Blog Archive

Saturday, August 03, 2013

அன்னையின் அருளே வாவாவா ஆடிப்பெருக்கே வாவாவா

தலைக்காவேரி
Add caption
Add caption
ஸ்ரீபாலா திருபுரசுந்தரி, நெம்மேலி


 இயற்கை அன்னை  கருணை புரிந்தாள்.
தன் புகுந்த வீட்டுக்குக் கொண்டு தரவேண்டிய
அத்தனை வளங்களையும் அன்னை காவிரி 
அள்ளிவரும்படி  இறைவன் மழை பெய்வித்தான்.
உச்சநீதிமன்றமே அவன்தானே.

நம்வீடு தேடிவரும் மருமகளுக்கு  சித்ரான்னம் படைத்து மங்கலப் பொருட்களைச் சமர்ப்பித்து   நாமும் வளம் பெறுவோம்.
என்றும் நடப்பாய் வாழி காவேரி.
தாயே உன் தாள் சரண்.

அண்மையில் பேத்தி  சாக்லேட்டும் பிஸ்கட்டும் கொண்டுபோய்த் தாய் ஸ்ரீ பாலாவைத் தரிசனம் செய்துவந்தாள்.
அன்னையின் அருள் அனைவரையும் அணைக்கட்டும்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

16 comments:

இராஜராஜேஸ்வரி said...

என்றும் நடப்பாய் வாழி காவேரி.
தாயே உன் தாள் சரண்.

அன்னையின் அருள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி,நMஆஸ்காரம். உங்கள் அளவு யார் கோவில்களைப் பற்றிச் சொல்லப் போகிறார்கள். வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். திண்டுக்கல்லைப் பற்றி நினைக்கும்போது தண்ணீர்ப் பிரச்னை தான் நினைவுக்கு வருகிறது. இப்பொழுது சிறிதாவது முன்னேறி இருக்கவேண்டும். அன்னையினபிராமியின் அருள் மிக வேண்டும்.

Geetha Sambasivam said...

போகப்போகிறேன் காவிரியைப் பார்க்க. :)))) முந்தாநாள் வேறொரு வேலைக்காக அம்மா மண்டபம்போனப்போவே இரு கரையும் நிரம்பி ஓடினாள். அப்போ காமிராவை எடுத்துப் போக முடியாத நிலை. இன்னிக்குத் தயாரா இருக்கேன். நம்ம ஊர் சுத்திப் பெருமாள், ஹிஹிஹி, நம்ம நம்பெருமாள் பக்கத்து மண்டகப்படிக்கு வரப் போறார். அவர் வந்ததும் போகணும். :))))))

வல்லிசிம்ஹன் said...

கீதா ஆடிபதினெட்டு வாழ்த்துகள்.
வந்துவிட்டாளா காவேரி:))))))
ஒரு பத்துப் படமாவது போடவேண்டும். சீக்கிரம் போங்கோ. கூட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் படம் எடுக்கவும்.

வெங்கட் நாகராஜ் said...

ஆடிப்பெருக்கு....

அனைவருக்கும் வாழ்த்துகள்....

படங்கள் நன்று

ஸ்ரீராம். said...

பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் நிஜமாகவே ' ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவேரி ' தான்! சிறப்பான ஆடிப்பெருக்கு!

சென்னை பித்தன் said...

ஆடிப்பெருக்குச் சிறப்புப்பகிர்வு அருமை

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆடிபதினெட்டு வாழ்த்துகள் வெங்கட் மா.

sury siva said...

ஆடி வரின் நம் நினைவே ஆடிப்பெருக்குதானே
ஆடி பாடி மகிழ்வதுமே அக் காவிரிக் கரையில் தானே = நம்

கண்ணீரால் நனைந்திட்ட காவிரி ஆறு இன்று
தண்ணீரால் பெருகி ஓடும் காட்சி என்னே

எல்லாமே அவள் அருள்.
அன்னை அகிலாண்டேஸ்வரி பூசிக்கும்
அப்பு லிங்கம் அருள்.

சுப்பு தாத்தா.
சென்னை.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மனம் எவ்வளவு சந்தோஷப் படுகிறது ஸ்ரீராம். நிலம் குளிர,விவசாயிகளின் மனம் குளிர வந்துவிட்டாள் காவேரி அம்மா.
எல்லாநலன்களும் பெருகட்டும் மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் திரு சென்னைப் பித்தன்.நன்றி. எல்லோருக்கும் நலன் பிறக்கட்டும்.

சாந்தி மாரியப்பன் said...

ஆடியில் பெருக்கெடுக்கும் காவிரிபோல் எல்லா மங்கலங்களும் பெருகட்டும்.

//உச்சநீதிமன்றமே அவன்தானே.//

இதுக்கு அப்பீலே இல்லைம்மா :-)

ராமலக்ஷ்மி said...

அழகான பகிர்வு. வருணன் பொழிய பூமி குளிர பெருக்கெடுத்து ஓடும் காவேரியைக் கண்டு எல்லோருக்கும் ஆனந்தம். வாழ்த்துகள் வல்லிம்மா.

மாதேவி said...

ஆடிவரும் காவேரி படங்கள் மகிழ்ச்சி தருகின்றன.