Blog Archive

Tuesday, May 02, 2017

Shilthorn Switzerland

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
17ஆம்தேதி காலை மழையோடு ஆரம்பித்தது. எங்களுக்குள் விவாதம். நாம் போகப் போகும் இடம் ஒரு மலைச்சிகரம். அங்கே மதிய உணவுக்குப் போய்விடலாம்.
மழையிருந்தால் ஒன்றுமே பார்க்க முடியாது. அந்த மழையை இங்கயே பார்த்துக் கொண்டு சீட்டுக்கட்டு ராஜா பாடலாமேன்னு ஒரு யோஜனை,.
பையனோ இவ்வளவு தூரம் வந்து உள்ளே உட்காருவானேன்.
குடையிருக்க கோட் இருக்க மழைக்குப் பயமேன்னு டயலாக் சொன்னதும் பத்து நிமிடத்தில் ரயில் நிலையத்தில் இருந்தோம்.
கையில் சாப்பாடு எடுத்துக் கொள்ளவில்லை . பேத்தியின் இரண்டாவது  பிறந்த நாள்  அன்று:)
அதனால் அவ பேரைச் சொல்லி எல்லோருக்கும் மலையுச்சி ரெஸ்டாரண்டில் மகன் எங்களுக்குச் சாப்பாடு கொடுக்கப் போகிறான் 
ரயில் நிலையத்தில் வண்டி வர இன்னும் இருபது நிமிடம் இருக்கும் என்ற நிலையில்
மழையைப் பார்த்து,சத்தமில்லாமல் அது விழுவதை ரசித்துக் கொண்டிருக்கும்போது,
ஒரு டாக்ஸிக்காரம்மா வந்தாங்க.
அவங்க எங்களைப் பாதிதூரம் கொண்டு விடுவதாகவும் 100ரூபாய் கொடுத்தால் போதும்னு சொல்லவும், சரி அந்தப் பயணத்தையும் சவாரியையும் ரசிக்கலாமேனுட்டு அந்தப் பெரிய வண்டியில் அனைவரும் ஏறிக் கொள்ள மழையில் வெகு லாவகமாக வண்டி ஓட்டினார் எலிசபெத் .
அவரும் கணவருமாக க்ரின்டெல்வால்டில் இருபது வருஷமாக வாடகை வண்டிகள் ஓட்டுகிறார்களாம். நல்ல வருமானம். இந்தியர்களும் ,ஜப்பானியர்களும் தான் அதிகம் வருகிறார்கள் என்றார்.
இன்னும் பத்து வருடம் ஓட்டலாம் என்றதும்,நான் அவசர அவசரமாக ஏன் வயது வரம்பு உண்டா என்றேன். ஓ,நோ எனக்கு அப்ப 70 வயசாகிவிடும்
என்றாரே பார்க்கலாம்.!!!!!
அப்ப இவருக்கு இப்ப அறுபது. அழகா சம்பாதிக்கிறாரேன்னு எனக்கு ஆற்றாமையும், தன்னிரக்கமும் மிகுதியாச்சு.
சே, நாம எல்லாம் என்ன கணக்கில சேர்த்தி. இதைப் பாரு என்ன ஜம்முனு வண்டி ஓட்டறது. மழை,மின்னல் அப்படீனு ஒரு பயம் உண்டா. எங்க சிங்கம் வண்டீ ஓட்டறதில சமர்த்தர்னா இவ மகா சமர்த்தியா ஓட்டறா.
சாப்பாடுனு ஒரு ரொட்டியும் ஒரு சாஜேஜும் கடித்துக் கொண்டாள்.
சிக்குனு இருக்கா. பளபளனு முகம் ஒரு சுருக்கம் கிடையாது.
சுதந்திரம் அப்படி இப்படீனு மனசு பொருமிப் பொருமி,
என் நெத்தி சுருங்கியே போச்சு.
சிங்கம்தான் அவளுடைய  பக்கத்து ஃ ப்ரண்ட் சீட்டில் உட்கார்ந்து அவள் ஓட்டும் அழகை கமெண்ட் செய்து கொண்டிருந்தார். 'வேகம் குறையாம
 ஒரு ஜெர்க் கூட இல்லாம எப்படி ஓட்டறா பார்த்தியா'ன்னு என்னைத் திரும்பி பார்த்துக் கேட்டார்.
ஆங், வண்டி நல்ல வண்டி, ரோடு பள்ளம் மேடு கிடையாது, அப்புறம் என்ன?
நானும்தான் ஓட்டுவேன் என்றேன்.
'பையா அம்மா வண்டி ஓட்டக் கத்துக் கொண்டது ஞாபகம் இருக்கா ராஜான்னு' சிரிச்சார்.
ஆஹா மறக்குமா,என் பிஞ்சு வயசு நிகழ்ச்சிகள் ஆபத்துகள்ள அதுவும் ஒண்ணாச்சே.னு எங்கியோ பார்த்தான்எங்க சின்ன மகன்.
போச்சு இன்னிக்கு சம்பந்திகளுக்கு இன்னோரு விருந்துனு நான் அவனைத் தடுக்கப் பார்த்தேன்:)
பார்க்காதடா,கொசுவத்தி கொளுத்தறது என்னோட உரிமை.அதை நீங்க எல்லாம் பறிச்சுக்கக் கூடாதுன்னாலும் கேக்கலை.
இன்னும் ஒரு சீட்டுப் பின்னாலிருந்த பெண்டாட்டியப் பார்த்து அம்மாவுக்குக் கார் ஒட்டத் தெரியும்பா என்றான்.
நிஜமாவா சொல்லவெ இல்லையே என்றும் அவளும் ஒத்துப் பாடினாள். ''ஆனால் பாதசாரிகளின் நலத்தை உத்தேசித்து திருச்சி போக்குவரத்து இலாகா,
லைசென்ஸ் கொடுக்க மாட்டேனுட்டாங்க''ன்னான்.
ஏம்மா நல்லா எட்டுப் போடலியான்னு மருமகள் கேட்டாள்.
எட்டா!!உங்க அம்மா பதினாறே போட்டு இருப்பா. என்னா ஆச்சுன்னா
நானும் குழந்தைகளும் வண்டியில் இருந்ததால மரத்தோரமா நிறுத்திட்டா:)
க்ளட்ச்சையும் பிரேக்,ஆக்ஸிலேட்டர் எல்லாத்தையும் மாத்தி மாத்தி அழுத்தினா வண்டி ஓடும்னு நினைச்சு,ஆக்சிலேட்டர்,ப்ரேக் ரெண்டையும் இரண்டு பாதத்தில பிடிச்சுண்டு விடவே இல்லை. அப்படியே வண்டி எங்க போறோம்னு தெரியாம திணறிப் போச்சு.
எதிர்த்தாப்பில போலீஸ்காரர் அவர்மாட்டுத் தன் வேலையைப் பார்க்க சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் எங்க வண்டி துள்ளறதைப் பார்த்துட்டு
ஆஹ்ஹ்னு சைடு வாங்கி பள்ளத்தில இறங்கிட்டார்.
அவரைப் பார்த்ததும் அம்மாவுக்கு உதறல் எல்லாத்தையும் விட்டுட்டா. வண்டி
ரோடைவிட்டுக் கீழ வயலில் இறங்கி தத்தி தத்தி ஒரு புளியமரத்திலடில போய் நின்னுது. ஹாய்னு சத்தம் போட்டுட்டுனு நீங்க எல்லாரும் இறங்கியாச்சு.
அவர் நிறுத்தினதும் நான் வண்டியை நிறுத்தின வைபவத்தை எல்லோரும் ரசிச்சுக் கொண்டாடினாங்க.
கூடவே இவர் என்னை அநேகமா போலீஸ் பார்த்து
உன்னை லாக் கப்பில வைப்பாங்க. அதுவும் அப்ப 1974ல ஏதோ ஒரு நெருக்கடி அரசியல்னு நினைக்கிறேன்.
உன்னை அவன் லேசில விடப்போறதில்லன்னு ,வேணும்னா நாங்க செல்வம் லாட்ஜில சாப்பிட்டுட்டு உனக்கும் ஏதாவது கொண்டு வரோம்னு சொன்னது
எல்லாம் நினைவுக்கு வர எனக்கே என் அசட்டுத்தனம் சிரிப்பாக இருந்தது.
எப்படியோ அந்த அழகான ஃபியட் கார் சேதாரம் ஏதும் இல்லாம வெளில வர அந்தக் கான்ஸ்டபிளே உதவி செய்தார்.
அம்மா, அய்யாதான் ஜம்முனு ஓட்டறாரே, நீங்க சொகுசாப் போங்கம்மா. எதுக்கு இந்தக் கஷ்டமெல்லாம்னு ஓதிட்டுப் போனார்.
இப்பவும் திருச்சி ஏர்போர்ட் ரோடைப் பார்த்தால் அந்தப் புளியமரத்தையும் பார்த்துப்பேன்:)
நமக்கு ஞானம் வந்த இடமில்லையா!!
இப்படியாகத்தானெ திருமதி எலிசபெத் க்ராஃப் உபயத்தில் சம்பந்திகளுக்கு ஒரு கதை கிடைத்தது. நமக்கும் ஒரு பதிவு கிடைத்தது:)









3 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான அனுபவம். அப்போது திக் திக்கென இருந்திருந்தாலும் இப்போது புன்னகைக்க முடிகிறது!

நெல்லைத் தமிழன் said...

உங்கள் டிரைவிங் அனுபவம் நல்லாத்தான் இருக்கு. எப்போவாவது காரை டிரைவ் பண்ணுனீங்களா?

எனக்கு, டிரைவர் சீட் பக்கத்துல உட்கார்ந்து வருவது கடினம். அவங்க வேகமாகப் போனால், 'மெதுவா மெதுவா' என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். 'சர் சர்'னு ஓட்டினால், எனக்கு ரொம்ப டென்ஷன் ஆகிவிடும். நானே கார் ஓட்டும்போது ஜாக்கிரதையாக ஓட்டுவேன், அதனால் கவலையில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். ஸ்ரீராம். பிரமிப்பு வரும்போது பழையன நினைத்தல்னு
ஒரு புது மொழி நீங்களும் அம்மாவுக்காக வந்து பின்னூட்டம் இடுவது..

நன்றி மா.