Blog Archive

Friday, September 30, 2016

Navaraaththiri Arambam

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Tuesday, September 27, 2016

தம்பிக்குப் பிறந்த நாள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


தம்பிகள் அண்ணாக்கள் அக்காக்கள் தங்கைகள் குடும்பத்தில் அடுத்தாற்போல் பிறக்கணும்
இது என்னைச் சந்தித்த ஒருவர் சொன்னது,.
அவர் வீட்டுக்குச் செல்லப் பெண்.

உலகமே நமக்குச் சொந்தம் தானே என்றேன்.என் இரண்டாவது தம்பிக்கு
 செப்டம்பர் 28 க்குப் பிறந்த நாள்   கொண்டாடுவது எனக்கு வழக்கம். என்
.....    பேத்தி கேட்ட மாதிரி , உனக்குத் தம்பி என்றால் என் உனக்கு முன்னால் உம்மாச்சி கிட்டப் போனார்..... என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தேன். உம்மாச்சி கிட்ட நல்ல  வேலை செய்ய  அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார் என்றார். அவருக்கு அவனை ரொம்பப் பிடித்துவிட்டது.  என்றேன்.

இதோ அவனுக்கு 64 வயதாகப் போகிறது. அவன்   இருந்திருந்தால்  மகள்
திருமணத்தில் ஆனந்த சாகரத்தில் மூழ்கி  இருப்பான். சென்னையில் மழை பெய்திருக்காது. நானும்  சென்னைக்கு வந்திருப்பேன்.
சிங்கம் கூட உயிரோடு இருந்திருக்கலாம்.
அத்தை என்று கம்பிரமாகச் செல்ல மருமக்களுக்குச் சீர் செய்திருக்கலாம்.

ஆஹா அல்நாசர் போல கனவு ஓடுகிறது.

அன்பு ரங்கா ,எப்பொழுதும் அன்பால் என்னைக் கட்டிப் போட்டாய் .

மீண்டும் உன் பெண்  வழி வந்து உலகவாழ்க்கையில் நம்பிக்கை கொடு.




Friday, September 23, 2016

பெண்மை போற்றுதும் பெண்மை போற்றுதும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இவளை நினைப்பவர்களுக்கே வீரம் வர வரவேண்டும். தனியே நின்று வென்ற சக்தி அல்லவா.
இக்கரைக்கு அக்கரை 
கருணையின்  பிறப்பிடம் தாய். காப்பாற்றுவாள்.

உரை நடையில் ஒரு எண்ண  ஓட்டம்.
+++++++++++++++++++++++++++++++++++++++

பெண்னெனப் பூமியில்  பிறந்துவிட்டால்  மிகப்
பெருமை உண்டு பாரினிலே.
எங்கிருந்தோ வந்தால்
எங்கோ போகப் போகிறாள்.
 இடையில் கட்டிய அணை பிறந்தகம்.

அவள் சுதந்திர பறவை என்று நம்ப வைக்கப் படுவாள்
 சுற்றிப் பின்னப்  பட்டிருக்கும் வெள்ளி  நூல்கள்
தெரியாமல்   அதற்குள்ளேயே
அடங்கி நடப்பாள்.
என்வாழ்வில் புதுப்பாதை கண்டேன் என்று
வானம்பாடியாகப் பாடிக்
குஞ்சுகளை வளர்த்து வீட்டுப் பெரியவர்கள் அடிபணிந்து
 நிமிரும்போது அவள் தொலைத்த எத்தனையோ வருடங்கள்
கண்முன் வரும்.
ம்ம்ம்ம். நான் இதைக் கடந்துவிட்டேன். எனக்கொரு வாழ்வு எனக்காகத் தேவை இல்லை.

என் அம்மா, என் மாமியார் வழி நானும் நடப்பேன்.
 வண்டி மாடுகள் போலாகி சீராக
நடக்கும்  ஜோடியில் ஒன்று வீழ்ந்தால்
இன்னொன்று க்கு வழி மீண்டும் மற்றவர்கள் வலையில்
அடைபடுவதுதான். பாதுகாப்பு வேணுமே.

இந்த நிலையில் இருக்கும் மங்கைகளுக்காக
எழுதினேன்.
வெற்றி பெற்ற எத்தனையோ   சாம்ராஜ்ய தேவதைகளுக்கானதில்லை இந்தப் பதிவு.

Saturday, September 17, 2016

நேற்றும்இன்றும் நாளையும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++

கணவர் எழுந்துவிட்டார் என்பது , வஞ்சுவுக்குத் தெரிவதே
அவர் பல் தேய்க்கும் சத்தத்தால் தான்.
அவருக்கு தொண்டை பூராவும் சுத்தம் செய்து கபம் எல்லாம் வெளி வந்து, பல் பளிச்சிடும் வரை பலவித கர்ஜனைகள் வெளி வரும்.

சரியாகப் பாலை க் காய்ச்சி முதல் டிகாக்ஷன் இல் தான் காப்பி வேணும் அவருக்கு.
ஆவின் பச்சைப் பாலில் இருந்து இப்பொழுதுதான் 2 பர்செண்டுக்கு வந்திருக்கிறார்கள்.
என்ன செய்வது மாடு வைத்துப் பால் கறந்து வளர்ந்த குடும்பம்.

பிறகு அவர் வேலை அவருக்கு அவள் வேலை அவளுக்கு.   20 வருஷமாக இந்தத் தணிக்க குடித்தனம் பழகி வருகிறது.

அவ்வப் போது வெளி நாட்டிலிருந்து  வரும் பசங்களும் அவர்கள் மனைவிகள் குழந்தைகள்  என்று  வருடத்தில் இரண்டு மூன்று மாதக் கலகலப்புக்கும் பழகிக் கொண்டார்கள்.
மற்ற நேரங்களில் வித விதமாகப் படுத்தும்  நோய்கள் பேரன் பேத்திகளைக் கண்டால் ஓடிவிடும்.

மருமகள்களுக்கு  இந்தக் காலை கர்ஜனைகள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

மாமாவுக்கு  என் இவ்வளவு சளித்தொந்தரவு என்று நாசூக்காகக் கேட்டுக் கொண்டார்கள்.

தன்  எழுபது வயதில் அதுதான் ஆதார சுருதி என்று அவர்களிடம் விளக்க முடியுமா.

அது ஒரு நாள் கேட்காவிட்டால் தான் மாடி ஏறி, அவர் ஏன்    எழு ந்திருக்கவில்லை என்பதை பார்க்கப் போகும் திகிலை வர்ணிக்க முடியுமா.

இந்தக் கோடையில் அவருக்கு சளி பிடிக்கும் . பிறகு சரியாகிவிடும். நாள் முழுவதும் இருமி   மற்றவர்களைத் துன்பப படுத்துவதில் அவருக்கு விருப்பம் இல்லை. அதுதான் இந்தப் பயிற்சியைக் கற்று வந்திருக்கிறார் என்  பதில் சொல்வாள்.

இதோ இப்போது அவரும் இல்லை. இருமல்,பல் தேய்த்து, சுவர் அதிரும் சத்தம் இல்லை.

மருமகள் கள்  இப்போது அவரவர்  கணவர்களிடம்     புத்திமதி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
சிரிப்புதான் வருகிறது வஞ்சுவுக்கு. டயரியில் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் ............
புதிய  ஞாயிறே வருக.





புரட்டாசி பிறந்ததும். மாவிளக்கு வந்ததும் 1962

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்    திண்டுக்கல் 1962
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++





Add caption
 புரட்டாசியும் சனிக்கிழமையும் சேர்ந்து வந்து நம்மை வாழ்த்துகிறது. 
அந்த கோவிந்தனின் கருணைக்கு நம் காணிக்கை.

அன்பே தகழியாய்,ஆர்வமே நெய்யாக, உயிர்த்திரி இட்டு 
ஏற்றும் அரிசி மாவு வெல்லம் கலந்த விளக்கு.
அப்பாடி அதற்கு 
அம்மா எடுத்துக் கொள்ளும் ஆர்வம்  நமக்கே படபடப்பாக இருக்கும்.
முதல் நாளிலிருந்து மௌனம். எல்லாம் ஜாடைதான்.
அரிசியை ஊற்வைத்து உலர்த்தி. ஈரத்தலையோடு 
உரல் அடியில் நின்று கொண்டு அரிசி இசித்து உலர்த்தி சலிது மாவாகச் செய்து விடுவாள்.
அடுத்த நாள்  இரண்டாம் சனிக்கிழமை யாக இருக்கும்.

நாங்கள் அப்பாவோடு இருப்போம் .அன்று சாப்பாடு லேட்டாகத்தான் கிடைக்கும்.

ஒரு பெரிய தாம்பாளத்தில் அம்மா, வாழை இலையில் மாவைக் கூட்டும் அழகே தனி.
அதொடு பொடித்த மண்டை வெல்லத்தை ஆதரவோடு கலப்பாள். வாய் கோவிந்த நாமத்தை சொன்னபடி இருக்கும். 
முதல் நாள் அப்பா வாங்கி வந்திருந்த புத்தம்புது வெண்ணெய் உருக்கப் பட்டு
அம்மா செய்துவைத்திருந்த  ஒரு குட்டி ஆதி சேஷன் போல் இருக்கும் மாவணையில் சேர்க்கப் படும்.
அப்பா, ஜெயா, மணி  எ ட்டரை என்று சொல்லவும்  மிகப் பெரிய நெய்த்திரி நெய்யில் இறங்கும். நாங்கள் கோவிந்தா சொல்ல திரி நெய்க் குளத்தில் இறங்கி தீபம் ஏற்றப்படும். அப்பொழுது அங்கு  உட்கார்ந்தவள் தான்.
 ஒரு மணி நேரம் ஆகும். வாசனையோ எங்கள் மூக்கைத் துளைக்கும்.

பெருமாள் மலையேறப் போகிறார் எல்லோரும் வாங்கோ  என்றதும்,
அப்பா உடனே தேங்காயை அழகாக உடைத்து விளக்கின் இரு பக்கமும் வைப்பார். வெற்றிலை பாக்கு கூட
இருக்கும்.
நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெய் தீர்ந்து சகலமும் கலவையாகி நிஜப் பரம பதம் போல் காட்சி கொடுக்கும்.
விழுந்து விழுந்து சேவிக்கும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து நாங்களும் நி லத்தில் நெற்றி பதிப்போம்.
 பிறகுதான்  அம்மா முகத்தில் சிரிப்பு வரும்.
அதன் பின் எங்கள் வேட்டை தான். அப்பா தேங்காத் துண்டங்களுடன், மாவீளக்கு மாவை ஆளுக்கொரு வாழை இலைத் துண்டில் அமிர்தமாகத் தருவார்.
மற்ற வீடுகளுக்கும் நான் பறப்பேன் மாவிளக்கு டப்பாவுடன்.
  கோவிந்தா  சரணம். அனைவரையும் காத்தருள்.

Sunday, September 04, 2016

நவசக்தி கணபதி பிறந்த நாள் வணக்கங்கள்

  1. என் அன்பு வினாயகா, அருமை கணபதியே,
    சிறு உருவத்திலும் பெரு உருவத்திலும் அரவணைக்கும் 
    கருணைக் கடவுளே.

    எந்த ஊர் சென்றாலும் அப்பா தேடுவது உன்னைத்தான்.
    திருமங்கலத்துக்கு ஒரு அரசமரத்தடிப் பிள்ளையார் தனி ஆட்சி புரிந்து எங்கள் சின்னக் கவலைகளை எல்லாம் கேட்டுக் கொள்வார்.
    திண்டுக்கல்லில் வெள்ளைவிநாயகர்  எங்கள் கல்வியை  பூரணமாக்கி வைத்தார்.

    சென்னையில் பாட்டி வீட்டுக்கு வெளியில் இருந்தவர்   என் திருமணத்தை நிறைவேற்றினார் ..
    பின் புதுக்கோட்டைப்  பிள்ளையார் பிள்ளைப் பேறு கொடுத்தார்.

    சேலம்  ராஜகணபதி  பிள்ளைகளின் நோய்களை  நீக்கி ,
    திருச்சி உச்சிப் பிள்ளையார் கண்கண்ட தெய்வமாக  அணைத்து எங்களைச் சென்னையை நோக்கி ஆசிகளுடன் பயணிக்க வைத்தார்.
    இங்கே பார்க்கும் இடமேல்லாம் பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன.
    அவர் என்னைக் கைவிடுவதில்லை.

    கணபதி தாள்கள் சரணம்.
    Add caption
  2. அன்னை மனக்கவலையைப் போக்கினார்.
    திருச்சி உச்சிப் பிள்ளையார் கண்கண்ட தெய்வமாக  அணைத்து எங்களைச் சென்னையை நோக்கி ஆசிகளுடன் பயணிக்க வைத்தார்.
    இங்கே பார்க்கும் இடமேல்லாம் பிள்ளையார் கோவில்கள் இருக்கின்றன.
    அவர் என்னைக் கைவிடுவதில்லை.
    சென்னையில்  மயிலை அனுமனும், நவசக்தி கணேசனும் என்றும் காவல்.
    எப்போதும் காவல். அப்பனே நீ இல்லாமல் நாங்கள் இல்லை. வழித்துணை நீயே ஐய்யா.
    கணபதி தாள்கள் சரணம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
Add caption




Friday, September 02, 2016

பயணம் இனிமை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
   அப்பா  இந்த பிளேன்ல ஏம்ப்பா டிவி இல்லை .பின் சீட்டிலிருந்து  மழலை. அப்பா சிரித்துக் கொண்டார். அம்மம்மாவிடம்   அடுத்தாற்போல் கேள்வி. அந்த பிளேன்ல சாக்கலேட் கொடுத்தாங்களே இவங்க என் தரவில்லை. என்ன அழகாத்  தமிழ் பேசுகிறது இந்தப் பாப்பா   என்று எனக்கு ஒரே மகிழ்ச்சி.
  இருக்கையிலிருந்து எட்டிப் பார்க்கவும் முடியவில்லை. முக்குனு வயசு இருக்குமா என்று யோசித்தேன்.   இந்த பிளேன் கிலம்பாதாப்பா.  கிளம்பும்   செல்லம். மற்ற பிளேன் எல்லாம் கிளம்ப  வேணும் இல்லையா.  ஓ சேரி. இங்கயும் நல்லாத்தான்    இருக்கு.   அப்பா இன்னும் கிளம்பலியே அடுத்த செகண்ட்.  பதில் இல்லை. அப்பா உங்களைத்தான் கேக்கறேன் என் கிளம்பவில்லை என்று பாப்பா சொன்னது   பைலட்டுக்குக் கேட்டது விமானம் உருள ஆரம்பித்தது.



ஹய்யா இனி அடுத்து லண்டன்ல தான் இறங்குவோம் கைதட்டியது. எனக்கு உள்ளம் எல்லாம் சுகந்தம்.
 அய்யா இது என்ன இது உருண்டு  கிட்டே இருக்கு  மேலே கிளம்பலியே என் அப்பா.
இப்போ திரும்புமா.  அடுத்த பாதையில் திரும்புமா. வேகம் எடுக்கவே இல்லையப்பா.  பூமியில் தான் சக்கரங்கள் இருக்கின்றன.  ரொம்பச் சின்ன ப்ளெனோ .
அதெல்லாம் இல்ல குட்டி. அது அது முறைப்படி கிளம்பும். ஓ வரிசை என்று  என்று சமாதானப் படுத்திக் கொண்டது அந்தச் செல்லம்.
சட்டென்று கிளம்பியது விமானம். உடனே ஒரே உற்சாகம் .
அச்சோ  மனிதர்கள் எல்லாம் சிரிசாகிவிட்டார்கள். வீடுகள் பொம்மையாட்டம்.

மேகம் வந்துட்டது பா. நிலம்  தெரியாது.  இப்படிப் போகும் போது இங்க ஒண்ணுமே உன்னைக் கொடுக்க மாட்டார்களா  அப்பா.. அந்தப் பிளேனில் பால், மீன், இறைச்சி  எல்லாம் கொடுத்தார்கள் அப்பா என்று மீண்டும் வம்பு இழுத்தது.
தமிழ் தெரிந்தவர்கள் சிரித்துவிட்டார்கள்.

இது சிறிய பயணம் குட்டி.  நாம் லண்டனில் எல்லாம் சுவைக்கலாம் என்கிறார் அப்பா.
ஒரு வழியாக லண்டன் வந்தது.
இந்தப் பாப்பாவுக்கு அளவிட முடியாத  சந்தோசம்.
ஊஊஊ   இது கெட்டிக்கார பிளேன் . நம்மளை லண்டனுக்கு கொண்டு வந்து விட்டது. ரொம்ப ரொம்பக் கெட்டிக்கார பிளேன் என்று  சொல்லிக் கொண்டே வந்தது.

என்ன ஒரு இனிமையான பயணம் என்று நினைத்தபடி இறங்கினேன் நானும்  இரட்டைக் குடுமி துள்ளியாட தன தந்தையுடன் ஓடிவிட்டாள்  அந்தத் தேவதை.