Blog Archive

Wednesday, June 03, 2015

சங்கடமான கனம் .

 எ
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


சில நாட்களுக்கு முன் என் தோழியைப் பல வருடங்களுக்கு அப்புறம் சந்தித்தேன்.
ஒரு திருமணத்தில் பார்த்தபோது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
எனக்கோ அவளைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது.
நான் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, எங்க 64ஆம் வருட பரிசோதனைக் கூட நாட்களை நினைவு படுத்தியதும் தான் சிரித்த வண்ணம் ஒத்துக்கொண்டாள் நான் நான் தான் என்று.
என்னசெய்வது அவள் எதிர்பார்த்தது 48 கேஜி
ஒட்டடைக் குச்சியை.
இப்போது பார்ப்பது கிட்டத்தட்ட ( ம்ஹ்ம்ம்) ஒரு 75 கிலோ பாட்டியை.:)
அவள் மட்டும் ஓரிரண்டு நரை முடியைத் தவிர
அது என்ன 50 கேஜி தாஜ் மகால் ஆகவே இருந்தாள். அவள் என்னை சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.
'
கொஞ்சம் அதிர்ச்சி,நிறைய வியப்பு என்று என்னை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். நீ எப்படி இவ்வளவு வெயிட் போட்ட. என்னாச்சு. சாப்பாட்டுப் பிரச்சினையா. சந்தோஷம் அதிகமானா சாப்பாடும் கட்டுப்பாடில்லாம போகும்னு சொல்லுவாங்களே, அதுப்போல
உனக்கும் வாழ்க்கை இனிமையாகப் போயிருக்கும். நீதான் படிக்கிறதை 18 வயசிலியே நிறுத்திட்டியே.???
படிப்ப நிறுத்தினா உடம்பு பெருக்குமா என்ன. கணக்கு சரியாயில்லையே என்று நான் அவளை முறைப்பதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.
ஷி வாஸ் இன் ஷாக்!!!
பசங்க உண்டா எப்படி இருக்காங்க கல்யாணம் ஆச்சா அவங்களுக்கெல்லாம். பேரன் பேத்திகள் உண்டா என்று அவள் மூச்சு விடாமல் கேட்க எனக்கு மூச்சு வாங்கியது.
பின்னே!
அவள் எறும்பை விட வேகமா நடந்து கொண்டே பேசினால் நான் என் சரீரத்தையும் அழைத்துக் கொண்டு பின்னால் போக வேண்டியது சுலபமான காரியமா.
நாற்காலிகளுக்கு நடுவே படு சுலபமாக அவள் போக, நான் எல்லாருடைய கால்களை இடித்து, பாதங்களை மிதித்து,
அவர்களின் நற நறக் கடிப்பு வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் போனேன்.
ஒருவழியாக நாதஸ்வர இரைச்சலிலிருந்து(!!!) கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.
'இப்போ சொல்லு. எப்படி இருந்த நீ இப்படி ஆன??
என்ன சொல்லன்னு தெரியாமல் விழித்தேன்.
ஒரு 45 வருஷக் கதையை அவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமா....
தொடரும்( சங்கடங்கள். )












 அடுத்த நாள்  அனு,
அதான் என் பிரம்மாண்ட  சரீரத்தைப் பார்த்துப் பயந்து போய்,என்னை என் உடல் நிலை கண்டு கவலைப் பட்டு ,
கல்யாண சாப்பாட்டில் ஒரு நல்லதை ஒரு பாசந்தி கூட சாப்பிட விடாமல் செய்துவிட்டு
நான் உனக்குப் போன் செய்யறேன்னு பயமுறுத்திவிட்டு வேறு போயிருந்தாளே, அந்த அனு,
 போன் செய்தாள்.:)

ஹேய் ,
நான் சொல்றதைக் கேட்டியானால் நாலே மாசம், உன் எடை குறைந்துவிடும் , கேக்கிறியா என்று நிறுத்தினாள்.
நல்ல நாளிலியே எனக்குக் கேட்கும் சக்தி குறைவு:)
இப்ப வேற ஏகப்பட்ட மருந்து மாத்திரை, கொஞ்சம் சாப்பாட்டுக் குறைப்பு,
அப்போது 12 மணி ..
மதிய சாப்பாட்டுக்குப் போகத்துடிக்கும் கால் களையும் கைகளையும் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட மனுஷி கிட்ட,
இப்படி ஒருத்தி அட்வைஸ் ஆரம்பித்தால் கோபம் வருமா வராதா!!!
எனக்கு வரவில்லை. 'ம்ம் சொல்லும்மா. என்றபடி கேட்க ஆரம்பித்தேன்.
புத்திமதி சொல்கிறவர்களுக்கு ஒன்று மட்டும் நினைவில் இருப்பதில்லை.
தனக்கு இருக்கும் அறிவில் பாதியாவது தன் வயதே ஆன தோழிக்கும் இருக்க
 வாய்ப்பு உண்டு என்ற உணர்வுதான் அது.

பள்ளிக்காலத்தில் கணக்குப் பாடத்தில் எப்போதும் எனக்கு அவளுக்கும் போட்டி. இறுதிப் பரிட்சையில் அவளுக்கே முதல் இடம். ஒரு பத்துமார்க் குறைவுதான் எனக்கு.
கவனமே போதாதுடி உனக்குனு அவள் சொல்லும்போது நானும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டேன்.
பரீட்சை ஹாலில் அளவுக்கு மேல பயத்தால் இருமுவது நானாகத்தான் இருக்கும்.

அவள் பேப்பருக்கு மேல் பேப்பர் கேட்க
 நான் தண்ணீர் கேட்பதற்குத்தான் அதிகம் எழுந்து நிற்பேன்.
ட்ரிக்னாமெட்ரி என்ற அரக்கன் என்னைக் கைவிட மதிப்பெண்களையும் கோட்டைவிட்டேன்.
அதை இன்னும் அவள் மறக்கவில்லை என்பது அவள் பேச்சிலிருந்து தெரிந்தது.:))
எப்பவுமே கடைசி நிமிடத்தில் நீ பின்வாங்கிவிடுவாய்.அந்த அக்ரெஸிவ்னெஸ் உனக்கு வரவே இல்லையே இவளே.

நான் பாரு, இப்ப இந்த வேலையில் ஓய்வெடுத்த பின்னாலும் கன்சல்டண்டாக இருக்கிறேன்.
நீ கூடக் கவிதை எல்லாம் அப்போ எழுதின மாதிரி எனக்கு லேசா நினைவிருக்கிறது என்றாள்.
ஆமாம் அதெல்லாம் ஒரு காலம் என்று மிகச் சோகக் குரலில் பதில் சொன்னேன்.:)

சே, ரொம்ப வீணாகப் போச்சுப்பா உன் நேரமெல்லாம். எப்படியோ வந்திருக்கலாம் என்று அவள் ஆரம்பித்ததும் அவளை ட்ராக் மாத்த வெயிட் லாஸ் பத்திச் சொல்கிறேன் என்றாயே என்று நினைவு படுத்தினேன்.
ஏதாவது காய்கறி ரெசிப்பி, சர்க்கரை இல்லாத உணவுக் குறிப்புகள் ஏதாவது சொல்லுவாளோ என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.
ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து
அழகைக் கட்டாயம் வரவழைக்கும், (சிறிது நாளில் தொலைந்து போய் விடும் )
ஒரு நிலையத்தைத் தனக்கு மிகத் தெரிந்த நண்பி நடத்துவதாகச் சொல்லி தள்ளுபடி விலையில் எனக்கு ஒரு டீல் வாங்கித்தருவதாகவும் சொன்னாள்.
நானும் அந்த நிலையத்தைப் பேரனுக்கு தலை முடி வெட்ட அழைத்துப் போகும்போது பார்த்திருக்கிறேன்.
ஓடும் மெஷினும் குலுங்கும் உடல்களுமாக அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. வருபவர்களின் வண்டிகளே இருபது லட்சம் ரூபாய் (,அந்தக்) கணக்கில் இருந்தது.
பாதிப் பேச்சைக் கோட்டைவிட்ட நிலையில்,
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, அவள் சொன்ன எல்லாக் குறிப்புகளையும் பின்பற்றுவதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தேன்.
இதனால் ஒரு நல்லது நடந்தது. என் தைராய்டு அளவு பரிசோதனைக்குப் போனபோது, வைத்தியரிடம் கேட்ட போது, அவர் எனது இந்தத் திடீர் எடை கூடுதலுக்கு விளக்கம் சொன்னார்.
தைராய்ட் அளவு க்கு அதிகமாக இருப்பதாகவும், இன்னும் வேறு உணவு முறை பின் பற்ற வேண்டும் என்றும் சொன்னார்.
ஒரு வகையில் ஆறுதல்.
ஏதோ பகாசுரி லெவலுக்கு நாம் போக வில்லை.
இதுவும் கடக்கும்னு சமாதானப் படுத்திக்கொண்டு என் கீரையையும் சப்பாத்தியையும் சாப்பிடப் போனேன்:)

14 comments:

Geetha Sambasivam said...

ஆமாம், ஒல்லியா இருக்கிறவங்களுக்கெல்லாம் குண்டா இருப்பவங்களைப் பார்த்தால் அலட்சியம், கேலி தான். ஏதோ நாம நிறிஅயச் சாப்பிடறாப்போல் நினைச்சுப்பாங்க. அவங்க குறைச்சலாச் சாப்பிடறாப்போல் சொல்வாங்க. இப்போவும் பலரும் என்னைப் பார்த்ததும் சொல்றதே சாப்பாட்டைக் குறை அப்படினு தான். ஆழாக்கு அரிசி வடிச்சு ரெண்டு பேரும் சாப்பிட்டு மிச்சமும் இருக்கும். இதுக்கு மேலே என்னத்தைக் குறைக்கிறதுனு கேட்பேன். :))))

திண்டுக்கல் தனபாலன் said...

இயற்கையே என்றும் அழகு - எதிலும்...

கரந்தை ஜெயக்குமார் said...

தைராய்டு கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரியாரே

கார்த்திக் சரவணன் said...

64 ஆம் வருடம் நடந்தது இன்னும் நினைவில் இருக்கிறதா?

தைராய்டு பற்றிக் கவலைப்பட வேண்டாம்.... மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொண்டாலே போதும் அம்மா...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ப்ரீ அட்வைஸ் நம்ம மக்களுக்கு மிகச் சாதாரணமான விசயம்... .கண்டுக்காதீங்க வல்லிம்மா

ஸ்ரீராம். said...

இதுவும் ஒரு அனுபவம்தான். ஆனாலும் தோழியைப் பார்த்தோமே என்ற சந்தோஷத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். நமக்கு வயது (மனதளவில்) குறைந்திருக்குமே!

உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

இது நடந்து 10 வருஷம் ஆச்சு கார்த்திக் சரவணன்.

சுவையாக இருந்தது.அதனால் பதிவிட்டென் பா. நான் இதையெல்லாம் கடந்து விட்டேன் என்றே நினைக்கிறேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா,
அத்தனையும் நிஜம் தான்.
ஒல்லியாக இருப்பவர்கள் சாப்பிடுவதையும் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் நன்றாக இருக்கட்டும்.
உடல் வாகு, உண்ணும் மருந்துகள், நம்மூர் சீதோஷ்ணம் எல்லாம் அடங்கும்.
இங்க எனக்கு சாலட் வகையும், சீரோ பாயிண்ட் பாலும் கிடைக்கிறது.
நான் எந்த விஎல்சி சிக்கும் போவதாக இல்லை.>}}}

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். தேன்
விட்டுட்டேன்..பொழுது போகாமல்
நடந்த அரட்டை..அவளுக்கும் பொழுது இருந்தது. எனக்கும் வாங்கிக் கொள்ள வேண்டிய நேரம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.
அவளைப் பார்த்ததில் சந்தோஷமே. அவள் எப்பொதுமே இப்படித்தான். மற்றவர்கள் வாழ்க்கையைச் சரி செய்டவதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுவாள்>}}}

வல்லிசிம்ஹன் said...

தைராய்டு நிதானமாகத் தான் இருக்கிறது கரந்தை ஜயக்குமார். மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் டிடி. இயற்கையாக இருக்கவே முயற்சிக்கிறேன் மா.நன்றி.

அப்பாதுரை said...

சந்தோஷமாக இருப்பவர்கள் ஒல்லியாகவோ பருமனாகவோ உயரமாகவோ குட்டையாகவோ கருப்பாகவோ சிவப்பாகவோ தெரிவதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அதெதான் துரை..
சந்தோஷத்திற்கு ஏது வடிவம். இருவரின் மனதிலும்
மகிழ்ச்சி பொது வடிவம் கொள்ளும்போது கனமோ ஒல்லியோ விஷயம் இல்லை.
மிக நன்றி மா.