க குழந்தைகள் வயதுதான் உங்களுக்கும்.
வாழ்க்கையில் கஷ்ட நஷ்டம் நாங்கள் பட்டதைக் குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள்.
அவ்வகையில் கற்றும் இருக்கிறார்கள்.
அவர்களைப் பார்த்து அன்னாளில் வருந்தி இருக்கிறேன்.
இரவும் வரும் பகலும் வரும் என்ப்து நடந்து வருகிறது.
இப்பொழுது அவர்களுக்கு நேரம் இருக்கும் நேரம் நான் பகிர்ந்து
கொள்வதை மெயிலில் படிக்கிறார்கள்.


வல்லிசிம்ஹன் said...

கவுன்சிலிங்க் வரை இங்கே இருக்கும் குழந்தைகள்
வர விருப்பம் இல்லாதவர்கள். ஏன் தெரியுமா.
நான் பார்க்க ஐந்து வயதிலிருந்து 22 வயது வரை
வளர்ந்தவர்கள்.

அவர்களது அம்மாக்களோ,
பெரியவர்கள்.
. புத்திமதியோ கலந்துரையாடல்களோ செய்வதை அவ்வளவு விரும்பவில்லை.
பரவாயில்லைம்மா. அனைவரும் வேலைக்குப் போகிறவர்கள்.
அவரவர் பெற்ற குழந்தைகளின் பிரச்சனைகளே
பெரிதாக இருக்கின்றன.
அனைவரும் அனுபவம் மிக்கவர்கள்.

சமவயது மங்கையருடன் உரையாடுவதே அவர்களுக்கு உகந்தது.
என்னிடம் இவ்வளவு அன்பு காட்டும் உங்களைப் போன்றவர்கள் எனக்குப் போதும்.
நன்றி கண்ணா. இத்தனை அன்புக்கு நான் என்ன தவம் செய்தேனோ.