Blog Archive

Sunday, August 30, 2015

மீண்டும் திண்டுக்கல்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஒரு ஞாயிறின் தனிமை நினைவுகள்
++++++++++++++++++++++++++++++++++++
********************************
சனிக்கிழமை காலை தொடங்கும் துடிப்பு
கரைத்த ரசம் சாதம் விக்கலோடு உள்ளே இறங்கும்.
அம்மா தலைதட்ட,மீண்டும் தலை கோதிச்
செருப்பிட்ட கால்கள் சிநேகிதியின் வீட்டுக்கு விரையும்.
வெள்ளிவந்த   விகடன் கதைகளை
அலசி வழியில் வரும் தோழிகளுடன்
அரட்டையோடு தலை நிமிராமல்
பள்ளியை அடைந்து வாடி பௌர்ணமி
உனக்கெதற்குப் பவுடர் எனக் கேலி கேட்டு
உன்காந்தலழகு மேலாகத்தெரியத்தான்
என்று மறுமொழி சொல்லி
பன்னிரண்டு மணி வரை  பாடங்கள் பொறுத்து கண்கணவென
 மணி  ஓசை முடிவதற்குள்
பள்ளிக் கதவைத் தாண்டிவிடும் கால்கள்.
மீண்டும் பதவிசுப் போர்வை போர்த்து
பஜார் வழியாச் செல்லாதே
கேலி பேசும் காளைகள் உண்டு
எனும் தோழியின் எச்சரிக்கையைக் கேட்டு சுட்டெரிக்கும் வெய்யிலில்
வீட்டு நிழலை அடைந்ததும்
ஆரம்பிக்கும் என் வீக் எண்ட்.
அவசரமில்லாமல் தேவானையுடன் பேசி வம்படித்து
அடுத்த வீட்டு இட்லிமாவு அரைபடும் சத்தம் கேட்டு
முருங்கை பறித்து,ஓடும் பல்லிகளுக்கு நடுவில்
கிணற்றில்தண்ணீர் இறைத்துத் தொட்டி நிரப்பி
உடைமாற்றி  மலைக்கோட்டை ஏறி உலகத்தையே ஆளும்
மகராணிபோல அந்தக் காற்றைச் சுவாசித்துக்
கீழே இறங்கி அம்மா அப்பா தம்பிகளுடனும்ஸ்ரீநிவாசப்பெருமாளையும்
கண்டுகொண்டு

கழித்த சனிக்கிழமை.பிறகுவரும் ஞாயிறு.
எங்கே போயின.
 நினைவில் பசுமையாகப் பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கின்றன

5 comments:

ஸ்ரீராம். said...

மலரும் நினைவுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

நினைவுகள் என்றுமே இனிமையானவை

”தளிர் சுரேஷ்” said...

அருமையான நினைவுகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை அம்மா...

anitha shiva said...

இனிமையான நினைவுகள் என்றும் இனியவை அம்மா