Blog Archive

Wednesday, April 30, 2014

அன்பில் மலர்ந்த நல் ரோஜா சில் நினைவுகள் 10

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption                                                                                   மூன்றாம்   நாள்  எல்லோரும் வந்து பார்த்தாகிவிட்டது. சென்னையிருந்து    பாட்டியும் வந்தாச்சு. மாலை வேளையில் அனைவரும் வரவும் அ  இந்தப் பிள்ளை தூங்க ஆரம்பிப்பான்,. அவர்கள் அந்தப் பக்கம் போனதும் எழுந்து அழ ஆரம்பிப்பான்.  பக்கத்தில்  இருக்கும் அம்மாக்கள் பிள்ளை அழுதுமா. இடுப்புத்துணி மாத்தி,பால் கொடு., என்பார்கள். இரண்டும் சிரமமான வேலைகள்.                                                               எங்கள் இருவருக்கும் யுத்தமே நடக்கும். நடுவில் நர்சம்மா வந்து  சமாதானப் படுத்திவிட்டு  பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா என்று பாடாத குறையாகத் திட்டிவிட்டுப் போவார்.                                            சிங்கத்தின் சிநேகிதர்   மதுரைக்கு வந்தவர் திடீரென   எங்கள் ரூமுக்கும் வந்தார். கொஞ்சம் வயதானவர்.  குழந்தையைப் பார்த்துவிட்டு  முரடனுக்கு முரடன் தான் பிறந்திருக்கான் அருள்வாக்கு வழங்கிவிட்டுப் போனார்............................. அவர் வந்துவிட்டுப் போனதும் கவனிப்புக் கூடியது. என்ன சொன்னாரோ தெரியாது.. நான் அவர் கொண்டுவந்த கடிதத்தில் மூழ்கி இருந்தேன். குட்டிப் பையாவுக்கு அப்பா  முதல் கடிதம் எழுதி இருந்தார். நான்  சனிக்கிழமை வரேன். அம்மாவைப் படுத்தாதே. அவளுக்கு ஒண்ணும்  தெரியாது ....இப்படிப் போனது. எனக்கோ சிரிப்பு. ஏண்டா உனக்குப் புரிகிறதா. எனக்கு ஒரு வரி இல்லை  உனக்குதான் முழுக்கடிதமும் என்று சிரித்தபடி இருந்தேன்.                                              அடுத்தநாள் புதன் கிழமை. எனக்கு வீட்டுக்குப் போகலாம் என்று தோன்றிவிட்டது.   குழந்தையை எடுத்துக் கொண்டு அங்கிருக்கும் தலமை நர்சிடம் வீட்டுக்குப் போகலாமா என்று அனுமதி கேட்டேன். ஹவ் டு யூ ஃபீல் என்றார். வெரி குட், என்றதும் உடனே ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தார்.   இது என்ன புது மரியாதை என்று யோசித்தபோது, ஓஹோ சின்ன மாமியார்தானே   இங்க எல்லாத்துக்கும்  தலைவரோட மனைவி. அது இவர்கள் காதில் விழுந்திருக்கும்>}}}       நான்  பசுமலைக்குத் தொலைபேசி நானும் குழந்தையும் வரும் விஷயத்தைச் சொல்லச் சொல்லிக்    கேட்டுக் கொண்டேன். அவர்களும் சொல்ல  பெற்றோர் உடனே ஏகப்பட்ட புத்திமதிகள் வழங்கத் துவங்கினார்கள்.  பாதியைக் காதில் வாங்கிக் கொண்டு   மீண்டும் அறைக்கு விரைந்து  எனக்கான சிறுபெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டேன். அத்ற்குள் அங்கிருந்த  தாதிகள் குழந்தைக்குத் தொப்புள்கொடிக்கான ஏற்பாடுகள் என்ன செய்யவேண்டும் என்றெல்லாம்    எழுதிக் கொடுத்தார்கள். அதையும் வாங்கிக்கொண்டு     எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு   காத்திருந்த ஆம்புலன்சில் ஏறிக் கொண்டேன். மனம் முழுவதும் உற்சாகம். மெத்து மெத்து டவலில் சுற்றியிருந்த குழந்தையைப் பார்த்தபடி  அரைமணியில்  பசுமலை வந்துவிட்டோம். கூடவந்த நர்ஸ் குழந்தையை வாங்கிக் கொண்டார்.          கதவு திறந்ததும் குதிக்காத குறையாக இறங்கிக் குழந்தையையும் வாங்கிக் கொண்டேன். கூடவந்தவர் அப்பாவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.   பத்திரமாக இருங்க என்றபடி விடைபெற்றார்கள்.     அவசர்மாக உள்ளெ நுழையப் பார்த்த என்னை அம்மாவின் ஆரத்திதட்டு நிறுத்தியது. ஹே. ...இதெல்லாமும் உண்டா.சரிதான்   கொஞ்சம் ராஜ்யம் செய்யலாம்    என்று   யோசனை தோன்றியது.       சீக்கிரம் உள்ளே  வா. நாங்கள்தான் சாயந்திரம் வருவதாகச் சொன்னோமே. அதற்குள் உனக்கென்ன அவசரம். நல்ல நேரம் பார்க்கவேண்டாமா    என்று அம்மா    பொரிந்தார்.  வந்துட்டேனேம்மா.  ரொம்பப் பசிக்கிறது.சாப்பிடலாமா என்றதும்  சட்டென்று சுதாரித்துக் கொண்டார்,. இப்படி ஓடிச் சாடறதெல்லாம் விடு. குழந்தையைக் கொடு. முதலில் போய்க் கட்டிலில் உட்கார்ன்ந்து கொள் என்றார்.. இப்படியாக ஏழாம் நாள் காப்பு,தொட்டில் எல்லாம் நடந்தது,.  சிங்கமும் வந்து சேர்ந்தார். கொசுவலை என்ன,   பிரம்புத்தொட்டில் என்ன, குழந்தைக்கான பிரம்பு பாஸ்கெட்,தெர்மாச்    ஃப்ளாஸ்க். ராட்டினமாகச் சுற்றும்   மணிகள்.  புது ஆளைப் பார்ப்பது போல எனக்குப் பிரமை.....       . புதிதக வாங்கியிருந்த கட்டில் மெத்தை ரப்பர்ஷீட் எல்லாம் பார்த்து மாமனாரை மெச்சிக் கொண்டார்.                         அடுத்த  நாள் புண்யாகவசனம் என்றிருக்கும் போது கமலம்மாவும் வந்துவிட்டார். பெட்டி நிறைய குழந்தைக்குத் துணிமணிகள் அத்தைகளின் பரிசுகள்  என்று ஒரே குதூகலம். குழந்தை எங்கள் வீட்டைக் கொள்ளவில்லையே. இவ்வளவு சின்னவனாக இருக்கானே.     ரேவதி சரியாகக் கவனித்துக் கொள்ளணும். நான் வேண்டுமானால்   க்ளாக்ஸோ ,லாக்டோஜன் ஏதாவது வாங்கி அனுப்புகிறேன் என்றதும் என் பாட்டி  மெதுவாக அவளே கொடுக்கட்டும் .குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம் என்றதும்  ஒருவழியாகச் சமாதானம் ஆனார். அடுத்தநாள் மங்கள ஸ்நானம். மணயில் குழந்தையை மடியில் கிடத்தியபடி    மந்திரங்கள் ஓதி     சடகோபன்,ஸ்ரீநாத்  என்று பெயர் சூட்டியாயிற்று. இன்று வரை பாபுதான் அவன் அப்பாவின் செல்லம்.

Monday, April 28, 2014

சில்லென்று சில நினைவுகள் 9

பிற்காலத்தில் இதோட போராட இப்பவே பயிற்சியோ                                                                                                                                        அக்டோபரும் சென்றது. அந்த வருடம் நவம்பர் 11 ஆம் தேதி தீபாவளி. டவுனுக்கு நானும் வருவேன் என்று பிடிவாதம் பிடித்து அதே ஹாஜிமூசாவில்  கத்தான் சில்க் புடவை வாங்கிக்  கொண்டேன்.  இவரிடம் தலை தீபாவளிக்கு வரச் சொல்லி அப்பா கடிதம் எழுதி, தொலைபேசி  அவரும் வரேன் என்று சொல்லியாச்சு.  10  ஆம் தேதி இரவுதான் வரமுடியும் என்றும் சொல்லிவிட்டார்.                                                                                                                                                                     தம்பிக்கு  அத்திம்பேர் சீக்கிரம் வந்தால் நிறைய பட்டாசு வெடிக்கலாம் என்ற       ஆர்வம்.. அவர்தான் கையில் பட்டாசை வைத்துக் கொண்டு   எப்படி வெடிப்பது என்பதையெல்லாம் சொல்லித் தருவதாகச் சொல்லி இருந்தாரே   !!!!   ஆம் தேதி வருவதாகச் சொல்லி இருந்ததால்    சின்னத்தம்பி செண்ட்ரல்     பஸ் ச்டாண்டுக்குச் சாயந்திரமே போய் விட்டான். அங்கிருந்து  பூத்திலிருந்து அவன் ஃபோன் செய்து அத்திம்பேர் வரவில்லை என்று சொல்லவும்   வாசலில் புது புல்லட் வண்டியின் தட தட சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது..     வாசல் விளக்கு வெளிச்சத்தீல் அப்பா     ..என்னப்பா  பைக்கில் இவ்வளவு தூரம் வந்தியா என்று கேட்டதற்கு  ஒரே சிரிப்புதான் பதில்.  நான் அவசரமாக எழுந்திருப்பதை அம்மா கண்ணாலயே கண்டித்தார். நேத்துதான் பொய் வலி வந்துட்டுப் போயிருக்கு. அவசரப் படாமல் வாசலுக்குப் போ என்றார்.                                    என் அவசரம் எனக்குத் தெரியும்:))     சொட்டச் சொட்ட நனைந்த சட்டையும் பாண்டுமாக வாசலில் நின்ற போது கோபம்தான் வந்தது. .. ஏன் சொன்னபடி பஸ்ஸில் வரவில்லை என்றால்.......  லாரி  டெலிவரி டைம்மா. .பஸ்ஸில் வர எல்லாம் நேரமில்லை.  பெட்டியைப் பாக் செய்து வைத்திருந்தேன். இது   கணபதியோட வண்டபுதுசா வாங்கி இருக்கான்,. கொடுடா டெஸ்ட் ட்ரைவ் செய்கிறேன்னு  அங்க 6  மணிக்குக் கிளம்பினேன். இதோ பத்து மணிக்கு வந்துட்டேன் பாரு  என்றவரைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.                                                    வழியெல்லாம் நல்ல மழை. மதுரை வந்ததும் தான்   விட்டது. அம்மாகிட்டக் காஃபி கொடுக்கச் சொல்லு என்றவர்    பெட்டியைத் திறந்தார்.   .  நான் வந்தபிறகுதான் பார்க்கணும் என்றபடி  குளிக்கச் சென்றார்.   இந்த அகாலக் குளியல் எல்லாம் எனக்குப் பழகிவிட்டது. அப்பாவும் அம்மாவும்     திகைப்புடன் பார்த்தபடி இருந்தார்கள்.                                                                                                                               அப்புறமென்ன.  கும்மாளம்தான்.  மச்சினனுக்கு அணு குண்டு, எனக்கு மணிப்பூர் சில்க் புடவை, ஆர்ய பவன் ஸ்வீட்ஸ்...அம்மாவுக்கு யூகலிப்டஸ் ஆயில்,  அப்பாவுக்கு சேலம் வெற்றிலை என்று என்னேன்னவோ. இதெல்லாம் இவருக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்.  என்று புன்னகையோடு       பார்த்துக் கொண்டிருந்தேன்.  இதப் பாரு ஆஜி அனுப்பின கற்பகம் பச்சைப் பட்டுப் புடவை என்று இன்னோரு புடவையை நீட்டினார்.                                                                                                  


மகிழ்ச்சி       மத்தாப்பு                                                                                                                                                                                                                 அதற்குள் வந்துவிட்ட தம்பி பைக்கைப் பார்த்து வாசலிலேயே நின்று விட்டான்.    யாய்ய்ய்ய்  என்று ஒரே கூச்சல்.  யாரோடது பைக். அச்சோ நியூ  புல்லட். அப்பா என்ன வேகம் தெரியுமா.  என்ன மெஜஸ்டிக் சவுண்ட் தெரியுமா. அப்படியே ஹார்ட் பீட்  மாதிரியெ     ரிதிமிக்காக் கேக்கும். .அத்திம்பேர் லாஸ்ட் பஸ்ல வரேன்னுட்டு   பைக்ல வந்தாச்சா..கார்த்தால எனக்கு ஒரு ரவுண்ட் கூட்டிக் கொண்டு போகணும் என்றான். நான் உனக்கு ஓட்டவே சொல்லித்தரேன்    இப்ப வா. இதெல்லம் எடுத்துக்கோ என்று அவனிடம் வெடிகளைக் கொடுத்தார்.    .அப்பாதான்  அவனை ஆசுவாசப் படுத்தி எல்லாம் நாளைக்கு. இப்ப  சாப்பாடு. கைகால் அலம்பு என்று உத்தரவிட்டதும், அம்மா இலைகளைப் போடவும்  சாப்பிட உட்கார்ன்ந்தாச்சு. அம்மாவும் அப்பாவும் பரிமாற நாங்கள் மூவரும் சாப்பிட்டோம்.                                                                                                      மருதாணி  கொண்டு வந்து அம்மா கைகளில்   இடவும்  யூ ஆர் ஸ்டில்    அ  பேபி. அண்ட் யூ ஆர் கோயிங் டு ஹேவ் ஒன்  என்று பெரிய ஜோக் சொல்கிற மாதிரி முகத்தை    வைத்துக் கொண்டார்.....................ஒரு வேலை அம்மாவுக்கு உதவி செய்யலையா என்றதும் அப்பா மெதுவாக இரண்டு நாட்கள் முன்  வலி வந்ததைப் பற்றியும் அனைவரும் பயந்ததைப் பற்றியும் சொல்ல  இவர் அமைதியாகிவிட்டார்.   அதே யோசனையோடு தூங்கவும் போயாச்சு.          அடுத்த நாள் மங்களாமாக                     புத்தாடை,லேகியம்,பட்சணங்கள் என்று    போனது. இரண்டு மூன்று தடவை மாப்பிள்ளையும் மச்சினனும் திருப்பரங்குன்ற  சாலையில்     ரைட்  சென்று வந்தார்கள்.    அப்போது ஆரம்பித்தது  வலி. முணுமுணுவென்று ஆரம்பித்து சுயரூபம் தெரிய சாயந்திரம் ஆனது.   இவருக்கு அடுத்த நாள் காலை கிளம்பவேண்டும். அந்தக் கவலை இந்தப் பயம் எல்லாம் சேர்ந்து கொள்ள அவர்கைகளைப் பிடித்தவண்ணம் மாடிப்படிகளில் உட்கார்ந்திருந்தேன்.   யதேச்சையாக அந்தப் பக்கம் வந்த தம்பி அம்மாவிடம் போய்ச் சொல்லிவிட்டான் ஆண்டாள் அழறாம்மா  ..............                                                                                                                        அதற்குள் சேலத்திலிருந்து ஃபோன்  அழைப்பு.    அடுத்த நாள் பெரிய தொழிலதிபர்  வொர்க்ஷாப்பைப் பார்க்க வருவதாக.   உடனே கிளம்பி விட்டார்.  ஒண்ணும் ஆகாதுமா. பையன் வந்ததும் நானும் வந்துவிடுவேன் என்றபடி புல்லட்டின் சத்தத்தோடு கிளம்பினார்.    அந்த நேரம் தன் பொறுப்பு நிறைந்த வேலையை   வெறுத்தது கண்கூடாகத் தெரிந்தது.                                                                  அம்மா என்னைப் பக்கத்துவீட்டு மிஸஸ்.டானியலை வரவழைத்துக் காண்பித்தார்.இது நிஜ வலிதான்மா. நாம் உடனே  டிவிஎஸ் ஹாஸ்பிடலுக்குக்   கிளம்பிடலாம்,  என்றதும்     அப்பா அம்மா முகம் வெளுத்துவிட்டது. இன்னும் மூணு வாரங்கள்        இருக்கிறதே  டாக்டர் சொன்ன நேரம் வர     என்று அப்பா கவலை. உடனே அந்த அம்மா,இந்தப் பொண்ணு நாலு மணி நேரமாவது வலியோடு இருந்திருக்கிறாள்.   நாம் போவதுதான் நல்லது என்றதும் எல்லோரும்ம்  வேண்டும் என்கிற     துணிமணிகளை    எடுத்துக் கொண்டு சொக்கிகுளம் அடைந்தோம். ஹாஸ்பிட்டலில் கால் வைத்ததும்   வலி நின்று விட்டது.    பரிசோத்த  டாக்டர்கள் நீங்க எல்லோரும்     கிளம்புங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.   இன்னும் 24 மணிநேரமாவது ஆகும் என்று விட்டனர். பசுமலை தள்ளி இருப்பதால் திருப்பி அனுப்பவில்லை என்னை.  பெற்றோருக்கு  இன்னும் கவலை. பாவம். நாந்தான் நான் தைரியமாத்தான் இருப்பேன்மா. அவருக்கு மட்டும்  காலையில் போன்    செய்துவிடுங்கள் என்றேன்.     11 ஆம் தேதி போச்சு. 12 ஆம் தேதி போச்சு. 12 ஆம் தேதி இரவில் நல்ல வலி வந்து  13 ஆம் தேதி அதிகாலையில்                                                                                                                       சிங்கத்தின் புதல்வன் பிறந்தான்.      .அரைமணிநேரத்தில் சிவந்த கண்களோடு அம்மவும் அப்பாவும்.  வந்தனர். குழந்தைக்கு வேண்டிய  பழைய சட்டைகள்  , இடுப்புத்துணி என்று எல்லாம் கொண்டுவந்து அரை மணி நேரம் இருந்துவிட்டுப் போனார்கள். அப்போதுதான் தனிமையை தீவிரமாக உணர்ந்தேன். பிறந்தவன் தூங்கினானோ தூங்கினானோ அப்படித்தூங்கினான்.     ஒரே மொட்டைத்தலை. சிகப்பு முகம் நீளமான ஒல்லியான உடம்பு. மூன்றரை   கிலோ எடை. .    இனி  புண்யாகவசனம் அன்று பார்ப்போமா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இதழ் மொட்டு விரிந்திட  புன்னகை புரியும் சின்னப் பாப்பா.                                                                                                                                                                

Saturday, April 26, 2014

முதல் கண்ணன் வந்தான் சில சில் நினைவுகள் 8





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சென்ற    வருடம் வந்த கண்ணன்                                    செப்டம்பர்   ஒருநாள் இரண்டுநாள் என்று ஓடியே விட்டது 23 ஆம்தேதி  ஸீமந்தம்  வைத்திருப்பதாகவும் .அந்த   விழா முடிந்த அடுத்த நாளே  மதுரைக்கு அழைத்துப் போகச் சொல்லி என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடிதம் எழுதி இருப்பதாகவும்         கமலம்மாவிடமிருந்து கடிதம் வந்தது.    இவருடைய  மனுக்கள் எல்லாம் பலிக்கவில்லை. முதல்        பிரசவம் அம்மா வீட்டில்   தான் பார்க்க வேண்டும் நீ எப்போதாவது போய்ப் பாரேன்.                                                                        அவளை ஓய்வெடுத்துக்கவிடு என்று தொலைபேசியில் புத்திமதி.  சொல்லியாகி விட்டது.   ,பலமான யோசனைக்கப்புறம் சென்னைக்கு டிக்கட்கள் பதிவு செய்தார்.. பாத்ரூமில் குளிக்கப் போனால் தீவிரமாகப் பேச்சுக் குரல் கேட்கும். யாருடன் பேசுவார்  என்று தெரியாமல் வெளியே   நின்று கேட்டால் கல்யாணமானால்  என்ன   ,அப்படியே வழக்கத்தைக் கடைப்பிடிக்கணுமா. லண்டன்லியே  இருந்திருக்கலாம்.அங்க யாரும் வந்து இங்க போ அங்க வா என்று சொல்ல மாட்டார்கள்.  எல்லாம் ஆங்கிலத்தில்தான் ....உரத்த சிந்தனை.. வெளியே  வந்தவர் என்னைப் பார்த்ததும் கோபமாக முறைத்துவிட்டு     இரண்டாம் காபியையும் குடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார். ஜீப் கிளம்பும்  வேகம்  மண்சாலையில் தூள் பறந்தது.. மண்சாலையில்   இருந்து பிரியும் மெயின் ரோட்டில் பறந்தது       வண்டி..                                                                                         எனக்கே வருத்தமாகிவிட்டது.   நாளைக்குக் கிளம்பணுமே.  என்ன செய்யப் போகிறாரோ  என்று யோசனை.  அன்று மாலையும் பத்துமணிவரை   வீட்டுக்கு வரவில்லை..  வராந்தாவில் போட்டிருந்த     சோஃபாவிலேயே தூங்கிவிட்டேன்.   வராந்தா ஜன்னல்  திரைகளில்      ஜீப்பின் ஹெட்லைட்  வெளிச்சம்    பட்டதும்   விழித்துக் கொண்டேன்.                                                                                                   உள்ளேவந்தவர் குளிக்கப் போய்விட்டார். சத்தமில்லாமல் சாப்பிட உட்கார்ந்தார்.   சுடவைக்கக் கூட விடவில்லை. நீ சாப்பிட்டியா  னு கேள்வி. நான் எங்க சாப்பிடறது. இதோ வரேன் என்று இன்னோரு   தட்டை     எடுத்துவந்தேன்.  முதலில் சாப்பிடு. அப்புறம் சிம்மு உன்னைச் சரியாப் பார்த்துக் கொள்ளவில்லை என்ற பெயர்தான் தங்கும் என்றவர் முகத்தைப் பார்த்தேன்.                                                                                     சகிக்கவில்லை.   இன்னும் இரண்டு வாரத்தில்      நீங்கள்    பசுமலை வாருங்களேன். சனிக்கிழமை வரலாமே. ஸ்டேட் ட்ரான்ஸ்போர்ட் பஸ் தான் வரதே என்றேன்..  ஏன்  இங்க என் வேலையை யார் பார்ப்பது.  பாதி பொருட்கள் புது வொர்க்ஷாப்புக்க்ப் போயாச்சு. மிச்சத்தையும் ஏறக் கட்டணும். மெஷனரியெல்லாம் மூவ் பண்ணனும்.      இதுக்கு நடுவில் பேபி வரும்போது நான் அங்க இருக்கணும். அதற்கு லீவு வேண்டாமா.  தீபாவளிக்குப் போ  என்று அம்மா சொல்லி இருக்கிறார்..                                                                                படபடவென்று பேசி முடித்தார்..சரிம்மா. இதெல்லாம்  நடக்கிறது தானே.  உங்க அக்கா    எல்லாம்    பாரிஜாதத்தில் தானே  குழந்தை பெற்றுக் கொண்டார்கள்.    ஆமாம்.  அப்ப  எனக்கு மட்டும்  வேறமாதிரி நாம நினைக்கலாமா. பாப்பா  டிசம்பரில் வந்துவிடும். ஒருமாசத்தில் இங்க வந்துடறேன்மா.    உங்களுக்கு இவ்வளவு வேலை இருக்கும்போது   நானும் சங்கடம் கொடுத்தால் பாவம் இல்லையா  நீங்க..........என்று நிறுத்தினேன்.          சாப்பாடு உள்ள  போனதும்  கொஞ்சம் நிதானம்.    சரி   சூட்கேசை நீ எடுக்காதே. பெரிடில் உன் புடவைகள் எல்லாம் வச்சுக்கோ. நான் சின்ன சூட்கேசில் மூன்று நாளைக்கு வேணும்கறதை எடுத்துக்கறேன். சாயந்திரம் ஆறரை மணிக்கு    டவுன் ஸ்டேஷனில் போய் ஏறிவிடலாம். ஜங்ஷனில் படியிறங்கி ஏற உன்னால் முடியாது. குட்டிப்பையாவுக்கு வலிக்கும் என்றார். அதென்ன குட்டிப் பையா. குட்டிப் பொண்ணாஆ  இருந்தா.......  ஓ  ஐ நோ. இட்ஸ்  அ பாய்.  வரும்போதே டாடி எங்கேன்னு கேட்பான்  பாரு என்றவர் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு வந்தது..    ..............                                                             நானும் அப்பாடாவென்று  தூங்கப் போனேன்.  அடுத்தநாள்       சரியான நேரத்துக்குக் காரில் வந்து ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தோம். இரண்டு மூன்று நிமிடங்கள் தான் அப்போது வண்டி நிற்கும் என்று நினைக்கிறேன்.எப்படியோ                                                                                                ரயிலில் ஏறிவிட்டோம்.                                        காலையில் சென்னை    செண்ட்ரல். லஸ் சர்ச்  ரோட்   அமைதியில் மூழ்கி இருந்தது.   க்ட்டைத் திறந்து  முன்வாசலில் போய்நின்றதும்       மாமியாரின் குரல் கேட்டது.வாவா மெள்ளவா. என்று.  பெட்டிகளைத் தூக்கி மாடியில் எங்கள் அறைகளில் வைத்துவிட்டுக் குளித்துவிட்டு வந்தார். நான் மாமியாரிடம் வாங்கி வந்த சோஹன் அல்வா,ச்பின் ஹெச் என்ற  பிஸ்கட்கள்,   எல்லாம்                                                                                            கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மாடியேறினேன்.  கீழே     வந்த பிறகு   புரசவாக்கத்திலிருந்து    தொலைபேசி . அப்பாவால் வர முடியவில்லை. அம்மா மட்டும் வந்திருக்கிறார்  என்று தெரிந்தது.   நாளைக்கு வருகிறோம்    மா  என்று சொல்லிவிட்டுஃபோனை வைத்துவிட்டார்..                                                  அவ்வளவுதான் அப்போதெல்லாம்      .நிறைய பேசிக் கழிக்கக் கூடாது நேரத்தை.. தாத்தாவுக்குக் கோபம் வந்துவிடும்.  10   மணிக்கெல்லாம் மணக்க மணக்கச் சாப்பாடு. கல்யாணக் கூடம் சுற்றி  இலைகள்.         நாத்தனார்கள், அவர்கள் குழந்தைகள்,இவர் பெரியப்பா,சித்தப்பா பசங்க    எல்லாம் வீடு நிறைய    கூட்டம்.   .எங்கள் வீட்டு மனிதர்கள் சேர்ந்தாலே கல்யாணக் கும்பல்தான்... இனிதாகக் கழிந்தது அன்றையப் பொழுது. அடுத்தநாளுக்கான ஏற்பாடுகள் மாவிலைத் தோரணம் கட்டுவதிலிருந்து வாழை மரங்கள் நடுவது எல்லாம்  மாடுகளைக் கவனித்துக் கொள்ளும் முனுசாமியும் அய்யனாரும்.                                                                                                                                                                                                        புரோகிதர்கள் வரவும்,அம்மாவும் சின்ன மாமியும் சீர் வரிசைகளோடு வரவும் சரியாக இருந்தது.    அம்மா ஒரு பச்சைப் பட்டுப் புடவை  இரட்டை ஜரிகை போட்டு வாங்கி வந்திருந்தார்.  இங்கே நாத்தனார் பூச்சூட்டலுக்காகக் கத்திரிப்பூ வண்ணத்தில்  பனாரஸ்  புடவை.     தாத்தா ஆஜி தலைமையில் அத்தனை  விசேஷங்களும் நன்றாக நடந்து முடிந்தன. ஒன்பது கஜக் கூறைப் புடவை அநியாயத்துக்குக் கனத்தது. தல்யில் வேறு பூச்சுற்றி.எழுந்து உட்கார்ந்து நமஸ்காரங்கள்  எல்லாம் அந்த இளம்வயதில் சுலபமாக முடிந்தன. காலை  இவர்  சேலம் கிளம்ப என்னை அழைத்துக் கொண்டு அம்மா    , பாட்டிவீட்டுக்கு அழைத்துக் கொண்டுவந்துவிட்டார். அன்று இரவு மதுரை பயணம்..                                                                                                                                  விதவிதமாகப் பயணங்கள் திருமணத்துக்காக மதுரையில்  கிளம்பினவள் இப்போது அம்மா ஆவதற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.   என் நினைவெல்லாம் சேலத்துக்குப் போய்விட்டன.                                                             மதுரை ஜங்ஷனில் அப்பா வந்திருந்தார்.    டாக்சி பிடித்துப் பசுமலை வந்தோம். சின்ன தம்பிக்கு ஒரே மகிழ்ச்சி. இங்கயே இருக்கப் போறியா. பாப்பா எப்ப வரும். அத்திம்பேர்  ஏன் வரவில்லை. என்று சுற்றிச் சுற்றி வந்தான்.                                       அப்பா  பழைய புத்தகங்களும் நிறைய ஆங்கிலப் புத்தகங்களும் வாங்கிவந்திருந்தார். .....தினப்படி மாலையில் தம்பியுடன்  நடைப் பயிற்சி. மதியம் தூக்கம். மாலையில் சேலத்துக்குக் கடிதம். அடுத்த நாள் காலையில் அவருடைய பதிலுக்குக் காத்திருப்பது....இப்படி பொழுது    போனது,. தீபாவளியும் வந்தது.     தொடரும்.                                                         

Wednesday, April 23, 2014

காஃபியில பல் தேய்க்கிறார்.... இன்னுமொரு நல் நினைவு 7

உலகமே  என்னுள் அடக்கம்:)
டி காஃப்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

உலகத்தில்  இன்றியமையாத  ஒரு பழக்கம்  . விட முடியாத பழக்கம்.
விலக்குவதால் நன்மை அதிகம்.'

தெரியும் ஐய்யா.
கொலெஸ்ட்ரால் குறையும்.
ஆமாம்.
உனக்கோ ஷுகர் இருக்கார்.

ஆமாம்.
ஸ்கிம்டு  பால் சாப்பிட்டால் போறுமே.
ஓ  அதுக்கென்ன.


இப்ப மட்டும்  ஒரே ஒரு கப் ப்ளீஸ்.:(
என்னடா காலங்கார்த்தால எனக்கு வந்த கஷ்டம்.
ஐஸ் பொட்டியைத் திறந்தால் பாக்கெட் பாலைக் காணோம்.
என்ன ஆச்சு?. ஃப்ரிட்ஜே சாப்பிட்டுடுத்தா.
நீங்க  இன்னோரு பால் எடுத்தீர்களா.

இல்லையேமா. அது உன் டிபார்ட்மெண்ட்...
என்னாச்சு.பாலா காணோம்????

 ஆமாம் வாங்கின ரெண்டில ஒண்ணு நேத்திக்குப் பாயசத்துக்கு எடுத்தது.
இன்னோண்ணு எங்க. ?
அடுத்த தட்டில எங்கயாவது ஒளிஞ்சிண்டு இருக்கும். யானை இருந்தால் கூடத் தெரியாது உனக்கு.
பழமும் காய்கறியும் தான் இருக்கு. தயிர் இருக்கு.
ஏலக்காய் இருக்கு. தண்ணீர் இருக்கு.

சரி பெருமாளுக்கு கைகாண்பிச்சுடு...

????
பின்ன கார்த்தால அஞ்சு மணிக்கு எழுந்து ஒரு மனுஷன் ஜிம்முக்குக் கிளம்பறான்.
ஒரு காப்பி  இல்லைன்னால் என்ன செய்ய முடியும்.

எனக்கே பசி, தலை கொண்டு போறது.
உங்களுக்குப் பதில் சொல்லக் கூட எனக்குத் தெம்பு இல்ல.
சரி  இந்தா ரெண்டு மாரீ  பிஸ்கட்  சாப்பிடு. நான் பால் பூத்ல
ஒரு பாக்கெட் கிடைக்கிறதான்னு பார்க்கறேன். அடுத்த செகண்ட்  மோட்டார் சைக்கிள் கிளம்பும்   சத்தாம்.

ஆஹா   நான் காண்பது கனவா. சிங்கம் கூட இந்தக் காலைக் குளிர்ல

லஸ் பக்கம் பாலுக்காகப் போகுமா??

போச்சே.
அந்தப் பாலைக் காய்ச்சியும் வைத்துவிட்டது:)
இதோ  காப்பியும் குடித்தாச்சு.

இப்போ விஜய் டிவியில் காலட்சேபம் காதில் விழுகிறது.
பதிவு எழுத யோசனையும் மேட்டரும் கிடைத்துவிட்டது இல்லையா.:)

காப்பியைப் பற்றித் தேடினபோது கிடைத்த தகவல்
அது ஒரு ஆந்டி ஆக்சிடந்டாம்.!!
க்ரீன் டீ மாதிரி. நம்ப முடியவில்லை இல்லையா. நானும் நம்பவில்லை. :)





Monday, April 21, 2014

சில சில் அனுபவங்கள் 6 1966...67

சென்ற                                        வருடம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1974 இல்  நாங்கள்
Add caption
அட ஏம்பா  போரடிக்கற   .மனுஷன் வேலை பார்க்க வேணாம்....                                                                                                                                        கார் பயணமே சிங்கத்துக்கு மிகவம் பிடித்தது. பிடித்த இந்திப் பாடல்களைப் பாடியபடி  வண்டி ஓட்டி வருவார்.   என்னையும்ம் தமிழ்ப் பாட்டுகளைப் பாடச் சொல்லி ரசிப்பார்.. சேலத்திலிருது  புறப்பட்டு  அழகுக் காட்சிகள் கண்ட இடங்களிலெல்லாம் நிறுத்தி  ,கீழே இறங்கி ரசித்து மீண்டும்  வண்டியில் ஏறுவோம்.   அப்போதெல்லாம் விரட்டும் மிரட்டும் லாரிகள்   கிடையாது..                                 ஒரு  பிச்சோடா கொண்டை. அதையும் மீறி வெளியே வரும்   தலைஅலங்காரம்>}}}                                                                                                      நல்ல ஜோடி நாங்கள்.... ஒருவழியாக ஐந்து மணி நேரத்தில் பசுமலை வந்து சேர்ந்தோம். அம்மா அப்பா இருவரும் சாப்பிடாமல்       காத்திருந்தார்கள்.     ரொம்ப சாரி மாமா. இவள் குளத்தைப் பார்த்தால் காரை நிறுத்து என்கிறாள்.   ஆறு ஓடினால் கீழே   காலகளை நனைக்கணும்கறா.  எம்று  பொய்யாக அலுத்துக் கொண்டார்.  அப்பா அம்மாவுக்கு என் இளைத்த தேகத்தைப் பார்த்து  கவலை.                                                                                                                      அடுத்த நாள் டிவிஎஸ்  மருந்தகத்தில் காண்பித்து  சோதனை செய்து கொள்ளவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல் சின்னவனோடு கொஞ்ச நேரம் காரம்போர்ட்,  பிறகு இரவு நேரச் சாப்பாடு. அம்மா கொண்டையை அவிழ்த்து வழக்கமான  நீளப் பின்னலைப் போட்டுவிட்டார்.      எல்லோரும் சீக்கிரமே சாப்பிட்டுப் படுத்துவிட்டோம்.   அப்பாது வீட்டில் கட்டில்கள் கிடையாது.      சிங்கத்துக்கு மனசாகவில்லை.      மாமா நான் வேணுமானால் ஒரு சோஃபா கம் பெட் வாங்கி வரட்டுமா என்று கேட்டார்.        இல்லை சிம்மு   இதுலயே     சமாளிக்கலாம். குழந்தை பிறக்கும் போது நான் ஏற்பாடு செய்துவிடுவேன். டிசம்பர்தானே   டைம் சொல்லி இருக்கிறார்கள்.   செய்துடலாம் என்று அப்பா சொல்லிவிட்டார். நல்ல மெத்தைகள் எங்களுக்கு விரிக்கப்பட்டன. படுத்ததுதான் தெரியும் . தூங்கியாச்சு. அடுத்த  நாளும் வந்தது.  நெடுந்தொலைவுப் பயணம் .                                                                                                                                                                                             சிங்கம் எழுந்துக்கவே      எட்டு ஆகிவிட்டது.   .அதற்கப்புறம் அம்மா கொடுத்த இட்லி மிளகாய்ப் பொடி  சாப்பிட்டுவிட்டு நாங்கள் கிளம்ப   ஒன்பதரை மணி. மருத்துவமனை இருந்த இடம் சந்தைப்பேட்டை.     .பக்கத்துவீட்டு டானியல் சாரின் பிளிமத் உதவிக்கு வந்தது.  நாங்கள் நால்வரும் அதே வண்டியில் புறப்பட்டோம்.             பரிசோதித்த மருத்துவர்  48  கிலோ வெயிட்டெல்லாம் போறாது. நீங்க நிறைய பால் சாப்பிடணும். என்று சொல்லி இரும்புச் சத்து மாத்திரை,பி காம்ப்லெக்ஸ்                                                   எல்லாம் எழுதிக் கொடுத்தார்.    ஹீமோக்ளொபின் எண்ணிக்கை ஐந்தில் இருந்தது.    .                                                                                                                                             ..எல்லாவற்றையும் அப்பா கையிலிருந்து பத்திரமாக வாங்கிக் கொண்டார் சிங்கம். நான் பாத்துக்கறேன் மாமா.  என்று அங்கேயே மருந்தகத்தில் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு,  நாங்கள்     அப்புறமா வீட்டுக்கு வரோம் என்றார். அப்பா அனுமதிக்கவில்லை. மெதுவாக  ரேவதி  வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கட்டும். சாயந்திரம் இரண்டு பேரும்  சினிமா     போய்வாருங்கள் என்றார்.  அதுவும் சரிதான் என்று எல்லோரும் திரும்பி விட்டோம்.   வீடுவந்ததும் அம்மா    என்னைப் பார்த்து  இங்க கொஞ்ச நாள் இருக்கலாமே. இங்கிருந்து நேரா   மெட்ராஸுக்குச் சீமந்ததுக்குப் போய் விடலாம்.  நீ கொஞ்சம் உங்க ஆத்துக்காரரிடம் சொல்லி வையேன்  என்றார்.                                                                                அவரிடம் சொல்ல வேண்டாம் நானே    இங்க இருக்க முடியாதும்மா. பாவம் அவர். வீட்டுச் சாப்பாடு இல்லாவிட்டால் கஷ்டப்படுவார்.   நாங்கள் இருவரும் சென்னை வந்துவிடுகிறோம்  ப்ளீஸ்ஸ்  மா      என்றதும்      சரி என்று மறுப்பேதும் சொல்லவில்லை. அம்மா. அப்பா பின்னால்                                                              நின்று கேட்டுக் கொண்டிருந்தார். பாவம்ம்மா. போய் வரட்டும்  நீ தொந்தரவு செய்யாதே. இங்க வந்தபிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம்   என்று விட்டார்.                                                சாயந்திரம் இருவரும் வண்டியில் மதுரை டவுனுக்குச் சென்று      முகராசியோ மகராசியோ ஏதோ ஒரு படம் பார்த்தோம். எம்ஜிஆர் ஜெயலலிதா படம்.. ...  எனக்காக விட்டுக் கொடுத்துப் பார்த்த படங்களில்   இதுவும் ஒன்று.                                                                     அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. சேலம் கிளம்பவேண்டும். அம்மா                இரண்டு மூன்று டப்பாக்களில்   வற்றல் வடாம்,  சிம்முக்குப் பிடித்த மைசூர் பாகு,  மனங்கொம்பு என்று செய்து வைத்திருந்ததை வண்டியில் வைக்கச் சொல்லித் தம்பியிடம் கொடுத்தார்.       அவனுக்கோ எங்களோடு வர ஆசை. ஒன்பதாம் வகுப்பு. படிப்பை  அலட்சியம் செய்யக் கூடாது என்று      அவனை  ஒரு வாறு சமாதானப்படுத்தி மதியம் வாக்கில் கிளம்பினோம். இரவு சாப்பாட்டையும் அம்மா செய்து வைத்திருந்தார்.                                         உண்ட மயக்கம் களைப்பு எல்லாம் சேர்ந்து    நான் பாதி வழி தூங்கிவிட்டேன்..  அவரும் ஏதோ யோசனையில் என்னை எழுப்பவில்லை.                                சேலம் குகைப் பக்கம் சத்தம் கேட்டு எழுந்தேன்.      ஏன் இவ்வளவு களைப்பா இருக்கேம்மா.    ஆர் யூ ஆல்ரைட்  என்ற வண்ணம் வண்டியை மெதுவாகவே ஓட்டி வந்தார்.        வீட்டுக்குப் போனால்         சரியாகிவிடும்.  நாளைக்கும் ரெஸ்ட் எடுத்துக்கோ.நான் வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றவரை  இடை மறித்தேன். நீங்களும் மதியம் வரவில்லைன்னால்   எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போகும்...  எதாவது  சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற வண்ணம் வீட்டுக்குள் நுழைந்து     கட்டிலில்  படுத்து    மீண்டும்   உறங்கியாச்சு. .  பிறகு அவர் சாப்பிட்டுவிட்டு என்னை வலுக்காட்டயமாக   எழ்சுப்பி  கொஞ்சம் சாப்பிடவைத்தார்.                                               இதுக்காக்வே இன்னும் ரெண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் போல இருக்கே என்று இருவரும் சிரித்துக் கொண்டோம்...

Thursday, April 17, 2014

சில சில் நினைவுகள் 5 ..ஜுலை 1966

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மலர்கள்               தரும் நினைவுகள்.                                                                                                                                ஒரு விதமாகப் புதுக்கோட்டை வந்து சேர்ந்து  சேலம் புறப்பட ஏற்பாடுகள் தொடங்கினோம்.   ஆடி   மாதம் வருவதற்குள் அங்கே போக உத்தரவு.   பீரோ கட்டில்கள் ,பாத்திரங்கள் பெட்டிகள் எல்லாம் சதர்ன்ரோட்வேஸ்     லாரியில்   ஏறின.           போய்  இறங்க ஒரு இடம் வேண்டுமே.    அங்கு சிறிய மாமியார் இருந்தாலும்  சிங்கத்துக்கு இன்னோருவரைத் தொந்தரவு செய்யப் பிடிக்காது. முதலில் ஹோட்டல் த்வாரகா   என்கிற விடுதியில் இறங்கினோம்.             அடுத்த அரை மணி நேரத்தில் மாமியாரிடமிருந்து தொலைபேசி வந்துவிட்டது.                                                     ஆஜிப் பாட்டி    என்னைத் தனியாக எங்கயும் விடக்கூடாது என்ற உத்தரவோடு  சின்ன மாமியார் வீட்டுக் குப் போகச் சொல்லி     செய்தி அனுப்பிவிட்டார்.     மாலையில் அங்கே போகலாம்,நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கிளம்பி விட்டார்.                    புது இடம். நல்ல விடுதிதான் என்றாலும்                        தனியாக இருக்கப் பயம்.  அப்பொழுது              இவரது கம்பெனி கிச்சிப் பாளையம்    என்ற இடத்தில் தள்ளி இருந்தது..  அதை  வேற இடத்துக்கு மாற்றவே இவரை அங்கே  வரவழைத்திருக்கிறார்கள்.    சேலம் நல்ல   தொழில் நகரம். லாரிகளும் பஸ்களும் நிறைய.  அவை எல்லாம்    டிவிஎஸ் ஐயும் சிங்கத்தையும் நாடியே வந்ததால்  இடம் போதாமல்  கம்பெனிக்கு வெளியில் எல்லாம் நிறுத்த நேர்ந்தது.   அவருடைய  முழுக் கவனமும் அங்கே போக ஆரம்பித்தது.                              அதனால் சின்ன மாமியார் வீட்டுக்குப் போவதென்று தீர்மானித்தோம். நடுவில் பார்த்த வீடுகள் அவருக்குப் பிடிக்கவில்லை.                           சின்ன மாமனார்     வெகு அன்பானவர். மாமியார் சமூக சேவகி. அவர்கள் பிள்ளைகள் எல்லாம் படித்து வேலையில் அமர்ந்துவிட்டார்கள். மாமியாருக்கு நல்ல பெயர் அந்த ஊரில்.  எல்லா வேலைகளையும் பார்க்க வீட்டில் ஆட்கள் இருந்தனர். எனக்குப் படிக்கப் புத்தகங்கள் இருந்தன.   சமையல் செய்யும் அம்மா ரொம்பக் கவனமாக என்னைக் கவனித்து நிறைய சமையல் முறைகளும் சிக்கனமும் சொல்லிக் கொடுத்தார்.                                       அவர் பெயரும் கண்ணம்மா.  அடக்கமான     பெண்மணி. எல்லாப்  பதார்த்தங்களையும் செய்துவிட்டு  அங்கேயே உட்கார்ந்திருப்பார்.  அவரிடம் உட்கார்ந்து பழைய கதைகளைப் பேசியபடி  பந்தலில் பூத்திருக்கும் பூக்களைப் பறித்து மாலைகள் கட்டுவேன். ஒரு இனிமையான பத்துநாட்கள் கழிந்தன.                          ஒரு நாள்    மாலை சீக்கிரமே   வந்த ஜீப் சத்தம் கேட்டு வெளியே   வந்தேன்.                                              வாவா  ,ஐ ஹேவ் சீன் அ  பெஸ்ட்    ஹவுஸ் ஃபார் யூ. கிளம்பு  கிளம்பு.   என்று அவசரப் படுத்தினார்.   எனக்கோ அசதி.     மாமனார்  ஜீப்பில  எல்லாம் அழைச்சுண்டு போகக் கூடாது.  தூக்கிப் போடும் என்கிறார்,.  ஏம்மா    உனக்குக் கஷ்டமா  இருக்குமா  என்றதும்  நான்  உடனே கிளம்பிவிட்டேன்.                                                               நாங்கள்    இருந்த   இடத்திலிருந்து இரண்டு மைல்கள் தூரத்தில்  சேலம் ஜங்ஷன்  அருகில்    வயல்கள்   நிறைந்த இடம் . சாலையோரம் ஒரு  மளிகைக்கடை சிறியது. புதிதாகக் கட்டப்பட்ட  அலி  பில்டிங்ச் என்று வரிசையாகப் பத்துவீடுகள். அதில்      முதல் மூன்றில் குடித்தனம் வந்துவிட்டார்கள்.   ஐந்தாவது வீடு  எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  சாலையைப் பார்த்த பெரிய ஜன்னல். அங்கெ எங்கள் கூடை நாற்காலிகளைப் போட்டுக் கொள்ளலாம். அதை     ஒட்டி  ஒரு  ரேழி. அதில்  ஒரு கதவைத் திறந்தால்   படுக்கும் அறை..அதற்கு அடுத்தாற்போல் சாப்பிடும்    அறை. பிறகு சமையலறை. பின் புறம் வெந்நீர் உள் ,கழிப்பிடம் என்று பிரமாதமாக இருந்தது.    நல்ல தண்ணிர்.   எல்லாம் சரி பூயோன்னு   இருக்கே சத்தமே இல்லையே என்று நான் கேட்டதுக்கு, ஆமாம்மா வொர்க்ஷாப் சத்ததிலிருந்து வெளியே வர எனக்கு  இந்த அமைதி வேண்டும். உனக்குச் சீக்கிரமே ரேடியோ வாங்கி விடுகிறேன் . போனஸ் வருமே    என்றார்.   அவரளவு எனக்குப் பேச்சு சாமர்த்தியம் போதாது.    சரி சரி  என்று தலையாட்டியாச்சு. ஆடிக்கு முன்னால் வீடும் மாறி வந்தாச்சு.            அப்போது ஆரம்பித்தது தனிமை.       காலை உணவு சாப்பிடும் வழக்கம் கிடையாது. அதனால் நானும் ஒன்றும் சாப்பிடாமல் இருப்பேன். மதியம் அவர் வரும் வேளைக்கு    ஒரு ரசம்,தேங்காய்த் தொகையல்,தக்காளிப்பச்சடி. உ.கிழங்கு கறி,.  மாறவே  மாறாது. அம்மாவுக்கு எழுதியதில் அம்மா    கஞ்சி எப்படிப் போடவேண்டும் என்று முறை சொல்லிக் கடிதம் போட்டார்.                                                        அது பிரகாரம்க் காலைக் கஞ்சி வழக்கத்துக்கு வந்தது.      நல்ல தோழர்கள் கிடைத்தார்கள் சிங்கத்துக்கு.                                  ஞாயிறு விடுமுறைகளில் சில ஆங்கிலப் படங்கள்,  ஒரு பாமா விஜயம்  எல்லாம் பார்த்தோம்.   துவாரகா ஹோட்டலில் சனிக்கிழமை     இரவு சாப்பாடு  என்று   வழக்கமாகியது. குழந்தை நான் இருக்கிறேன்   என்று சொல்ல ஆரம்பித்தது..                                  நடுவில்     மதுரையிலிருந்து பெற்றோர் அழைப்பு.       இரண்டு தினங்கள் வந்துவிட்டுப் போகும்படி.     இவரிடம் சொன்னதும்         உன்னை   நானே  காரில் அழைத்துப் போகிறேன் மா.      அப்ப      என்னோடயே திரும்பி வந்துடலாம்     என்றவர் முகத்தைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஏன்     என்ன சிரிப்பு.  என்றவர் முகத்திலும் புன்னகை. சரியான      முன் ஜாக்கிரதை     எங்க நான் அங்க  தங்கிடப் போறேனோன்னு தான   உங்களுக்குப் பயம். என்றதும் முகம் கொள்ளாத   ஏதோ ஒன்று வழிந்தது.                                                                உனக்குத்தெரியுமா நீ  இங்கயே  குழந்தை  டெலிவர்  செய்யலாம்.  நீ மதுரைக்குப் போகணும்கற      வேலையே வேண்டாம்  என்று ஆரம்பித்ததும் ....ஆஹா  கொஞ்சம் கிடைக்கிற லீவும் போய்விடும் போல இருக்கே. குழந்தை வளர்ப்புல       அ ஆவன்னா கூடத் தெரியாது அதனாலென்ன    இவர் உதவி இருந்தால் வேற  யாரும் வேண்டாம்                           என்றேல்லாம் நினைவுகள்      ஓட ஆரம்பித்தன. ஒரு செப்டம்பர்     முதல் வாரம் சிங்கத்தின் சிநேகிதரின்  ஃபியட் வண்டியில்  மதுரைக்குக் கிளம்பினோம்.           

Saturday, April 12, 2014

ஏரிக்கரையின் மேலே வசந்தம் வரக் காத்திருந்தேன்..

மிதமான அலைகள் மழைக்காகக் காத்திருக்கின்றன.

எதிர்  சாளரம் வழியே வரும்  ஆதவன் கிரணங்கள் பாவையை ஆடவைக்கின்றன.
நீலவானமும் வெயிலும்    எனக்கு ஆதாரம்
மஞ்சள் வெயிலைத் தன்னுள் வாங்கிய மரம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பனி    உருகி     தண்ணீர் ஆனதே  வெயில் இருந்தும் குளிர் விடவில்லை

Tuesday, April 08, 2014

ஸ்ரீராம நாம சரணம்

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்                                                                                                                                                                                                                                                    ஸ்ரீராமநாம  சரணம்   பட்டாபி  ராம சரணம்                                                                                  ராமநாம சரணம்    தசரத புத்திர   ராம  சரணம்                                                                            ராமநாம சரணம்   கௌசல்ய  சுத நாம சரணம்                                                                      ராமநாம சரணம் சீதா மனோஹர சரணம்                                                                                       ராமநாம சரணம்    ஹனுமந்த ஹிருதய           சரணம்                                                              ராமநாம சரணம்    அயோத்ய அரசே சரணம்                                                         ராமநாம சரணம்       .                                                                                                                 அயோத்தி வாழ,அரசன் வாழ ,அரச புத்திரர் வாழ நாமும் வாழ்வோம்.    நரசிம்ஹன் அடிபணிந்து ஸ்ரீராமனைத் தொழுகிறேன்
Add caption
                                                             

Thursday, April 03, 2014

தலைதீபாவளியும் மகன் பிறப்பும் 1966 சில சில் நினைவுகள் 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்                                                                         திருமண்மான  முதல் ஐந்து மாதங்கள்  புதுக் கோட்டையில்   அழகாகச் சென்றன. ஏப்ரிலில் வந்த பிறந்த நாளுக்குத் திருச்சியிலிருந்து  நண்பரிடம் சொல்லி   ஒரு மலர்க்கொத்தும்  அளவான  சாக்கலேட் கேக்கும் வந்தன.  புதுக்கோட்டைக் கடைகளில் வேட்டையாடி   வெகு அழகான பின்க் நிற பனாரஸ் புடவை வாங்கினார்.       அவர் சிநேகிதனும் வர  இரவு பூண்டுரசம் ,உ.கிழங்கு ரோஸ்ட், கொஞ்சம் பாயாசம் என்று விருந்து நிறைவேறியது.           எனக்கோ இதெல்லாம் மிகப் புதிது. அப்பாவீட்டில் கோவிலும் ,புத்தாடையும்   வழக்கம். தம்பியையும் வரச் சொல்லி இருக்கலாமோ என்று நினைத்தேன்.   வந்தே விட்டான் அடுத்த நாள்                                                                      ஏம்மா  நான் நாகப்பட்டணம் போகணும் . இரண்டு நாட்கள் ஆகும் ரங்கனை வரவழைத்துக் கொள்ளலாமா. நீ இந்த நிலமையில் தனியே இருக்க வேண்டாம் என்று  அப்பாவுக்கு தொலைபேசியில் விவரம் தெரிவித்தார்.   தம்பிக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள்  பஸ்ஸில் அப்பா ஏற்றிவிட நாங்கள் இருவரும் போய்ப் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் அவனை  அழைத்துக் கொண்டோம்.ஏய் உனக்காக அம்மா பர்ஃபி,முறுக்கு எல்லாம் கொடுத்திருக்கிறார்.நீ என்ன ஸ்பெஷல்.  எனக்கும் தனியாக வாங்கிவந்தேன் என்னும்  13 வயசுப் பையனைப் பார்த்துச் சிரிப்புதான்  வந்தது.  நாம் எல்லோரும் சாப்பிடத்தான் அம்மா அனுப்பி இருக்காங்கடா  என்று  சொன்னேன்,.   அத்திம்பேர் ரியலி க்ரேட். நான் வொர்க்ஷாப் போய் பார்க்கப் போகிறேன். நானும் இங்கயே இருந்துடட்டுமா. அங்க போரடிக்கிறது  அக்கா  என்றான்.  அடுத்த நாள் சிங்கம் நாகை வேட்டைக்கு க் கிளம்பியது. நாங்கள் இருவரும் இஷடத்துக்குத் தூங்கி சாப்பிட்டு எல்லாம் செய்தோம். அவன் அங்கிருந்த புத்தகங்களைப்  படிக்க ஆரம்பித்தான். அவன் வயதுக்கு மீறிய புத்தகங்களைத் தனியே எடுத்துவைத்தேன்.    கீழ்வீட்டு   லக்சமியின்  வளைகாப்புக்குப் போனோம். அப்போதுதான்   லக்ஷ்மி என்னிடம் சொன்னாள். தம்பி ஊருக்குக் கிளம்பும்போது ஒரு பரிசு வாங்கிக் கொடு. மச்சினன் மரியாதை என்றாள்.     சரி இவர் வந்ததும் செய்யலாம் என்று சனிக்கிழமைக்குக் காத்திருந்தேன்.   வரும்போதே பரிசுகள். வாசனைத்திரவியம், ஒரு சிங்கப்பூர் புடவை, உதட்டுச் சாயம்  இன்னபிற.  அதோடு    தம்பிக்கு டெரிலின்   ஷர்ட்.அவனுக்குப் பிடித்த நீலக்கலரில். அவன் நிலைகொள்ளாமல் தவித்தான்.அவ்வளவு சந்தோஷம்.  ஹேய்      புதிய பறவை சிவாஜி மாதிரி  சட்டை இல்ல என்று ஒரே  குதியாட்டம்.அன்று மதியம்  சாப்பாட்டுக்கு வந்தவர்,மதுரையிலிருந்து என் தந்தை தொலைபேசியதாகவும்   காலை வண்டியில் அனுப்பிவிடுமாறும்  சொல்லி இருந்தார்.                                                       தம்பதிகளின் நெருக்கத்துக்குத் தம்பி இடையூறு என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.  அவனும்  தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. நிறைய ஆர்ச்சி  காமிக்ஸ்களும், அழகாகாக மடிக்கப் பட்ட துணிமணிகளும்,புத்தகங்களும் நான் செய்து கொடுத்த மைசூர்ப்பாகுடன்   ஜாலியாகவே  கிளம்பினான். எனக்குத்தான் பேச ஆளில்லாமல்   கஷ்டமாக இருக்கும் என்று தோன்றியது.                  என் முக வாட்டம் புரிந்து   ,  கொண்டு    ,ஆயிரத்தில் ஒருவன் சினிமாவுக்கு   அழைத்துப் போனார்........வேடிக்கைதான்.அவருக்குத் தமிழ்ப்படங்கள்   அவ்வளாகப் பிடிக்காது.  பிடிக்காது.  எனக்கோ உயிர்.