Blog Archive

Monday, April 22, 2013

சிரிப்புதான் வருகுதையா சிலமனிதரைக் கண்டால் 2008 ஸ்விஸ் பயணத்தில் ஒருநாள்

வெள்ளமே   எங்களை மகிழ்விக்க வாராயோ
கோடைக்கு ஏற்ற விளையாட்டுத் திடல்
ஒற்றுமையாக இருக்கத்தான் இந்தக் கொடி
ஒரு பண்ணைவீடு
அம்மம்ம்மா   குளிர்






Friday, July 25, 2008

சுவிட்சர்லாந்து வந்தோம்தோம்.

பசுமை,பசுமை,பசுமை. சூரிக் விமான நிலையத்தில் இறங்கினதும் மனதுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது,.
 அந்த அழகும் நேர்த்தியும் அமைதியான

வரவேற்பும் எப்போதும் போல இதமாக இருந்தது.

மகன் சொன்னபடி இமிக்ரேஷனில் வாயடிக்காமல் வெளியில் வந்தேன்.
அங்கேயிருந்த பெண்தான், இப்பத்தானே போனீங்க அதுக்குள்ள இன்னோரு பயணமான்னு கேட்டாள்.

என்னம்மா செய்யறது அழைத்த குரலுக்கு ஓட நினைக்கிறோம்.
 முடிந்த வரை

செய்வோம்னு சிரித்தேன்.

எனக்கும் இப்படிப் பெற்றொர் கிடைத்தால் தேவலை என்றாள்.

மகனிடம் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறான்.
அவங்க எல்லாம் பேச மாட்டேங்களே.
சும்மா சொல்றியாம்மான்னு கேக்கறான்.:)

நமக்குத்தான் கண்காது மூக்கு வைக்கும்
பேர்வழின்னு பட்டம் கட்டி இருக்காங்களே:)

நிசத்தைச் சொன்னாக்கூட நம்ப மாட்டேங்கறாங்க.

வழக்கம்போல்(சதங்காவைச் சொல்லலைப்பா)

பாசல் வண்டியைப் பிடித்துப் பொட்டிகளை ஏற்றி வந்த காப்பியையும்
 ருசித்து, நலம் விசாரித்து முடிப்பதற்குள் வீடும் வந்துவிட்டது.

மழை உண்டாடாப்பான்னு கேட்டுக் கொண்டேன்.
 ஏன்ன்னா இவங்க ஊரில மணிக்கு மணி அறிவிப்பு இருக்கும்.
தூறல்னா தூறல். இடின்னா இடி. வெறும் மேக மூட்டம்னா அதே.

நம்ம கவலை நமக்கு:))

. அவனும் போன வாரம் உலகைக் கலக்கிற இடி இடிச்சதும்மா.
 இந்த வாரம் அவ்வளவு இல்லை. வருவதற்கு முன்னால் நீங்க கிளம்பிடுவீங்க என்றான்.

அவன் வீட்டில் ஏற்கனவே விருந்தாளிங்க வந்திருந்தார்கள்.
எல்லாருமா இட நெருக்கடியோடு இருக்க வேண்டாம்னு
 வேற ஒரு மலையடிவாரக் கிராமத்தில் ஒரு விடுதியில் சமைத்துச் சாப்பிடுகிற வசதியோடு

இடம் ரிசர்வ் செய்திருந்தான்.

அடுத்த நாள் அங்கே போகலாம்னு முடிவு.
அதுக்கு முன்னால் உனக்கு ஏதாவது வாங்கணும்னா டவுனுக்குப் போகலாம்னு
 சொன்னதும் ஆஹா அதுக்கென்ன போலாமேன்னு கிளம்பிட்டேன்.

மனசுக்குத்தான் வயசாகலை. உடம்பு அப்படியில்லையே:)

அதைத் தெரிஞ்சு கொண்டால் பிரச்சினையே வராது!!!

கொஞ்ச நேரம் பேத்தியோடு கொஞ்சிவிட்டு ,
ஒரு குட்டித் தூக்கம். ஒரு நல்ல காப்பி ,டவுனுக்குப் புறப்பட்டோம்.
சும்மா காலாற நடந்துவிட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த ரைன் நதியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு,
பேருக்கு இரண்டு கம்பளி சாக்ஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப எட்டாம் நம்பர் டிராமில் ஏறினோம்.
 வார நாளாக இருந்ததால் நிறைய கூட்டம் இல்லை.

இருந்தும் வெய்யில் அடிக்காத பக்கமாகப் பார்த்து நாங்கள் மூவரும் இடம்

பிடித்து உட்காரப் போன போது:)

டிராம் ப்ரேக் போட்டது.

ஒரே ஒரு குலுக்கல் அடுத்த நிமிடம் நான் எதிர் சிட்டில் இருந்த ஒரு (ஏதோ ஊர்காரர்) ஆளின் தலையைப் பிடித்துவிட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அவர் அலறவில்லை. அப்படியே பிரமித்துப் போய் விட்டார்.

கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நின்ற போது
 யதேச்சையாகத் திரும்பினால் மகன் முகம் சிவந்து போயிருப்பது தெரிந்தது.

ஒன்றும் யூகிக்க முடியாமல் நான் விழ இருந்த ஆளின் தலையைத் தட்டி வெரி வெரி சாரி
என்று இரண்டு மூன்று தரம் சொன்னாலும் ஒரே விரைப்பாப் பார்த்தார்.

அப்படியே பத்ரமாக உட்கார்ந்து மீண்டும்மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

ம்ஹூம் அவருக்கு கோபம் தணியவே இல்லை.

இதென்னடா கஷ்டகாலம் என்று அவர் பக்கம் இருந்த அம்மாவைப் பார்த்தால்
அதுக்கு மேல் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது அவள் முகத்தில்!!

அடுத்த நிறுத்தம் வருவதற்குள் இருவரும் எழுந்து அதே விரைப்போடு

மார்ச் செய்து இறங்கி விட்டார்கள்.

அவர்களுக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த இன்னோரு அம்மா,

என்னை இன்னும் விரோதமாகப் பார்த்தவுடன்
எங்கிருந்தோ வந்த சிரிப்பு என்னைப் பிடித்துக் கொண்டது.

என் மகனுக்கும் அது தொற்றிக்கொண்டது.

ஏம்மா விழப் பார்த்தால் அவர் தலையை ஏம்மா பிடிக்கறே.

தே டூ நாட் லைக் எனி ஒன் டச்சிங் தெம் என்றானே பார்க்கலாம்.

அதுக்கு மேல குழந்தையைத் தட்டற மாதிரி

அவர் தலையை வேற தட்டறே.

மோசம்பா இந்த அம்மா.

பெரிய வைத்தியம் செய்யற நினைப்பு.'' என்று முகத்தைப் பிடித்துக்கொண்டு

சிரிக்கிறான்.

தீர்ந்தது.கதை கந்தல்.நம்மளை இன்னிக்கு
 நல்ல போஸ்ட் மார்ட்டம் செய்யப் போறாங்க வீட்டுக்குப் போனதும்
 இன்னும் மருமகள்,பேத்தி, சம்பந்திகள் எல்லாம் விழுந்து விழுந்து
 சிரிக்கும் வரை இவங்களுக்கு அவல் கிடைத்ததே என்று
என் தலை எழுத்தை நொந்து கொண்டே இறங்கி வந்தேன்:))

இன்னும் பேத்தி ஒண்ணுதான் பாக்கி.
''பாட்டி என் கையைப் பிடிச்சுண்டு வான்னு '' சொல்லப் போகிறா. ஹூம்.........

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

27 comments:

வல்லிசிம்ஹன் said...

இது ஒரு மீள் பதிவு.எனக்கே கொஞ்சம் சிரித்தால் தேவலை என்று தோன்றியதால் மீண்டும் பதிகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல படங்கள் அம்மா...

ரசனையான சேட்டைகள்...

துளசி கோபால் said...

நானும் நல்லாச் சிரிச்சேன் இன்னொருக்கா:-)))))))

எனக்கு எப்பவாவது மனசு டல்லா இருந்தால்.... பயப்ராந்தியும் விஸ்கியும் கையில் எடுப்பேன்:-))))

Geetha Sambasivam said...

ஏற்கெனவே நல்லாச் சிரிச்சாச்சு, இருந்தாலும் மீண்டும் கற்பனை பண்ணிப் பார்த்துட்டுச் சிரிச்சேன். :)))))

ஸாதிகா said...

நன்றாக ரசித்து சிரிக்கவச்சுட்டீங்கம்மா.

ADHI VENKAT said...

படங்களும், ரகளையும் என அனைத்தையும் ரசித்தேன்...:)

ஸ்ரீராம். said...

ஹா.... ஹா... இதெல்லாம் வேற கட்டுப்பாடா... கஷ்டம்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். சேட்டையா!! ஆக்ஸிடெண்ட் பா.;)சரியான முசுடுகள்.!!!

வல்லிசிம்ஹன் said...

ம்ம்ம்ம்.படிப்பீங்க் படிப்பீங்க.:)

சரியான வேளைதான் அன்னிக்கு உங்களுக்கு.!!!!

வல்லிசிம்ஹன் said...

இல்லை கீதா.

இதே நான் அவர் மேலயே விழுந்திருந்தால் அவர் நிலைமை என்ன ஆகியிருக்கும். பாவம் பிழைத்தார்,:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸாதிகா.முதலில் ரொம்பப் பயமாக இருந்தது.
பிறகு சிறுபிள்ளைபோலச் சிரிப்புதான் வந்தது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி வெகு நாட்களாக உங்கள் பதிவுகளையே
வந்து பார்க்கவில்லை.நலமா மா.
எங்கள் பையன் நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தான்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
அதுவும் என்னைப் போல கொஞ்சம் கன சரீரம் கொண்டவர்களுக்குக் கவனம் அதிகம் தேவை.
மகன் லேடி தங்கவேலு என்பான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரஸித்தேன். சிரித்தேன். பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபு சார்.

பழைய பொக்கிஷம் இது:)

இராஜராஜேஸ்வரி said...

நிசத்தைச் சொன்னாக்கூட நம்ப மாட்டேங்கறாங்க.

பழைய பொக்கிஷம் அருமை ..

நிசத்தைச்சொன்னால்தான் நம்பமாட்டார்கள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜேஸ்வரி,
தந்தையும் மகனும் அவர்கள் பேச்சில் என்னை மறந்துவிடுவார்கள்.
ஏற்கனவே துர்க்குணி இப்பவேற கர்ப்பிணின்னு சொல்கிறமாதிரி
நம் உடல் நம்வசத்தில் இல்லை என்றால் இது போன்ற இடைஞ்சல்கள் என்னால் நிறைய ஏற்படும்:)
நிறைய சம்பவங்கள் உண்டு. புத்தகம் போடலாமா;)
நன்றி மா.

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. வாசித்திருக்கிறேன் முன்னரே. இரசித்தேன் மறுபடி:)!

Anonymous said...

என்னா வேணும்னா தொட்டாங்க? தெரியாம தடுமாறுவது கூடவா புரியாது? அவனுக கலாச்சாரத்தைத் தூக்கி கடல்ல கரைக்க சொல்லுங்க.

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு.
சிரிப்பாய் இருந்தாலும் அன்று கொஞ்சம் மனகஷ்டம் அடைந்து இருப்பீர்கள்.

அப்பாதுரை said...

சின்னச் சின்ன கிறுக்குத்தனங்கள் நிரந்தர சந்தோஷங்கள்.
spectacular photos!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,

மீள் வருகைக்கும் ரசிப்புக்கும்நன்றிமா.பிகாசாவைத் திருத்தி அமைத்துக் கொண்டிருந்தேன். இந்த சம்பவம் மகன் நினைவூட்ட மீண்டும் பதிந்தேன்.:)

வல்லிசிம்ஹன் said...

நாமும் உயர்ந்தவர்கள் தான். அவர்களுக்கும் தெரியும் பாண்டியன்.
தோல் வேறல்லவா. இதுவே வேறு வெள்ளைமாது(பாட்டி) விழுந்திருந்தால் கை கொடுத்துத் தூக்கிவிட்டிருப்பார்கள்:)
போனால் போகட்டும். அங்கே நம் அன்னக் கொடி நிறைய இடங்களில் பறக்கிறது.அந்த உணவகங்களில் சாப்பிடவே நிறைய நபர்கள் வருகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். கொஞ்சம் வருத்தம் இருந்தது.
பிறகு காமெடி வென்றுவிட்டது:)
என் தலையை யாராவது பிடித்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்தேன் அது இன்னும் பயங்கரமாக இருந்தது;)

வாழ்கவளமுடன் கோமதி.

வல்லிசிம்ஹன் said...

கரெக்ட். துரை.
கிறுக்குத்தனம்தான். வேணும்னு செய்யலை:)

அவர் தலையைத் தட்டி இருக்கவேண்டாம்.
பொண்டாட்டி அம்மாவுக்குத் தாங்கவில்லை:)

ஸ்விஸ்ஸில் எடுக்கும் எந்தப் படமும் எக்ஸ்ட்ராடினரியாகத்தான் இருக்கும்!!கொடுத்தவைத்த மக்கள்.

Ranjani Narayanan said...

ஹா...ஹா.... நல்ல வேலை பண்ணினீங்க!
நினைத்து நினைத்து சிரிக்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

மீள் பதிவு...

நான் முதல் முறை படிக்கிறேம்மா....

சிரித்தேன்.... ரசித்தேன்.... :)