Blog Archive

Tuesday, January 06, 2015

நாச்சியார் கோவில் கல்கருடனின் எதிர் சேவை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மார்கழி கல்கருட சேவை      நாசியார் கோவில் கல்கருடனை எத்தனை தடவை சேவித்தாலும் போதாது. அவருடைய கண்களின் தீட்சண்யம் தான் வர்ணிக்க முடியாது. அந்த ஆகிருதியோ    ஊனக்கண்களுக்கு  அப்பாற்பட்டது  அண்ட பகிரண்டத்தை ஆளும் எம்பெருமானுக்கு ஏற்ற வாகனம். காலை கருடாழ்வார் ஊன்றி வைக்கும்  அழகே அழகு.  கருடனின்  திருமேனியில்  அ டைக்கலம் புகுந்திருக்கும் நாகங்கள்   ஆபரணங்களாக   ஜ்வலிக்கின்றன. பக்ஷிராஜன் அருளால்   உலகம்  எந்த பயமும் இல்லாமல் சுகமாக இருக்கவேண்டும்.

16 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான தரிசனம். பகிர்வுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

பலமுறை இக்கோயிலுக்குச் சென்று வந்திருக்கின்றேன் சகோதரியாரே

ஸ்ரீராம். said...

நாச்சியார் கோவிலைத் தாண்டித் சென்றிருக்கிரேனே தவிர, அந்தக் கோவில் போனதில்லை. பார்க்க வேண்டும் என்கிற ஆசை உண்டு!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

Ranjani Narayanan said...

@ஸ்ரீராம்
கல்கருடன் மட்டுமில்லை அங்கிருக்கும் கல்தூண்களும் - எத்தனை பெரிய சுற்றளவு! - பார்க்கவேண்டியவை.

கருடவாகன சேவைக்கு நன்றி வல்லி.

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!

மலரன்பன் said...

What is the date it is celebrated every year?

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. தம்பி குடும்பம் மார்கழி மாதம் அங்கே போயிருந்த பொது எடுத்த படம் என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அருமையான கோவில். ஜெயக்குமார். தாங்கள் சென்று வந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

பாடல் பெற்ற தலம் என்பதோடு மட்டுமில்லாமல் கட்டிடக் கலை வல்லுனர்களுக்கு மிக மகிழ்ச்சி அளிக்கும் இடம் ஸ்ரீராம் .அடுத்த தடவை பாருங்கள். அந்தத் தூண்கள் மட்டுமே நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ரஞ்சனி .எத்தனை தடவைகள் போனாலும் அந்தத் தூண்களை சுற்றிச் சுற்றீப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு.ரத்னவேல் சார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஹையோ வே தான் துளசிமா.

வல்லிசிம்ஹன் said...

This Garuda sevai is celeberated in Margazhi month and Panguni month. That is twice a year.
The I do not know the exact dates.Malaranban.