Blog Archive

Tuesday, April 23, 2013

நேயர் விருப்பம் ....கதையுடன்(நிஜ சம்பவந்தான்)

Add caption
தாத்தாவை  மிஞ்சி ஓடும்  பாப்பா
Add caption
Add caption
Add caption
Add caption

Add caption
Add caption

 இந்தப் பதிவுடன் சம்பந்தப்   பட்ட    கதை ஒன்று அவசியமாகிவிட்டது:0)

ஏதோ நம்மையே நாம் ரொம்பத் தாழ்த்திக் கொள்ளுகிறோமே
என்று பார்த்தேன். போனால் போகிறது.
சொல்லிவிடுகிறேன்.

ஸ்ரீராம்   ......படித்துப்  பயனடையுங்கள்:)
***************************************

அந்தத் தம்பதிகள்  சம்பவம் இரண்டு நாட்களுக்கு கலகலத்தது..

மேலே  இருக்கும்  ஜெர்மானிய ரயில் நிலையத்துக்கு ஒரு நாள் போய்வந்து எங்கள்   விடுமுறை வாசஸ்தலத்துக்குக் கிளம்பினோம்.

பாசல் நகர ரயில்வேஸ்டேஷன்பெரியதாக இருந்தாலும் அழகாக இருக்கும். சுத்தம்,நேரம்  எல்லாம் ஒழுங்காக் கடைப் பிடிக்கப் படும்.
பிரயாணம் இரண்டு ரயில் ஏறிப் போகவேண்டும்.
எனக்கோ ரயில் கிளம்ப ஒரு மணி நேரத்துக்கு முன்னால் அங்கே இருந்தால் தான் பாட்டில் போடு]ம்.
ஆறு பெரியவர்கள் குளித்து, சாத மூட்டைகள், குழந்தைக்கான உணவு, ஸ்னாக்ஸ்,தண்ணீர் பாட்டில்கள்  ,மூன்று நாட்களுக்கான் துணிமணிகள்,ஸ்வெட்டர் ,கோட்  எல்லாம் எடுத்துக் கிளம்பும்போது மணி 10.
10.20க்கு  ரயில் புறப்பட்டு விடும்.
எல்லோரும் அவசரமாக ட்ராம் ஸ்டேஷனை அடைந்து அங்கு வண்டியைப் பித்துப் பின் ரயில் நிலையத்தை அடைந்தோம்..
எஸ்கலேட்டர் ஏறி  மேலே போய் அங்கிருந்து சரியான ப்ளாட்ஃபார்முக்கு வரவேண்டும்.

குழந்தையும் ,மருமகளும் அவளது பெற்றோரும் முதலில்  சென்றுவிட்டார்கள். சிங்கத்துக்கு நான்  வேற ப்ளாட்ஃபார்முக்குப் போய்விடப் போகிறேன் என்று பயம்.
வாம்மா.சீக்கிரம்.  என்று மிரட்டினார்.
நானோ ஊருக்குப் போவதற்கு(சென்னையில்)  விழுந்து  கால்சுளுக்கியிருந்தேன்.:)
அஸ் யூஷுவல்!!!

தோவரேன் தோவரேன்  என்று சென்றவளை,
யாரோ ஹை ஆண்ட்டி  என்று கூப்பிட்டும் குரல் கேட்டது.
மீதி அடுத்த பதிவில். ஓகேயா ஸ்ரீராம்?   



 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

29 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கண்ணைக்கவரும் வெகு அழகான படங்கள். பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான படங்கள்.பாராட்டுக்கள்.

துளசி கோபால் said...

அழகு!! அழகு! அழகு!!!!

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான படங்கள்.

ஸ்ரீராம். said...

அழகிய படங்கள் மட்டும்தானா? பகிர, பழைய சம்பவம் ஏதுமில்லையா?

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான படங்கள்... தொடர வாழ்த்துக்கள்...

sury siva said...

superb photos

u cd have events that sported the situations also

subbu thatha.
www.subbuthatha.blogspot.in

வல்லிசிம்ஹன் said...

வண்ம் கோபுசார்.
படங்கள் சேர்த்த பிறகு ஒரு சம்பவமும் சேர்ந்துவிட்டது. அதை நீங்கள் நாளை படிக்கலாம்:)

வல்லிசிம்ஹன் said...

நம் ஸ்ரீராம்(எங்கள் ப்ளாக்)படம் போறாது. கதையும் வேண்டும் என்று கேட்டதால் பாதிக்கதை சேர்த்திருக்கிறேன் ராஜேஸ்வரி. நாளை படித்துவிட்டுச் சொல்லுங்கள்.:)
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்று. நன்றி நன்றி துளசி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, ஏற்கனவே பதிவேறியவைதான். பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். பாதிச் சம்பவம் அச்சில் கோர்த்தாச்சு.
மீதிச் சம்பவம் சீக்கிரமே வரும் ஸ்ரீராம்.
இது சார் யாரு சம்பவம்:)

வல்லிசிம்ஹன் said...

தொடரத்தான் போகிறேன் தனபாலன்:)
சீக்கிரம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார். சம்பவங்கள் உண்டு. பாதி இந்தப் பதிவிலேயே பதிந்திருக்கிறேன். நகைச்சுவை சீக்கிரம் வரும்:)

Geetha Sambasivam said...

//எஸ்கலேட்டர் ஏறி மேலே போய் அங்கிருந்து சரியான ப்ளாட்ஃபார்முக்கு வரவேண்டும்.//


தைரியசாலிதான் நீங்க. எஸ்கலேட்டரிலே ஏறிப் போறீங்கன்னா உங்களை நூறு முறை வலம் வந்து கும்பிடணும். :)))))))

Geetha Sambasivam said...

படிச்சிருக்கேனோ???????????

அப்பாதுரை said...

சஸ்பென்சா?

வல்லிசிம்ஹன் said...

எங்கயாவது எழுதி இருப்பேன் கீதா.
இதையே எழுதினேனா ஞாபகம் இல்ல.:)
ஸ்விஸ் ல படிகளும் எஸ்கலேட்டர்களும் எல்லா இடத்திலும்.
முன்னால் இவரும் கீழ்ப்படியில் பையரும் நின்று கொள்வார்கள். என்ன செய்கிறது.

வல்லிசிம்ஹன் said...

இல்லை துரை

சஸ்பென்ஸ் இல்லை.
அவசரமாக வெளியில் கிளம்பவேண்டிய வேலை வந்து விட்டது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படங்கள். கூடவே உங்கள் அனுபவக் கதையும்.....

தொடருங்கள்.

ஸ்ரீராம். said...

அடடா.... பின்பாதியை முதலில் படித்து விட்டு அப்புறம் முன்பாதிக்கு வந்திருக்கேன்.... என் பெயர் வேற இருக்கு... நன்றிம்மா...

Anonymous said...

அடுத்த பதிவையும் படிச்சிடடுதான் பதில் போடுவோம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.ஒவ்வொரு நாளும் யாராவது எங்களைப் பார்க்க வருவார்கள். பையன் முன்னாலயே சொல்லிடுவான்.
வரப்போகிறவன் லவ் மாரியேஜ் மா.
நீ பாட்டுக்கு ஏதாவது கேட்டுடாதேன்னு எச்சரிக்கை செய்வான்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம் .

இதயம் நல்லெண்ணெய்ல வரமாதிரி எவெரிடே ஜாலிடே தான்:)
உங்களுக்காகத்தான் எழுதினேன். இல்லாட்டா அசட்டுத் தம்பட்டம் யாராவது அடிப்பார்களா.:))

வல்லிசிம்ஹன் said...

சரி பாண்டியன். உங்கள் கருத்துக்குக் காத்திருக்கிறேன்.:)

ADHI VENKAT said...

படங்கள் வெகுவே அழகு..

என்ன சம்பவமோ! காத்திருக்கிறேன்.

எஸ்கலேட்டர் பயம் எனக்கு இப்போ தான் விட்டிருக்கு....:))

வல்லிசிம்ஹன் said...

ஒன்றும் பெரிய சம்பவம் எல்லாம் இல்லம்மா ஆதி. வல்லிம்மா செய்கிற குளறுபடிகள்தான்:)

கோமதி அரசு said...

நானும் ஸ்ரீராம் போல் பின் பாதியை படித்து விட்டு முன் பாதிக்கு வந்து இருக்கிறேன்.படங்கள் , பகிர்வு எல்லாம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அதனால் என்ன கோமதி,எப்படியோ
படிச்சுச் சிரிக்க முடிந்தால் சரிதான் கோமதிமா.