Blog Archive

Thursday, January 21, 2016

ஒரு குளிர்காலச் சிந்தனைகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
புத்தாண்டு வந்து ,பொங்கலும் வந்துவிட்டுப்  போகிறது..
எத்தனையோ  எழுதி இருக்கலாம்.  தினம் தினம்   வேறு வேறு நிகழ்வுகள். நடக்கும் வேகத்தில் பதியத்தான்   வலு இல்லை.
 மகிழ்ச்சியான புத்தாண்டு நிகழ்வுகள் தோழமைகள் வருகைக்கு நடுவே ,  ஒருவர்  அதிக  மது மயக்கத்தில்   நான் எப்போதும் ரசிக்கும் ஏரிக்குள்   தன வண்டியைச் செலுத்திவிட்டார்.
 நாலைந்து அடிகள் இருக்கும் இந்த ஏரி  என்று நான் நினைத்திருந்தது 15 அடிகள் ஆழமாம்.

இனி அது வழியாக யாரும் நடை பழக    நாட்கள் ஆகும்.
இப்போது அடிக்கும் பனி யில் ஏரி உறைந்தே விட்டது.  படங்களில் பார்ப்பது போலக் குழந்தைகள் வந்து பனிமழையில் நனைந்து ஒருவர் மேல் பனிப் பந்தை விட்டெறிந்து விளையாடுவதில்லை. வீட்டுக்குள்ளேயே தோழர்களை வரவழைத்து  விளையாடுகின்றனர்.
மீண்டும் பார்க்கலாம்.

Friday, January 01, 2016

இனிய புத்தாண்டு 2016க்கான வாழ்த்துகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பசுமையான நினைவுகள் மகிழ்விக்க,  புது நினைவுகளை வரவேற்று
இன்று எல்லோரையும் வாழ்த்தி  புது வருடத்தை ஆரம்பிக்கிறேன்.

தொலைந்த கனவுகளைப் பத்திரப் படுத்தி. எதிரில் இருக்கும் இளம் தளிர்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய 2016க்கான   ஆசிகளும்  வாழ்த்துகளும்.