Blog Archive

Saturday, August 29, 2015

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், ஆவணிப் பூர்ணிமை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1957  ஆவணி அவிட்டம்.
சீனிம்மா எழுந்ததிலிருந்து  மற்றவர்களும் பம்பரமானார்கள்.
நாலு கட்டை பிரம்மச்சாரிகள்  இருக்கு.
ஸ்வாமிகள் வரும் நேரமாகிறது.
ஆண்டாள்  ஆத்தைப் பெருக்கி  மெழுகி வை.
மாக்கோலம் போடு..  நாலு   மணைகள் போடு..

கொடியிலிருந்து   நான்கு பேரின்   வேஷ்டிகளையும் கூடையில் போடு.

அம்மா, பாட்டிக்கு உதவியாகக் காலையிலே  எழுந்து  இட்லி,அப்பம்  எல்லாம் தயார்
செய்து கொண்டிருந்தார்.
என் தம்பிகளும்  கள்ளப் பூணலுக்காக ரெடியாக இருந்தார்கள்..
 எல்லோருக்கும் பசி. 11 மணிக்குக் குளத்தூர் வாத்தியார் ஸ்வாமிகள்  வந்ததும்  முறையாக உபாகர்மா நிறைவேறியதும் கண்கொள்ளாக் காட்சி.

1964   திண்டுக்கல்
ஆரவாரமில்லாத  ஆவணி அபவிட்டம். அப்பா காலையில் எழுந்ததிலிருந்து காப்பி குடித்துவிட்டுக் குளித்துவந்து ,தன் பிள்ளைகளுக்கும் திருமண் ஸ்ரீ சூரணம் இட்டு,பட்டு வேட்டி உடுத்தவைத்துப்

பூணல்  விழா  நடத்தினார். இந்தனாளின் விசேஷத்தையும் அவர்களுக்குச்  சொல்லி வைத்தார். காயத்ரி மந்திர ஜபப் பலனை
அவர்களுக்குப் புரியும் படி சொன்னார். ஆழப் பதிந்திருக்க வேண்டும் அந்தப் பச்சை மண்களுக்கு..அப்பா நன்றி. நானும் கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.
பசி ஒன்றுதான் பிடிக்கவில்லை.


1976  பாரிஜாதத்தில் ஆவணி அவிட்டம்..
நழுவப் பார்த்த சிங்கத்தைப் பிடித்து நிறுத்தியது அவர்து தந்தை.
இங்கே  ஆஜிப் பாட்டியின்  மிரட்டல்
  எல்லோரும் சாமி வந்தவர்களைப் போல ஆடிக் கொண்டிருந்தோம்.. ஆசாரம் ஜாஸ்தி இங்கே.
கிணற்றங்கரையில் ஒரு கடப்பாக் கல் மேடை. அங்கே உட்கார்ந்து கொண்டு அழகாகப் புத்தம்புதுப் பூணலோடு  வந்தவர்களுக்கு,மாமியார்களும் மருமகள்கள்களும்
சிரத்தையாகப் பரிமாறினோம்.
இடையிடையே  ஆஜிப் பாட்டியின் குரல்.பொண்டுகளா ஆண்பிள்ளைகளுக்கு வருஷத்துக்கு ஒரு விழா இது. அவர்களைக் கொண்டாடி
உணவு கொடுங்கள்  ....அவர்கள் ஆரோக்கியத்தோடு, ஒழுக்கம் வழுவாமல் நன்றகச் செழிப்போடு இருக்கப் பெருமாளைப் பிரார்த்தியுங்கள்
என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

இன்று இங்கே  நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். மாப்பிள்ளை, பேரன்கள்
உட்கார்ந்து தந்தை சொல்படி  செய்து கொண்டு இருக்கிறார்கள். வடை வாசனை மிதந்து வருகிறது

நானும் பதிவை எழுதிவிட்டுப் பசியாறப் போக வேண்டியதுதான்.
அனைவருக்கும்   ரக்ஷாபந்தன் வாழ்த்துகள்.

2 comments:

கோமதி அரசு said...

அருமையான பகிர்வு.

Geetha Sambasivam said...

அனைவருக்கும் பண்டிகை தினஃ வாழ்த்துகள்.