Blog Archive

Friday, September 20, 2013

1980யில்வீடுகட்ட நினைப்பு....... வீடு கைக்கு வந்தது1985இல்


Add caption
வீடு  அதற்கான  சொந்தங்கள் வருவத்ற்கு முன்னால்:)

vallisimhan
***********
இந்திரா நகர் வீடு எல்லோருக்கும் பிடித்தது.
மாடிவீடு. வீட்டுச் சொந்தக்காரர்கள்  தெலுங்கு  பேசுபவர்கள். அவர்  இந்தியன் ஏர்லைன்சில் பைலட்டக இருந்தார். மனைவியும் குழந்தையும் அம்மா அப்பாவோடு  மிகவும் நெருங்கி விட்டார்கள்.
அம்மாவுக்குப் பிடித்த  பால்கனி. பக்கத்திலேயே ஒரு  தென்னைமரம்.
அதில் விளையாடும் அணில்கள். தூரத்தில் தெரியும் கோட்டுர்புரம்  பாலம்.
பக்கத்துவீட்டில் அப்பாவின் சித்தப்பா  பெண்ணும் கணவரும் அவர்களுடைய பசங்களும்.

இரு  தம்பிகளுக்கும் திருமணம் நடந்தது. ஒரு பெட்ரூம்  ,ஒரு கூடம்,சமையலறை என்று இருந்த வீட்டில்
இன்னோரு படுக்கை அறையும் கட்டிக் கொடுத்தார் அந்த வீட்டுக்காரர்.

குழந்தைகள் பிறந்ததும் வேலையும் கூடியது. களிப்பும் கூடியது.
மூன்று குடும்பத்தின் பீரோக்கள் ,கட்டில்கள்,புத்தக அலமாரிகள், பாத்திரங்கள்,
  இது  போல பல  சமாசாரங்கள் வீட்டை நெருக்க,
அம்மா அப்பாவிற்கு    வேறு வீடு பார்க்கலாம் என்ற யோசனை வந்தது. அது போலவே அவர்களுக்குத் திருவான்மியூரில்
கொஞ்சம் பெரிய வீடு ஹெச் ஐ ஜி  ஃப்ளாட்  கிடைத்தது.

இதன்  நடுவில்  பேரனுக்குப் பள்ளி அமைந்தது.
அத்தோடு எங்கவீட்டுப் பிள்ளையும் அங்கே போய்ச் சேர்ந்தான். அவன் படித்த பள்ளியும் அங்கே இருந்ததால் அப்பா அவன் அங்கே  வந்து படிக்கட்டும் என்று விட்டார்.
தினம் மயிலைக்கும்   இந்திராநகருக்கும் அலைய வேண்டாம் என்று
அங்கு வரவழைத்துக் கொண்டார்.

அப்போது தோன்றிய எண்ணம் தான் நாமே வீடு கட்டிவிடலாம் என்பது.
அது அவ்வளவு சுலபமில்லை  என்று இரண்டு  வருடங்களில் புரிந்தது

இவர்கள் நினைத்தது போல ,கோவில் குளம்,சுத்தமான சூழ்நிலை என்று பார்த்தபோது   இடங்கள் அமையவில்லை. மயிலை மந்தைவெளி அடையார்
என்று தன் பெண் வீட்டுக்குப் பக்கத்தில்   அப்பா தேடுகிறார் என்று தம்பிகள் சிரித்துக் கொண்டார்கள்:)

எப்போதும் தன் பாதுகாப்பு வளையத்தில் குழந்தைகள் இருக்க வேண்டும்
என்பது அப்பாவின்    தியானம்,யோகம் எல்லாம்.

கடைசியாகத் தேடி தேடி மைந்தது  ஒரு வீடு .இல்லை இல்லை இரு வீடுகள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கலசலிங்கம்  கல்லூரியின்

பொறுப்பாளரோ யாரோ  தெரியாது.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதும் அப்பா தீர்மானித்துவிட்டார்.
அவர் கட்டும் ஆனந்த்  கட்டிடங்கள்(அபார்ட்மெண்ட்கள்)  உறுதியாக இருப்பது தெரியவந்தது.

அப்பாவும் தம்பிகளும் உடனேயே போய் இரண்டு வீட்டுக்கான
அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள்.
இரண்டு வீட்டுக்கு  4  லட்சங்கள்தான்    எண்பதுகளில்.
ஒரு நல்ல  நாள் பார்த்துக் கிரகப் பிரவேசம் நடந்தது.

பேத்தி ஹோலி ஏஞ்சல்ஸ்
பேரன் பத்மா சேஷாத்ரி  சேர்த்தாச்சு.
என் பிள்ளையும் இங்கே வீட்டுக்கு வந்தாச்சு.
11த்  &12த்  இரண்டும்  மயிலையிலிருந்து  படித்து முடித்தான்.
என் பெண்ணுக்கும் தாத்தா வீட்டுக்குப் பக்கத்தில் அலுவலகம் வாய்த்தது:)

மதியம் நான் கொடுத்த லன்ச் பெட்டியைநண்பர்களுக்குக் கொடுத்துவிட்டுப் பாட்டி  கை குழம்புசாதம் சாப்பிடப் போய்விடுவாள்.
எங்க வீட்டுச் சின்னவன் சனி ஞாயிறு  வீடியோப் படங்கள் பார்க்கத் தாத்தா வீட்டுக்குப் போய்விடுவான். பெரியவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு
பக்கத்திலிருக்கும் தோழர்களைப் பர்த்துவிட்டுத் தாத்தாவையும்பாட்டியையும் பார்த்து விட்டு வருவான்.

ஆகக் கூடி   சுபமாக வீடு தேடல் முடிந்து நல்ல விசேஷங்களும்
நடந்தன.

எல்லாம்  சுபம்.மங்களம்.





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எண்பதுகளில் இரண்டு வீட்டுக்கு 4 லட்சங்கள்தான்... ...ம்... இன்றைக்கு நினைத்தால்.....

இராஜராஜேஸ்வரி said...

எப்போதும் தன் பாதுகாப்பு வளையத்தில் குழந்தைகள் இருக்க வேண்டும்
என்பது அப்பாவின் தியானம்,யோகம் எல்லாம்.

நினைத்த மாதிரி அமைந்தது
இறைவன் திருவருள்..!

துளசி கோபால் said...

சட்னு முடிச்சுட்டீங்களே:(

ரெண்டு வீட்டுக்கும் அட்வான்ஸ் நாலே லட்சமா!!!!!

அந்த ரெண்டு வீடுகள் எனக்குத் தெரிஞ்ச இடமா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன்.
அப்போது 500+500 இரண்ட் அபார்ட்மெண்டும் சேர்த்து 4 லக்ஷம்.
இப்போது அங்கே ஒரு அபார்ட்மெண்ட் 17 லட்சம்:)

வல்லிசிம்ஹன் said...

உண்மை இராஜராஜேஸ்வரி.
எங்கள் தந்தை தாய்,மாமனார் மாமியாரின் அருளில் தான் நாங்கள் வாழ்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா துளசி.
மேலே எழுத ஆரம்பித்தால் புலம்பத் தோன்றும்.
வரலாறு சுகமாகப் போகையில் நிறுத்த வேண்டும் கதையை.:)

உங்களுக்குத் தெரிந்த இடம்தான். இப்போது இரண்டும் சாமான் செட்டோடு தான் இருக்கின்றன.இரு வீட்டுக்காரர்களும் வேறு வீடுகளும் வாங்கிவிட்டார்கள்.முதலில் வாங்கிய வீடு என்பதால் யாருக்கும் விற்கவில்லை.

சாந்தி மாரியப்பன் said...

சுகமான வரலாறு..

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மும்பையிலும் 525 ரெண்டேகால் லட்சத்திற்குக் கிடைச்சது. இப்போ..... ஒண்ணும் கேக்காதீங்க :-))))

ADHI VENKAT said...

இனிமையான நினைவுகள். இப்போ வீடு வாங்குவதானால் .....

Geetha Sambasivam said...

சென்னையில் எந்த இடம் அது? நாலு லக்ஷம் என்பது அந்தக் கால கட்டத்தில் பெரிய தொகைதான். நாங்களும் எண்பதில் இடம் வாங்கினோம். அப்போலேருந்து கட்ட ஏற்பாடு பண்ணி, பண்ணி, ஒருவழியா 82 இல் லோன் சாங்க்‌ஷன் ஆகி வீடு கட்ட ஆரம்பிச்சு 83 இல் கிரஹப்ரவேசம் பண்ணினோம். எல்லாம் இப்போ கதை தான்! :))) கொசு வத்தி சுத்தலாம்.

ராமலக்ஷ்மி said...

அன்பு வளையங்கள். இனிய நினைவுகள்! ஃப்ளாட் விலைகள் இப்போது கோடிகளில்.

தி.தமிழ் இளங்கோ said...

// எல்லாம் சுபம்.மங்களம். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் //

வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா கேட்க முடியுமா சாரல்:)
அந்த வீட்டுக்கு அந்தவிலை 20 வருஷப் பழையது என்பதால்னு கேள்வி. உண்மை விலை என்ன்னவோ!!சிடி செண்டர்:)மும்பை விலையெல்லாம் கோடியில் தானே ஆரம்பிக்கும்!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதி. இப்ப வீடுவாங்குவதானால் விழுப்புரத்தில் வாங்கலாம்:)

வல்லிசிம்ஹன் said...

தி.நகர்தான் கீதாமா.அப்பவும் பாங்க் லோன் வாங்கிதான் கட்டினார்கள்.ஒரு வருஷம் ஆச்சு.
அப்பா எத்தனை தடவை அலைந்தாரோ தெரியாது பாவம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி. எல்லோர் வீட்டிலும் இருக்கும் இந்த வளையங்கள் தன் நம்மைப் பலப் படுத்துகின்றன.
ஆனால் நம்மால் அவர்களுக்கு
அன்பையும் அக்கறையையும் காட்ட இறைவன் நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தமிழ் இளங்கோ பலவித சிரமங்களைக் கடந்து சுபமாகக் கிரஹப் பிரவேசம் செய்தார்கள்.
ஆனால் சிரமப் படாமல் எதுவுமே கிடைக்காது இல்லையா. நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

விழுப்புரம் கூட விலை கூடி விட்டதும்மா.....

தில்லியில் கூட தொண்ணூறுகளில் நகரின் ஓரத்தில் ஐந்து லட்சத்திற்கு வீடுகள் கிடைத்தன. இப்போது மூச்.... பக்கத்தில் போக முடியாது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். வெங்கட்.
இருக்கும் செழிப்பான விளைநிலங்களை வீட்டாக்கிக் கொண்டு வருகிறார்கள். அங்கே பரிக்கல் என்று ஸ்ரீ நிருசிம்ஹர் தலம் இருக்கிறது. அதைச் சுற்றி வயல் வெளீகளும் ஒரு வீதி நிறைய வீடுகளுமாக இருந்தது.
இப்போது.... அந்த நகர் இந்த நகர் எல்லாம் கூறு போட்டு வைத்திருக்கிறார்கள். நீங்கள் கூறுவது உண்மையே.

Unknown said...

சும்மாவா சொன்னார்கள், வீட்டை கட்டி பார்.... கல்யாணம் பண்ணி பார் என்று ! அந்த வீட்டில் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள் !

வல்லிசிம்ஹன் said...

நன்றி திரு சுரேஷ் குமார். இது 20 வருடக் கதை.

எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்து முடிந்த்துவிட்டது. அவர்களின் முயற்சியின் தாஜ்மஹாலாக அந்த வீடுகள் போற்றப்பட்டு வருகின்றன.

மாதேவி said...

இனிய இல்லம் கிடைக்க கொடுப்பினை வேண்டும். நலமுடன் வாழ்க!

கோமதி அரசு said...

அருமையான மலரும் நினைவுகள்.
அப்பா, அம்மா. பக்கத்தில் குழந்தைகள் தாத்தா, பாட்டியின் கவனிப்பில் கேட்க படிக்க சுகமாய் இருக்கிறது.
மாதேவி சொல்வது போல் இனிய இல்லம் கிடைக்க கொடுப்பினை வேண்டும் உண்மை.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே சிறிய வீடாக இருந்தாலும் அவர்கள் இஷ்டப்படி இருந்தது.அனைவரின் வாழ்க்கையிலும் முன்னேற்றம் கண்டார்கள்.
நன்றி மாதேவி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,கல்வி கற்பதில் மிக மும்முரம் காட்டுவார்கள் என் பெற்றோர். கண்டிப்பு கூட.கூடவே இருந்த வீட்டுப்பாடம் எழுதவைத்து சப்பாடு ஊட்டி இருவரும் பார்த்துக் கொள்வார்கள்.நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.