Blog Archive

Tuesday, March 05, 2013

பாஸ்கரனின் அம்மா'''எழுதியவர் பிரேமாகிருஷ்ணமூர்த்தி

G
 இது  புதுவிதமான  ஆனாலும் பழைய கருத்து கொண்ட கதை.
சீதா  ,அவளுக்குத்    நடந்து,கணவனின்  துர்க்குணங்களை அனுசரித்து   வாழ்வு நடத்தும்போது  குழந்தை  தரிக்கிறாள்.
  பிறக்கும் போது  சீதாவின்  நரம்புகள் பாதிக்கப் பட்ட நிலையில் பிறந்த குழந்தையும் இறந்துவிடுகிறது.

ஹிஸ்டீரியா வியாதி தாக்குகிறது.

  உடல் ரீதியாகப் பாதிக்கப் பட்டபோது,அவள் கணவனுக்கு அவளை ஒதுக்கிவிடத் தோன்றி  வாரணாசிபாளையத்திலேயே   கொண்டுவந்து விட்டுவிடுகிறான்.
சிலமாதங்களில் முழுக் குணம் அடைந்தாலும் அவளை ஏற்க  மறுக்கும் கணபதி  திரும்பிப் பார்க்கவில்லை.
கணவனால் கைவிடப்பட்ட  பெண்மணி. பிறந்தகத்திலியே விடப்பட்ட வாழ்விழந்தவள் என்று அழைக்கப் படுபவளாகிறாள்..

அவளைக் கைவிட்ட கணவன் இன்னோரு பெண்ணை மணந்து
மும்பையில்  குடித்தனம் வைத்து  ஐந்தாறு   குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறான்  ..

சீதா அம்மாவீட்டில் அனுசரித்துக் கொண்டு மனம் நைந்துபோனாலும்
கோவில்,நல்ல புத்தகங்கள்,கைவேலை என்று தன் வாழ்க்கையை
நெறிப் படுத்திக் கொள்கிறாள்.
அவள் ஒரே பெண்தான் அந்தவீட்டில். தந்தையும் இவள் மணம் முறிந்த போதே இறைவனடி சேர்கிறார். தாய் மட்டும்
துணையாக இருக்கிறாள்.

பத்தொன்பது வருடங்கள் இவ்வாறு கழிந்த நிலையில்
ஒரு கண்ணயரும் மதிய வேளையில் தபால் ஒன்று வருகிறது.

அதப் பார்த்த மாத்திரத்தில் கணவனின் கையெழுத்தைப் புரிந்து
கொண்டுப் படபடப்புடன் பிரிக்கிறாள்.
அவள் அம்மா பெயரில் கடிதம் ஆரம்பிக்கிறது.
மதிப்புக்குரிய   ருக்மணி அம்மாவுக்கு தங்கள் மாப்பிள்ளை கணபதி எழுதும் அவசரக் கடிதம்.
இங்கே என் மனைவி கடைசிப் பிரசவத்தில் எங்களைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாள்.
இரண்டு மாதக் குழந்தை தாயின் அரவணைப்பில்லாமல் நோயுற்று வருந்துகிறது.
இந்தக் கடிதத்தை எழுதின கையோடு நனும் என் மூத்த பையனும் கிளம்பி வருகிறோம்.
தாங்கள் சீதாவை எங்களுடன் அனுப்ப வேண்டும். பழையதெல்லாம் மறந்து
என்னை மன்னித்து  என் குடும்பத்தைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
கணபதி///////

இதைப் படித்த சீதாவுக்கு உடலெல்லாம் நடுங்குகிறது..
சத்தம் கேட்டு வந்த அம்மாவிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டுச் சமையலறைக்குப் போய்விடுகிறாள்.
ருக்மணி அம்மாளும் படித்துவிட்டு வயதான சரீரம் தளர்வடைய,மகளைத் தேடி வருகிறாள்.
'என்னடி இது புது சோதனை?''

எனக்குத் தெரியவில்லை என்றபடி சுருங்கிக் கொள்கிறாள்.கண்ணிலும் முகத்திலும் படபடப்பும் சோகமும்.

இதற்குள் அக்கம்பக்கத்துவீட்டுக்காரகளுக்கு விவரம் பரவி
பத்துப் பதினைந்து பெண்மணிகள் வந்து கணபதியைக் கண்டபடித்
திட்டித் தீர்க்கிறார்கள்.
தங்கள் ஊர்ப் பெண்ணை வதைத்தவனாயிறே!

இரண்டு நாட்களில்  கணபதியும் அவரது முதல் மகன் 16 வயது
பாஸ்கரனும் வருகிறார்கள்/

சீதா,அடுப்பங்கரையிலிருந்து  வெளியே  வரவில்லை.
கதவிடுக்கிலிருந்து ஒருகணம்  கணவனைப் பார்க்கிறாள். முகத்தில் கம்பீரமும் அகம்பாவமும்  தெரிகின்றன.

ஓஹோ!  அந்த சுயநலம் இன்னும் போகவில்லை'
என்று மீண்டும் உட்கார்ந்துவிட்டாள்.

வந்திருந்தவர்கள் அனைவரும் கணபதையைக் கேட ஆரம்பிப்பதற்கு முன்னால்
அவரே  பேசுகிறார்.
நான் தவறு இழைத்தவந்தான்.
ஆனால் இப்போது   என் வயது வந்த மகள், அவளது தம்பிகள், கடைசியாகப் பிறந்த  ஆறு மாதக் குழந்தை எல்லோருமே  கஷ்ட திசைக்கு வந்துவிட்டோம்.
உங்கள் தயவில் தான் என் குடும்பம் தழைக்கவேண்டும்'என்று சுருக்கமாகச் சொல்லிமுடிக்கிறார்.
வயதின் அடையாளங்கள் உடலிலும் முகத்திலும் தெரிகின்றன.

ருக்மணி அம்மாள்
சொல்லால் பாய்கிறாள்.
இப்போது சீதா  எதற்கு உங்களுக்கு.
உங்களுக்குக் கல்யாணம் செய்து கொள்ளத் தெரியுமே.
பணம் இருக்கும் போது இன்னோரு மனைவி கிடைக்க மாட்டாளா.
நாங்கள் சீதாவை அனுப மாட்டோம். அவளை அழைத்துப் போய் மீண்டும் நட்டாற்றில் விடமாட்டிர்கள் என்று என்ன  நிச்சயம்'
என்று ஆற்றாமையோடு முடிக்கிறாள்.

கணபதி மௌனமாகிறார்.
என் குடும்பம் பாழடைந்து கொண்டிருகிகிறது. அங்கே குழந்தைகள் என்ன பாடு படுகிறார்களோ.
முடிந்தால்    சீதாவை அனுப்புங்கள் நாங்கள் பிழைப்போம்.

சீதா உள்ளே தவிக்கிறாள்.
குழந்தைகள் என்ன பாவம் செய்தது.
இருந்தாலும் பன்னிரண்டு வருடங்கள் பிரிந்தாலே
கோவிலில் தான் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறதே!
என்ன செய்வேன்.

இப்படி யோசிக்கும்பொதே அம்மா என்றோரு அறைகூவல் அவள் காதில் வந்துவிழுகிறது.
திடுக்கிறது அவள் உடலும் மனமும். இறந்து போன தன் குழந்தைதான் அழைப்பதுபோல  பிரமிக்கிறாள்.
எட்டிப் பார்க்கிறாள்.
அங்கே வேட்டியும் சன்னமான சட்டையும் போட்ட பாஸ்கரன் கைகூப்பி நிற்கிறான்.

அம்மா!எங்களைக் காப்பாற்றுங்கள்.
தங்கை தம்பிகள் சின்னப் பாப்பா எல்லோரும் உங்களை நம்பித்தான் இருக்கிறோம்.
வாருங்கள் அம்மா. எங்கே இருக்கிறீர்கள்?
என்று கண்ணீர் தாரை தாரையாக  விழ
கைகளை நீட்டி நிற்கும் பிள்ளையைப் பார்க்கிறாள்.

இதோ இருக்கேன் அப்பா.
உங்கள் அம்மா. உன்னோடு உன்னை நம்பி வருகிறேன்.
என்று வெளியே  வருகிறாள்.

கணபதியும் பார்க்கிறார்.
நலிந்த உருவமும் ,முகத்தில் தவம் செய்த வலிமையுமாகச் சீதா தென்படுகிறாள்.
அவர் கண்களிலும் அன்பு தெரிகிறது.
உடனே சுதாரித்துக் கொள்கிறாள்   ருக்மணி அம்மாள்.
சரி இதுதான் தீர்ப்பு என்றால். உடனேஎ அகிலாண்டேஸ்வரி கோவிலுக்குப் போய் வாருங்கள். சாப்பிட்டுவிட்டு ஊருக்குக் கிளம்புங்கள் என்று

ஆணையிடுகிறாள்.
இருந்த ஒரு நல்ல படவையைக் கட்டிக் கொண்டு
கோவிலுக்குப் போகும் சீதாவை பலவித வம்புக் கண்ணோட்டதில் எல்லோரும் பார்த்தாலும்,
சீதையின் மனதில் மன்னிப்பின் மகத்துவம்

முகத்தில் சுடராக    வெளிப்படுகிறது.
நண்பர்களே.
இப்படியும்  ஒரு கதை.
அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு வாழ்வு,









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

29 comments:

வெங்கட் நாகராஜ் said...

எதற்கு மன்னிக்க வேண்டும் அந்த ஆணை.... இன்றைய பெண்ணாக இருந்தால் நிச்சயம் மன்னித்து இருக்க மாட்டாள் என நினைக்கிறேன்! அது குழந்தைகளுக்காகவே என்றாலும்!

அப்பாதுரை said...

interesting point of view. people act stranger than strange.

அக்கா பிரசவத்தில் இறந்ததும் அக்காவின் கணவரை மணந்த தங்கை ஒருவரைத் தெரியும். இத்தனைக்கும் அக்காவின் கணவரை யாருக்குமே தங்கை குடும்பத்தில் பிடிக்காது.


இராஜராஜேஸ்வரி said...

நலிந்த உருவமும் ,முகத்தில் தவம் செய்த வலிமையுமாகச் சீதா தென்படுகிறாள்.

கனக்கவைத்த கதையை அருமையாகப் பகிர்ந்திருக்கிறீகள்.. பாராட்டுக்கள்..

கோமதி அரசு said...

அம்மா!எங்களைக் காப்பாற்றுங்கள்.
தங்கை தம்பிகள் சின்னப் பாப்பா எல்லோரும் உங்களை நம்பித்தான் இருக்கிறோம்.
வாருங்கள் அம்மா. எங்கே இருக்கிறீர்கள்?
என்று கண்ணீர் தாரை தாரையாக விழ
கைகளை நீட்டி நிற்கும் பிள்ளையைப் பார்க்கிறாள்.

இதோ இருக்கேன் அப்பா.
உங்கள் அம்மா. உன்னோடு உன்னை நம்பி வருகிறேன்.
என்று வெளியே வருகிறாள்.//

மன்னிக்க தெரிந்த தாய்மை.
வேறு என்ன சொலவது மனம் கனத்து போனது.
கதை பகிர்வுக்கு நன்றி வல்லி அக்கா.

வல்லிசிம்ஹன் said...

இன்றைய பெண் என்ன அன்றைய பெண்களே மன்னிக்க மாட்டார்கள்.
சீதாவின் தயுள்ளமே குழந்தைகளுக்காகப் புறப்படுகிறது. அதுதான் தலைப்பில் பாஸ்கரனின் அம்மா என்று கொடுத்திருக்கிறார்.
இது போல நிகழ்ச்சிகள் உண்டு வெங்கட்.
அவரவர் மனப் பக்குவத்தைப் பொறுத்தது.
கணவன் ராமனாக இருந்தால் மனைவி சீதையாக இருக்கலாம்.
ருக்மணி அம்மாள் சொல்கிறாளே. அந்த மனுஷ்னுக்கு உரைக்கவில்லை. சீதா அடங்கியவள் ,குழந்தைகளுக்குத் தாயாக இருப்பாள் என்று கணித்து வருகிறார். வைத்த குறி தப்பவில்லை.:(

வல்லிசிம்ஹன் said...

யெஸ் தே டூ துரை.
பலவிதக் காரணங்கள். 19 வருடங்கள் கழித்துவரும் கணவனை ஏற்கவில்லை அவள். அந்தக் குழந்தையின் அன்பை ஏற்கிறாள்.
அப்படித்தான் இருக்கவேண்டும்.

ஏதோ ஒருசமூகச் சேவையகக் கூட நினைத்திருக்கலாம். எப்பொழுதும் குடும்பத்தின் அரவணைப்பை விரும்பும் பெண்மை காரணமாக இருக்கலாம்!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் இராஜராஜேஸ்வரி.
முக்கால்வாசி முடிந்த வாழ்க்கையை
நரைத்த தலையும் குங்குமுமாகப் புறப்படுகிறாள்.அவள் அம்மா கூடச் சொல்கிறாள். அவளைத் தன்னால் காப்பாற்ற முடியும் என்று.
அதையும் மீறி
அவள் கிளம்ப மனதின் ஏக்கமே காரணமாக இருந்திருக்கவேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சில இடங்களில் இப்படியும் இருக்கிறதென்பதும் உண்மை...

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி.
முதலில் கதையைப் படித்ததும் ,திருமணம் முடித்த நாளிலிருந்து,கணவனிடம் சீதா படும் கஷ்டங்களை
எண்ணி,அதே காரணமாக அவளுக்கு மனப் பாதிப்பு வந்ததும் ,
அவள் இது போல முடிவெடுப்பாள் என்று நினைக்கவில்லை.
அந்தப் பாலகனின் கண்ணீரே அவளின் தாய்மை பலன் பெறக் காரணமாகிறது. வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக நன்றி அம்மா.

ஸ்ரீராம். said...

மின்விசிறிக் காற்றில் பக்கம் பறக்காமலிருக்க, விநாயகர் வெயிட்டா!

அந்த முடிவை வாசகர்கள் விவாதிக்கத் தொடங்கும்போது படைப்பாளி வெற்றி பெறுகிறார். நீங்கள் சொன்னது போல அவரவர் மனதுக்கேற்ப அவரவர் வாழ்க்கை.

ADHI VENKAT said...

தாயுள்ளம் தான் காரணம்... இப்படியும் எங்காவது இருப்பார்கள்...

இருந்தாலும் அந்த ஆணவம் பிடித்த கணவனை ஏற்றிருக்க கூடாது...

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தனபாலன்.
நடந்திருக்கக் கூடிய சம்பவம் தான். இப்போதாவது இந்தப் பெண்ணுக்கு விடிந்ததே என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

விநாயகர் அகவல் எப்படியெல்லாம் உபயோகமாகிறது பாருங்கள் ஸ்ரீராம்:)

அம்மாவும் மறுப்பு சொல்லாமல் விலகிக் கொள்கிறாள் பாருங்கள்.பெண்ணுக்குச் சுதந்திரம்
கொடுக்கும் நல்ல அம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதிம்மா.

கணபதியோடு,அதாவது கணவனோடு உறவு கொண்டாடி இருக்க மாட்டாள் என்றுதான் நான் நினைக்கிறேன்.அதுவும் 19 வருடங்கள்
தவிக்க விட்ட கணவனுடனா.சுய மரியாதை இருக்காதா என்ன.
அம்மாவாகத்தான் போயிருக்கிறாள்.

Geetha Sambasivam said...


//அக்கா பிரசவத்தில் இறந்ததும் அக்காவின் கணவரை மணந்த தங்கை ஒருவரைத் தெரியும். இத்தனைக்கும் அக்காவின் கணவரை யாருக்குமே தங்கை குடும்பத்தில் பிடிக்காது. //

நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் பின்னாட்களில் அக்கா குழந்தையையே படுத்திய கதையும் தெரியும். :(

இந்தக் கதையின் முடிவில் என்னைப் பொறுத்தவரை இப்படி இருந்திருக்கலாம்.

குழந்தைகள் என்ன பாவம் செய்தன? உண்மைதான். ஆகையால் குழந்தைகளை இங்கே அனுப்பி விடுங்கள். நான் அவர்களுக்கு அம்மாவாக இருக்கிறேன். அவர்கள் செலவுக்கான பணத்தை மட்டும் அனுப்பி வைக்கவும். என் ஜீவியத்துக்கு இத்தனை நாள் எப்படி நடந்ததோ அப்படியே நடக்கும். சம்மதமெனில் குழந்தைகளை விடுங்கள். அங்கெல்லாம் நான் வரமாட்டேன். அல்லது சென்னையில் குடித்தனம் போடுங்கள். நீஙகள் அவ்வப்போது வந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படிச் சொல்லி இருக்கலாமோ? என்னதான் குழந்தைகளுக்காகப் போனாலும் வேண்டாம்னு உதறின மனுஷன் மூஞ்சியிலே தினம் தினம் முழிக்கிறதுன்னா! :((((

sury siva said...

பின்னூட்டம் வீடியோ வடிவில் இங்கே உள்ளது. சுப்பு தாத்தா
மீனாட்சி பாட்டி என்ன சொல்கிறார் ? என்பதுதான் முக்கியம் என நினைப்பதால் .
இங்கே பார்க்கவும்

.https://www.youtube.com/watch?v=nVZzB-xScrk

சுப்பு தாத்தா

வல்லிசிம்ஹன் said...


அன்பு சுப்புஅண்ணா,மீனாக்ஷி மாமி

ரொம்பப் பரவசமாக இருந்தது.
இதை அப்படியே பதிவில் அப்லோட்
செய்ய எனக்குத் தெரியாதே.

அண்ணா சொன்னதும் சரி. மன்னி சொன்ன பாயிண்ட்தான் இந்தக் கதையின்
சாராம்சம்.
பாவம் சீதா..மனவியாக அனுபவிக்க முடியாத ஆதரவைத் தாயாக அனுபவிக்கவும் கொடுக்கவும் தயார் ஆகிவிட்டாள்.
இதுக்கு எவ்வளவு பெரிய மனம் வேணும்.!!!!.
நல்ல கதைதான். ஆனாலும் ஜீரணம் செய்யக் கொஞ்ச நேரம் பிடிக்கும்:)
ரொம்ப நன்றி.

மிகப் புதுமை உங்கள் பின்னூட்டம்.

சாந்தி மாரியப்பன் said...

தாய்மைக்கு மன்னிக்க மட்டுமே தெரிகிறது..

RAMA RAVI (RAMVI) said...

//சீதையின் மனதில் மன்னிப்பின் மகத்துவம்

முகத்தில் சுடராக வெளிப்படுகிறது.//

அருமையான கதை. மன்னிக்க தெரிந்தவர்கள் தெய்வத்திற்கு சமம்.சீதா தெய்வமாக நிற்கிறாள்.

வல்லிசிம்ஹன் said...

கூகிள் ப்ளசில் சுப்புரத்தினம் தம்பதிகளின் வீடியோ பின்னூட்டத்தை வெளியிட்டு இருக்கிறேன். அற்புதமான தம்பதிகள். மனம் நிறைந்த நன்றிகள்.

அப்பாதுரை said...

சபாஷ் கீதா சாம்பசிவம். இப்படித்தான் முடித்திருக்க வேண்டும் கதையை.

கதாசிரியர் ஆண் என்று நினைக்கிறேன்.

வெங்கட் சொல்வது போல் இக்காலப் பெண்கள் இருப்பார்களா? சந்தேகம் தான். பயந்து நடுங்கிச் சாகும் பெண்களையே (சில ஆண்களையும்) இன்னும் நிறைய பார்க்கிறேன்.

அப்பாதுரை said...

என் நண்பர் ஒருவர், பெண்டாட்டி கொடுமையினால் நிம்மதியிழந்து வெளியே வரவும் முடியாமல் (குழந்தைகளுக்காக) தினம் மெள்ளச் சாகிறார். இரவு பத்தரைக்கு மேல் தூக்கம் வராமல் குடித்து மயங்கி.. கஷ்டம்.

அப்பாதுரை said...

அருமையான பின்னூட்டம் சூரி சார்.

அப்பாதுரை said...

இவர் வேறு கதைகள் ஏதாவது எழுதியிருக்கிறாரா?

வல்லிசிம்ஹன் said...

அருமையான முடிவு கீதா. அவளுக்குத் தெரிந்திருந்தால் செய்திருப்பாளோ என்னவோ.

இங்கு இருந்தால் அம்மாவின் பக்கபலமும் இருந்திருக்கும்.
தியாகம் என்ற கருவை வைத்து எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன் கீதா.எனக்கும் அந்த கணபதிக்கு இருக்கும் அகம்பாவத்தை நினைத்து மகா எரிச்சல் வந்தது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சாரல். சீதா பாவம்.
கீதா சொன்னது போல்க் குழந்தைகளை இங்கே வரவழைத்திருக்கலாம். எப்பவும் தலைவர் சொல்வதைக் கேட்கும் தொண்டனாகும் காலம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமா. முதலில் அவள் பெண்ணாக யோசித்துப் பிறகு தாயாக மாறுகிறாள்.
தியாகம் அவளுக்கு உதவியதா என்று எனக்கு இப்போ யோசனையாக இருக்கிறது.!

வல்லிசிம்ஹன் said...

ஆண்களும் சிரமப் படுகிறார்கள் என்பதை நானும் பார்த்திருக்கிறேன்.
இந்தக் கதை எழுதியவர் ஆணாகவும் இருக்கலாம். இவர் வேறு கதைகள் எழுதி இருக்கிறாரா என்று தெரியவில்லை.
குடும்பம் என்கிற கட்டுக் கோப்பு உடையாமல் இருக்க இருவரும் ஒத்துப் போனால்தான் உண்டு.
சுயநலம் தலை தூக்கும் போது வாழ்க்கை சிரமம்தான். உங்கள் நண்பரை நினைத்தால் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

தன் குழந்தையை அந்த மகவிடம் கண்டு மனம் மாறுவதாய், தாய்மை வெல்வதாய் ஆசிரியர் முடித்திருக்கிறார்.

/அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு வாழ்வு/

அப்படிதான் தோன்றுகிறது, இந்நாளில் எவரும் இப்படி முன்வருவது கேள்விக்குறிதான் என்றாலும்.