Blog Archive

Thursday, May 29, 2014

சில சில் பதிவுகள் 13 தை 22 மார்ச் 5 வரை.

ரோஜா   இல்லை
மனம் கவர்ந்த  ஆர்க்கிட்  மலர்கள்
தில்லை அம்பல நடராஜா
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நர்த்தன கண்ணன்.         பால் வடியும் முகம் நினைந்து நெஞ்சம் பரவச மிகவாகுதே




 என் பாட்டி கிளம்புமுன்   எனக்கு வேண்டிய அத்தனை  உணவுப் பொருட்களையும் தயார் செய்ய ,அப்பா அதைக் காற்றுப் புகாமல்  டப்பாக்களில்   அடைத்துவைத்தார். நிறைய  ஜவ்வர்சி வடாம். மாப்பிள்ளைக்குக் கூழ் பிடிக்குமே என்று  வடாம் கூழ், எனக்கு ஆறு மாதம் காணக்கூடிய அளவு  லேஎகியம்  ஒரு நாளைக்கு இரண்டு உருண்டைகள் என்று இரண்டு டப்பாக்கள்.    அப்பளங்கள்  என்று அசராமல் செய்து வைத்தார்.  பொங்கள் கழிந்து கிளம்ப இருக்கையில் சிங்கமும் வந்தார்.     அடுத்தநாள் போகி. அப்பாவும் தம்பியும்  மதுரை டவுனுக்கு   கரும்பு,வாழைப்பழம், தேங்காய்,   மஞ்சள் இஞ்சிக் கொத்து,மற்றும் காய்கறிகள்    வாங்கக் கிளம்பி விட்டார்கள்.  இவர் அப்பாவிடம் பாப்பாவை வெளியே அழைத்துப் போக அனுமதி கேட்டார். சீனிம்மா  திடமாக மறுத்துவிட்டார். சாயங்காலம்  குழந்தையை வெளியில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது என்று அவர்  தீர்மானம்




இப்படியாகத்தானே              எங்கள் சினிமாப் பயணம் தொடங்கியது. மேஜர் சந்திர காந்த்.  முதலில்  காலேஜ் ஹவுஸில் காஃபி. பிறகு என்ன தியேட்டர்  என்று நினைவில்லை. அங்கே போ  டிக்கட் வாங்கிக் கொண்டு   படம் பார்த்தோம்.  திரும்பி வர   ஒன்பதரை மணி ஆகிவிட்டது. எனக்கோ   குழந்தை அழப் போகிறானே  என்ற பயம். இவரோ நடுவில்    இறங்கி மிச்சதூரத்தை நடந்தே கடக்கலாம் என்று பிடிவாதம். நல்ல நிலா.  நடக்க இனிமையாக்த்தான்   இருந்தது. மெதுவாக வரப் போகும் திருமண  நாள் பற்றிக் கேட்டேன்.  ஹ்ம்ம் நான் வரணுமா என்ன.   புடவை வாங்கி அனுப்பட்டுமா.  என்றார். எனக்கு உடனே மனம் வாடியது.   பின்ன என்னமா  எனக்கு மட்டும்  நினைவிருக்காதா...எப்படி மேனேஜ் செய்யலாம்னு யோசிக்கறேன்.இங்க வந்து விட்டுப் போனால் இரண்டு நாட்கள் இந்த நினைவிலேயே போய்விடுகிறது.வேலையில் அவ்வளவு நாட்டம் இல்லை என்று கதை அடித்தார்:))))))))))))))))))





சரிதான்.எதுக்கு  இவ்வளவு சிரமம். இன்னும் இரண்டு மாதம் ஆனால்    நாங்களே  வந்துவிடுவோம் என்று     நடக்க   ஆரம்பித்தேன். வீட்டுக்கு வந்து சேர மணி பத்து. பாபு பாஅலும் குடித்துத் தூளியில் உறங்கியும் விட்டான்.  சரியான   ரெண்டுங்கெட்டானா இருக்கியே அம்மா. குழந்தை பசியில் துடித்துப் போனான். நல்லவேளை பசும்பால் இருந்தது. பாலாடையில்    போட்டிவிட்டேன் என்று அம்மா  குறைப்பட்டுக் கொண்டார். என்னால் தான்மா லேட் ஆச்சு. அவள் போகலாம்னு தான் சொன்னாள். மாமா  சாப்பிட்டுவிட்டு கேரம் ஆடலாமா என்றதும் அப்பா சிரித்துக் கொண்டார். அப்பாவுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ,கேரம்போர்டும்  28  என்கிற சீட்டு விளையாட்டும்.





போகியும் பொங்கலும் உற்சாகமாகக் கழிந்தன.  சிங்கமும் கிளம்பினார். சீனிம்மாவும் கிளம்பினார். அம்மாவுக்குக்  கையொடிநது  போனது போல. எனக்கோ அருமைத் தோழி   இல்லாத குறையாகிற்று.  இப்பொழுது பாபு  முகம் பார்த்துச்  சிரிக்க ஆரம்பித்தான். பெரிய கண் அப்பா மாதிரி. கண் கள்  அடர்த்தியான  இமைகள் கொண்டவை. அடிக்கடி ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்ளும்:)))  தூங்கும்போது பரவாயில்லை. விழித்திருக்கும் போது இது நிகழ்ந்தால் வீடே இரண்டாகிவிடும். நாளாக  நாளக இந்தப் பிரச்சினையும் தீர்ந்தது.




டிதங்கள் போக்குவரத்து தொடர்ந்தது.  ஃபெப்ரவரி மூன்றும் வந்தது. ரங்கன் வாசலுக்கும் உள்ளுக்கும்  போய் வந்து கொண்டிருந்தான். அவன் சிநேகிதன் மோகன்{காமேஸ்வரன்*}  பிற்காலத்தில் நல்ல ஈ என்  டி வைத்தியராக வந்தவர்.  வீட்டுக்கும் போகவில்லை.   பலூன்   எல்லாம் வாங்கி வைத்திருக்கிறேன். அத்திம்பேர் வரமாட்டாரா என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.   சேலத்திலிருந்து பஸ் பிடித்தே வந்துவிட்டார்  சிங்கம்.  மாமனார் மருமனுக்குச் சீர் செய்வது பார்த்திருக்கிறோம்.  இங்கே மாப்பிள்ளை  எனக்கு  மணிப்பூர்  பட்டுப் புடவை,ரங்கனுக்கும் அப்பாவுக்கும்  நீளக் கைவைத்த லிபர்டி   சட்டைகள் நீலக்கலரில்.  அம்மாவுக்கு என்னவாங்குவது என்று தெரியாமல்  ஆர்யபவன் ஸ்வீட்ஸ் கொண்டுவந்து கொடுத்தார்.






இவரையா  ஒன்றும் தெரியாதவர்னு சொன்னே. எவ்வளவு விதரணை  என்று மகிழ்ந்து போனார்கள் பெற்றோர். பாபுவுக்கும் புது சொக்கா.  அந்தத் தைமாத 22 மறக்க முடியாது.  எல்லோரும்    கூடலழகர் கோவில் போய் வந்தோம்.  அடுத்த வாரம் சென்னை கிளம்பவேண்டும்.  கொண்டுவிடும்போது வெறுங்கையோடு போகக் கூடாதே. அப்பா குழந்தைக்கு ஒரு செயின் வாங்கினார்.குட்டி மோதிரம்.  வெந்நீர் நிரப்ப ஃப்ளாஸ்குகள்    என்று சேர்ந்தன.   அம்மா என்னைப் பாரிஜாதத்தில் கொண்டு விடுவதாக ஏற்பாடு. அப்பாவும் ரங்கனும் மதுரையில் தங்கிவிடுவார்கள் இரண்டு நாளில் அம்மா வந்துவிடுவார். இதுதான்   திட்டம்..அதே போல  என்னைப் பாரிஜாதத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டு அம்மா தன் அம்மா  வீட்டுக்குப் போய் விட்டார். புது இடம்   கொசுக்கள். எல்லாம் குழந்தையை மிரள வைத்தன.  தாத்தா  ஓடோமாஸ் கொண்டு வந்து கொடுத்து     யாரங்கே.குழந்தை அழவேண்டாம் .இதைப் போட்டுவிடு என்று வைத்துவிட்டுப் போனார். அவர் யாரையும் பெயர் சொல்லி அழைத்தே நான் பார்த்ததில்லை:)))



Wednesday, May 28, 2014

சில சில் நினைவுகள் 12ஆம் பதிவு தை மாதம் 1967

Add caption
Add caption
 
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஏரிக்கரையோரம்    நாமும்  போவோமா                 60 நாட்கள்  ஓடிவிட்டன.  குழந்தையின்   கழுத்து   கட்டியும் கரைந்து கொண்டு வந்தது.   சீனிம்மா பாட்டிச் சென்னைக்குக் கிளம்ப ஆவலாக இருந்தார். பிள்ளைகளை விட்டுவிட்டு அல்லவா வந்திருக்கிறார்!!!  

மருமகள்    வீட்டில்     இருந்தாலும்   ,தான்  கவனிப்பது  போலத் திருப்தி கிடைக்காது என்று  உணர்ந்து கொண்டேன்.  எத்தனை உதவிகள் செய்ய முடியுமொ  அத்தனையும் செய்வார். இதற்கு நடுவில் ஏகாதசி  போன்ற உபவாச நாட்கள் வேறு வந்துவிடும்.   அலுக்காமல்  குழந்தையின்   அழுக்குத் துணிகளை      வீட்டின் பின்புறம் வயல்களுக்கு   நடுவே  இருந்த   வாய்க்காலில் ஓடும் நல்ல தண்ணிரில் அலசிக் கசக்கி வெள்ளை வெளேர் என்று கொண்டு வருவார்.   தன்  கவனிப்பில் குழந்தைக்கு ஒரு உபத்திரவமும் வரக் கூடாது என்பதில் மிக அக்கறை.
                                                                                                                                                                                               அந்தி சாயும் முன்   துணிகளைக் காயவைத்து எடுத்துவிடுவார். துணிகள் முறுகக் காய்ந்தால் குழந்தைக்கு உடம்பு வலிக்குமாம்.   அதற்காக  முன்பே எடுத்து மடிக்க என்னிடம் தருவார். எனக்கும் வேலை கொடுக்கவேணுமே.                சாயந்திரம் ஆறு மணி ஆனதும்  கண்ணுக்கு மையிட்டு           உச்சந்தலையில் சிறிது ஆமணக்கெண்ணையையும்  தடவி     ஈரத்துணி இருந்தால் மாற்றி, இரண்டு மூன்று ஈர்க்குச்சிகளில் துளி  தீப  ஒளியில் சுடர் பற்ற வைத்துத் திருஷ்டி சுத்திப் போடுவார். இங்கே யாரு வந்து கண் படப் போகிறதூ   என்று கேட்டால்               சும்மா இரு என்று அடக்கிவிடுவார்.
ஒரு நாள் விட்டு  ஒரு நாள் எனக்கும் குழந்தைக்கும்   முறைவைத்து எண்ணெய் தேய்த்து  குளிக்கச் சொல்வார்.    நான் குளித்துவந்ததும்  வெந்நீர் பருகக்  கொடுத்து தலை ஈரம் போகச் சாம்பிராணி   போட்டுக் காயவைப்பார்.                 குழந்தையும் குளித்த பின்னர்  தான் தான்  குளிக்கப் போவார்.                              இதுபோல     யார்  உழைப்பார்கள் ... இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இரவு     குழந்தை  அழுதால்  உடனே அவரும் எழுந்து  மடியில் அவனைக் கிடத்திக் கொள்வார்.  நீ தூங்கு  , என்று   எனக்கும்    உத்தரவு வரும்.  அவர்  குழந்தையைக் கொஞ்சும்   சத்தத்திலேயே  நான் உறங்கிவிடுவேன்.    அம்மாவுக்கும் சமையல் வேலையைத் தவிர    வேறு வேலைகிடையாது...            இரண்டு பேரும் என்னென்னவோ   பேசிக் கொண்டே இருப்பார்கள்.     அப்படிப்பட்ட சீனிம்மாவும்  மதராசுக்குக் கிளம்பும் நாள் வந்தது.







அதற்குள் மாமியாரிடமிருந்து      என்னையும் குழந்தையயும்    மார்ச் பிறந்ததும் கொண்டு வந்துவிடச் சொல்லிக் கடிதம் வந்தது.  அப்பாவுக்கோ  பேரன் இன்னும் தேற வேண்டும் அப்புறம் அனுப்பலாம்  என்று யோசனை. பக்கத்திலேயே   அலுவலகம் என்பதால் சத்தம் போடாமல் வந்து தூளியில் தூங்கும் குழந்தை அழகைப் பார்த்துவிட்டுப் போவார்.   அழுதால் க்ரைப்வாட்டர் அவர்தான் தரவேண்டும்..     அப்படி ஒரு அதீதப் பாசம். உங்க அப்பா உங்களைக் கூட இவ்வளவு தூக்கி வைத்ததில்லை என்பார்   அம்மா:)


நீண்டுவிட்டது பதிவு.சிங்கம் நாளைப் பதிவில் வருவார்.

Tuesday, May 27, 2014

சில சில் அனுபவங்கள். 12 தை மாதம் 1967


வரப் போகும்   துளிர்கள்
கண்ணன் பிறந்தான்   2013  படம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சர்க்கரைப் பொங்கல்   துளசியுடன்

Thursday, May 22, 2014

சிங்கம் பார்ட் 6 ----------------- ராமேஸ்வரக் கடலில் நீச்சல் 1967

 புதுப்பிக்கப்பட்ட  கோதண்டராமர் கோவில்     தனுஷ்கோடி
சங்குகள்,  சிப்பிகள்
சந்நிதித்  தெரு
புதுச் சாலை
 
தனுஷ்கோடி
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
புதிதாக வந்திருக்கும்   செம்பருத்தி.                 1967 செப்டம்பர் மாதம்   பெரியவனுக்குப் பத்துமாதங்கள் ஆகி இருந்தன.  சிங்கத்துக்கு வருடாந்திர  லீவுக்கான நேரம். பெற்றொர் அப்போது    இராமேஸ்வரத்தில்  இருந்தார்கள்.   அங்கே போய் வர  இருவரும் முடிவெடுத்தோம்.  போகவர    செலவு கம்பெனி ஏற்கும். சேலத்திலிருந்து  திருச்சி. திருச்சியிலிருந்து இராமேஸ்வரம்     மெயில்.  குழந்தைக்கான சாப்பாடு,  ஹாமர்மாஸ்டர் ஃப்ளாஸ்க்  இரண்டு என்று இரண்டு பெட்டி.   அதிகாலையில் விழித்துக் கொண்டு பாம்பன் பாலத்துக்காக் காத்துக் கொண்டிருந்தேன்.                                                                                       ரயில் நெருங்க நெருங்க  மனம் முழுவதும்    உற்சாகம். அம்மா வெகு விவரமாக ராமேஸ்வர வாழ்க்கையையும் ,அடிக்கும் காற்று,மழை,புடவை தீன்னும் மாடுகள், பர்வதவர்த்தினி அம்பாள் என்று ஒவ்வொரு கடிதத்திலும்  எழுதி வந்தார். ஆடி மாதம் காற்றில்   சிலசம்யம் வண்டிகள்  பாம்பன் பாலத்தில் வரத்தடை உண்டு அதனால் அடுத்த மாதம் வரலாம் என்று யோசனை சொல்லி இருந்தார். அப்போது மதுரை ராமேஸ்வரம் சாலை கிடையாது  .    ழோசித்துக் கொண்டிருந்தபோதே   தங்கச்சி மடம் வந்துவிட்டது. பிறகு       பாம்பன்  ஸ்டேஷன்.  அதைத் தாண்டியதும் பாலம். கண்ணுக்கெட்டிய வரை கடல்.   ரயில் பாலத்துக்கு மேல் மெதுவாக ஊறத்தொடங்கியது. இவருக்கோ ஒரே துடிப்பு. குழந்தை இதையெல்லாம் பார்க்க வேண்டும்.            ரேவ்,பாபுவை எடுத்துக் கொண்டு வா. கீழே  அலை  மோதுகிறது பார். அப்பா ஜீஸஸ்  என்ன காத்து.  எஞ்சாய்  மா  என்று  கதவோரம் நின்று  அழைத்துக் கொண்டிருந்தார். எனக்கோ ஜன்னல் வழி பார்த்த கடலே போதும் என்றாகிவிட்டது.                     பரபரப்பு இருந்தாலும் பயமும் இருந்தது. நீங்கள் முதலில் உள்ளே வாருங்கள் குழந்தை கூப்பிடுகிறான் என்று    போய் இழுக்காத குறையாக அழைத்து வந்தேன்.

ஆஹா. உங்க அம்மாவைப் பாருடா குட்டிப்பையா    இதுக்குப் போய் பயப் படுகிறாள்.    நான் இங்கே இருந்தே கடலில் டைவ் அடிப்பேன் தெரியுமா.   என்றதும் எங்கே சொன்னதைச் செய்துவிடுவாரோ என்று குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டேன்:))நான் பெட்டிகளைச் சரியாக எடுத்து வைக்கிறேன் .  நீங்கள் இவனை வைத்துக் கொள்ளுங்கள். அப்பா ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். நாம் ரெடியாக இருந்தால் இறங்கிவிடலாம்.  வீட்டுக்குப் போய்க் குளிக்கணும். கோவிலுக்குப் போகணும். அம்மா கிட்டப் பேசணும்   என்று எதேதோ பேசிசமாளிக்கப் பார்த்தேன். நிமிர்ந்து பார்த்தால்  ஆளைக் காணொம்.                                                                                         என்னடா     இந்த மனுஷனோட அவஸ்தையாப் போச்சு என்றபடி   கம்பார்ட்மெண்ட்   கதவுக்குப் பக்கத்தில் போனால் அப்பாவும் பிள்ளையும் ஹாய் ஹூய் என்று  கடலை அழைத்தவண்ணம் இருந்தனர். இவர் கையில் பையன்.அவன் கையில் கரடி பொம்மை.









சரிதான் என்று நானும் அங்கேயே  நின்று கொண்டேன். ஒரு வழியாகத் தொங்கு பாலம் கடந்து ராமேஸ்வரம்    ஸ்டேஷனும் வந்தது. மதியம் 12 மணி இருக்கும்.    என்   அப்பாவைப்     பார்த்ததும்    கையில் குழந்தை தாவி விட்டான். கூட வந்த ரங்கனுக்கோ  உடம்பெல்லாம் மகிழ்ச்சி.   அவனுக்கு என்னிடம் சொல்ல நூறு செய்தி. ராமேஸ்வரத்துக்கு வரும் வி ஐ பி களுக்கெல்லாம் அவன்தான் அஃபிஷியல் கைட்.              உங்களையும் எல்லா இடத்துக்கும் அழைத்துப் போகிறேன் என்று அவன் சொன்னதுதான் தாமதம். இவர் அவனை வளைத்துக் கொண்டார். கோவில்  அக்கா போகட்டும் .நானும் நீயும் தனுஷ்கோடி போகலாம் சரியா என்றார்.   கிட்டத்தட்ட ஏழு மைல் நடக்கவேண்டும். அப்பா சரின்னு சொன்னால் போகலாம் என்றது அந்தப் பிள்ளை.   அப்பா தயங்கினார். சீக்கிரம் காலையில் போகணும். கொஞ்ச நேரமானாலும்    டைட்ஸ்    வந்து  வழி மூடி விடும். பிறகு தண்ணீர் வடிந்தபிறகே     வரமுடியும் என்றார்.

சரி நாளைக்காலை நாம போறோம் என்னடா என்றதும் , ஓ யெஸ் அத்திம்பேர்  நான் ரெடி என்று விட்டான்  தம்பி.   நான் ஒன்றும் மறுப்பு சொல்ல முயலவில்லை. சொன்னாலும் கேட்க மாட்டார்.  சரி நாளைக்குக் கவலை நாள் என்று முடிச்சுப் போட்டுக் கொண்டேன்.
அடுத்தநாள்      காலை     இட்லி சட்னி  காலை உணவை முடித்துக் கொண்டு  இருவரும் கிளம்பினார். அப்பா  நூறு ஜாக்கிரதை சொல்லி  அனுப்பினார். நான் பார்த்துக்கறேன் மாமா  என்று இவர் சொல்ல மச்சினனும்  மாப்பிள்ளையும் கிளம்பினார்கள்.         அப்பாவிடம்     எவ்வளவு நேரம் ஆகும்பா என்றேன். 2    அல்லது   மூன்றுமணிக்குள் வந்துவிடலாம்மா.   அலைகள்    உள்ளே வருவதற்குள் கிளம்பணும் அதுதான் முக்கியம்  என்றார்.   
இரண்டானது. மூன்று மணியும் ஆனது. காணோம். அப்பாவுக்கே கவலை வந்துவிட்டது.   இவ்வளவு நேரம் ஆகாதே. என்ன ஆச்சு.  என்றவர்      என் முகத்தை ப் பார்த்ததும் ,ஒண்ணும் இல்லமா. வெறும் மணல்தான். வெய்யிலில் எங்கயாவது உட்கார்ந்து விட்டு வருவார்கள். அங்கே எல்லாம் ஒரே  இடிபாடுகள் தான்.பார்க்க   வேற   ஒன்றும் கிடையாது.      அப்ப ஏன் இன்னும் வரலைப்பா. அலையடிச்சால் ரங்கன் பயப்படுவானோ. என்ன்  ஆச்சு தெரியலையே .......  இப்படிப் புலம்பிக்கொண்டிருந்தேன். சரியாக ஆறுமணிக்குத் தொப்பலாக   நனைந்த ஆடைகளோடு   நடந்தபடி  இருவரும் வந்தனர்.     அம்மா  என்னைக் கையமர்த்தினாள். குழந்தைக்கு முதலில் பால் கரைத்துக் கொடு நானவர்களுக்குக் காப்பியும்  டிபனும் தரேன்    என்ற  படி அம்மா விரைந்தாள்.     ரங்கா உங்க அக்காவைப் பார்த்தால்  தான் நடுங்குகிறதுடா  என்றவரை     முறைத்தேன்.     



பொறுமையோடு காத்திருந்தபிறகு   கதை வெளியே வந்தது.  இருவரும் போய்ச் சேருவதற்கே நேரமாகிவிட்டதும். அர்ச்சகரும் கிளம்பிவிட்டாராம்.  சுத்துவட்டாரம் கொஞ்சம் நடக்க ஆரம்பித்ததுமே கடல்  உள்ளே    வர ஆரம்பித்துவிட்டதாம்.  இவர்கள் கோவில் வாசலில் நின்றால்    அங்கேயும் வந்துவிட்டதாம். அப்பவே மணி ஒன்றாகி விட்டது.   இருவருக்கும் பசி தாங்கவில்லை. சரி அலையோடு நடந்து வந்துவிடலாம்  என்று    கிளம்பி யிருக்கிறார்கள். 



கொஞ்ச தூரத்தில் அதுவும் முடியாமல்  போகவெ இவர் நீந்திப் போய் விடலாம்டா என்று   தம்பியிடம்  சொல்ல அவன் தயங்கி இருக்கிறான். என் கையைப் பிடித்துக் கொள்ளுப்பா. தலையை மட்டும் தண்ணிக்கு மேல் வைத்துக்கொள் என்றிருக்கிறார். அவனும் தண்ணிர் வரும் வேகத்தில் சிங்கத்தின் கையை இறுகப் பிடித்துக் கொண்டுவிட்டானாம். ஒரு அரைமணி நேரத்துக்குப் பிறகு  மீன் பிடி படகு ஒன்று கண்ணில் படவும்  இவர்    சத்தம் போட்டு அவர்களை அழைத்திருக்கிறார்.  அவர்கள் அருகில் வந்ததும் ராமேஸ்வரம் கடற்கரையில் விடமுடியுமா  என்று ஆளுக்கு  பத்து ரூபாய் என்று கொடுத்தாராம். 


இருவரும் படகு வரை போய்  ஏணிபிடித்து  உள்ளே சென்று மீன்களோடு மீன்களாக உட்கார்ந்து கொண்டார்களாம். பாவம் ஐய்யர் வீட்டுப் பிள்ளைங்க. உங்களுக்கு நாற்றமாக இருக்கும் என்றால்  சிங்கம் தான்   தாவர பட்சிணி  மட்டும் இல்லை. மற்றதும் சாப்பிடுவேன் என்றதும்  அவர்கள் சிரித்துவிட்டார்களாம்.   ஆண்டாள் நீ  சொல்லவே இல்லையே  அத்திம்பேர் இதெல்லாம் சாப்பிடுவார் என்று   ,இது தம்பி.  இப்ப விட்டுவிட்டேண்டா. உங்க அக்காவுக்கு அதெல்லாம் பிடிக்காது.  
 எப்படியோ  பத்திரமாக வந்து சேர்ந்தார்கள். 
அந்தப் பாண்ட் சட்டையில் மீன் வாசனைப் போகத்தான் நாளாச்சு.     
here is the link for dhanushkodi

http://en.wikipedia.org/wiki/Dhanushkodi                  

Saturday, May 17, 2014

சில் என்று சில நினைவுகள் 11

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சென்ற சித்திரை நிலவு  இந்த  வருடம் உபயோகமாகிறது.                                                 இங்கே  மழை மேகங்கள் நிலா அன்னையை மறைத்துவிட்டன.                                        இனி விட்ட இடத்தில் தொடரலாமா................................  குழந்தைக்கு      ஒரு மாதம் பூர்த்தியான நிலையில்    ஒரு சிறு சங்கடம். அதன் குருத்துப் போன்ற கழுத்தில்     சிறிய    கட்டி.   அம்மாவுக்கும் அப்பாவுக்கும்  பூதாகரமான  கவலை. அவர்களின்   முதல்    குழந்தைக்கும் இது போல்த் தலையில் வந்து அது  பிறந்த எட்டே மாதத்தில்  இறைவனடி சேர்ந்தது.                                 நானும்    அம்மா அப்பா சகிதம் சந்தைப்பேட்டைக்கு மீண்டும் மருத்துவரிடம் வந்தோம்.   அவர் எடையைச் சோதித்துவிட்டு ஒரு கிலோ ஏறி இருக்கிறான்.   பரவாயில்லை. சாப்பாடு எப்படி என்றார்.  கூடவே பசும்பால் கொடுங்கள்.  ஆப்டெக்ஸ் மருந்து  குழந்தைகளுக்கு வைட்டமின். அதையும் கொடுக்கலாம். இரவு தூங்குகிறானா     என்றெல்லாம் கேட்டார். இரவு முழுவதும்   விடிவிளக்கையே பார்க்கிறான். பகலில் நன்றாகத் தூங்குகிறான் என்றதும்      சிரித்துவிட்டார். நீ என்ன பண்ணுவே அவனோட  சேர்ந்து விளக்கைப் பார்ப்பியா அம்மா என்றார். இல்லை      காமிக்ஸ் படிப்பேன்    என்றதும்      அவர் திரும்பி என் பெற்றோரைப் பார்த்தார். நாங்கள் தான் பெரிய புத்தகங்களை அவள்    படிக்க வேண்டாம் என்று                                               காமிக்ஸ்  புத்தகங்களை      கொடுத்தோம்.    என்றதும் அவர்    என்னைப் பார்த்து                                           உனக்கும்  ஓய்வு வேண்டும்        அதை நினைவில் வைத்துக் கொள்.    குழந்தையைப் பழக்குவது உன் கையில். அவரிடம் சொல்ல விட்டது என் பாட்டியைப் பற்றி.    பையன் பாட்டி மடியில் தான் முழுநேரமும் இருப்பான். பாட்டிக்கோ இரவுத் தூக்கம் போய் வருடங்கள் பல ஓடியிருந்தன.                                  இந்த  புத்திமதிகள் சொல்லிவிட்டுக் குழந்தையின் கழுத்தை ஆராய்ந்தார்.   கழுத்து எலும்பில்    ஒன்றும் தப்பு இல்லை. ரத்தக் குழாயில்        ஒரு சிறு    அடைப்பு.அதுவும் பயப்படத்தேவையில்லை. பிறக்கும் போது சில குழந்தைகள்      சிரமப்பட்டு வெளியே வரும்போது தலையில்   அழுத்தம் இருக்கும். இவனுக்குப் பெரிய தலை இல்லையாம்மா  என்றார்.ஆமாம் அவன் அப்பா   மாதிரி  என்றேன் பெருமையாக.           ஆங்.பார்த்தியா. தலைகனம் கூடாதுனு     இதுக்குதான் சொல்றது என்று ஜோக்கடித்தார்.  அம்மா அப்பாவுக்கு ரசிக்கவில்லை.                                               தலையில் ரத்தம் அழுத்தம் ஏற்பட்டால் கழுத்தில் சிறிதளவு தங்கிவிட்டது. பயமொன்றும்           இல்லை.ஆயின்மெண்ட் தருகிறேன்     .தடவி வாருங்கள். அடுத்த செக் அப்புக்கு வரும்போது இருக்காது பாருங்கள்.                           நீ நிறைய  சாப்பிடணும். இப்படி 48 கிலோவிலியே  நிற்கக் கூடாது. நிறைய நடக்கணும். அவனுக்கு நிறைய சாப்பிடக் கொடுக்கணும். எப்போது       உன் வீட்டுக்குப் போவே  என்றூ    கேட்டார். நான் எப்போதும் போல் மௌனம். அம்மா  நான்கு    மாதமாவது   போகணும். இன்னும் இவளுக்குப் பழகவில்லை என்றார்.                                                                    இல்லையே  எனக்குச் சேலத்திலிருந்து ஃபோன் வந்ததே. பொங்கலுக்கு வருவதாகவும்  அழைத்துக் கொண்டுபோவதாகவும்         சிம்மு சொன்னாரே. நேற்றுதான்        பேசினேன்.குழந்தையை நன்றாகச் செக்கப் செய்யச் சொல்லி எனக்கு  ஆர்டர்  என்று சிரித்தார்.                                                                           அப்போதுதான் கார்த்திகை  முடிந்திருந்தது.   இவர்கள் கணக்குப் படி   மார்ச்   மாதம் நாங்கள் சேலம்       போனால் போதும்.   சிங்கத்துக்கு அவ்வளவு பொறுமை இருக்குமா தெரிய வில்லை.     சரி சரி என்று தலையாட்டுவார். ஆனால் தான் போன வழியில் தான் போவார். அது எனக்குத் தெரியும்.                                    வீட்டுக்கு வந்து சேலத்துக்கு  அப்பா தொலைபேசிக் குழந்தையின்     சௌக்கியத்தைச் சொன்னார்.              அவர்  சொன்னது ஒரு வியாழக்கிழமை    மதியம்.   மறுநாள்    வெள்ளிக்கிழமை   இரவு    படபட  புல்லட்  பசுமலையை அதிரவைத்துக் கொண்டு வந்துவிட்டது.:))

வசர சமையல் .ரசம்,உ.கிழங்கு வதக்கல், பாயசம் என்று மாப்பிள்ளைக்குப் பாட்டி செய்துவிட்டார். பாட்டியோடு நல்ல  தோஸ்த் பிடித்துக் கொண்டு சிங்கம் தன் வாதத் திறமையை உபயோகிக்கப் பார்த்தார்.             பாட்டியின்  திறமை    அவருக்குத் தெரியாது. நான்கு பிள்ளைகளை வளர்த்தவர் ஆச்சே.        நானே  சேலத்தில் கொண்டு  விடுகிறேன். நீங்கள் கவலையெ    படவேண்டாம். பேரனும் என் பேத்தியும்  கொஞ்சம் தேறட்டும்.    அங்க வந்து உடம்புக்கு ஏதாவது படுத்தினால் உங்களுக்குத் தானே கவலை அதிகம் ஆகும்  என்றெல்லாம் சொல்லிச் சமாதானப் படுத்தினார்!!!!

Friday, May 16, 2014

ஒரு அம்மா,இன்னோரு அம்மா ,இன்னோரு அம்மா:) 1968

அன்புமனங்கள்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்,
அன்பு   அம்மாவுக்குப் பாப்பா
அநேக தண்டம்சமர்ப்பிவித்த விண்ணப்பம்.
இங்கெ எல்லோரும் க்ஷேம. அங்கும் அப்படியே  என்று நினைக்கிறேன்.

 பகவத்சங்கல்பத்தில்  ஆண்டாளுக்குப் பெண்  குழந்தை பிறந்திருக்கிறது.
அவள் மாமியாரும் உடன் இருப்பதால் எனக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது.
பெரியவன் தான் ஆண்டாளோடு ஒட்ட மாட்டேன் என்கிறேன்.
சவலையாகிவிட்டது இல்லையாம்மா.

பாவமா இருக்கு. கையில டெட்டி பொம்மையை வச்சிண்டு கண்ணு பூரா ஏக்கமா

மத்யானம் அவர் வரத்துக்குள்ள ஒரு குட்டி அமர்க்களம் பண்ணிடறான்.
சாப்பாடு   ஊட்டுவதற்குள்,
அவனோட அப்பா ஜீப் வர சத்தத்துக்குக் காத்திண்டு  இருக்கான்.
நானும் குழந்தைகளையும் ஆண்டாளையும் அழைத்துக் கொண்டு காரைக்குடிக்குக் கிளம்பணும்.
30 நாட்கள் ஆகட்டும்னு பார்க்கிறேன்.

ஆண்டாள் அப்பாவும் ரங்கனும்  ராமேஸ்வரத்திலிருந்து
எல்லாத்தையும் பார்சல் பண்ணி குட்ஸ் வண்டில போட்டு விட்டு,இன்னோரு ரயிலில் வருகிறார்கள்.
இவருக்கு தன் கை சமையல் ஒத்துக் கொள்ளவில்லை.
அந்தப் பிள்ளைக்கும் ஒண்ணும் செய்யத் தெரியாது.

மாப்பிள்ளை  காரிலியே  எங்களைச் சேலத்திலிருந்து  காரைக்குடிக்குக்
 கொண்டு விடுவதாக இருக்கிறார்.
அதற்குள் ஆண்டாளுக்குக் கவலை. திரும்பிப் போகும்போது  அவர் தனியாகப் போகணுமே.பாவம் மா  என்கிறாள்.
இந்தப் பொண்கள் தான் எவ்வளவு மாறிப் போயிடறார்கள்.!!


அம்மா உன்னிடம் காரைக்குடிக்கு வரச் சொல்லி அழைக்கத்தான் இந்தக் கடிதம்
 எழுதுகிறேன். நீ வந்தயானால் சின்னக் குழந்தையைக் குளிப்பாட்டக் கொள்ள
சவுகரியமா இருக்கும்.
நான் பத்திய சமையலையும் ,மத்த சமையலையும் பார்த்துப்பேன்.
காரைக்குடி எப்படிப்பட்ட இடம். சவுகரியம் எப்படி என்று தெரியவில்லை.
நீ வந்தால் எனக்குத் தைரியமாக இருக்கும்.
ஆண்டாளை இரண்டு மாதத்துக்கு மேல் இருக்கவேண்டாம்

சிம்மு சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவாராம்.
 என்று  அவள் மாமியார் சொல்லிவிட்டார்.
இந்தப் பொண்ணுக்கு உடம்பில சத்து போறாது.
இரண்டு குழந்தையை எப்படி சமாளிக்கும்.
என்ன செய்யலாம். அவா  சொன்ன நாம் கேட்கத்தானே வேணும்.

எல்லாம் பகவத் சங்கல்பம்.
மே 17  மத்யானம்  காரைக்குடியில் இருப்போம் என்று நினைக்கிறேன்.
அந்த நாளும் நன்றாகத்தான் இருக்கிறது.
நீ வரும் விஷயத்தை எழுது.
அம்பி,ராமசாமி,சீனி,கோபு எல்லோரையும் விசாரித்ததாகச் சொல்லவும்.
கோபுக்கு ஏதாவது புது ஜாதகம் வந்ததா.

உன்னிடம் நிறையப் பேசணும்மா.
அன்புடன்,
பாப்பா.


நாங்கள் காரைக்குடியில் இறங்கிய பிறகுதான் தெரியும், மே17 அவர்களது கல்யாணநாள் என்றும்,அன்று 25 வருடங்கள் பூர்த்தியாகிறது என்றும்.
அம்மா அப்பா   உங்கள் தியாகத்துக்கு எல்லாம்
நான் என்ன பதில் செய்ய முடியும்.

இன்னும் உன்னைப் பற்றி நிறைய எழுதணும்..

மே 17 மணநாள் காணும்ஸ்ரீ நாராயணன் தம்பதிக்கு வாழ்த்துகள்

 


நம் வீட்டுப் பாலைவன் ரோஜாக்கள்



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அன்புக்கும் ஆதரவுக்கும்  முக்கியத்துவம் கொடுத்து
குடும்பத்தை நடத்திச் சென்ற
அருமைத் தம்பதிய்ர்.
திரு நாராயணன், திருமதி ஜயலக்ஷ்மி நாராயணன்.

மணநாள்  17/5/1943.

தங்களைப் பற்றி நினக்கவோ சுயநலம் காட்டவோ தெரியாத அபூர்வப் பிறவிகள்.
கணவனின் அடிதொட்டு  நடந்த அவர் மனைவி.
இருவரையும்  வணங்கிக் கொள்கிறோம்.
ஆசிகளை நாடும்
உங்கள் சந்ததிகள்.

Posted by Picasa

Wednesday, May 14, 2014

அழகர் வந்தார் அருள் புரியவே

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.       பார்க்க முடியாதோ  என்று  நினைத்த  கள்ளழக சேவையை கண்டாகிவிட்டது. இங்கெ   புதுத் தொலைக்காட்சி   ச்செவை ஏற்பாடு செய்து  மாப்பிள்ளை புண்ணியம் செய்தார். நாங்களும் மதுரை வெள்ளத்தில்  நீந்தி வந்த  தங்கக் குதிரையையும்  அதன் மேல் வீற்றிருந்த  அழகனையும் சேவித்து உள்ளம் குளிர்ந்தோம்.
எதிர்பாராமல் கிடைத்த எதிர் சேவை.

Tuesday, May 13, 2014

இன்று புதிதாய்ப் பிறந்தது எங்கள் சிங்கம் !!!!!

சிரிக்கும்  சிங்கம் 
எங்கள் சிங்கப் பிரான் 
 அதோ   ஹரி  என்றார் 
 இதோ இங்கே என்று  தோன்றினான் நரசிங்கம்   அண்டம் கிடிகிடுக்க அரக்கன் மனம் சிதறுபட  பிள்ளைப் பிரகலாதனைக் காத்து   அனைவரையும்  ரட்சிக்கத்   தோன்றிய எம் சிங்கபிரான்    இன்னும் காப்பான்.          எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மம  தேஹி  கராவலம்பம் 

Friday, May 09, 2014

சிங்கம் பார்ட் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இது  நடந்தது    கோயம்பத்தூரில் நாங்கள்  இருந்த மூன்று வருடங்களில் ஒரு நாள்.   சித்திரைத் திருவிழாவை ஒட்டி  கண்காட்சிக்குப்  போகலாம் என்று   கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தேன்.       சின்னக் குழந்தைகளுக்கு  வேறு  பொழுது போக்கு இல்லை.  அங்கே போனால் ரங்கராட்டினம்,வளையல்  கடைகள்  இது போலப் பல  பொழுதுபோக்குக்கான நிகழ்ச்சிகள் இருக்கும்.                                                    
 தோழர்கள் குடும்பங்கள் இரண்டு என்று பத்துப் பேர்   போகலாம்   என்று என் திட்டம். மற்றவர்களிடம் சொல்லி வைத்தேன். ஒரு தோழிக்கு இரண்டு குழந்தைகள் . மற்றவளுக்கு மூன்று.    .  இரண்டு     மோட்டர்பைக்குகள்,  ஒரு ஸ்கூட்டர்  என்று எல்லோருக்கும் வசதியாக வண்டிகள் இருந்தன.      சிங்கத்திடம்   பழைய நார்ட்டன் பைக் இருந்தது. அப்பா  அது போடும் சத்தம்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள்  ஐவரும் அதில் மிக சௌகரியமாக உட்கார முடியும்.   என் மடியில் சின்னவன் .இரண்டு வயது.  நான்கு ,ஆறு வயது  பெண்ணும் பிள்ளையும்  இவருக்கும் முன்னால் உட்கார்ந்து கொள்வார்கள்.    

                                                        அப்பாவுக்குப் பதில் ஹார்ன் அடிப்பது  ,கியர் போடுவது   எல்லாம் பையனும் சேர்ந்து  செய்வான்.  எல்லோரும்             கண்காட்சியில் காணாததைக் கண்டது போல  எல்லாக் கடைகளுக்கும் போய்விட்டு  அப்பளம், மிளகாய் பஜ்ஜி,,         இன்னும் பல பொருட்கள் எல்லாம் வாங்கிக்   கொண்டு  வீட்டுக்குத்திரும்பலாம் என்று மெதுவாக வண்டிகள் நிறுத்தி இருந்த இடத்துக்கு வந்தோம்.        பாண்ட் பாக்கெட்டில்   கைவிட்டுச் சாவியை எடுக்கும்போதுதான்  பர்ஸ் அங்கே இல்லாதது தெரிந்தது. .. ரேவ்  உன்  கிட்ட   பர்ஸ் கொடுத்தேனா  என்று கேட்டதும் நான் மறுத்தேன். பணம் கொடுத்துவிட்டு  மீண்டும் உள்ளே வைத்துக் கொண்டீர்களே............................................... அதற்குள் கல்யாணராமன் பானு தம்பதியினர் வந்துவிட்டனர். என்னய்யா       பர்ஸை  அபேஸ்   பண்ணிட்டானா எவனாவது என்கவும்  எனக்குச் சொரேர் என்றது. .                                                                      

   மற்ற தம்பதியினரும் அக்கம் பக்கம் தேட ஆரம்பித்தனர்.  பலனில்லை.                                                        நான் ஆரம்பித்தேன் வீட்டுச் சாவி அதிலதான இருக்கு. வீட்டுக்குப் போய்க் கதவைத் திறக்கணும்,குழந்தைகள் சாப்பிடணும்.  இதுக்காகத்தான் உங்களை  ஷர்ட் பாக்கெட்டை உள்ளே வைத்துத் தைக்கச் சொன்னேன்.  இப்படி ஆரம்பித்து நீண்டது என்பிரசங்கம்.                                                                                ஆஹா  இப்ப என்னமா ஆச்சு  யு வாண்ட்  டு கெட் இன்சைட்  அவ்வளவுதானே, வா வீட்டுக்குப் போகலாம். வாங்கடா எல்லாம் போகலா,ம்.   ஏய்  என்ன பண்ணுவே, எங்க வீட்டுக்கு வந்துடறியா,  என்ற கேட்ட            தோழர்களிடம்  மறுப்பு  சொல்லிவிட்டு

 வண்டியை ஒரு உதை விட்டார்.  பாதித் தூக்கத்தில் இருந்தக்       குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். எனக்குக் கண்காட்சி போய் வந்த களிப்பெல்லாம்  போய்விட்டது.வீட்டு  க்ரில்    கேட்டைப் பார்த்தபடி  நின்றேன். படியில் உட்காரு நீயே விழுந்துடற மாதிரி இருக்கே  என்றவர்   வீட்டின் பின்பக்கம்                        விரைந்தார். அந்தக் கதவுக்குச் சாவி கிடையாதே   என்று குழம்பினேன்.                                                            
  அடுத்த நொடி ஒரு தடால் சத்தம். பின் வீட்டு குஜராத்தி  மாமா மாமிகள் வெளியே வந்துவிட்டார்கள். ரேவ்தி  டிர்டன் திர்டன் சோர் என்று அலற  இவர் அவர்கள் பக்கம் போய்த் தன் முகத்தைக் காண்பித்தார்.  வீடு பூட்டிக்கிச்சா. என்னா ரேவ்தி, என்று அங்கு வந்த என்னையும் விசாரித்தனர். நானும்           ஆமாம் வீடு பூட்டிக்கிச்சு. நாங்கள் உள்ளே போகணும் .அதான் தட்டிப் பார்க்கிறார் என்று சொல்லி முடிப்பதற்குள் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

குழந்தைகள் சத்ததில் விழித்துக் கொண்டு டாடியின் வீரப் பிரதாபத்தைப் பார்க்க ஆசையாக வந்து விட்டார்கள்.                                                                                                           பசங்களா நீங்க  ஒன் டூ த்ரீ சொன்னாதான் கதவு திறக்குமாம் ,,,ரெடி????  என்றதும் மூணும்    கோரசாக   சொல்லவும்    பின்ஷெட்டின் உத்தரத்தைக்  கைகளில்   பிடித்துக் கொண்டு டார்சான் போல்க் கதவை நோக்கிப் போனார். அடுத்த உதையில்  கதவு தாழ்ப்பாள்   விழுந்து திறந்து கொண்டது..   அவர் முதலில்  நுழைந்து  லைட் எல்லாம் போட்ட பிறகு எங்களை வர்ச்சொன்னார்.

                                                                               அப்பாடி என்றூ  நுழைந்தாச்சு. குழந்தைகள் சாப்பிட்டு  தூங்க வைத்தாச்சு. அடுத்த கவலை   பின் கதவைப் பூட்டாமல் எப்படித் தூங்குவது,.  எனக்குத் தான் கவலை அவர் திறந்து இருந்தாலும்    பயமில்லாமல் தூங்குவார்.                                                                                      நீ வேணா ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்துக்கோ. கூர்க்கா வேலை பார்க்கிறியா   இன்னிக்கு என்று   சிரித்தர்.   எனக்கென்ன பயம் நீங்க இருக்கும் போது.  நான் விழித்திருக்கிறேன் என்றேன். எல்லாம் ஒண்ணும் வேண்டாம்                                                          இதோ    பார்   என்று ஒரு நீளமான முறுக்குக் கம்பியைக் காட்டினார்.  கதவின் பின்னால் தாழ்ப்பாள் மட்டுமே உடைந்திருந்தது. அதன் ட னா        வடிவ வளைவு அப்படியே இருந்தது. அதையும் பக்கத்திலிருந்த பாத்ரூம்  கதவுத் தாழ்ப்பாளையும் இணைத்து  முறுக்கி விட்டார். நாளை நீ குளிக்கப் போவதற்கு முன் சரி செய்துவிடுகிறேன் என்று  உறுதியும் கொடுத்துவிட்டார்.  
 பிறகென்ன. நிம்மதியாகத் தூங்கப் போனேன்.                             அடுத்த நாள் காத்ரேஜ்   கம்பெனிக்காரர்கள் வந்து  ஆட்டோமாடிக்  லாக்கை மாற்றி வேறு சாவியும் கொடுத்தார்கள்.     பணம் போனது போனதுதான். பரவாயில்லை                                                                               வேறு       ஒன்றும் நடக்கவில்லை..  சம்யோசித சிங்கம் இருக்கும் போது எனக்கென்ன கவலை.

Tuesday, May 06, 2014

ஆசிரியர்களைப் பாராட்டும் வாரம் இந்த வாரம்

Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நல்லதொரு  பழக்கம் இந்த ஊரில். சிறார்களுக்கு ஆசிரியர்களின் உழைப்பைப் பாராட்டச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு  செய்கிறார்கள். இந்தத் திங்கள்கிழமையிலிருந்து தன் வகுப்பு ஆசிரியையுக்குப் பிடித்த   விஷயங்களைச் செய்வது. பழங்கள், சாக்லேட்,  என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகக் குழந்தைகள் கொடுக்க வேண்டும். இன்று பல்வகை உணவு தினம். பேரன் எடுத்துக் கொண்டது பழங்கள். .                                                                                                                                     அவனைப் பொறுத்தவரைப் பழங்களில் சத்து  அதிகம்.  அதனால் அவன் அம்மா நேற்று  கடைகளுக்குச் சென்று பைகள் நிறைய விதவிதமான பழங்களை வாங்கி வந்தாள்.                                                      இரவு எல்லோரும் படுக்கச் சென்றபின் ஒரு மணி நேரம் மெனக்கெட்டு     பழங்களை நன்றாகச் சுத்தம் செய்து ஒரே அள்வில்  நறுக்கி வைத்து , குளிர்ப் பெட்டிக்குள் வைத்துவிட்டாள். ஆரஞ்ச்,ஆப்பிள், செர்ரி, திராட்சை, கிருணிப் பழம், ப்ளூபெர்ரீஸ்  எல்லா வண்ணங்களும் கண்ணைப் பறித்தன. அவைகளைக் காலியில் எழுந்து நானும் அவளும்    ஸ்கூவர் கம்புகளில்  செரிகிவைத்து   இரண்டு பெரிய தட்டுகளில் நிறைத்தோம். இன்னும் அலங்கரிக்க நேரமில்லை. ஏழரை மணிக்குப் பள்ளியில் வைத்துவிடவேண்டும்..                                                             அவசரமாக வண்டியில்  அலுங்காமல் வைத்து    பள்ளிக்குச் சென்று வைத்து விட்டு வந்தாள்.                                                              பேரன்    அப்போதான்  எழுந்து  சீக்கிரம் செய்துட்டியாமா. ரியலி க்ரேட்னு அம்மாவுக்கு ஒரு கட்டி முத்தம் கொடுத்தான். ஏழு வயசுப் பெரியவனாச்சே.>}}}                                                            இந்த மரியாதை எல்லோரிடமும் நிலைக்க வேண்டும்.

Sunday, May 04, 2014

அன்பு உள்ளங்களுக்கு ஒரு ஆட்ரி ஹெப்Bர்ன்

aging princess.
Portrait
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Roman holiday princess                      மனம் கொள்ளை கொண்ட மோகனம்.ரோமன் ஹாலிடே படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேனோ தெரியாது.   பெல்ஜியத்தில் பிறந்து     லண்டனில் அரங்கேறிய  ஓவியம்.  பிடிக்காதவர்களோ எதிரிகளோ கிடையாது.  அன்புக் கணவர்,மகனோடு ஸ்விட்சர்லாண்டில் வீடெடுத்து இயன்ற சமூக சேவைகளைச் செய்து வந்தவர். ஆப்பிரிக்க நாடுகளுக்கெல்லாம் சென்று யூனிசெஃபின்  பிரதிநிதியாகச் சேவை புரிந்தவருக்கு    புற்று நோய்    இறுதி சொல்ல வந்தாலும் கலங்காமல் எதிர்கொண்டு  அமைதியாக    மறைந்தார்.    விடாமுயற்சி,அமைதி,அன்பு  அத்தனையும் கொண்ட பெண்மணி.   ஹாப்பி பர்த்டே ஆட்ரி ஹெப்பர்ன்.